Jan 19, 2012

கடவுளற்றவளின் நாட்குறிப்பு - 2



ஆணிகளின் பற்றாக்குறை அச்சுறுத்துகிறது.  கழட்டும் அடையாளங்களை மாட்டி வைக்க ஆணிகள் போதவில்லை. இரவின் இருட்டில் நடக்கும் முலைகளையும், யோனியையும் அதிஜாக்கிரதையாக மாட்டிவைக்க ஆணிகள் போதவில்லை.  பெண் நிழலலென சுமந்து வரும் பட்டங்களை, விலங்குகளை மாட்டிவைக்க, பொங்கி வரும் காமத்தை அடக்கி, முடிச்சிட்டிருக்கும் சின்னங்களைத் தொங்கவிட, ஒவ்வொரு முறையும் ன்...னின் கால்களில் உதைப்பட்டு கிழிந்த இளஞ்சிவப்பான கருப்பையை உதிரமுதறி தொங்கவிட, தேன் தடவிய சொற்கள் ஏற்றி வைத்திருக்கும் எதிர்பார்புகளை தொங்கவிடவும் ஆணிகள் போதவில்லை.  கடவுளர்களின் முழுமுற்றதான அகம்பாவக் குறிகளை அறைந்திட ஆணிகள் போதவில்லை. போதவேயில்லை.

(புது எழுத்து (20) இதழில் வெளிவந்த உரைநடைக் கவிதை)

No comments:

Post a Comment