Dec 1, 2019

தோழர் எஸ். பாலச்சந்திரன் கருத்துரை...

#அம்பேத்கரும்_அவரது_தம்மமும்
- written by #vasumithra

தோழர் எஸ். பாலச்சந்திரன் கருத்துரை
என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் ஓர் உரைகல்
உண்மையற்ற… அடிப்படையற்ற விஷயங்களை வசுமித்ர உரித்து தொங்கப்போட்டிருக்கிறார்… முடிந்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள்…
ஆதாரங்களோடு பதில் சொல்லுங்கள்… தனிப்பட்ட முறையில் கொச்சையாக தாக்குவது சரியல்ல
மதம் என்பது 21ஆம் நூற்றாண்டில்… ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலையை நோக்கி பயணிக்க வைக்கக் கூடிய கருவிதானா என்று கேட்கிறார்
#பௌத்தம் என்று சொல்வீர்களானால்… #புத்தர் துக்கத்தை விலக்கச் சொன்னார்…. #அம்பேத்கர் அதன் அடிப்படையில் பேசுகிறார் என்றால் இன்றைக்கு இருக்கும் துக்கம் என்ன? அதற்கு உங்கள் மார்க்கம் என்ன? அந்த மார்க்கம் இன்று ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலையை நோக்கி நகர்த்துமா?
ஆதாரம்னிறி சொல்லப்பட்ட பதில்களைத்தான் வசுமித்ர கடுமையாக விமர்சிக்கிறார்
இந்த புத்தக அட்டை (காவி) என்ன சொல்கிறதென்றால்… அடையாள அரசியலை யார் பேசுகிறார்களோ… அவர்களோடு உங்களை ஓரணியில் சேர்க்கும் என்கிறார்…
அம்பேத்கர் #பெரியார் #மார்க்ஸ்… புத்தரையும் இணைக்க வேண்டும் என்றால் எந்த புத்தரை இணைக்கச் சொல்கிறீர்கள்?
ஆதி புத்தரையா… அல்லது கடவுளாக மாற்றப்பட்டு… அவர் சொன்னதாக இவர்களாக பௌத்த தத்துவம் என்று பிரகடனப்படுத்துகிறார்களே அவரையா… அல்லது இந்து மதம் செறித்துக்கொண்ட புத்தரையா அல்லது அம்பேத்கரே முன் வைக்கிறாரே பகுத்தறிவுக்கு விரோதமான ஒரு புத்தரை அவரையா? துயரமாக இருக்கிறது..
புத்தர் ஒரு வரலாற்றுப் பாத்திரம்… அந்த புத்தர் அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் நூலில் வரலாற்றுப் பாத்திரமாக கொடுக்கப்பட்டிருக்கிறாரா?
இது வசுமித்ர கேட்கக் கூடிய மிக முக்கியமான கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்… இல்லை என்பதுதான் உண்மை!
புத்தரை வேறு கோணத்தில் காட்டினார் என்று முத்துமோகன் போன்றவர்கள் எல்லாம் வளைத்துப் வளைத்துப் பேசினார்கள். அம்பேத்கரை வித்தியாசமான கோணத்தில் காட்ட முயற்சித்தார்கள்…
என்ன புத்தர் அவர்? மதத்தை போதிக்கக் கூடிய புத்தரவர். ஆன்மாவில் நம்பிக்கை உடைய… தன்னுடைய அமானுஷ்ய சக்திகளையெல்லாம் வெளிப்படுத்திக்காட்டி… அதன் மூலம் பௌத்தத்தை ஏற்றுக்கொள்ள வைத்த உள்ளுக்குள்ளே சர்வாதிகாரியாக வெளியே ஆண்களே கண்டு மயங்கக் கூடிய அழகராக இருக்கும் புத்தரைத்தான் அம்பேத்கர் முன்வைக்கிறார்!
முதலில் புத்தரும் அவர் தம்மமும் நூலைப் படியுங்கள் தெரியும். பிறகு அம்பேத்கரும் அவரது தம்மமும் படியுங்கள்!
பொருளாயத அடிப்படைகள் தெரியாத காலகட்டத்தில் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அனுபவபூர்வமாக தீர்வுகான விரும்பிய சிலர் மக்களின் துக்கம் போக்க பேசியதை 2000 வருடம் கழித்தும் பேசினால் இன்றைக்கு எப்படி தீர்வு காண முடியும்?
இதை வைத்து தீர்வு காண முடியும் என்று அம்பேத்கர் சொல்கிறார். இதை மார்க்ஸே சொல்லியிருந்தாலும் உண்மை என்னும் உரைகல்லில் அதை உரசிப் பார்க்க வேண்டாமா?
இயக்கவியல் வழிமுறையை பின்பற்றி சுயமாக சிந்திக்க வேண்டும்… புறவயமான உலகை புறவயமாக ஆய்வு செய்ய வேண்டும்… அதுதான் மார்க்சியம்… இதை செய்யச் சொல்லித்தான் இந்த புத்தகம் சொல்கிறது. அதற்கு விரோதமாக இருக்கும் அத்தனை பேரையும் பட்டியல் போட்டு இவர்கள் இப்படித்தான் பேசினார்கள் என்று அருமையானதொரு முன்னுரை இருக்கிறது இந்த நூலில்...
அடையாள அரசியல் முன்வைக்கும் போலித்தனமான வாதங்கள்… அதில் இருக்கக் கூடிய அபாயங்களை தகர்க்க.. அதிலே இருந்து மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட விரும்புபவர்கள் இந்நூலை படிக்க வேண்டும்.
மேலும் கேட்க இக்கானொளியைப் பார்க்கவும்.

Oct 23, 2019

சமஸின் அடி நாக்கிலே நஞ்சும், நுனி நாக்கிலே தேனும்!


இன்றைய இந்து தமிழ் திசையில் அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்என்றொரு கட்டுரையை திருவாளர் #சமஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மயிர் பிளக்கும் வாதங்கள் தேவையில்லைஎன்று சொல்லும் சமஸுக்கு மயிரு மாதிரி கட்டுரை எழுதியிருக்கீங்க என்று தான் தொடங்க வேண்டியுள்ளது…. மன்னிக்கவும்வேறு வழியில்லை! ஏனென்றால் எந்த ஒரு பொருளை பற்றி எழுதுகிறோமோ அது குறித்த ஆழ்ந்த அறிவற்ற ஒருவர் எல்லாம் தெரிந்த மயிருபோல் பேசும் தொனி தான் அந்த கட்டுரையில் உள்ளது.

சமஸுக்கு தமிழ் பற்று வேறு அதிகம் ஆகவே, மயிர் என்பதை அவரும் தவறாக புரிந்து கொள்ள மாட்டார்! தலையிலிருந்து உதிர்ந்த முடிஉயிரற்ற, பயனற்ற முடிக்கு மயிர் என்று பொருள், அல்லவா!

சரி சமஸின் பேராய்வு மிக்க கட்டுரைக்கு வருவோம். பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சங்கரய்யா பேசியதில் தொடங்கி, அவரின் தியாகம், பொதுவுடைமை இயக்கத்தினரின் தியாகம் என்று புகழ்ந்து இறுதியில் சின்னப்புள்ளைங்க கணக்கா சண்டை போட்டுக்காதீங்கப்பா, நியுமராலஜி படி உங்க பேரு சரியில்லைபெயரை மாத்துங்கப்பா என்று நீண்டு நஞ்சைக் கலந்திருக்கிறார். எதன் வழியாக சிரிப்பது என்று தெரியவில்லை!

தயவு செய்து அந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள்…. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! (https://www.hindutamil.in/news/opinion/columns/521597-communist-party-6.html)

இராமச்சந்திர குஹா சொல்லிவிட்டாராம் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை விட சோஷலிஸ்ட் கட்சி என்று வைத்துக்கொள்ளுமாறுஏனென்றால் கம்யூனிஸ்ட்கள் மீது பல்வேறு காரணங்களால் இங்கு ஒவ்வாமை நிலவுகிறது, தவறான புரிதல் நிலவுகிறது!!!! மேலும் கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜனநாயகம் இல்லையாம்… (ஐயா ஜனநாயகம் என்றால் என்ன, பூர்ஷுவா ஜனநாயகம் என்றால் என்னவென்று விளக்கம் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்)சீன அதிபர் இங்கு வந்தபோது தோழர்என்று குறிப்பிட்டுவிட்டார்களாம்! சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடா இப்படியாக தொடங்கி….

// உலகமயமாக்கல் காலகட்டத்துக்குப் பிந்தைய பொருளாதாரத்தை எப்படி அணுகுவது, மதத்தை எப்படி அணுகுவது, தேசியத்தை எப்படி அணுகுவது, அரசியத்தை எப்படி அணுகுவது இந்த நான்கு விஷயங்களிலுமே இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தினருக்குப் பெரிய தடுமாற்றம் இருக்கிறது. உலகளாவிய வரலாற்று அனுபவங்கள் தரும் சோஷலிஸம்இதற்குத் தீர்வு கொடுக்கலாம். ஏனென்றால், அவரவர் திறனுக்கேற்ற உழைப்பைக் கோரும் கம்யூனிஸம், அவரவர் தேவைக்கேற்ற பலன்களைத் தரச் சொல்கிறது; அவரவர் திறனுக்கேற்ற உழைப்பைக் கோரும் சோஷலிஸமோ அவரவர் உழைப்புக்கு ஏற்ற பலன்களைத் தரச் சொல்கிறது.
அனைத்தையும் பொதுவுடைமையாகக் கருதும் கம்யூனிஸம், தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது; சோஷலிஸமோ பெரும் தொழில் உற்பத்தியை சமூகவுடைமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், தனி நபர்களுக்கான சொத்துரிமையையும் மதிக்கிறது; மக்களுக்கான சமூகக் கடமைகளையும் ஏற்கிறது. மக்களின் மதவுரிமைக்கு வெளியே நிற்கிறது கம்யூனிஸம்; மக்களின் மதவுரிமையை அங்கீகரிக்கிறது சோஷலிஸம்.//

இந்த பத்தியில் தன்னுடைய தாராளவாத, பின் நவீனத்துவ, முதலாளித்துவ மூகமூடியை நமக்கு சிறப்பாக திறந்து காட்டுகிறார்.

கோட்பாட்டு விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்காதீர்கள்சட்டு புட்டுன்னு பேரை மாத்துங்க என்கிறார். நல்ல எண் கணித சோதிடம் பார்ப்பார் போலிருக்கிறது சமஸ்.

இந்தியா என்ற பெயர் இராசியில்லை ஆகவே பாரதம் என்று மாத்திவிடுவோம்…. நமக்கு மோடி பிரச்சினையில்லை பெயர் தான் பிரச்சினை என்று சொல்லாமல் போனாரே!

போதாத குறைக்கு தமிழ் பற்று வேறு, தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் என்று வைத்துவிடுங்கள்ம்ம்ம் சீக்கிரம்! அப்புறம் என்னய்யா பெரிய சர்வதேசியம் பேசுறீங்கநம்ம தமிழ்ல இல்லாததா… “ஆழ வேரூன்றிய தமிழின் ஓருலகவாதம் நல்ல மாற்றுதாரணமாக இருக்க முடியும்.

// அயல்நாடுகளின் சர்வாதிகார வரலாற்றுச் சுமையிலிருந்து நம் நாட்டு பொதுவுடைமை இயக்கத்தினரை இந்தப் பெயர் மாற்றமானது விடுவிப்பதோடு, சமகாலத்தில் இந்திய அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் நான்கு பெரிய சிக்கல்களுக்கும் அது விடை கொடுக்கும்.// பெயரை மாத்துங்கப்பாசீக்கிரம்
ஆக, இங்கு இருக்கும் பொதுவுடைமை இயக்கத்தின் சிக்கல் கட்சிப் பெயரில் தான் உள்ளது. இணையுங்கள் இந்தியத் தன்மை பெறுங்கள் என்கிறார். நடுவுல தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் என்கிறார்…. சீமானே பரவாயில்லை என்று படிக்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. 

ஐயா சமஸ் இந்திய சமூகம், தமிழ் சமூகம், சர்வதேசிய நாடுகள் அனைத்தும் எதிர்கொள்ளும் சிக்கல் சோஷலிசமா, கம்யூனிசமா என்பது அல்ல. (சிப்பு சிப்பா வருதுங்கோ) மார்க்ஸின் மூலதனம் நூலை படிக்காவிட்டாலும் பரவாயில்லைகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையாவது மீண்டும் மீண்டும் படியுங்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் (உலகளவில்) எதிர்கொள்ளும் சிக்கல் என்பது வரலாற்று வளர்ச்சியில் இயங்கியல் ரீதியான விளைவுகளே.. (மன்னியுங்கள்கோட்பாட்டு விளக்கம்).

உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளின் தன்மைகள், வகைமைகளை வரையறுப்பது தொடங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பில் பிரதான செயல்திட்டம் வகுப்பதில் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதாகவெல்லாம் நீளும் ஒரு சித்தாந்தப் போராட்டம் மட்டுமன்று அது நடைமுறையில் நிகழும் மாற்றங்கள், பிரிவினைவாத (என்.ஜி.ஓ மற்றும் உங்களைப் போன்ற தாராளவாத (பட்டை போட்ட, நாமம் போட்ட, கொட்டை போட்ட ) அறிவுஜீவிகள் ஏற்படுத்தும் குழப்பங்கள் என்று ஏகத்துக்கும் சிக்கலின் பட்டியல் நீள்கிறது.

// அனைத்தையும் பொதுவுடைமையாகக் கருதும் கம்யூனிஸம், தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது; சோஷலிஸமோ பெரும் தொழில் உற்பத்தியை சமூகவுடைமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், தனி நபர்களுக்கான சொத்துரிமையையும் மதிக்கிறது; மக்களுக்கான சமூகக் கடமைகளையும் ஏற்கிறது. மக்களின் மதவுரிமைக்கு வெளியே நிற்கிறது கம்யூனிஸம்; மக்களின் மதவுரிமையை அங்கீகரிக்கிறது சோஷலிஸம்.//

ஐயா ராசாஎந்த பள்ளிக் கூடத்துல ஐயா நீங்க கம்யூனிசம் படிச்சீக
சந்தடி சாக்கில் உங்க தனியுடைமை ஆதரவுக்கு ஏன்யா சோஷலிசத்துக்கு புதுச் சாயம் பூசுறீங்க?

ஐயா…. பொதுவுடைமை இயக்கத்தின் இறுதிக் குறிக்கோள் கம்யூனிசமேஇது பொதுவுடைமையாளர்களின் விருப்பம் மட்டுமல்லஉற்பத்தி சக்திகளின் வளர்சிப்போக்கில் இறுதியில் மக்கள் இந்தக் கட்டத்திற்கே செல்வார்கள்ஏனென்றால் அதுவே மேம்பட்ட சமூகமாக முழுவதும் சுதந்திரமான, சமத்துவமான ஒரு சமூகமாக அமையும் என்று தான் மார்க்ஸ் தொடங்கி செங்கொடியின் கீழ் புரட்சிகர ஆட்சியை (சோஷலிசமா, கம்யூனிசமா!) நிறுவிய லெனின், மாவோ, ஸ்டாலின், ஃபிடல், சாவேஸ் என அனைவரும் மனதில் கொண்டு இயங்கியுள்ளனர்.
சோஷலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தை உங்கள் பத்திரிகையின் தலைவர் என். ராம் படித்தாரா? படித்திருந்தால் கண்டிப்பாக அவமானமாக உணர்வார். ஏனென்றால் அவர் நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று நான் நம்புகிறேன்.

ஐயா சமஸ், தனியுடைமையை ஒழித்து, அதாவது உழைப்புச் சுரண்டலை ஒழித்து அதாவது உழைப்புச் சக்தியை விடுவித்து (உற்பத்தி சக்தியை), உற்பத்தி சாதனங்களை தனி நபர்களின் சொத்தாக இருப்பதிலிருந்து விடுவித்து, (இதை மட்டும் ஒப்புக்கவே மாட்டீங்களேஇந்த சமத்துவத்தை தாராளவாத ஜனநாயகசக்திகளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது)நிலம், வளம் உள்ளிட்ட பூமியின் இயற்கை வளங்களையெல்லாம் தனிநபர் சுரண்டலிலிருந்து விடுவித்து மக்களின் பொதுவுடைமை ஆக்க வேண்டும் என்பதே பொதுவுடைமையாளர்களின் (கம்யூனிஸ்ட் இயக்கங்களின்) இலட்சியம்அதற்காகத் தான் போராடுகிறார்கள். உயிர் தியாகம் செய்கிறார்கள்.

இந்தப் போராட்டப் பாதையில், மக்களை ஒன்று திரட்டுவதில், புரட்சிகர வேலைத் திட்டம் வகுப்பதில், வேலைத் திட்டம் வகுப்பதில், குறிப்பாக இந்திய சமூகத்தில்ம்ம் தமிழ்நாட்டிலும் தான்வர்க்க உணர்வூட்டுவதற்கான வேலைத்திட்டம் வகுப்பதி, இந்திய சமூகம் குறித்த ஆய்வில் சிக்கல்கள், பின்னடைவுகள், தவறுகள் நிலவத்தான் செய்கின்றனஅதிலும் கூட பெரும்பகுதி காரணம் கம்யூனிஸ்ட்கள் வர்க்க அரசியலை, வர்க்க ஆய்வை தெளிவாக முன்வைத்தாலும் உங்களைப் போன்ற அறிவுஜீவிகள்’ (தனிச்சொத்து ஆதரவாளர்களாக இருப்பதால்) அதுவல்ல கம்யூனிசம்இது அயல் நாட்டு சரக்குஉள்நாட்டு பிரச்சினையை சரியா பேசலைமார்க்ஸ் வெளிநாட்டுக்காரரு, வெள்ளையா தாடி வச்சிருந்தாருநம்மாளுக தாடி மயிரு வேற மாதிரி என்று ஏதாவது பேசி, குழப்பி முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதால் இந்திய, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் சற்று கூடுதலான சவாலை எதிர்கொள்கிறார்கள்

அதிலும் வன்முறை வன்முறை, கம்யூனிஸ்டுகளும் சர்வாதிகாரிகள் தானே என்ற உங்களின் பூர்ஷுவா ஜனநாயக வாதம் இருக்கிறதேஐயா உழைப்புச் சுரண்டலை பிரதானமாகக் கொண்ட நிலவுடைமை, முதலாளித்துவ அமைப்பே வன்முறையானது. அது மக்களின் வாழ்வுரிமைகளைப் பரித்துக்கொண்டு நிகழ்த்தும் வன்முறையை பேசுங்கள்ஆயுதப் போராட்டம் மட்டுமே வன்முறையல்லபாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஏன் தேவைப்படுகிறதுஅது சர்வாதிகாரமா அல்லது இதுநாள் வரை நம்மை சுரண்டித் தின்று கொழுத்துத் திரியும் அனகொண்டாக்களை வழிக்குக் கொண்டு வர வேறு வழியின்றி அதை வழிமுறையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளதா என்று போதிய விளக்கங்கள் உள்ளன…. வன்முறையான அமைப்பைத் தகர்த்து ஜனநாயக அமைப்பை நிறுவுவதே கம்யூனிஸ்டுகளின் போராட்டம். அதில் ஆளும் வர்க்க ஓநாய்களை அடக்கவும், அவர்களுக்கு ஏவல் செய்யும் நரிகளை விரட்டவும் சர்வாதிகார ஆட்சி தவிர்க்கவியலாமல் அவசியமாகிறதுஅவ்வளவேமுதலாளிகளும், ஆளும் வர்க்கமும் எந்த எதிர்ப்புமின்றி சுரண்டிச் சேர்த்த தனிச்சொத்துகளை, அதாவது இயற்கை வளங்களை, உற்பத்திச் சாதனங்களை எல்லாம் மக்களாட்சிக்கே கொடுத்துவிட்டால் நாங்கள் ஏனய்யா சர்வாதிகாரம் செலுத்தப் போகிறோம்?

சிபிஎம், சிபிஐ பிளவு, இணைப்பு, ஜோக்கு குறித்து எல்லாம் காலம் காலமாக பேசியாச்சு.. புளித்துப் போன மாவு ஐயா….

பொதுவுடைமை அரசியலுக்கு உண்மையில் யாரேனும் சரியான பங்களிப்பு செய்ய விரும்பினால் இந்திய சமூகம் பற்றிய ஆய்வில் தொடங்கி, முதலாளித்துவ உற்பத்தி முறையை மாற்ற, சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிறுவ, மூலதனத்தின் பிடியில் இருக்கும் உற்பத்திச் சாதனங்களை அபகரிக்க ஏதேனும் உருப்படியான யோசனை சொல்லுங்கள்



சோஷலிசம், கம்யூனிசம்னு புதுசா ஒண்ணை அவுத்து விட்டிருக்கீங்களே ஐயா, மேற்சொன்ன இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டம் நடத்தி (சில வேளைகளில் ஆயுதம் ஏந்தி) உற்பத்திச் சாதனங்களை தொழிலாளர்களின் அதிகாரத்தில் கொண்டு வரும். அதுக்கே கூட சில பல கட்டங்களை தாண்ட வேண்டியிருக்கும். தொழிலாளர்களை உள்ளடக்கிய ஓர் அரசு இயந்திரம் உருவாகும். இது அந்தந்த நாட்டின் (வர்க்கப் பிரிவு, உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகளின் தன்மைக்கு ஏற்ப) தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களையும், அரசியலமைப்பையும், சட்டதிட்டங்களையும், புரட்சிகர நிர்வாகக் கட்டத்தையும் கொண்டிருக்கும். சோஷலிசத்திலும் அரசு இருக்கும். முதலாளித்துவ எச்சங்கள் இருக்கும். அதில் தான் நீங்கள் சொல்லும் தனிச்சொத்தும் சிலரிடம் நீடித்திருக்கும். அதற்காக சோஷலிஸ்ட் அரசு (இயக்கம்) அதை அனுமதிக்கிறது என்று பொருள் இல்லை.

மெல்ல மெல்ல அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படும். கம்யூனிச கட்டத்தில் அரசு உலர்ந்து உதிரும் நிலைமை ஏற்படும். இதுதான் சோஷலிசக் கட்டம், கம்யூனிசக் கட்டத்திற்குமான வேறுபாடு பற்றிய எளிய விளக்கம்.

உங்க சொத்தெல்லாம் புடுங்கிக்குவாங்கப்பாஎன்று மக்களை ஏன் பயமுறுத்துகிறீர்கள். எந்த சொத்தைப் பிடுங்குவார்கள் என்பது தெளிவாக உள்ளதுதயவு செய்து படியுங்கள்

இதை விடுத்துஆ.. ஊன்னா எஸ். என். நாகராஜனை மேற்கோள்காட்டிபேரு சரியில்லை, வாஸ்த்து சரியில்லை, செல்லங்களா வாங்க கை குலுக்கிங்கோங்க ன்னு காமெடி பண்ணாதீங்க பாஸ்நாங்க கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாவோன்னு படிச்சு கம்யூனிஸ்டா இருக்கோம்இயக்கம் நடத்துறோம்அவா, இவா சித்தாந்தமெல்லாம் கம்யூனிசமாகாதுவோய்!

இந்தியக் கம்யூனிஸ்டுகளே ஒன்று சேருங்கள்! சமஸுக்கு மார்க்சிய வகுப்பைத் தொடங்குங்கள்!


Oct 9, 2019

அசுரனைக் கொண்டு உரையாடுவோம்

say no to caste-class atrocities


#வெற்றிமாறன் இயக்கத்தில் #தனுஷ் மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் #அசுரன் திரைப்படம் பரவலான வரவற்பை பெற்றுள்ளது. நம் சமூகத்தில் நிகழ்ந்து வரும் ஆண்டான் அடிமைப் போராட்டம் குறித்து விவாதங்களை தூண்டிவிட்டுள்ளது.

வெற்றிமாறன் ஒரு சிறந்த ஜனரஞ்சக இயக்குனர். ஆனால் அவரின் எல்லாப் படங்களிலிருந்தும் மாறுபட்டது இந்த அசுரன். சினிமா குறித்து மிகுந்த கூருணர்வுடன் பேசக்கூடியவரிடமிருந்து சிறந்த கலைப்படைப்பாக அசுரன் வெளி வந்திருக்கிறான்.

அசுரன் என்ற பெயர் ஏன் என்பதிலிருந்து இத்திரைப்படத்தை முன் வைத்து ஓர் உரையாடல்.

அசுரன் என்பவன் யார்? யாராக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது? படத்தின் கதாநாயகன் பெயர் சிவசாமியாக இருக்க, சிவசாமி என்றோ, அல்லது வேறு ஏதோ புலைமை மிக்கப் பெயர்களை சூட்டாமல், பூமணி எழுதிய வெக்கையைத் தழுவி இருந்தும் வெக்கை என்று பெயர் சூட்டாமல் ஏன் அசுரன் என்கிறார்?

நம் தொன்மங்களில் அசுரன் என்பவன் கெட்டவன், #சூரசம்ஹாரம் செய்யப்பட வேண்டியவன், அல்லவா?

அப்படி இருக்கையில் இங்கு அசுரன் வேட்டையாடுகிறான்! யாரை? ‘தேவர்களை’. வழக்கமாக ‘தேவர்கள்’ தானே அசுரர்களை வேட்டையாடுவார்கள்? வெற்றிமாறனின் அசுரன் ‘தேவர்களை’ வேட்டையாடுகிறானே? வரலாறு அறியாதவரா வெற்றிமாறன்?

வரலாற்றை சரியாக அறிந்தவரால் மட்டுமே தலைப்பிலேயே இப்படி சிறப்பான சம்பவம் செய்ய முடியும்.

வரலாறும், தொன்மங்களும் ஆளும் வர்க்கங்களாலும், அவர்களின் அடிவருடிகளாலும் எழுதப்படுகிறது என்பதே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது. அப்படி எழுதப்பட்ட ஆளும் வர்க்க மத வரலாற்றில், இந்திய சூழலில் பார்ப்பனிய மதத் தொன்மங்களில் தேவர்கள் நல்லவர்களாகவும், அசுரர்கள் கெட்டவர்களாகவும் புனையப்பட்டனர் என்பதை #இடதுசாரி சிந்தனையாளர்கள், #மானுடவியல் வரலாற்றரிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.

அத்தொன்மங்கள் நிலப்பிரபுத்துவ காலத்தைய ஆளும் வர்க்கக் கதைகள் என்றும் அது ஆண்டான் அடிமைப் போராட்டங்கள் என்பதோடு, ஆரிய எதிர்ப்பு, இனக்குழுக்களிடையேயானப் போராட்டங்கள் என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன. அப்பின்னணியில், அசுரர்கள் என்று சித்தரிக்கப்பட்டவர்கள் ஆரியர் அல்லது நாடோடிகளாக இடம்பெயர்ந்து இங்கு வந்து இராஜ்ஜிய அபகரிப்பிலும், இன அழித்தொழிப்பிலும், வள அபகரிப்பிலும் ஈடுபட்ட குறிப்பிட்ட இனக்குழுவின் ஆதிக்கத்தினை எதிர்த்தவர்கள்; அவர்களில் அசுரர்கள் எனப்படுவோர் ஓர் பழங்குடி இனக்குழுவினர். (வர்ணாசிரமத்தின் படி சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்றெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள்… பின்னர் சாதிய ரீதியாக இன்றுவரை உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் ஒடுக்கவும், கொல்லவும் படுகிறார்கள்). 

ஆக, அசுரர்கள் கெட்டவர்களும் அல்ல, ‘தேவர்கள்’ நல்லவர்களும் அல்ல! அடக்குமுறை செய்தவர்களை எதிர்த்தவன் அசுரன். ஆம்! ஆள்பவர்களின் அதிக்கத்திற்கு அணிபடியாதவர்கள் தற்போது Anti-Indian, Naxallite, Maoist எனப்படுவது போல் அப்போது ஆள்பவர்கள், ஆதிக்க சாதிகள், பண்ணையார்கள் ஆகியோரின் அட்டூழியங்களை எதிர்த்தவர்கள் அசுரர்கள் எனப்பட்டனர்.

மஹிஷன் என்னும் அசுரனின் வதத்தைக் கொண்டாடும் தசராப் பண்டிகை காலத்தில் ஆளும் வர்க்க ஓநாய்களை வேட்டையாடும் அசுரனை களம் இறக்கியிருக்கிறார்கள் வெற்றிமாறனும், தனுஷும். என்னவொரு உள்குத்து!

நம் உரிமைகளுக்காகப் போராடிய தலைவர்கள், தோழர்கள், உழைக்கும் வர்க்கத்திலிருந்து போராடிய எழுச்சிமிகு மக்களின் உருவகமாக இருக்கும் ‘அசுரனை’ ஒரு பார்ப்பனியக் கடவுள் வென்றதை, அதாவது நம்மைக் கொல்லும் பண்டிகையை நாமே உற்சாகத்துடன் கொண்டாட வைத்திருப்பதே மதத்தின் வெற்றி. அந்த அறியாமையை போக்கி நாம் யார், நம் வரலாறு என்ன என்று உரக்கச் சொல்கிறான் அசுரன். வேட்டையாடப்படவேண்டியவர்கள் ‘தேவர்களாக’ சித்தரிக்கப்பட்டுள்ள ஆளும் வர்க்க முதலாளிகள், ஆண்டைகள்.

அசுரன் திரைப்படம் ஒரு சிறந்த மானுடவியல் வரைவு. அதேவேளை அது சினிமா என்னும் அந்தக் கலைவடிவத்திற்கு ஏற்ற நயத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதீத கதாநாயகத்தன்மை என்றபோதும், அத்தகையதொரு எழுச்சியை ஏற்படுத்த அரசியல் இயக்கம் ஒன்று காரணமாக இருந்தது என்பதை தோழர்கள், வர்க்க அணிதிரட்டல் கூட்டம், உழைக்கும் வர்க்க மக்களுக்கான வழக்குறைஞர் கதாப்பாத்திரங்கள் மூலமாக சிறப்பாக பதிவுசெய்திருக்கிறார். வரலாற்றை அறிந்தவர்களால் அத்தகைய தோழர்கள் யார் என்றும், அதனால் எழுச்சி பெற்று பண்ணையார்களை வேட்டையாடிய போராளிகள் யார் என்றும், மக்களை அணிதிரட்ட தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் யார் என்பதையும் அறிய முடியும்.

அசுரன் கதைக்கு வருவோம். யாரோ ஒரு பெரிய தலைகட்டை சாய்துவிட்டு ஊரை விட்டு ஓடும் ஒரு குடும்பத்தின் மூலமாக தொடங்குகிறது கதை. மகிழ்ச்சியாக வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பம். ஆளுமை நிறைந்த தாய், குடிகார புருஷன் (அப்பன்). நல்ல உழைப்பாளிகள்.  அப்பன் ஒரு கையாலாகாதவன் என்று வெறுக்கும் இளைய மகன், பொறுப்புடனும், அடங்கமறுக்கும் குணத்துடனும் இருக்கும் மூத்த மகன். இவர்களுக்கு உறுதுணையாக மாமன்.

சிமெண்ட் தொழிற்சாலை கட்டுவதற்காக இவர்களின் நிலத்தை அபகரிக்க முற்படும் பண்ணைக் குடும்பம். செல்வந்தர்கள் எப்படி சொத்து சேர்த்தார்கள் என்பதற்கு இதுவே சான்று. ‘ஆதி மூலதனத் திரட்டல்’ எப்படி நடந்தது என்று மார்க்சியம் எடுத்துரைக்கும் சூத்திரத்தை சிறப்பான கதையாடலாக பதிவு செய்கிறது படம்.

தம் உரிமை நிலத்தைக் கொடுக்க மறுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் (பெரும்பாலும் அவர்கள் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டோர்), சிறுகுறு விவசாயிகளுக்கும் நேரும் கொடுமைகள் அக்குடும்பத்திற்கும் அரங்கேறுகின்றன. அதனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள், ஆண்டைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் என்று விரிகிறது கதை.

சாதியாலும், பொருளாதார ரீதியாகவும் தாழ்த்தப்பட்டோர் அன்றாடம் படும் துன்பங்கள் தான் இவை. ஆனால் அதை உணரும் அளவுக்கும், அதனை எதிர்த்துப் போராட வேண்டிய விழிப்புணர்வும் இல்லாததால் ஆதிக்க சாதிகளின் கை இங்கு பொருளாதார ரீதியாக எப்போதும் ஓங்கியே இருக்கிறது.

இது ஏதோ ஒரு சிவசாமியின் கதை. நல்லவன் கெட்டவனைப் பழிவாங்கிய கதை என்பதாகவே சினிமா ‘ரசிகர்கள் காண்பர். என்னருகில் அமர்ந்திருந்த பெண்மணி இடைவெளியில், “என்னப்பா இது படம் இவ்ளோ சீரியசா இருக்கு. 2ண்ட் ஹாஃப் கொஞ்சமாச்சும் ஜாலியா இருக்குமா” என்று பேசிக்கொண்டிருந்தார். ஒரு நிமிடம் எனக்கு நெஞ்சு உறைந்துபோனது.

ஆனால் 8 வருடங்களுக்கு முன்னர் நானும் சினிமாவை இப்படித்தான் அனுகியிருக்கிறேன். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை, வர்க்க உணர்வை, சாதி மற்றும் இதர ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வதன் அவசியத்தை ஏற்படுத்த சினிமா மிக முக்கியமானதொரு ஊடகம். இடதுசாரி (தலித்தியம் பேசுவோரும் இடதுசாரிகளே) மற்றும் முற்போக்கு சிந்தனைகளையுடைய இயக்குனர்கள் பலர் தற்போது இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றனர். வெற்றிமாறன் அதில் ஒரு பலத்த முத்திரையை பதித்திருக்கிறார்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செதுக்கப்பட்டுள்ளது. சிறந்த கதாப்பாத்திர தேர்வு. நடிகர்கள் அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். தனுஷ் ஒரு மகாநடிகன், கலைஞன் என்பதை நாம் சொல்லவும் தேவையில்லை. தமிழ்நாடு மட்டுமல்லாது சர்வதேசிய அளவுக்கு அவரைக் கொண்டுசென்றது அவரின் அந்த தனித்தன்மையே. நடிப்பு வெறியன் தனுஷ்!

ஜீ.வியின் பின்னணி இசை எழுச்சி!

தனுஷ் ஒரு பூஞ்சை என்று தொடக்கத்தில் காட்டி, பிறகு அவர் வீறுகொண்டு துவம்சம் செய்ய திரையில் நுழைவு கொடுக்கையில் அரங்கமே அதிர்கிறது. இது தனுஷுக்கான ரசிக வரவேற்பு என்பது ஒருபுறம், அதேவேளை கதாநாயகத்தன்மை, வீரம் என்கிற ‘ஆண்மை’சார் எதிர்பார்ப்பிற்குத் தீனி போடுவதால் ஏற்படும் பரவசம் என்பது மறுபுறம். இத்தகைய மனநிலை கொண்ட சமூகத்தில், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து சாதிய வர்க்கப் போராட்ட வரலாற்றை பதிவு செய்ய துணிந்திருக்கும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

இறுதியாக, திரையில் அநியாயங்களை எதிர்த்து உங்கள் மனம் கவர் கதாநாயகன் அடிக்கையில், களம் இறங்குகையில் உங்கள் மனம் கொண்டாடுகிறது. அது கதை அதனால் ஒரு சாகசத்தை உங்களால் கொண்டாட முடிகிறது. அது யாரோ ஒருவருடைய வாழ்க்கை, அங்கே ஒருவன் போராடுகிறான், அவன் ஜெயிப்பானா தோற்பானா என்று ஆர்பரிக்கும் மனம்.

அதே சமூகத்தில் நிஜமாக நடக்கையில், அங்கேயும் அது யாரோ ஒருவருடைய பிரச்சினை, யாரோ போராடுகிறார்கள் என்று வேடிக்கைப் பார்க்காமல் நமக்கான உரிமைகளுக்காக நம்மில் ஒருவர் போராடுகிறார் என்கிற உணர்வைப் பெறுவதும் ஆளும் வர்க்கச் சுரண்டலை ஒழிக்க ‘தோழர்களோடு’ அணி சேர்வதும்தான் மக்களின் கடமை.

அசுரன் நம்மின் பாட்டன், முப்பாட்டன்! யாமே அசுரர்! நம் வரலாற்றையும், உரிமைகளையும் அறிவோம், நம் சமூகத்தில் சாதிய-வர்க்க ஒடுக்குமுறைகளை நிகழ்த்தும் ஆண்டைகள், முதலாளிகளுக்கு எதிரான அசுரவேட்டையைத் தொடங்குவோம். நாமும் அசுரர்களாக மாறுவோம். குறைந்தபட்சம் அசுரனைக் கொண்டாடுவோம்.


Jul 25, 2019

சர்வதேசக் குழந்தைகள் வாரம்




கம்யூனிஸ்ட் இளைஞர் இண்டர்நேஷனலின் செயற்குழு, மூன்றாவது சர்வதேசக் குழந்தைகள் வாரத்தை ஜூலை 24 முதல் 30 வரை கொண்டாட முடிவு செய்துள்ளது. குழந்தைகள் இயக்கம் ருஷ்யாவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஆகவே இதைப் பிரபலப்படுத்த “குழந்தைகள் வாரம்” உபயோகப்படுகிறது.

“குழந்தைகள் இயக்கத்துக்கும், குழந்தைகள் ஸ்தாபனத்துக்கும் என்ன அவசியம்?” என ஒருசில தோழர்கள் கேட்கலாம்.  “அவர்கள் வளரட்டும், மேலும் முதிர்ச்சி அடையட்டும், பிறகு அவர்கள் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தில் சேருவார்கள். இப்பொழுது அவர்களுக்கு என்ன புரியும்? அவர்கள் விளையாடட்டும், பள்ளிக்குச் செல்லட்டும்” என்று அவர்கள் சொல்லலாம்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் உட்கொண்ட சிறுவர் கம்யூனிஸ்ட் கழகமே இளம் பயனீர் கழகமாகும்.*

இளம் பயனீர் கழகம் அதன் உறுப்பினர்களுக்குக் கூட்டுணர்ச்சியைப் புகட்டுகிறது. இன்பத்தையும் துன்பத்தையும் கூட்டத்துடன் பகிர்ந்துகொள்ள அவர்களைப் பழக்கப்படுத்துகிறது. தங்கள் கூட்டத்தின் நலனே தங்கள் நலன் என்று போதித்து கூட்டத்தின் உறுப்பினராகத் தங்களைக் கருதிக்கொள்ளுமாறு அவர்களுக்குப் போதிக்கிறது.  கூட்டுப் பழக்கங்களை, அதாவது ஒரு ஸ்தாபன ரீதியில் கூட்டாக வேலை செய்யும், இயங்கும் திறமையை வளர்க்கிறது.  தனது விருப்பத்தைவிட கூட்டத்தினரின் விருப்பத்தையே மேலாக மதிக்கவும், தனது  முன்முயற்சியை கூட்ட்த்தினரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவும், கூட்டத்தினரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவும், கடைசியாக, தாங்கள், மனிதகுலத்தின் மலர்ச்சிக்காகப் போராடும் தொழிலாளி வர்க்கத்தின் உறுப்பினர்கள், சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் என்ற மாபெரும் சேனையின் உறுப்பினர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி குழந்தைகளின் கம்யூனிஸ்ட் மனவுணர்வை வளர்க்கிறது.

மேலே கூறியவை மட்டுமே குழந்தைகளை எவ்வளவு சீக்கிரமாக இவ்வியக்கத்தில் சேர்க்கிறோமோ அவ்வலவுக்கு நல்லது என்பதை நிரூபிக்கிறது. “நாங்கள் எங்கள் தந்தையைக் காண்பதேயில்லை; அவர் பகல் நேரத்தில் வேலை செய்கிறார், சாயங்காலம் கூட்டங்களுக்குச் செல்லுகிறார்” என்று தொழிலாளர்களின் குழந்தைகள் கூறுவதை அடிக்கடி கேட்கலாம்.  அவர்கள் தாயும் வேலை செய்கிறாள் அல்லது வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை கவனிப்பதிலும் ஈடுபடுகிறாள்.  அகவே அவர்கள் எதையும் பார்க்காமல் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்;  அல்லது அலுப்புத் தாங்காமல் குறும்புச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  அல்லது தெருவில் திரியும் சிறுவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவர்கள் கழகம் அவர்களுக்கு அநேக இன்பமான வாய்ப்புகளைத் தரும். அவர்களது செயல்களையும், முன்முயற்சிகளையும் வளர்த்து அவர்களது எண்ணங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

இயல்பாகவே, இளம் பயனீர் கழகம் பெரியவர்களின் கழகத்தைப் போன்று இருக்கக் கூடாது. அவ்வாறு பெரியவர்கள் கழகத்தின் மறுபதிப்பாக இருந்தால் உண்மையிலேயே கெடுதல்தான். ஆனால் அதில் கம்யூனிஸத் தன்மையை ஊட்ட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அது கோஷ்டிப் பாட்டுகள், விளையாட்டுகள், நீந்துதல், இயற்கைக் காட்சிகளைக் காணச் செல்லுதல், தீக்கணப்பைச் சுற்றி அமர்ந்து பேசுதல், தொழிற்சாலைகளைப் பார்வையிடுதல், பாட்டாளி வர்க்கத்தினரின் விழாக்களில் கலந்து கொள்ளுதல் போன்ற உல்லாச நிகழ்ச்சிகளுக்கு வழி செய்ய வேண்டும்.  இவை அனைத்தும் குழந்தைகளின் மனதில் அழியாத உளப்பதிவை ஏற்படுத்தி, ஒரு ஸ்தாபனத்தின், ஒரு கூட்டின் அமைப்பை அவர்களுக்கு நன்றாக எடுத்துக் காட்டும்.  பாட்டாளி வர்க்கத்தினரின் விழாக்களில் கலந்து கொள்ளுதலும், தொழிலாளர்களின் கிளப்புகளையும், தொழிற்சாலைகளையும், தொழிலாளர் கூட்டங்களை பார்வையிடுதலும் குழந்தைகளுக்கும் தொழிலாளி வர்க்கத்தினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பை உண்டு பண்ணும். முடிந்த அளவுக்கு எல்லா வகைகளிலும் இத்தொடர்பை ஊக்கப்படுத்த வேண்டும். மாதர் சங்கக் கிளைகளும், ஆலைகளிலுள்ள கட்சி குழுக்களும், தொழிற்சங்கங்களும் இளம் பயனீர்களுக்கு ஆதரவு தரவேண்டும்; குழந்தைகளிடையே வர்க்க ஒருமைப்பட்டு உணர்வை புகட்டத் தங்களால் இயன்றது அனைத்தையும் செய்ய வேண்டும்.


குழந்தைகள் இயக்க வாரத்தின்போது தொழிலாளர் கழகங்கள் இளம் பயனீர்களை தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களைத் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று தங்கள் வேலையை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.  விசேஷமாகப் பொறுக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் அவர்களுக்குத் தங்கள் இளமைப் பருவத்தைப் பற்றியும், தாங்கள் நிகழ்த்த வேண்டியிருந்த போராட்டத்தைப் பற்றியும் கூற வேண்டும். சுருங்க்க் கூறின் சர்வதேசக் குழந்தைகள் வாரத்தில் தொழிலாளி வர்க்கம் இளம் பயனீர்களைத் ‘தத்து’ எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளே. ஆகவே தான் இளம் பயனீர் கழகம் விளையாட்டுகளுக்குப் பெரிதும் முக்கியத்துவமளிக்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் உடற்கட்டை வளர்க்க விளையாட்டுகள் கண்டிப்பாகத் தேவை. அவை உடல் பலத்தை வளர்க்கின்றன, குழந்தைகளின் கைகளை வலுவுறச் செய்கின்றன, உடல் லாவகத்தை அதிகரிக்கின்றன, கண்பார்வையைக் கூர்மையாக்குகின்றன; அவர்களது நுண்ணறிவையும் சமயோசித புத்தியையும், முன்முயற்சியையும் வளர்க்கின்றன.  குழந்தைகளின் ஒழுங்கமைப்புத் திறமை, தன்னடக்கம், பொறுமை, நிலைமையை சீர்தூக்கி ஆராயும் திறமை போன்றவற்றை அதிகரிக்கின்றன.  நல்ல விளையாட்டுக்களும் கெட்ட விளையாட்டுக்களும் இருப்பது உண்மைதான்.  சில விளையாட்டுகள் குழந்தைகளைக் கொடியவர்களாகவும், முரடர்களாகவும் செய்கின்றன. பிற இனத்தினரை வெறுக்கத் தூண்டுகின்றன, குழந்தைகளின் நரம்பு மண்டலத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. சூதாடும் உணர்ச்சியையும் செருக்கையும் வளர்க்கின்றன.  வேறு சில விளையாட்டுகள் குழந்தைகளைச் சரியான முறையில் போற்றி வளர்க்கின்றன. குழந்தைகளின் மனதிடத்தை வலுப்படுத்துகின்றன. நீதி உணர்வை வளர்க்கின்றன. வேறு சில அவர்களைக் கம்யூனிஸ்டுகளாக்குகின்றன. கடைசியாகக் கூறியதை நிறைவேற்றுவதே இளம் பயனீர்கள் எடுத்துக்கொண்டுள்ள காரியம். இங்குதான் அவர்களுக்கு கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கம் உதவி புரிகிறது.


இளம் பயனீர்கள் விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. இக்காலக் குழந்தைகள் பலவற்றைக் கண்டுள்ளனர், கேட்டுள்ளனர்; மனிதகுலத்தின் மலர்ச்சிக்கும், புது வாழ்விற்குமான போராட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ள விரும்புகிறார்கள். இதில் அவர்களுக்குள்ள பங்கு ஒருவேளை பெரிதாக இல்லாமல் இருக்கலாம்;  மருந்துச் செடிகளைத் திரட்டுதல், தொழிற்சாலைகளுக்கு முன்னுள்ள வெற்றிடங்களைச் சுத்தப்படுத்தி அங்கே பூச்செடிகளை நடுதல், பச்சிளங்குழந்தைகள் விடுதிக்காகத் துணிகளைத் தைத்தல், கூட்டங்களுக்கான வரவேற்பிதழ்களை விநியோகம் செய்தல், தொழிலாளர் கிளப்புகளை அலங்கரித்தல் போன்றவையே அவை. ஆனால் இந்தக் கூட்டுப் பணிகள், தான் சமுதாயத்துக்கு உதவும் ஒரு உறுப்பின்ன் என்பதை இளம் பனீர் உணருமாறு செய்து, வேறு ஆக்க வேளைகளைச் செய்யுமாறு அவனைத் தூண்டி விடுகின்றன.  சோவியத் ஸ்தாபன்ங்கள் இளம் பயனீரிடம் கவனம் செலுத்த வேண்டும், அவர்களின் நடவடிக்கைகளின் மண்டலத்தை விரிவாக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

குழந்தைகள் இயக்கம் பள்ளிக்கூடத்துக்கு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் குழந்தைகளின் “சுய ஆட்சியை” வலுவுறச் செய்ய உதவுகிறது.  புதிய போதனை முறைகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தையும் அறிவு வேட்கையையும் அதிகரிக்கிறது.  முற்போக்கான ஆசிரியர்கள் இளம் பயனீர்களைப் போற்ற வேண்டும். சர்வதேசக் குழந்தைகள் வாரத்தில் பள்ளிகள் இளம் பயனீர்கள் முன்னுள்ள வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இளம் பயனீர்கள், புதிய பள்ளியை நிர்மாணிப்பதில் ஆசிரியர்களுக்கு முழுமனத்துடன் உதவ வேண்டும், பள்ளியின் நடுமையங்களாகத் திகழ வேண்டும்.

ஜூலை 24 முதல் 30 வரைப்பட்ட இந்த வாரத்தில் ருஷ்ய சோவியத் கூட்டாட்சி சோஷலிசக் குடியரசின் குழந்தைகள் இயக்கத்துக்கு ஒரு திடமான அடிப்படையை ஏற்படுத்த வேண்டும்.

- ந. கா. க்ரூப்ஸ்கயா, இளைஞர்களைக் கம்யூனிச முறையில் பயிற்றி வளர்த்தல், பக்.149-153


புகைப்படங்க: https://weirdrussia.com/2015/05/19/young-pioneer-organization-of-the-ussr/ (இந்த சுட்டியை சொடுக்கிப் படிக்கவும்) 

Jul 13, 2019

இராம காதை – ஒரு விமர்சனப் பார்வை




128: இராம காதை – ஒரு விமர்சனப் பார்வை
கொங்கனி-ஆங்கில நடைமுறை கலைக்களஞ்சிய அகராதி
ஆசிரியர் – பண்டரிநாத் புவநேத்திர ஜனார்த்தன்
சென்னைப் பல்கலைக் கழக, பகுப்பாய்வு வேதியல் துறை ஒய்வு பெற்ற பேராசியர்,தலைவர்.
1999 அச்சிடப்பட்டது

1.  இராமன், விஷ்ணுவின் அவதாரம்:- விஷ்ணுவின் அவதாரங்களில், இராமன், கிருஷ்ணன் ஆகிய இரு அவதாரங்கள் பிரதானப்பட்டுள்ளது. அவதாரம் என்றால் வம்சாவளியாக வாரிசு அல்லது வானிலிருந்து இறங்கி வந்தவர் என்று பொருள்கள் உண்டு. அந்த பின்னணியில், விஷ்ணுவாகப்பட்டவர் வைகுண்டத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தவர். ஆனால் அவர் இறங்கிவந்ததை கண்டவர் எவருமில்லை. வின்வெளி வீர்ர்கள் தங்கள் கண்களாலோ அல்லது சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் வாயிலாகவேனும் யாராவது அவரைக் கண்டதாக ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வைகுண்டம் என்பது வானத்தில் இருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும். தன்னுடைய தேவலோகத்தை விட்டு விஷ்ணு ஏன் இந்த சாதாரண உலகிற்கு வரவேண்டும்? எப்போது அதற்கான தேவை ஏற்பட்டது? இதற்கான விடையை அவரே கீதையில் அத்தியாயம் IV S1-7 இல் கூறுகிறார்:

யதா யதா ஹி தர்மஸ்ய …. = அதாவது எப்போதெல்லாம் தர்மம் வீழ்த்தப்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ, ஓ! அர்ஜுனா அப்போது நான் இந்த பூமியில் பிறப்பெடுப்பேன். இதில் கிருஷ்ண பகவான், “பிறப்பெடுப்பேன்” என்று சொல்வதாவது பொருளுடையது, ஆனால் புராணங்களோ “இறங்கி வந்தார்” என்று குழப்புகின்றன. வான்வெளியிலிருந்து இறங்குதல் அல்லது அவதாரமெடுத்தல் என்பது இறங்கி வருவது என்பது மேலிருந்து கீழே வருவது அல்லது தரையிறக்கப்படுவது என்றும் பொருளாகும். ஆனால், மாயாஜாலக் கதைகளைக் கேட்டு குதூகலமடையும் மக்கள் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கேள்விகள் எழவில்லை. ஆனால் நவீன காலத்தில் புராணக் கட்டுக் கதைகளுக்கு ஆதாரமேதுமில்லை என்னும் புரிதல் உண்டாகிவிட்டது.

என்ன கதைகள் சொன்னாலும், ஒரு அவதாரமென்பது பிறப்பதில்லை, உருவாக்கப்படுவது. தாமரை மொட்டு போன்ற கண்கள், முட்டியைத் தொடுமளவு நீளமான கைகள் (ஆஜானபாகு) கையில் சங்கு, சங்கிரம் (ரேகை) போன்ற ‘சாமுத்ரிகா’ இலட்சனங்கள் இருக்கும் ஒரு சிறுவனை கவனமாக தேர்ந்தெடுத்து ஒரு அசாதாரண மனிதன் போல் நடந்துகொள்ளும் வகையில் ஒரு குருவின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறார். இதற்காக அந்த சிறுவனுக்கு இறுமாப்பு ஊட்டி வளர்க்கப்படுகிறது. இறுதியில் அவர் தன்னை ஒரு மாபெரும் அவதார புருஷனாக நம்பத் தொடங்குகிறார். புதிய இலாமாவை (திபெத்து) தேர்ந்தெடுப்பதை விட இது சற்று கடினமான பணிதான்.

இராமனின் விஷயத்திலோ, ஆயத்தமாக அப்படி ஒரு சிறுவன் கிடைக்கவில்லை. ஆகவே அதர்வ சடங்குகளை நன்கு அறிந்திருக்கும் வேத விற்பண்ணர்களை தேர்ந்தெடுத்து புத்ர காமேஸ்டி (ஆண் குழந்தை வேண்டி செய்யப்படும் யாகம் – மொ.ர்) யாகம் நடத்த வேண்டியிருந்தது. சட்டப்படி இராமனின் தந்தை தசரதன் எனினும், ருஷ்ய சிருங்கனே அவனை பெற்ற தந்தையாக இருக்கக் கூடும். இராமன் அவதாரமாக உருவாக்கப்படுகிறான் என்பது வசிஷ்டர், கோதமர், விஸ்வாமித்ரர் மற்றும் இந்திரன் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். தசரதனுக்குக் கூட தெரியாது. அதனால் தான் இராமனையும், இலட்சுமணனையும் விஸ்வாமித்ரனுடன் காட்டிற்கு அனுப்ப தசரதன் தயங்கிய போது, “இராமன் யார் என்பது எனக்கு தெரியும், உனக்கு தெரியாது” என்று அவர் கர்ஜித்தார். அதிர்ந்த தசரதன் உடனே வசிஷ்டரிடம் ஒப்புதல் வாங்கினான்.

இப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராமனுக்கு தன்னுடைய சபதங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய பயிற்சிகளை விஸ்வாமித்ரர் அளித்தார். உடனே அவன் இலட்சியபூர்வ நாயகனாகிறான். மற்றவர்களை விட இப்போது இச்சிறுவன் வேறு மாதிரி நடக்க வேண்டும். அதற்கு அவனுடைய இறுமாப்பை தூண்டிவிடுவதில், குரு முக்கிய பங்கு வகிப்பார். அதனோடு அவன் சில மாயாஜாலங்களைச் செய்ய வேண்டும், ஆகவே, மிதிலைக்கு செல்லும் வழியில், கல்லாகிப் போன அகலிகையை தொட்டு சாப விமோசனம் கொடுத்து அழகிய பெண்ணாக்குகிறான். சிவனின் (பினாகா) வில்லை முறித்தது மற்றொரு சாகசம். சத்திரியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, ஒரு சத்திரியனையும் உயிரோடு விடாத பரசுராமனை தோற்கடித்ததுதான் இராமனின் பெருஞ்சாகசம். அதற்கடுத்து ககாசுரனை (இந்திரனின் மகன்) வென்றது. இதெல்லாம் இராமனை பெருமைக்குரியவனாக்கியது. இப்படியாக தன்னுடைய சிந்தனை, வீர தீர செயல்கள் மூலம் ஒரு மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்தினால் அதற்குப் பெயர் மேம்படுத்துதலே அன்றி அவதாரமில்லை (இறங்குதல் அல்லது தரையிரக்கம் இல்லை).

பாரத கண்ட்த்தில் ஆரிய இராஜ்ஜியத்தை பரப்பி, நிலைநாட்டுவதும், ஆரியர்களை பாதுகாப்பதும் தான் அவதார புருஷனுக்கான கடமை. அதாவது ஆரிய தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை ஒழித்தல். கூர்மதியுடன் ஒருவர் புராணங்களை ஆய்வு செய்தால், “ஆரியரால்லாதாரின் தர்மத்தை” ஒழித்தால் ஒழிய ஆரிய தர்மத்தைக் காக்க இயலாது என்பது தெளிவாகும். ஆரியரல்லாத (அநாரிய) என்றால், ஆரிய குலத்தைச் சாராதவர்கள் என்று பொருள், அதாவது ஆதிவாசிகள், பழங்குடிகள் என்றாகிறது. வேளாளர்களான ஆரியர்கள் மற்றும் பழங்குடிகளின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்திருந்தது, ஆகவே அவர்களிடையே கடுமையான மோதலும் நிலவியது. யாகம் என்னும் பெயரில் ஆரியர்கள் காடுகளை தீயிட்டு கொளுத்தி அழித்தனர். தங்களுடைய வாழ்விடங்கள் அந்நியர்களால் அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு யார்தான் அமைதியாக இருப்பார்கள்? மூட்டப்பட்ட தீயை அணைக்க தண்ணீர் ஊற்றினால், அது அதர்மாகிவிடுகிறது. ஆரியர்களின் யாகத்தை குலைக்க அவர்கள் யாக குண்டத்தில் இரத்தத்தை ஊற்றினார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. இப்படியாக ஆரியரல்லாத பழங்குடிகளுக்கு தீங்கு இழைக்காமல் ஓர் அவதார புருஷனால் ஆரியர்களுக்கு எந்த நன்மையும் செய்ய இயலவில்லை. “கடவுளானவர் தன்னுடைய படைப்பில் ஒவ்வொரு குழந்தையையும் நேசிக்கிறார்” என்னும் பழமொழி பொய்யாகிறது. ஆனால் ஆரிய புராணங்களோ விஷ்ணு கடவுளர்கள் அல்லது ஆரியர்களிடம் பாகுபாடு பார்க்கிறார் என்கின்றன. சரி, தர்மம் – அதர்மம் என்னும் இந்த மோதலில், எந்த சூழல் இராம அவதாரத்தை உண்டாக்கியது? சில காரணங்கள் பின்வருமாறு:

1.  பழங்குடிகள் பிரதானமாக விந்திய மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அதில் வானரர்கள், இராட்சசர்கள் ஆகிய பழங்குடிகள் பெரும்பான்மையினர். வானரர்களை (காட்டுவாசிகள்) வால்மீகி இராமாயணத்தில் வானரங்கள் (நீள வால் குரங்கு) என்று சித்தரித்தார். தக்‌ஷின கண்டத்திற்கு (தக்காணம்) பயணித்த ஆரியர்கள், பழங்குடிகள் மத்தியில் பெண்களை வேட்டையாடத் தொடங்கினர். வானரர்கள் இதனை எவ்வித எதிர்ப்புமின்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். இராட்சசர்கள் எதிர்த்தனர். ஆகவே ஆரியர்கள் இராட்சசர்கள் குறித்து அவதூறுகளை பரப்பினர் . மறுபுரம், வானரர்களை விஷ்ணுவின் படைப்பு என்று புகழ்ந்து, இராவணனை (சுரா சர்வே ஜயரேன் பூமாஒ வானர ரூபினா சஹாயம் கர்த்தும் மே இராவண நிக்ரஹே – ஸ்ரீ இராமோதந்தம்) எதிர்ப்பதற்கு ஏற்ற கூட்டணியை உருவாக்க திறம்பட வேலை செய்தனர்.

2.  இராட்சசர்களோ ஒழுங்கற்ற வகையில் வரவிக் கிடந்த இனமாகும். தொடக்கத்தில் ஆரியர்கள் அவர்களுக்குள் ஊடுறுவ முடிந்தது. அப்போதுதான் அவர்கள் இனத்தில் மானமும், விவேகமும் நிறைந்த ஒரு இராட்சசன் உதய சூரியன் போல் உதயமானான். அவன் தான் இராவணன். தன் கொடையின் கீழ் அந்த இனத்தை ஒருங்கிணைத்து தனயர்கள், நாகர்கள் மற்றும் இந்திரனை தோற்கடித்தான். இராட்சசர்களிடமிருந்து ஆரியர்கள் அபகரித்த நிலங்களையெல்லாம் மீட்டான். குபேரனிடமிருந்து இலங்கையை மீட்டான். வணிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் தடங்கள் பல இலங்கையில் இருந்தன. ஆரிய விரிவாதிக்கத்திற்கு இடைஞ்சலாக இருந்ததால் இராவணனின் இருப்பு அவர்களுக்கு அதர்மமானது.

3. ததாகி என்பவள் சக்திவாய்ந்த இராட்சசி. அவள் இராவணனின் உறவினள். அகத்திய முனிவர் தன் ஆசிரமத்தை ததாக வனத்தில் அமைத்தார். அப்போதுதான் வில்வித்தை பிரபலமாகி வந்தது. அவர் அதில் வித்தகர். கற்கள் மற்றும் மரங்களின் கிளைகள் கொண்டு சண்டியிட்டு வந்த வானரர்கள் மற்றும் இராட்சசர்களால் நீண்ட தூரம் பாயும் இரும்பாலான ஆரியர்களின் அம்புகளை எதிர்கொள்ள இயலவில்லை. அகத்தியரும் அவரது சீடர்களும் ஆசிரமத்தின் அருகில் வரும் இராட்சசர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் இரவு ததாகை ஆசிரமத்திற்கு திடீர் விஜயம் செய்து, அகத்தியரை கைது செய்தாள். அகத்தியரின் சகோதரன் புலத்சிய பிரம்மனின் கண் முன்னே அகத்தியர் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாது கடுஞ்சினம் கொண்ட பிரம்மன், இராட்சசர்களின் பௌலத்ஸய இனத்தையே அழித்தொழிப்பேன் என்று சபதம் பூண்டான்.

4. தான்யர்கள், நாகர்கள் அடங்கிய பெரும் படையுடன் இராவணன் இருந்தான். அவனது இலங்கை இராஜ்ஜியத்திற்கு போகும் வழிகளில் நிறைய ரிஷிகளின் ஆசிரமங்கள் இருந்தன. அதில் ஒருவர் இராஜ ரிஷி குஸத்வஜ ஜனகர். மிதிலையின் சிரத்வஜ ஜனகரின் அண்ணன். அகலிகைக்கும் இந்திரனுக்கும் பிறந்தவள் வேதவதி. சட்டப்படி அவளுடைய தந்தையான கோதமர் வேதவதியை தன்னுடன் வைத்துக்கொள்வதை அவமானமாகக் கருதினார். எனவே குஸத்வஜர் வேதவதியை தத்தெடுத்துக் கொண்டார். 16 வயதில் வேதவதி பேரழகியாக வளர்ந்து நின்றாள். எனவே பல இராட்சச இளைஞர்கள் அவளை பெண் கேட்டு குஸத்வஜரை அனுகினர். தன்னை விட்டு வேதவதி சென்றுவிட்டால் தனிமையில் துன்புற வேண்டுமே என்ற சுயநலம் காரணமாக தன் மகளை விஷ்ணுவிற்கு மட்டுமே திருமணம் செய்து கொடுப்பேன் என்று அந்த முதியவர் சொல்லி வந்தார். தன்னை வீட்டிலேயே அடைத்துவைக்கவே இந்த திட்டம் என்பது அப்பெண்ணுக்கும் தெரியும். ஆசிரமத்தை சுற்றி வலம் செல்லும் இராவணனை அவள் அடிக்கடி பார்ப்பாள். தன்னுடைய பலத்தால் இராவணன் அப்போது புகழ்மிக்கவனாக இருந்தான். இராவனேஸ்வரன் என்று அவனை எல்லோரும் கொண்டாடினர். அவன் தான் விஷ்ணுவிற்கு பதிலானவன் என்று வேதவதி பலமுறை எண்ணினாள். ஒருநால் அவர்களின் கண்கள் நான்கும் சந்தித்தன. சில நாட்களில் அவர்கள் நெருங்கி பழகத் தொடங்கினர். வேதவதிக்கு இராவணனின் வீரமும், புகழும் பிடித்திருந்தது. எனவே கந்தர்வ முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனே கோரமாஸ்ரம்மும், குஸத்வஜ ஆசிரமமும் கோபத்தாலும், சாபத்தாலும் நிறைந்தது; இராவண குலத்தை அக்குலத்தின் சொந்த கரு கொண்டே அழித்திடுவதாக கோதமர் சபதம் பூண்டார். சில மாதங்களில் குழந்தையை தூக்கிக் கொண்டு சதாநந்த கோதமி மிதிலையில் ஓர் வனத்தில் கிடத்திச் சென்றாள். அக்குழந்தையை சிரத்வஜ ஜனகர் கண்டெடுத்தார். இதுதான் சீதையின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்த இரகசியம். ஆனால் அவள் பூமா தேவியின் மகள் என்று இட்டுகட்டினர். வேதவதியை இராவணன் திருமணம் செய்தது பெரும் அதர்மம், ஏனென்றால், இராட்சச குலம் கீழ் வர்க்கம் (சாதி – மொ.ர்) எனவே இராவணன் தண்டனைக்குரியவன், கொல்லப்பட வேண்டியவன்.

5. திபெத்தின் வம்சாவளி மன்னன் இராவணன். அப்பொது அது திவிஸ்தபா என்று அழைக்கப்பட்டது. அநேகமாக அவன் அண்டை நாடுகள் பலவற்றையும் வென்றிருந்தான். இந்திரனின் அமராவதி மட்டுமே எஞ்சியது. போதிய முன் தயாரிப்புகள் இன்றி, அதிலும், இந்திரன் இத்தகைய தாக்குதலை எதிர்பார்த்து ஏற்கனவே படைகளை தயார் நிலையில் வைத்திருந்தான் என்றரியாது அமராவதி மீது போர் தொடுத்தான். தோல்வியின் விளைவாக இராவணன் பல நாட்கள் சோகத்தில் மூழ்கினான். மேகநாதன் தன் தந்தையின் இன்னலைக் காண முடியாது, மின்னல் வேக நடவடிக்கை எடுத்து, அமராவதி நகரத்தை துவம்சம் செய்தான். இந்திரனை கையும், காலும் கட்டி இழுத்துவந்து இராவணனின் காலில் கிடத்தினான். எல்லை வாயிற்கதவில் கட்டப்பட்டான், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனௌம் இந்திரனை ஏளனம் செய்தனர், கடவுளர்களின் அரசனை நையாண்டி செய்தனர்.  புலஸ்தைய பிரம்மனின் வேண்டுகளுக்குப் பிறகு, அதுவும் தனக்கு இந்திரஜித் (இந்திரனை வென்றவன்) என்று பட்டமளித்தப் பின்னரே இந்திரனை விடுவிக்க மேகநாதன் ஒப்புக்கொண்டான். இதனால் வன்மம் கொண்ட இந்திரன் என்ன விலை கொடுத்தேனும் இராவணனை பழிதீர்க்க கங்கணம் கட்டினான்.

இப்படியாக, இந்திரன், அகத்தியன், விஸ்வாமித்ரன், குஸத்வஜன், கோதமன், வைஸ்ரவணன் இன்னும் சிலரின் கோபங்களுக்கு இராவணன் ஆளானதாலேயே, அவனைக் கொல்வதற்கு இவர்கள் கூட்டணியில் இராமாவதாரம் உருவானது. அதுமட்டுமா, ஒவ்வொரு அவதார புருஷர்களின் உருவாக்கத்திற்குப் பின்னரும் தேவரிஷி நாரதன் (பண்டையக் கால நடமாடும் செய்தித் தாள்) தான் இருக்கிறான் என்பது பெரும்பாலருக்குத் தெரியாது. ஹிரண்யகசிபுவைக் கொண்ற வராஹ யாகத்திற்கு அவனே காரணம். மஹாபலியை ஏமாற்றிய உபேந்திரனின் தோற்றத்திற்குப் பின்னிருப்பவன் அவனே. அதேபோல் இராமனின் விஷயத்தில் நாரதன் செய்தது என்ன? தன்னுடைய சீடனான வால்மீகியிடம் ஒரு கதைக் கருவைக் கொடுத்தான். அவர் தன்னுடைய கவித் திறனால் அதனை ஒரு விரிவான நாடகமாக வடித்தார். இராமன் பிறக்கும் முன்பே இந்த திரைக்கதை உருவாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து இராமாயணம் என்பது அந்த திரைக்கதையின் அரங்கேற்றம் மட்டுமே.

தொடரும்….


Jul 12, 2019

ஆய்வு நூலா? வசைகளின் தொகுப்பா?


ஜூலை6 அன்று ‘நூல்வெளி’ பகுதியில் அம்பேத்கரின் சாதிய ஆய்வுகள் குறித்த ரங்கநாயகம்மாவின் நூலையும் அதை மறுத்து மதிவண்ணன் எழுதிய நூலையும் பற்றிய விமர்சன அறிமுகத்தைப் படித்தேன். செல்வ புவியரசன் சொல்லியிருப்பதுபோல அம்பேத்கரின் சாதி குறித்த பார்வையில் உள்ள போதாமைகளை ரங்கநாயகம்மா நிறுவ முயலவில்லை. நிறுவியேவிட்டார்.
செல்வ புவியரசன், அம்பேத்கரின் ஓரிரு மேற்கோள்களை எடுத்து அவர் மார்க்ஸியத்தை வெறுக்கவில்லை அல்லது மார்க்ஸை ஏற்றுக்கொண்டார் என்ற சித்திரத்தை வழங்க முடியுமெனில், அதேபோல் பல நூறு மேற்கோள்கள் கொண்டு அம்பேத்கர் எவ்வாறு மார்க்ஸியம் குறித்தும், புரட்சி குறித்தும் காழ்ப்புணர்ச்சியோடு பேசியுள்ளார் என்பதையும் நிரூபிக்க முடியும்.
அம்பேத்கருக்குத் தெரிந்தது ஏபிசிடி மார்க்சியம்தான் என எஸ்.வி.ராஜதுரை சுட்டிக்காட்டியதிலிருந்து அம்பேத்கருக்கு மார்க்ஸியம் சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்கவில்லை என அருணன் சொல்லியது முதற்கொண்டு டெல்டும்டே வரையில் அம்பேத்கருக்கு மார்க்ஸியம் பற்றிய புரிதல்கள் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக இருக்க, அம்பேத்கரின் தலையில் மார்க்ஸியப் புத்தகங்களைக் கட்டிச் சுமக்கவிடுகிறார் மதிவண்ணன்.
ஒட்டுமொத்தமாக, ரங்கநாயகம்மாவையும், கொற்றவையையும் திட்டுவதற்கு ஒரு நூலை எழுதி, அதை ஆங்காங்கு அம்பேத்கர் எழுதிய வார்த்தைகளால் வெட்டி ஒட்டி நிரப்பிவிட்டால், அது ஆய்வு நூல் தகுதியை அடைந்துவிட முடியுமா என்பதை செல்வ புவியரசன் விளக்க வேண்டும்.
மற்றபடி டுபாக்கூர் மற்றும் ஒரிஜினல் ஆய்வுகளை ஆய்வாளர்களும், வாசகர்களும் சமப்ந்தப்பட்ட நூல்களை வாசிக்கும்போது உணர்ந்துகொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், மதிவண்ணனின் நூல் ஒரு வசைக் குப்பை. பெண்களின் மீதான அருவருப்பு மற்றும் மத துவேஷத்தோடு இருப்பதுடன் அது அம்பேத்கருக்கே முரணான நூல்.
நன்றி - #வசுமித்ர (இன்றைய இந்து தமிழில் எதிர்வினை வெளியிடப்பட்டுள்ளது)