Oct 28, 2022

தொடரும் ஆபாச தாக்குதல்கள்

 


ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் அறிவிலிகளுக்கு!

இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்று சிந்தியுங்கள். ஆணாதிக்கம் என்றால் என்ன என்று பேசிய காணொளி உள்ளது. அதையும் பாருங்கள்.

ஆணாதிக்கம் என்றால் என்ன

சிசுகொலை, வரதட்சனை, குடும்ப வன்முறை தொடங்கி பாலியல் வன்கொடுமை வரை அனைத்திற்கும் அதிகாரம் வழங்கியிருப்பது ஆணாதிக்க சமூக அமைப்பே ஆகும்!

ஆண் மேலானவன்.. பெண் கீழானவள் என்று பாலின அடிப்படையில் எழுதா விதி நிலவுகிறது. இது ஆண் பெண் மாற்றுப்பாலினம் என அனைவரையும் கட்டுப்படுத்துகிறது.

தற்போதைய உதாரணம் ஒன்றை சொல்கிறேன்!

சின்மயா வித்யாலயா வன்கொடுமைக்கு எதிராக நான் பேசிய காணொளி இணையத்தில் வலம் வந்த பிறகு என் மீதான பாலியல்ரீதியான  verbal abuse, slut shaming எல்லாம் அதிகரித்துவிட்டது. Nobraday பிரச்சாரத்திற்குப் பின், குறிப்பாக behindwoodsக்கு பேட்டி அளித்த அன்று மாலை இது அடுத்த கட்ட தாக்குதலுக்கு சென்றுள்ளது!

எனது அலைபேசி எண்ணை டிவிட்டரில் பகிர தொடங்கியுள்ளனர். ஒருவரா.. ஒரு கூட்டமா தெரியவில்லை! திடீரென எனக்கு தெரியாத எண்களில் இருந்து hi என்று மெசேஜ் வரத் தொடங்கியது.. அழைப்புகளும்! பொதுவாக தெரியாத எண்களை நான் எடுப்பதே இல்லை!

Msg வந்த எண்ணிற்கு யார் நீங்கள் என்று கேட்டால்.. பெயரை சொல்லி நீங்க யாரு என்றார்கள். அதிர்ச்சியானது.. யாருன்னே தெரியாம எப்படி மெசேஜ் பண்றீங்க.. எனது எண் எப்படி கிடைத்தது என்று திட்டிவிட்டு ப்ளாக் செய்தேன். அலுவலகத்தில் இருக்கையில் அடுத்தடுத்து மெசேஜ்.. அழைப்புகள்.. கட் செய்தாலும் தொடர்ந்து கால் வந்தது. பின் ஒரு அழைப்பை எடுத்து “யார் நீ.. என் எண் எப்படி கிடைச்சுது என்றேன்.. எங்கு பார்த்தேன் என்று அவன் சொல்ல “ஏண்டா ஒரு பொண்ணோட நம்பர எவனாச்சும் லீக் பண்ணா உடனே அலைஞ்சுக்கிட்டு ஃபோன் பண்ணுவீங்களா.. உங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா… “ என்று திட்டி வைத்து விட்டு.. இது எப்படி நடந்திருக்கும் என்று யோசித்தேன்.. ஓரிரு நண்பர்களிடம் பேசினேன்.. எப்படி எண்  பகிரப்படுகிறது என்று guess செய்தேன்… பார்ன் அல்லது பாலியல் அழைப்பிற்கான தளங்களில் எனது எண்ணை பகிர்ந்திருக்கிறார்கள்… வக்கிரம் பிடித்தவர்கள்..

 நேருக்கு நேர் மோதி அறிவால் எதிர்கொள்ள முடியாத கோழைகள்! ஆம்பிளை என்னும் திமிர்.. பெண்ணாகவும் இருக்கலாம்.. தெரியவில்லை! ஐடியை ரிப்போர்ட் செய்தாலும் தினம் பல ஃபேக் அகௌண்ட் தொடங்கி இதே வேலையை செய்கிறார்கள்.  ஆனால் இவர்களால் நாட்டை சீர்கெடுக்கும் அதிகார வர்க்கத்தையோ.. ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களையோ எதிர்த்து ஏதேனும் செய்ய இயலுமா?  நஞ்சு நஞ்சைத்தானே ஆராதிக்கும்! 

தொடர்ந்து எனது புகைப்படங்களின் கீழ் ஆபாச பதிவு. One night stand, night stayவா.. அடுத்து எவன் சிக்குனானோ தெரியல.. பல சைச பார்த்தவ.. இப்படியாக தினம் வெவ்வேறு ஐடிக்களில் இருந்து .. எனக்கு மன உளைச்சல் தருவதாக அவர்களுக்கு நினைப்பு! ஆனால் இது எதுவும் என்னை மசுருக்கு கூட தொந்தரவு செய்யாது!

ரிப்போர்ட் செய்துவிட்டு, ப்ளாக் செய்துவிட்டு என் வேலையை பார்க்கிறேன்!

இதன் மூலம் இவர்கள் அடையும் இன்பம் என்ன என்று தான் என் மனதில் ஓடுகிறது.. இத்தகைய மனநிலைக்கு ஒருவர் ஆளாகிறார் என்றால் இவர்கள் சமூகத்திற்கு எவ்வளவு ஆபத்தானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உண்மையில் நல்ல உறவுகள் அமையுமா? வாழ்வில் எதை சாதிப்பார்கள்?

இந்த வக்கிரம் பிடித்தவர்களைப் பொறுத்தவரை.. இரவு தான் நான் காமலீலையில் ஈடுபடுவேன்.. அதுவும் ஹோட்டலில் தான்! ஏனென்றால் என் புகைப்படத்திற்குப் பின் ஒரு திரைச்சீலை தெரிகிறது!  பிறகு வீக்கெண்ட் அவுட்டிங்.. ரிசார்ட் ஸ்டே.. ஆண்டி சர்வீஸ்.. இவ்வளவுதான் இவர்களின் வக்கிர அறிவு! 

பாலியல் தொழிலை சட்டமே தவறில்லை என்றபின்.. ஹோட்டலில் தான் அந்த சேவையை வழங்க வேண்டுமா என்ன?

சரக்கு, பண்டம், பெண் உடல் மீதான பாலியல் சுரண்டல்.. பெண் உடலை பணத்திற்கு விற்பனை செய்வதை சட்டபூர்வமாக்கக் கூடாது என்று எதிர்க்கும் ஒரு பெண்ணாக, சுயமரியாதை அதிகம் கொண்டவளாக என்னால் பணத்திற்காக எனது உடலை விற்பனை செய்ய இயலாது!

ஒருவேளை காதல்வயப்படலாம்… ஆனால் ஆண்வெறுப்பு மனநிலைக்கு தள்ளும் ஆண்களை கடந்து வந்த பின் காதல் மாயையில் விழுமளவுக்கு தற்போது நானில்லை!

உடல் தேவை.. நடுவிரல் உள்ளது!  என்னை விட எனக்கு இன்பம் வழங்கிட யாரால் முடியும்? அறிவுத் தேடலில், சுயத்தைக் காப்பதில் உச்சம் அடையும் என் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளுவது அத்தனை எளிதல்ல.. புரிந்துகொண்ட நபரோடு வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது!  

அதையும் மீறி ஒருவேளை என் மனதை யாரேனும் கவர்ந்தால்.. அது எனது உடல்.. எனது உரிமை! என்று செயல்படும் அறிவுத் தெளிவு எனக்கு உண்டு! யாரையும் துன்புறுத்தாமல் எனது செயல்பாடுகளை வைத்துக்கொள்ளும் அறமும் உண்டு! I am not only an intellectually independent woman but definitely a sexually independent woman!

சமூக அமைப்புருவாக்கம் மற்றும் அதன் கருத்தியல்கள் பற்றி அறிந்தவர்களை எந்த விதத்திலும் யாரும் முட்டாளாக்க இயலாது!

ஒரு பெண்ணை எல்லா நேரமும் பாலியல் ரீதியாக அவதூறு செய்வதும்.. அவளது புகைப்படத்தை  ஆபாச பக்கங்களில் போடுவதும்.. ஃபேக் ப்ரொஃபைல் மூலம் ஆண்களுக்கு அழைப்பு விடுப்பதும் எதனால் நடக்கிறது? ஆணாதிக்க வக்கிர சமூகத்தின் வளர்ப்பினால் நடக்கிறது!

ஒழுக்கமற்ற சமத்துவமற்ற சமூகம் தான் ஒழுக்கமற்ற, ஆதிக்க மனநிலை கொண்ட மனிதர்களை உருவாக்குகிறது!

வக்கிரம் பிடித்த சமூகம் தான் வக்கிர மனிதர்களை உருவாக்குகிறது!

இது ஒரு வக்கிரம் பிடித்த சமூகம்! அதன் விளைவுதான் இத்தகைய மனிதர்கள்!

இன்றைக்கு எனக்கு நேர்வது நாளை இன்னொரு பெண்ணுக்கு நேரும்!

சொல்ல இயலாது! என்னை துன்புறுத்தி மகிழ நினைக்கும் அந்த நபரின் பிள்ளைக்கோ, மனைவிக்கோ, சகோதரிகளுக்கோ கூட இத்தகைய துன்புறுத்தல்கள் நிகழலாம்!

என்னை போன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு இருப்பதால் அதை நாங்கள் கடந்து செல்கிறோம்! விழிப்புணர்வு இல்லாத பெண்களின் நிலை? பென்கள் அடங்கி வீட்டிற்குள்ளே இருங்கள்! ஆணாதிக்க கட்டுப்பாட்டிற்கு அடங்கி இருங்கள், சமூக வலைதலங்களில் ஏன் இருக்கிறீர்கள்…  என்பதுதானே பெரும்பாலரின் பதிலாக இருக்க முடியும்!

10 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதியும், பேசியும் வந்தாலும்.. எந்த  content கவனத்தைப் பெறுகிறது? அந்த வக்கிரவான்கள் பேசுகிறார்கள் “attention seeking” .. அந்த வக்கிர மண்டைகளுக்கு உடல் தொடர்பான பதிவுகள் தான் தென்படுகிறது! யாரிடம் பிரச்சினை உள்ளது?

பொம்பள பொம்பள என்று சொல்லி ஆண்களுக்கு அதிகாரம் வழங்கும் சமூகமே… விசத்தை பரப்புவது நீங்கள்.. களையெடுப்பது நாங்கள்.. அதில் அவ்வப்போது காயங்கள் ஏற்படத்தான் செய்கிறது. விஷச் செடியின் வீரியம் அப்படி! முடிந்தவரை  முற்போக்காளர்கள் அதை களைய முற்படுகிறார்கள். அதில் நீங்களும் கைகோர்க்கவில்லையெனில்.. நாளை உங்களின் பிள்ளைகளுக்கு இந்த சமூகம் மிகவும் ஆபத்தான, வக்கிரமான, கொடூரமான நிலைமைகளையே மீதம் வைத்திருக்கும்! ஏற்கனவே நாம் நம் மகள்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருங்கள்! பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பதைப் போல்….


No comments:

Post a Comment