Aug 23, 2016

கருத்து சுதந்திரம் வாழ்க!

தத்துவார்த்த அடிப்படையில் ரங்கநாயகம்மா முன்வைத்திருக்கும் விமர்சனத்தின் அவசியம் கருதியே அவரின் நூல் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கான அரசியல் காரணங்கள் நிலவுகின்ற அரசியல் போக்குகளிலிருந்தே எழுகின்றன.
பல்வேறு ‘பாதைகளை’ முன்வைத்து மார்க்சிய எதிர்ப்பு நிகழ்கிறது. அவை பெரும்பாலும் கட்சிகளின் போக்குகள் குறித்தே விவாதங்களை நடத்துகின்றன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்களிடையிலான பிளவின் காரணங்கள், மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்ந்த ஏளனங்கள், முதலாளித்துவ சிந்தனைக்கு ஒத்த கருத்தியல்கள் முற்போக்கு கருத்துகளின் பெயரால் பரப்பப்படுவது, பின்நவீனத்துவவாதம், பாராளுமன்ற அரசியல் ஜனநாயகப் பாதை, தேர்தல் அரசியல், சாதியவாதத்தை உள்ளடக்கிய அடையாள அரசியல், மார்க்சியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரவு எனும் பெயரில் என்.ஜி.ஓக்களின் ஊடுறுவல் முன்னெடுக்கும் மார்க்சிய திரிபுவாத வேலை ஆகியவை மார்க்சிய தற்காப்பைக் கோரும் சில அரசியல் காரணங்களாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி ஒரு நூலுக்கான தேவையை அம்பேத்கரே நமக்கு வழங்குகிறார். அவருடைய மார்க்சிய -பொதுவுடைமை-பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிரான கருத்துகள் காரணமாகவும், ஆளும் வர்க்கத்திற்கு சாதகமான பொருளாதாரத் தீர்வுகள் மற்றும் மதத்தின் தேவை குறித்த வலியுறுத்தல்கள் காரணமாகவும் இவ்விமர்சனம் அவசியமாகிறது, விவாதத்திற்குரியது. எந்த வகையிலும் இது அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பை, போராட்டங்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாகாது. எங்கள் யாருக்கும் அந்த எண்ணமும் இல்லை. நூலின் தலைப்பே அதை போதுமான அளவில் உணர்த்துகிறது.
அதேபோல் மார்க்சியக் கோட்பாடு சார்ந்து வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலாக, உழைப்புசார் உறவுகள், உற்பத்தி உறவுகள், பரிவர்த்தனை உறவுகள், சொத்துறவுகள் என்று எப்படிச் சொன்னாலும் இங்கு அது ஏற்றத்தாழ்வுடனேயே இருக்கிறது. உழைப்பின்றி உற்பத்தி கிடையாது. மேலும் இரண்டிற்கும் இடையில் சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை, தான் ஏன் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதையும் ரங்கநாயகம்மா விளக்கிவிட்டார். எந்த வகையிலும் மார்க்சிய அடிப்படையை விளக்குவதிலிருந்து அத்தர்க்கங்கள் மாறுபடவில்லை எனும் புரிதலுடனேயே இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் புத்தர் பற்றிய அவரது விமர்சனமும் அம்பேத்கர் முன்வைத்த புத்தரை மையமாகக் கொண்டது எனும் விளக்கங்களும் நூலிலேயே உள்ளன.
கேள்வி உள்ளவர்களும், விமர்சனங்கள் உள்ளவர்களும் நூலை முழுமையாகப் படித்து தங்களது விமர்சனங்களை முன்வைக்கலாம். மொழிபெயர்ப்பாளர் எனும் எல்லைக்கு உட்பட்டு போதுமான விளக்கங்கள் கொடுத்தாயிற்று. இதற்கு மேலும் பதிலுரைப்பது மொழிபெயர்த்துவிட்டதாலேயே நூலின் ஆசிரியருக்கு வக்காலத்து வாங்குவதாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும். மேலும், அதற்கான அவசியமும் இல்லை. இரண்டு தரப்புக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகவோ, பதிலுரைப்பவராகவோ மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டிய அவசியமில்லை.
கோட்பாட்டு விளக்கம் காரணங்களால் நூலின் ஆசிரியர் பதிலளிப்பதே சரியானதாக இருக்கும். ஆகவே கேள்விகள், விமர்சனங்கள் உடையவர்கள் தங்கள் விமர்சனங்களை ஆங்கிலத்தில் எழுதியோ, மொழிபெயர்த்தோ brbapuji@gmail.com எனும் ஐடிக்கு அனுப்பலாம்.
மாற்றுக் கருத்தோ விமர்சனங்களோ இருப்பினும்கூட ஒரு நூலை மொழிபெயர்த்ததாலேயே சாதியைச் சொல்லித் தாக்குவது கண்டனத்துக்குரியது என்று இன்னும் ஒரு இடதுசாரி அமைப்புகூட கண்டனம் தெரிவிக்காத சூழலில் - அறம், காலம், சூழல், மொழி, தொனி, உள்நோக்கம், வெளிநோக்கம் - என்று எல்லா அறிவுரைகளும், கேள்விகளும் எங்களை நோக்கி மட்டுமே வைக்கப்படும் அவலமான (புரட்சிகர அமைப்புகளின் பலவீனத்தையே இது உணர்த்துகிறது) சூழலில் எங்களுடைய இந்த விளக்கங்களே போதுமானது. கருத்து சுதந்திர காவலர்களின் மௌனம் அதைவிட மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.
ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான உரையாடல்களை முன்னெடுப்பது எனும் நோக்கத்தில் தெளிவும், விஞ்ஞானபூர்வ தத்துவத்தின் பலமும் இருக்கையில் யாம் யார்க்கும் அஞ்சோம்!
- கொற்றவை.

is there difference between two terms 'labour relations' and 'production relations'.

Seen both of your mails concerning the doubt whether there is any difference/distinction between two terms 'labour relations' and 'production relations'.
I have discussed it with Rangaji and I will explain the matter as follows.
Essentially or generally speaking, both are synonyms. No difference in its essence. But it is a matter of focus. I will explain how.
The term 'production relations' is the term that we find across Marx(-st) literature. However, the adjective 'production' gives an impression that it always results in some 'product' which is obviously a material objects like a pen, soap, shirt etc. But the adjective 'labour' gives the impression that it results not only in material things [products] but also non-material things like teaching, treatment, transportation etc.
Any way, you can use both terms interchangeably and synonymously. Rangaji prefers 'labour relations' because she would like to focus on the process of 'labour' whether it is manual/material or non-manual / non-material. However, you can provide a foot note on this aspect in your translation at a point when it first appears in the text.
In this context I would like to draw your attention to a distinction between 'labour process' and 'production process' as discussed in 'Capital'.
_______________________________
Chapter 3 [in RN's 'An Introduction to Marx's 'Capital' (in 3 volumes. This chapter is from volume one) Labour - Process (Process of Production) The process wherein ‘labour’ takes place is the ‘labour process’. Some ‘product’ is made because of the ‘labour-process’. The relations concerning the ‘labour process’ are the ‘labour relations’ or ‘production relations’. Workers come to the capitalist—to do labour. But, the master—does not do any. The relations which form between the master, who does not do labour and the workers, who do labour for the master—are the ‘labour relations’ here.
As soon as the labourers get down to work, the capitalist does not ask them, “produce a heap of money”. He asks them, “weave a cloth” or “make chairs”, or else, “print on these papers”. Thus, he would ask them to do such things which are necessary to create some ‘use value or the other’.
Suspecting that the workers do not work hard, the capitalist goes on moving in the midst of labourers and hastens them saying, “carry on”! Carry on!” It is good for the capitalist to extract as much work as possible from the workers before the ‘working time’ is over.
If the person doing ‘work’ is to have real liking for that ‘work’, that work should be either his or her ‘own work’ or some ‘collective work’ done by all with equal responsibility. In any system other than these, where the workers have to work for the master under his ‘authority’, the labouring persons will be reluctant to do labour. Therefore, the person who is the master has to make the labourers do labour, by means of punishment. This punishment will be of different kinds depending on the circumstances.
In the case of the workers working on the ‘wage’ system, there will be cuts in the wages and fines.
But, in the case of the ‘slaves’ where the wage system is absent, there is no scope for cuts in the wages and fines. Therefore, there, the master has no other way except to torture the bodies of the labourers. Therefore, whips also come into the ‘work place’ where slaves are made to do work. The master needs many other methods of torturing.
Thus, the ‘labour process’ will be in different forms in different social conditions. It took one specific form in the ‘slave society’, another form in the ‘feudal society’ and yet another form in the ‘capitalist society’. However, the nature of all these labour processes so far has been the same. That consists of ‘punishing’ the labourers and getting the work done.
The system of ‘punishing the labourers’ disappears in the ‘collective labour process’ in which all people work with equal responsibility. The nature of the ‘collective labour process’ will be opposite (it means it should be opposite) to the nature of the old labour processes.
Thus, leaving aside the specificities of the labour process, there are certain general features, which apply to the labour processes of all societies. Let us see them now.
There is a distinction in the meaning between word ‘labour process’ and the word ‘production process’. If we consider agricultural labour, it starts with ploughing the land and ends with harvesting the crop and storing the grain. The process that lies between the ploughing and the harvesting need not be continuous. The work ceases in the middle for a few weeks and months. The saplings should grow. This is a change that has to take place naturally. After planting, the work ceases until weeding. After weeding is over, work ceases again until some other operation becomes necessary. Thus, with certain intervals in the middle, the work of producing grain would go on. The span of time right from ploughing the land to cutting the crop constitutes the ‘process of production’. It takes that much time to produce grain. But, it is not necessary for the work to go on invariably throughout that span of time. The work will be stopped in the middle. It is simply that time during which work is carried on constitutes the ‘labour process’. In order to produce the grain, the labour processes would go on with interruptions in the entire period of its production. If the entire time of labour processes were added together, that time (the time during which work is done) would be shorter than the time during which production took place.
The distinction between the production process and the labour process is not found in the case of all products. It is found only where natural changes are required in the on-going production. It is also found in such production as animal husbandry, pesciculture and afforestation.
But in the case of ‘industries’, however, production process and labour process are the same. There is no need to stop the work in the middle in order to turn yarn into cloth.
We may use the two words ‘labour process’ and ‘production process’ to convey the same sense, provided that we don’t forget that their meanings differ in certain cases. Since it is the same thing whether you call it ‘labouring’ or ‘producing’, ‘labour process’ or ‘production process’ also means the same. It is the same thing whether we call it ‘means of labour’ or ‘means of production’. It is the same thing whether we call it ‘labour relations’ or ‘production relations’. Whenever and whichever of these words we use, we have to derive the same meaning.
________________________
In this context, I would like to report an aspect of the debate in which this question was raised by a CPM person in their daily 'nava telangana' in which Rangaji wrote on caste annihilation where she argued that 'egalitarian labour relations alone will annihilate castes'. Let me give you a literal/mechanical translation of a particular point below:
"Venkatrao: " As far as I know Marx has nowhere used the term 'labour relations'. While referring to the relations between the master and the labourer, he rererred to them as part of production relations"
(RN's answer:) "Labour relations' is another term for 'production relations'. At the place of production, the master does not perform labour whereas labourers alone perform labour. The same thing happens when we say 'labour relations'. The term 'labour relations' is an easily understandable term. If someone uses the term 'historical materialism' in the place of Marx's term 'materialist conception of history', the sky won't fall. Nor the meaning is distorted. Similarly if someone uses the term ' dialectical materialism' in the place of Marx's term 'materialist diablectics', there is no loss (of meaning). Based on what Marx wrote in 'capital-3' regarding 'colonial trade' and 'expansion of the foregin trade is the own creation of capitalism', if someone uses the term 'Imperialism', it won't give any wrong meaning.It was Engels, Lenin and others who used those terms by changing Marx's expressions. Do we question Engels, Lenin and others thus, 'Marx did not say so. How can you say so? Can't they explain the same thing without distorting the theory in its essential aspects? They can. "

Ranganayakammaa’s Note


A CLARIFICATION The first print of the Tamil translation of my book “For the solution of the ‘Caste’ Question……..” came out in July 2016 and all the copies have been sold out within a week. Now the second print is ready for binding. Meanwhile Nirmala, the Tamil translator of this book has brought a point to my notice. It is as follows: Chapter 14 in this book has a section titled ‘What is the difference between Gandhi and Ambedkar concerning Property?’ In this section I quoted the following words and attributed them to Ambedkar: “The mill owners will have to work on the terms dictated by labourers, if the latter could command intelligence of the former. It is clear, however, that labour will never attain to that intelligence. If it does, labour will cease to be labour and become itself the master. The capitalists do not fight on the strength of money alone. They do possess intelligence and tact” (Volume-9, page-280).
Referring to these words, some Tamil readers told the Tamil translator that these words are not those of Ambedkar but of Gandhi and Ambedkar had merely quoted Gandhi. They have also observed that these words are seen as part of Gandhi’s essay both in the English as well as Tamil versions of Ambedkar’s writings. Referring to these observations of some readers, the Tamil translator sought my clarification. The basis for my considering these words as those of Ambedkar is that that these words are printed as a separate paragraph without any quotations in the official Telugu translation of Ambedkar’s writings by the Telugu University, Hyderabad (Volume-9, page-257).
Further, the paras above and below this para have quotation marks (“….”) whereas this paragraph does not have quotation marks at all. Hence I thought that this paragraph which is printed separately and without quotation marks is a comment by Ambedkar on Gandhi’s views on the relations between the capitalist and the labourers.
In this context, I would like to draw the attention of the readers that I showed adequate evidence in my book in support of my argument that there is no difference between Gandhi and Ambedkar concerning the issue of Property. One can see the following chapters for a detailed discussion once again: *According to Ambedkar, ‘Protection against Economic Exploitation’ (chapter-14). * Ambedkar’s Own Economics (chapter-17). * Role of Ambedkar in ‘Drafting’ the Constitution (chapter-18). I am appending this clarification at the end of the book since the printed forms of the second edition are ready to leave for the binding shop.
RANGANAYAKAMMAA

மேற்கோள் குறித்த கேள்வியும் பயனற்ற சாதியவாதமும்.

விளக்கம் கேட்டுப் பெருவதற்குள் கிடைச்சுதுடா கேப் என்று சாதி வெறியாட்டம் போடாமல் நிதானமாக எழுதுகிறார் ஆதவன் தீட்சண்யா. என் சாதியை வைத்து மட்டுமே என்னை விமர்சிக்கும் அவரிடம்தான் சாதிய மனோபாவம் ஆழ வேறூன்றி உள்ளது. அவரது விமர்சனப் போக்கில் இதுபோன்ற நிராகரிப்புவாதம் இருக்கும் வரை இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன்.
ஒரு புத்தகத்தை மறுத்தலிக்கும் விதமாக அறிவுபூர்வமாகப் பேசினால் அதை ஏற்பதில் எனக்கு எப்போதும் தயக்கமில்லை. ஒருவேளை என்னுடைய புரிதலில் தவறிருந்தால் அது எனக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் விமர்சனம் என்கிற பெயரில் இவர்களின் ரௌடியிசத் தோரணைப் பேச்சுகளுக்கும் சாதியவாத வசைகளுக்கும் ஏற்றார்போல் நானும் அவ்வப்போது எழுத வேண்டியுள்ளது. என்ன செய்ய.
திருவாசகம் என்பவர் பின்னூட்டத்தில் வைத்த கேள்விக்கு ஆசிரியரிடம் பதில் கேட்டுப் பெற்றுத்தான் என்னால் தெளிவுபடுத்த முடியும். அந்தப் பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பின்னூட்டமாகக் கொடுத்திருந்தேன். இருப்பினும் இங்கு பகிர்கிறேன். பின்னூட்டமும் எனது பதிலும் பின்வருமாறு:
Thiru Vasagam · Friends with வசு மித்ர and 328 others
//முதலாளிகள் புத்திக்கூர்மை உடையவர்கள் அதனால்தான் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், தொழிலாளர்களுக்கு அந்தளவுக்கு புத்திக்கூர்மை இருந்தால் இந்நேரம் அவர்களும் அந்நிலைக்கு உயர்ந்திருப்பார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறாரே? //
அம்பேத்கர் அப்படி சொல்லியிருப்பதற்கான ஆதாரம் (அவருடைய எழுத்துக்களிலிருந்து) காட்ட முடியுமா? வசு மித்ர
Like · Reply · 1 · 7 hrs · Edited
Kotravai N
Kotravai N வணக்கம் திருவாசகம். நீங்கள் வசுமித்ரவிடம் மேற்சொன்ன மேற்கோள் குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள்.
நீங்கள் கேள்வி எழுப்பிய பின் நூலை மறுபடியும் சரி பார்த்தோம். அம்பேத்கரின் மேற்கோளாக ரங்கநாயகம்மா அதை எடுத்தாண்டு விவாதித்துள்ளார். அதையொட்டியே நானும் அதனை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
உங்கள் கேள்வியை மையமாக வைத்து ரங்கநாயகம்மாவிடமே அதற்கான விளக்கத்தை கேட்டோம்.
ரங்கநாயகம்மா தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த பதிப்பிலிருந்தே அம்பேத்கரின் எழுத்துகளை படித்து தனது ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதில் உள்ளதுபடி காந்தியின் மேற்கோள்களைத் தொகுத்துக் கொடுத்து அம்பேத்கர் எழுதியுள்ள அந்த தொகுப்பில் முதல் மேற்கோளுக்கு அடுத்ததாக மேற்சொன்ன அந்த மேற்கோள் வருகிறது.
அதில் அடைக்குறிப்புகள் ஏதுமில்லாது பத்தி தொடங்குகிறது. அதன்படி அது அம்பேத்கர் அளித்திருக்கும் பதிலாகவே பொருள்படுகிறது.
இருப்பினும், இப்போது இப்படி ஒரு குழப்பம் நிலவுவதால் தம்மிடம் இருக்கும் காந்தியின் தொகுப்புகளையும் தேடிப் பார்த்ததில் குறிப்பிட்ட அந்த கருத்து / மேற்கோள் காந்தி சொல்லியிருப்பாரா என்பதை சரி பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அம்பேத்கரும் அது எந்த கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது எனும் குறிப்பைக் கொடுக்கவில்லை.
ஆகவே, தற்போது தெலுங்கு மொழிபெயர்ப்பின் அடிப்படையில் (தெலுங்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பதிப்பு அது) பார்க்கும்போது அது அம்பேத்கர் கூறியதாகவே பொருள்படுகிறது. அப்பக்கத்தின் பிரதி கூடிய விரைவில் பகிரப்படும்.
தெளிவு பெற்றபின் தவறு ஏதேனும் நேர்ந்திருப்பின் அதற்குண்டான விளக்கங்கள் கொடுக்கப்படும். எவ்வாறாகினும், தமிழில் வரவிருக்கும் இரண்டாம் பதிப்பில் இந்த கேள்வியை ஒட்டிய குறிப்புகள், விளக்கங்கள் பின் இணைப்பாகக் கொடுக்கப்படும்.
என்று கூறியுள்ளார். மேலும் புத்தகத்தில் கூறியுள்ளதுபடி
”அம்பேத்கர் காந்தியை எவ்வகையில் விமர்சனம் செய்தாலும், சொத்துறவு தொடர்பான விஷயத்தில் இருவரும் ஒன்று போல் சிந்திக்கின்றனர். இரண்டு பேரும் சொத்துள்ள வர்க்கத்திற்கு ஆதரவானவர்கள். அவர்கள் இருவரின் பொருளாதாரமும் ஒன்றே. காந்தி பழைய பொருளாதாரத்தை எந்த மாற்றமுமின்றி சுரண்டல் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் ஆதரிக்கிறார். அவரைப் புரிந்துகொள்வது எளிது….
… ஆனால் அம்பேத்கரின் பொருளாதார திட்டம் குழப்பமானது! ஒருபுறம் ’சுரண்டல்’ எனும் சொல்லை உச்சரிப்பதிலும் மறுபுறம் அச்சுரண்டலை ஆதரிப்பதிலும் அந்தக் குழப்பம் நிலவுகிறது!” எனும் அவரது விமர்சனக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
நன்றி.

Aug 9, 2016

சாதியப் பிரச்சினை - விவாதத் தொடர்ச்சி

சாதி என்றால் மேல் கீழ் அடுக்குகளாக மக்களை வகைப்படுத்தும் ஓர் அதிகார ஏற்பாடு.
மார்க்சிய விளக்கம் / விரிவாக்கம்: சாதி என்பது உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் மேல் கீழ் அடுக்குகளாக மக்களை வகைப்படுத்தும் ஓர் அதிகார ஏற்பாடு.
உற்பத்தி முறையில் மாற்றங்கள் ஏற்படும்போது - உண்டாகும் உழைப்புப் பிரிவினையின் விளைவாக - உண்டாகும் சமூகப் பிரிவிகளின் முரண்பாடுகளிலிருந்து - உருவாகும் ஒரு சமூக ஏற்பாடு அல்லது சமூக அமைப்பு. இந்த முரண்பாடுகள் இணக்கம் காண முடியாததன் விளைவாக தோன்றுவதே அரசு.
உற்பத்தி முறையின் வரலாற்று வளர்ச்சியை கார்ல் மார்க்ஸ் பல்வேறு காலகட்டங்களாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் அது தனியுடமையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையாக நிலைகொள்கிறது. தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பிற்கேற்ற வகையில் - அதாவது உற்பத்தி முறைக்கேற்ற வகையில் - அச்சமூகத்தில் சட்டதிட்டங்கள் உருவாகின்றன.
இந்திய சமூகத்தில் அது சாதி எனும் தனித்துவமான ஒரு சட்டதிட்டமாக உருவானது. பிறப்பின் அடிப்படையில் அது உழைப்புப் பிரிவினையை சட்டதிட்டமாக்கியது. அதை நடைமுறைப்படுத்திட பல கருத்தியல்களை வகுக்கிறது. அதிகார, கலாச்சார நிறுவனங்களை ஏற்படுத்துகிறது. சாதி - தீண்டாமை - பிறப்பின் அடிப்படையிலான பகுப்பு என்பதெல்லாம் அத்தகைய கருத்தியல் வடிவங்கள் / சட்டதிட்டங்கள். மதம் நீதித்துறை, இராணுவம் போன்றவை அவ்வதிகார அமைப்பின் நிறுவங்கள். சட்டதிட்டங்களை கருத்தியில் ரீதியாக புகுத்துவதற்கு மதம் - மதநூல்கள், புராணக்கதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதிகார வர்க்கமானது (அரசின் தலைமையில்) புரோகிதர்கள் அல்லது மதபோதகர்கள் அல்லது மதம் மூலம் கருத்தியல் தாக்கங்களை, சட்டதிட்டங்களை உருவாக்குகிறது, நடைமுறைப்படுத்துகிறது. அதேபோல் நீதித்துறை, இராணுவம் போன்றவையும் அதில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்திய சமூகத்தில் அம்மதமானது பிராமணிய மதமாக இருக்கிறது - பிராமணிய கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம். அம்மதம் போதித்த கருத்தியல்கள், சட்டதிட்டங்கள் (மநுஸ்ம்ருதி போன்றவை) காலம் காலமாக வேறூன்றி கிடக்கின்றன. சாதி எனும் வடிவில் உடல் உழைப்பாளர்களை, குறிப்பாக துப்புறவு பணி செய்யும் உழைப்பாளர்களை, கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களை இழிவான நிலையில் வைப்பதற்கான ஓர் ஏற்பாட்டை அது செவ்வனே செய்து மக்களை பிரித்தாளும் ஏற்பாட்டில் வெற்றியும் கண்டுவிட்டது.
அடிப்படையில் உழைப்புப் பிரிவினையாகவும், மேல்மட்டத்தில் சாதியாகவும் தோன்றும் இந்த பார்ப்பனிய இந்து மதக் கோட்பாடு (ஏற்பாடு) உழைக்கும் வர்க்க மக்களின், அதிலும் குறிப்பாக துப்புறவு பணி மற்றும் கடுமையான உடல் உழைப்பைக் கோரும் உழைப்பில் ஈடுபடும் மக்களின் கொடுமையான நிலைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.
உழைப்புப் புரிவினை என்பது ஏற்றத்தாழ்விற்கான அடிப்படைக் காரணம் - இது பொருளாயதக் காரணம். சாதி என்பது நடைமுறை - இது கருத்தியல் வடிவம். இதுபோல் பால், இனம், மத மற்றும் இதர ஏற்றத்தாழ்வுகளும் நடைமுறை - கருத்தியல் வடிவங்கள்.
இதில் சாதிக்கெதிரான போராட்டங்கள் என்பது நடைமுறையை எதிர்கொள்ளும் கருத்தியலுக்கெதிரான போராட்டமாகும். தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட உழைப்புப் பிரிவினையை - தனியுடைமையை எதிர்க்கும் போராட்டம் என்பது மேற்சொன்ன கருத்தியல் ரீதியான போராட்டங்களுக்கான அடிப்படையை தகர்ப்பதற்கான போராட்டமாகும். இதில் எது முதன்மையானது, எது இரண்டாம்பட்சமானது எனும் கேள்விக்கே இடமில்லை. (அப்படி இடமிருப்பதாக நானும், ரங்கநாயகம்மாவும், வசுமித்ரவும் எங்கேயும் சொல்லவில்லை). இரண்டும் அல்லது ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்கள் எல்லா மட்டங்களிலும் நடைபெற வேண்டும். ஆனால் ஏற்றத்தாழ்விற்கான அடிப்படையை (அடிக்கட்டுமானத்தை) சரியாகப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் பொது எதிரியை சரியாக அடையாளம் காண முடியும். அதுமட்டுமின்றி சரியான செயல்திட்டங்களை வகுக்க முடியும். நிரந்தரமான மாற்றத்தை இலக்காக வைத்து முன்னேற முடியும்.
மார்க்சிய வழிகாட்டி இதுவே. கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் தவறுகளுக்கோ அல்லது போதாமைகளுக்கோ தத்துவம் பொறுப்பாகாது. ஆனால், தத்துவமே தவறாக இருப்பின் நாம் அதனை எதிர்க்கலாம், விமர்சிக்கலாம், ஒழிக்க போராடலாம் - இந்து மதம் முன் வைக்கும் தத்துவங்கள் அத்தகையவை என்பதால்தான் நாம் தத்துவத்தையே அடிப்படையில் எதிர்க்கிறோம். அதேபோல் மார்க்சியத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் அல்லது தத்துவங்கள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது, விமர்சிக்க வேண்டியுள்ளது.
மார்க்சியம் அளிக்கும் இந்த சமூகக் கண்ணோட்டத்தை ஏற்பவர்கள் ஏற்கலாம், அல்லாதவர்கள் அவரவர் சரியனெக் கருதும் பாதையில் செல்லலாம். ஆனால் எது சரியான பாதை என்று விவாதிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
சாதி போன்றே பெண் விடுதலைக்கான பாதையில் எது சரியான பாதை எனும் பிரச்சினை உலக அரங்கில் காலம் காலமாக நடந்து வருகிறது. ஏனென்றால் அங்கும் மார்க்சியக் கண்ணோட்டமானது முதலாளித்துவம் போதிக்கும் பெண் விடுதலை சிந்தனையிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. அதனை விளக்கும் விதமாக நான் எழுதிய கட்டுரையில் உள்ள அடிப்படை அம்சங்கள் இங்கு சாதிய விவாதத்திற்கும் பொருந்தும். அதை மீண்டும் பகிர்கிறேன்.
ஒடுக்குமுறையில் மேல் கீழ் - முதல், இரண்டு, மூன்று என்று வரிசைகள் உள்ளன. ஆனால் போராட்டங்களில் அப்படி இருக்க முடியாது. மார்க்சியம் அதைத்தான் சொல்கிறதே ஒழிய அது வன்முறையை போதிக்கவோ அல்லது வெறும் பொருளாதாரத்தையோ பேசவில்லை. ஆனால் பொருளாதாரம் - பொருள் உற்பத்தி மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் இன்றி மனித உறவுகள் அமைவதில்லை. ஆகவே மார்க்சியம் என்பது வெறும் பொருளாதார நிர்ணயவாதமில்லை. அது பொருளாயதக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சமூக விஞ்ஞானம்.

Aug 6, 2016

ஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை

வணக்கம் ஆதவன் தீட்சண்யா,
ரங்கநாயகம்மா எழுதியுள்ள சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போதே பதட்டத்திலும் அவசரத்திலும் நீங்கள் ஒரு வலைப்பதிவை (விமர்சனமல்ல – ஏனென்றால் விமர்சனம் என்பது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்) எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி! ஏன் இவ்வளவு பதட்டம் ஆதவன்? எந்த உண்மை உங்களைச் சுடுகிறது?
சாதியப் பிரச்சினை குறித்த ஆய்வை ஒருவர் எந்தத் தலைவரை முன் வைத்து, எவரின் ஆய்வை முன்வைத்து எழுத வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவரா இல்லை நீங்களா? ஒருவர் எதை எழுத வேண்டும், எதைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்வது அவரவர் உரிமையல்லவா? //அம்பேதகரை மட்டும் இவ்வளவு குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது?.// எனும் உங்கள் கேள்வி நகைப்புக்குரியதாக இல்லையா? முன்னுரையில் ரங்கநாயகம்மாவே தெளிவாகச் சொல்லியுள்ளார்களே. ஆக, நீங்கள் மூன்னுரையைக் கூட படிக்கவில்லை? அம்பேத்கர் / அம்பேத்கரியம் / தலித் அரசியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுதும் தேவை இந்த சமூக நிலைமையிலிருந்தே வருகிறது ஐயா! ஆனால் எந்த நேரத்தில் எதை எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும், எதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. கருத்துச் சுதந்திரம். அதுகுறித்த விமர்சனத்தை எழுதுவது அதேபோல் மற்றவரது தனிப்பட்ட உரிமை.
விமர்சனபூர்வமான ஆய்வுப் புத்தகத்தை இப்படியா எதிர்கொள்வது? அம்பேத்கரின் சிந்தனைகளை, எழுத்துகளை, சாதி ஒழிப்பிற்காக அவர் முன் வைக்கும் தீர்வுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு ரங்கநாயகம்மா விமர்சித்து எழுதியுள்ளாரே தவிர இதில் குதர்க்கம், இளக்காரம் எல்லாம் எங்கிருக்கிறது? //குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம்// ஐயா, விமர்சனம் என்று வரும்பொழுது இதுபோன்ற சொல்லாடல்களை எல்லாரும்தானே பயன்படுத்துகிறோம். அம்பேத்கரை விமர்சித்ததாலேயே அது குதர்க்கமும், இளக்காரமும் ஆகிவிடுகிறதா? நீங்கள் எல்லாரையும் எப்போதும் மிகுந்த மரியாதையுடன்தான் விமர்சிக்கிறீர்களா?
உங்கள் ‘வலைப்பதிவில்’ ஏன் எல்லாமே அனுமானமாகவும், முத்திரைக் குத்தலாகவுமே இருக்கிறது. அறிவுபூர்வமான ஓர் எதிர்வினையாக ஒரு சிறு பத்தியைக் கூட காணமுடியவில்லையே! எந்த இடத்தில் ரங்கநாயகம்மா குறிப்பிட்ட சாதியினர் புத்தி சொன்னால் தாம் கேட்கவேண்டுமா என்பதுபோன்ற கேள்விகளை வைத்துள்ளார்? புத்தகத்திலிருந்து ஆதாரபூர்வமாக முன்வைத்துப் பேசுவதே அறிவுநாணயமாக இருக்க முடியும். அதைவிடுத்து பிறப்பின் அடிப்படையில் இந்த சமூகம் அடையாளப்படுத்தும் சாதியை ‘ஆய்ந்து அறிந்து’ அனுமானங்களின் அடிப்படையில் அவதூறு செய்வது முறையாகாது.
ரங்கநாயகம்மா எனும் பெயர் அவருக்கிருக்க ரங்கநாயகியம்மா என்றெல்லாம் எழுதியுள்ளீர்களே? இந்த பாடத்தை ஜெயமோகனிடமிருந்து கற்றீர்களா அதவன்? ஓ உங்கள் பெயர் ஆதவன் இல்லையா?
உங்கள் ‘வலைப்பதிவில்’ தெரியும் பதட்டத்தையும், அச்சத்தையும் காணும்போது அம்பேத்கரை விமர்சித்திருப்பதால் வந்த அறச்சீற்றம் போல் எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, இங்கு பொதுவாக ‘தலித் அரசியலின்’ பெயரால் அடையாள அரசியலில் ஈடுபடுபவர்கள் (அதிலும் குறிப்பாக சாதியப் படிநிலையில் ஒடுக்கப்பட்ட சாதியினரில் மேலடுக்கில் இருக்கும் ‘குறிப்பிட்ட சாதி’ ஆதிக்க அரசியல் – ஒருவகையில் இதுவும் சாதிய அரசியலே), என்.ஜி.ஓ நடத்துபவர்கள், ஒருசில அனுகூலங்களுக்காக தலித் ஆதரவு வேடம் போடும் குழுக்கள், நபர்கள் ஆகியோருக்கு ஏற்பட்டிருக்கும் பீதி இது.
மார்க்சியர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா என்கிறீர்களே, உண்மையில் சலிப்பாக உள்ளது ஆதவன். இந்தப் புத்தகத்திலேயே இதுபோன்ற முத்திரை குத்தல்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக ‘தீண்டாமை எனும் மொண்ணையான ஆயுதம்’ எனும் கட்டுரையையும் ரங்கநாயகம்மா எழுதியுள்ளார். அறிவுபூர்வமாக எதிர்கொள்ளாமல் சாதியரீதியாக தாக்குதல் தொடுக்கும் நபர்களைப் பார்த்து உங்களுக்குத்தான் சாதியபுத்தி இருக்கிறது என்கிறார். இதை Reverse Casteism என்பார்கள். நீங்கள் செய்வதும் இதுதான்! ஆனால் அது காலாவதியாகிப் போன எதிர்வினை, கீறல் விழுந்த ரெக்கார்ட்!
சாதியம் குறித்து ரங்கநாயகம்மா எதுவுமே கூறவில்லையா? அப்படியென்றால் உங்களுக்குத்தான் சாதியம் குறித்து எதுவும் தெரியவில்லை எனப் பொருளாகிறது. சாதி என்பது உழைப்புப் பிரிவினையின் வெளிப்பாடு, ஒவ்வொரு சமூகத்தில் அது ஒவ்வொரு வடிவை எடுக்கிறது, இந்தியாவில் அது இப்படிப்பட்ட ஒரு படிநிலை அமைப்பாக இருக்கிறது என்று மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளாரா இல்லையா? மேலும், மார்க்சியக் கோட்பாட்டை முன் வைத்து ஒரு சமூகக் கட்டமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது என்பதையும் அதில் விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சாதியின் தோற்றம் குறித்து இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை அம்பேத்கராலும் அதனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்கிறார். அதைத்தான் அவர் அம்பேத்கரின் எழுத்துக்களை ஆதாரமாக வைத்துப் பேசியிருக்கிறார். இதில் வெட்டி ஒட்டும் வேலையை செய்திருப்பது நீங்கள்தான்! இல்லை அம்பேத்கரின் ஆய்வுகள் அப்படி ஒட்டி வெட்டப்பட்ட ஆய்வுகள் என்று சொல்ல வருகிறீர்களா? ஏனென்றால் சாதியின் தோற்றம் குறித்து அம்பேத்கரின் ஆய்வுகளும், எழுத்துகளும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதைத்தானே அவர் விளக்குகிறார்.
அம்பேத்கர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்கிறீர்கள்! அப்படியென்றால் அந்த விமர்சனத்தில் என்ன குறை உள்ளது என்பதை ஆசிரியரின் எழுத்துக்களை மேற்கோள்களாக வைத்தல்லவா நீங்கள் பேச வேண்டும். ரங்கநாயகம்மா அதைச் செய்திருக்கிறார், நீங்கள் செய்வது அவதூறு, கடிந்து சொல்வதானால் பிதற்றல். //இந்நூல் இந்நேரத்தில் தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது ஏன் // - மோடிகளும், சோனியாக்களும் தோற்றார்கள் போங்கள் – பாராளுமன்ற அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் எதிர்கட்சிகள் சதி என்று ஆவேசம் பொங்கப் பேசுவார்களே, அதுபோல் இருக்கிறது. எப்பொழுது வந்திருந்தால் நீங்கள் இது சமூகத்திற்கு அவசியம் என்று ஏற்றுக்கொண்டிருப்பீர்கள்? சாதியம் இருக்கும் வரை, சாதிய அரசியல் தொடரும்வரை ஒருவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அந்தப் போக்கில், மார்க்சியத் தத்துவத்தை வழிகாட்டியாகக் கொள்ளும் ஒருவர் அக்கண்ணோட்டத்திலிருந்து எவரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதிலும் குறிப்பாக சாதியப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைத்திருப்பதாகக் கோரும்போது, அவரே குறிப்பிட்ட மக்களுக்கான தலைவர் என்று அரசியல் நடக்கும்போது, அத்தலைவர் சாதியப் பரச்சினைக்கான தீர்வைப் பேசும்போது மார்க்சியம் குறித்த தவறான கருத்துகளை முன்வைத்து பேசியிருக்கும்போது ஒரு மார்க்சியராக ஏன் மற்றவர் எதிர்வினையாற்றக்கூடாது?
அம்பேத்கருக்கோ, உங்களுக்கோ, தலித் செயல்பாட்டாளர்களுக்கோ இருந்தால் அது சமூக அக்கறை மற்றவர்களுக்கு இருந்தால் அது சாதிய வெறியாட்டமா? //வெறிகொண்டு ஆடுகிறார்// இதுமட்டும் மிகுந்த மரியாதைக்குரிய சொல்லாடலா ஆதவன்? பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பரிகாசம் செய்யலாமா? இன்னும் சொல்லப்போனால் பெண் என்பதால் ஆடுகிறார் என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் வெளிப்பட்டுவிட்டது என்று நான் முத்திரை குத்தினால் அபத்தமாக இருக்காதா? விமர்சனம் என்பது இருசாராரையும் ஒருவர் படித்து அவரவரின் சொந்த அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து ஒரு முடிவுக்கு வரும்படி இருக்க வேண்டும், இல்லையா? ரங்கநாயகம்மாவின் புத்தகம் அதற்கு உதவும். உங்களது பதிவு அதற்கு உதவுமா?
ஒவ்வொரு முறை தலித்தியம் குறித்த அல்லது அம்பேத்கர் குறித்த விமர்சனங்களை வைக்கும்போதும் கம்யூனிஸ்டுகள் மட்டுமென்ன ஒழுங்கா? இந்தியக் கம்யூனிஸ்டுகள் சாதியப் புத்தியோடு இருக்கிறார்கள் என்பது தொடங்கி இங்குள்ள கட்சிகளின் தவறுகளை முன்வைத்து பேசப்படுகிறது. கட்சிகள், அமைப்புகள் குறித்த விமர்சனம் என்பது வேறு, தத்துவம் குறித்த விமர்சனம் என்பது வேறு. அது போன்ற விமர்சனம் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அம்பேத்கர் மார்க்சியத் தத்துவம் குறித்த விமர்சனத்தை வைத்துள்ளார். அதற்கு ரங்கநாயகம்மா எதிர்வினையாற்றியுள்ளார். மார்க்சியம் ஓர் உலகக் கண்ணோட்டத்தை வழங்குகிறது, இந்த உலகக் கண்ணோட்டம் அனைத்து நாடுகளுக்கும், சமூகத்திற்கும் பொருந்துவதாக இருப்பதாலேயே அதை விஞ்ஞானபூர்வ தத்துவம் என்கிறோம். ஏற்றத்தாழ்வை ஒழிக்க, சமத்துவத்தை எய்திட ஒரு கோட்பாட்டை, செயல்திட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கர் விரும்புவதும் சமத்துவத்தைத்தானே. ஆனால் அவர் அதற்கான பாதையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அதில் தவறிவிட்டார், அவரது உலகக் கண்ணோட்டத்தில் போதாமை உள்ளது இதைத்தானே அந்தப் புத்தகம் விளக்குகிறது. இதில் என்ன சாதியவெறி?
இதில் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ள என்ன இருக்கிறது? ஒருவேளை நீங்கள் புத்தகம் எழுதினால் உங்களை அப்படித்தான் ஒவ்வொரு முறையும் பாராட்டிக்கொள்வீர்களோ? அவ்வளவு சுயமோகம் கொண்டவரா நீங்கள்! புதிய தகவலாக இருக்கிறது.
//அம்பேத்கரது கண்ணோட்டத்தை அறிவுப்புலத்திலிருந்து அகற்றுவதன் மூலம் சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் முடியும் என்று நம்புகிறவர்களின் குரலாக ரங்கநாயகம்மா பேசுகிறார்// ஐயா பெரிய மனது பண்ணி அம்பேத்கரின் கண்ணோட்டம், அம்பேத்கரின் தத்துவம், அம்பேத்கரியம் என்றால் என்னவென்று விளக்க முடியுமா? சாதியத்திற்கெதிரான போராட்டத்திற்காக அம்பேத்கர் முன்வைத்துள்ள செயல்திட்டங்கள் என்னென்னவென்று விவரிக்க முடியுமா? சாதியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஆய்வில் - அகமணமுறை, சமபந்தி விருந்து, இட ஒதுக்கீடு, அஷ்டாங்க மார்க்கம், பஞ்சசீலம், அரச சோஷலிசம் இறுதியில் ஆன்மீகம் அதாவது பவுத்தத்தை தழுவுதல் இதைத்தான் அம்பேத்கர் பேசியிருக்கிறார். இதைத்தான் நீங்கள் தத்துவம் என்கிறீர்களா ஆதவன்? இவற்றில் இடஒதுக்கீடு தவிர மற்றவையெல்லாம் எவ்வாறு பயனற்றது (அதுவும் தற்காலிகமானது, அதன் சிக்கல்கள் என்ன என்பதையும் விளக்குகிறார்), குறிப்பாக அரச சோஷலிசம் என்பது மாற்று கிடையாது, தனியுடைமைக்கு சாதகமாக இருக்கும் அதே நிலையை வேறொரு விதமாக அது ஊக்கப்படுத்துகிறது என்றுதானே ரங்கநாயகம்மா விளக்குகிறார். இதில் என்ன திரிபுவாதத்தை, சாதிய வெறியை நீங்கள் கண்டீர்கள்?
தலித்தாய் பிறந்ததாலேயே எப்போது பார்த்தாலும் எதிர் தரப்பினரை சாதிவெறி பிடித்தவர்கள், தலித் விரோதி என்று இங்குள்ள ‘தலித் போராளிகள்’ விமர்சிக்கிறார்களே. அம்பேத்கரின் எழுத்துகளில் வருணத்திற்கு ஆதரவாக உள்ள கருத்துகளை, மநு பற்றிய புகழ்ச்சிகளை, இன்னும் இதர விவரணைகளை, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்கள் குறித்த அவரது முடிவுகளை, மார்க்சியம் ஒரு பன்றித் தத்துவம், அது வன்முறை நிறைந்தது என்ற அம்பேத்கரின் அவதூறை என்னவென்று சொல்வீர்கள்? ஏன் இந்த பாரபட்சம்? ஏன் இந்த மழுப்பல்வாதம்? ஏன் இந்த ஒற்றைக் கண் பார்வை?
நீங்களும் ஒரு மார்க்சிய கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள்! அப்படியென்றால் நீங்கள் இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா? மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா? உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா? // சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு இளிக்கிறது.// - உண்மையில், இங்குதான் உங்கள் திரிபுவாதம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. புத்தகத்தைப் படிக்கும் எவரும் (தன்னலவாத அரசியல் உள்நோக்கம் இன்றி படிக்கும் எவரும்) பல்வேறு பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் குறித்து ரங்கநாயகம்மா என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும். சமூகத்தில் எந்தப் பிரச்சினையும் தனித்ததொரு பிரச்சினை கிடையாது, ஆகவே எது முதன்மைப் பிரச்சினை எனும் வாதம் பொருளற்றது, அவரவர் அல்லது அந்தந்த அமைப்புகள் தாம் எடுத்துக்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்ப செயல்திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். தேவைப்படும் நேரங்களில் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து செயல்பட வேண்டும். ஆனால், நிரந்தரமாக மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எல்லா ஏற்றத்தாழ்விற்கும் காரணமாக இருக்கும் அடிக்கட்டுமானத்தைத் தகர்த்தெறிய வேண்டும். அதுதான் தனியுடைமையை ஒழிப்பது. அந்த இலக்கினை அடைய, அதற்கு வழிகாட்டும் கோட்பாடான மார்க்சியக் கோட்பாட்டை ஏன் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ரங்கநாயகம்மா கோட்பாட்டுபூர்வமாக, அறிவுபூர்வமாக விளக்கியுள்ளார். இதில் எங்கு அவர் மார்க்சிய வேடமணிந்திருக்கிறார். அவர் வேடமணிவதை நீங்கள் எப்போது, எங்கு பார்த்தீர்கள்?
ரங்கநாயகம்மா யார் என்றும், இதுவரை அவரது பங்களிப்புகள் என்னவென்பதும் தெரியுமா உங்களுக்கு? (பார்க்க http://ranganayakamma.org/) ஏன் ஆதவன் இப்படி ஒரு நிலைக்கு உங்களை நீங்களே தாழ்த்திக்கொண்டீர்கள்? உண்மையில், உங்களை எண்ணி எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
உங்களது அந்த வலைப்பதிவில் வெளிப்படுவது அம்பேத்கர் மீதான விமர்சனத்திற்கெதிரான கோபமோ, அறச்சீற்றமோ அல்ல! மாறாக, அவரை முன் வைத்து நீங்களும், உங்களைப் போன்றோர் மேற்கொண்டு வந்த அடையாள அரசியலும், திரிபுவாத அரசியலும் அம்பலத்திற்கு வருகிறதே எனும் பதட்டம்!
ஆம்! திரிபுவாதமே. உழைக்கும் வர்க்க மக்களை ‘தலித்’ என்று அடையாளப்படுத்தி அரசியல் செய்வதன் மூலம் இந்தியாவில் இன்று ‘குறிப்பிட்ட சாதியினர்’ தலைமையிலான கட்சிகள், அமைப்புகள், அச்சாதியில் பிறந்த தனி நபர்கள், என்.ஜி.ஓக்கள் பல ஆதாயங்களைப் பெற்று வருகின்றன. அவர்களே இந்நூல் குறித்தும், ரங்கநாயகம்மா குறித்தும் அவதூறுகளை மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் அதுபோன்ற அனுகூலங்களைக் கணக்கில் கொண்டு இயங்குபவர் அல்ல என்றே கருதுகிறேன். இது ஒருவகையான ரசிக மனோபாவத்தின் வெளிப்பாடு. கபாலி ரசிகர்களுக்கும், உங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் அறிவுப்புலத்தில், தலித் மக்களுக்கான போராட்டங்களில் உங்களின் செயல்பாடுகள் முக்கியமானது. அத்தகைய சமூக அக்கறை கொண்டவர் அறிவு நாணயத்தோடு எதிர்வினையாற்ற வேண்டும். உண்மையில் ஒருவருக்கு தலித் மக்கள் விடுதலையில் அக்கறை இருப்பின் அப்படித்தான் இயங்க முடியும். எங்களுக்கு உழைக்கும் வர்க்க மக்கள் மீது அக்கறை இருப்பதால்தான் நாங்கள் அவர்களின் விடுதலைக்கான பாதையைக் காட்டும் தத்துவம் எது என்பதை அவர்களிடத்தே கொண்டு சேர்க்க விரும்புகிறோம். அந்த தத்துவமே அறிவுபூர்வமாக விமர்சனம் செய்யவும், பண்புடன் எதிர்வினையாற்றவும் எங்களை வழிநடத்துகிறது.
அம்பேத்கர் உங்களுக்கு அப்படி வழிகாட்ட முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. ஏனென்றால், எதையும் ஒழுங்காகப் படிக்காமல், அவசரகதியில் முன்முடிவுக்கு வந்து கண்மூடித்தனமாக நிராகரிக்கும் போக்கை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் மார்க்சியம் குறித்து எதையும் படிக்காமலேயே அதுபற்றிய முடிவுக்கு வந்தார். அதேபோல் நீங்களும் புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் பதிவு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் அவரிடமிருந்து அதை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளீர்கள் போலும்! இதற்கு ‘Rejectionism’ உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நிராகரிப்புவாதம் எனப் பொருள்.
அம்பேத்கரின் சொற்களில் இறுதியாக, சாதி ஒழிப்பிற்காக தலைமை தாங்கி செயல்படுவதாகச் சொல்லும் நபர்களின் வண்டி தவறான பாதையில் செல்கிறது, அப்பாதையில் செல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் வழிகாட்டிகள் எனும் பெயரில் மக்களிடம் அறியாமையை விதைத்து, திரிபுவாதங்கள் செய்து, பிளவுபடுத்தி, சாதி ஒழிப்பின் பெயரால் மீண்டும் சாதிய அரசியல் பாதையில் எம் உழைக்கும் வர்க்க மக்களையும் உங்களோடு சேர்த்து இழுத்துச் செல்ல எவருக்கும் உரிமை இல்லை. அப்படி அவர்கள் செய்வார்களே ஆயின் சரியான பாதையை அடையாளம் காட்டும் உரிமை அம்பேத்கருக்கு மட்டுமன்று, இந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. மேலும் அடையாள அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமானால் இழப்பதற்கு பலதும் இருக்கலாம். அதனால் அவர்கள் அம்பேத்கரை திருவுருவாக முன்வைத்து போலியாகவோ அல்லது அறியாமையின் விளைவாகவோ தூக்கிப் பிடிக்கலாம். ஆனால் உழைக்கும் வர்க்கமான எங்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை, அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அந்த அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிய உதவும் ஒரு தத்துவதைக் கற்கும் உரிமையும், அதை போதிக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு. அத்தத்துவத்தை தவறாக சித்தரிப்போர் குறித்து விமர்சிக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு. அவ்விமர்சனத்தில் தலித் விரோத கருத்துகள், சாதி வெறி இருப்பின் ஆதாரபூர்வமாக எடுத்து விவாதிக்க வாருங்கள், பேசத் தயாராக இருக்கிறோம்.
ஒரு ஆய்வுக் கட்டுரையையே (முழுதாகப் படிக்காமல்-) குப்பை என்று சொல்லும் கர்வம் உங்களுக்கு இருப்பினும், உங்களது வாதங்கள் குப்பையே ஆனாலும், உள்நோக்கம் கொண்டதாக இருப்பினும் அதைப் பொருட்படுத்தி விவாதிப்போம்.
பி.கு: புத்தகத்தைப் படிப்பதென்பது முன்முடிவுகளுடன் ஆங்காங்கே புரட்டுவது கிடையாது. திறந்த மனதுடன் உண்மையாக முழுமையாக ‘ஆழ்ந்து படிப்பது’ என்பதாகும். அவசரகதியில் ஒரு பதிவு எழுதிவிட்டு, அதற்குள் ஆத்திரமா என்று எங்கோ சென்று பதிலளிக்கிறீர்கள். முழுவதுமாகப் படிக்கமலேயே இவ்வளவு முன்முடிவுகளோடு வசை பாடும் நீங்கள் முழுவதும் படித்துவிட்டு என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.