Feb 21, 2014

உறுதியாக ஓர் கொலை


மரணித்தல் ஒரு கலை
என்றாள் சில்வியா
ஊதா நெருப்பிற்கு
தன் தலையை
தின்னக் கொடுத்தாள்

குற்றவாளியென
நெற்றியில் பதித்து
சிறைக் கம்பிகளை
எண்ணக் கொடுத்தனர்

சுவாமிகள்
ஆல்வாக்கள்
ராவ்கள்
சந்திரசேகரர்கள்
இப்படியாக
காந்திகளும்

இருண்ட கறிய
சுவர்களுக்கு மத்தியில்
மூத்திரத்தை மட்டுமே சுவாசித்து
பெண் வாசம் அறியாது
கழிந்த என் இளமை இரவுகள்
எனக்குச் சொல்கிறது
வாழ்தலின் சுவையை
அறியாது
மரணித்தல்
தண்டனையென்று

சிறையறையின் தூசுகளை
சிலந்தியின் எச்சில் கோடுகளை
துடைக்கும் எனது கைகள்
சொல்கிறது
அம்மாவை அணைத்து உறங்காது
மரணித்தல்
இழப்பென்று

மக்களின் வரிப் பணத்தில்
பீரங்கிகள் வாங்கி
குடிகளை வறுமைக்கு
தினம் தினம்
பலி கொடுக்கும்
வாரிசுகள்
உயிரோடிருக்கையில்
என் உதடு சொல்கிறது
குற்றமற்ற
நான்
மரணித்தல்
அநீதியென்று

விரும்பி மரணித்தல்
கலையோ
நானறியேன்

குற்றஞ்சாட்டப்பட்டு
தூக்குக் கயிர் பெற்று
மரணித்தல்
உறுதியாக
ஓர் கொலை


Feb 20, 2014

நான் வேர்களைத் தின்பவள்

நான் வேர்களைத் தின்பவள்
என் போல் அல்லாத எந்த மரமும்
இப்புண்ணிய பாரத பூமியில்
வானம் பார்க்கக்கூடாது
அழிப்பேன்
கருவனத்தை

தன் மேலாடையில் சூட்டிய
ரோஜா மலரை என் அப்பா
எனக்கு வழங்கினார்
அதை நான் என் மகனிடம்
வழங்கினேன்
சேரிப் பகுதிகளில்
அனைத்து ரோஜா மொட்டுக்களையும்
அழிக்கச் சொன்னேன்
புதிய ரோஜா மொட்டுகள்
பிறக்காமல் இருக்க
வெண்மை நிழல் கை கொண்டு
ஆண் வாசல் அடைத்தான்
என் மகன்

தலைப்பாக்களை எனக்குப்
பிடிப்பதில்லை
தாடியை எனக்குப் பிடிப்பதில்லை
நீல நட்சத்திரங்களை
பொற்கோவிலுக்குள் அனுப்பினேன்
கோதுமைப் பூமியில்
மர ரோஜாக்களை வேவு பார்க்க
ஏவினேன்
அம்மர ரோஜாக்களில் ஒன்று
என் மார்பைத் துளைத்தது

எங்கள் வீட்டில் ஒரு பெரிய மரம்
வீழும்போதெல்லாம்
இந்தப் பூமி அதிரும்
வன்மத்தால் செய்த
ரிமோட் எங்களிடம் உள்ளது

எனக்கு கோதுமையும்
பிடிப்பதில்லை
அரிசியும் பிடிப்பதில்லை
மைதாக் குழாய்களையே
நான் விரும்பி உண்கிறேன்

என் குடும்பத்தைக் காக்கும்
பச்சைப் புற்களுக்கு
உரமாக
பீரங்கிகளை வாங்குவது
எனக்குப் பிடித்தமானது
பேரம் படிந்தது
இந்த தீபகற்பத்தின் மண்ணுக்கு
நல்ல விலை உண்டு

இராவணத்தேசத்திற்குள் புகுந்த
சிங்கமொன்று
எனக்கு ஓநாய்களைப் பரிசளித்தது
யாழின் நரம்புகளை
அதன் கூடுகளிலிருந்து
அறுத்தழிக்கும் பயிற்சி வேண்டியது

பயிற்சி பெற்ற ஓநாய்கள்
யாழின் பெண் நரம்புகளில்
தம் விரைப்புக் குறிகளை
அழுத்திச் செலுத்தியது
வடிந்தது தமிழ்குருதி
  
இங்கும் ரோஜா மொட்டுகள்
தன் கருக்குழியில் பதுக்கி
வைத்திருந்தாள் பூமிதாய்
மோப்பம் பிடித்துச் சென்றன
பயிற்சி பெற்ற
மூவர்ண பூதங்கள்
எனக்கு லில்லி மலர்களையேப் பிடிக்கும்

அழிப்பது என் குலத்தொழில்
நான் மட்டுமே ஆயுதமேந்துவேன்
கொத்து கொத்தாக அழிப்பேன்
பதிலுக்கு
என் வீட்டில் ஒரு மரம்
வீழ்ந்தால்
தென் திசைக் காற்றையும்
சிறையில் அடைப்பேன்

அதுவே என் நீதி
அதுவே என் அரசாங்கம்
அதுவே என் குலத்தொழில்

காற்று மாசற்றது
என்று நீங்கள் கதறுவீர்களேயானால்
உங்கள் குரல்வளைகள்
நசுக்கப்படும்
உங்கள் வீடுகளிலும்
ரோஜா மொட்டுகள்
அறுத்தெரியப்படும்
உங்கள் தலை மேல்
தூக்குக் கயிறு தொங்கும்

வஞ்சகமாய் அடைத்து வைத்த
மாசற்ற காற்றை
நீவிர் விடுவிக்க
முடியாமல் செய்யும்
நாற்காலி எம்மிடம் உண்டு
குலம் உண்டு
கோத்திரம் உண்டு
எம் அந்தப்புரத்தில் ஓடும்
வன்ம ஆற்றில் தினம் குளிப்பவள்
நான்
வற்றும் ஆறு
உங்கள் கண்ணிரால் நிரப்பப்படும்

இத்தாலியப் பீரங்கித் தரகன்
தூய ஆத்மா
இது அந்தப் பரிசுத்த
ஆவிமேல் ஆணை
அவனை எப்பாடு பட்டும்
விடுவிப்பேன்
தமிழ் மைந்தர்களாகிய
உங்கள் எழுவரை
எப்பாடு பட்டும் தூக்கிலேற்றுவேன்

அனைத்தும் அறிந்தவள்
நான்
என் காதுகளில்
நீங்கள் என்ன ஓதுகிறீர்கள்
நீங்கள் ஏதும் செய்யவில்லை என்றா

என் காதுகளை வந்தடையாது
என் இதயத்தை நான்
பீரங்கிக்குள் பதுக்கிவைத்துவிட்டேன்
மேலும் நீங்கள் பேசுவது
தமிழ்
அது போதும்
உங்கள் தலைகள்
தூக்குக் கயிற்றுக்கு
சொந்தமாக

சிங்கபுத்தனே நீ கண்விழிக்காதே
கலக்கம் கொள்ளாதே
அவர்களை
நான் பார்த்துக்கொள்கிறேன்

அழிப்பது என் குலத்தொழில்
நான் மட்டுமே ஆயுதமேந்துவேன்
கொத்து கொத்தாக அழிப்பேன்
அதுவே என் நீதி
அதுவே என் அரசாங்கம்



Feb 18, 2014

இடுக்கில் அகப்பட்ட நாக்கு



இந்த எல்லைக்கு என்னை நகர்த்தியது அபிலாஷ் சந்திரனின் மௌனம். முகப்புத்தகத்தில் அவர் எனது நண்பர்கள் பட்டியலில் இல்லை (முடிந்தவரை நண்பர்களை இணைப்பத்தில் கவனமாகத்தான் உள்ளேன்) அதனால் அவரது மற்ற பதிவுகளின் கீழ் மட்டுமே கருத்துரையாக என்னால் என் கேள்விகளை வைக்க முடிந்தது.

முகப்புத்தகம் குறித்த அவரது பதிவொன்றின் கீழ் எனது கேள்விகளை எனது முந்தைய சுட்டியை இணைத்திருந்தேன். இதுவரை பதில் இல்லை. தற்போது அவர் என்னை முடக்கி உள்ளார்.

உண்மையில் வசு சொன்ன கருத்தில் அவருக்கு மாற்று கருத்து இருந்திருப்பின் அவர் அந்தப் பேச்சை அப்படியே பதிவு செய்து வசு இப்படி பொதுமைப் படுத்தி பேசுவது சரியா என்றோ அல்லது அவருக்குத் தோன்றும் கேள்விகளையோ வைத்து ஓர் உரையாடலைத் தொடங்கி இருக்க வேண்டும்... (அதைவிடுத்து அவர் எங்கள் தனிப்பட்ட வாழ்வைப் பூடகமாகப் பேசியுள்ளார்)

இல்லையேல் குறைந்தபட்ச அறிவு நாணையத்தோடு சம்பந்தப்பட்ட அந்தப் பேச்சை அப்படியே பதிவு செய்து தனது கண்டனங்களைப் பதிவு செய்திருக்கலாம்.  அதை விடுத்து, ஏதோ மஞ்சள் பத்திரிக்கையில் விடலைப் பையன்களுக்கு ‘போர்னோ’ கதைகளை எழுதுவது போல் ஒரு கதையை எழுதிவிட்டு பெரும் சமூகத்தொண்டையும், பெண் விடுதலைக்கான ஆவேசக்குரலையும் எழுப்புவதாக நினைத்திருக்குறார் அபிலாஷ் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இப்போது அவரது நாக்கு இடுக்கில் சிக்கியுள்ளது.  அவர் தன்னுடைய எழுத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று தன் நாவை அசைத்து மன்னிப்பு கோருவதே முறை, இல்லையேல் நாங்கள் இருவரும் எங்கள் படுக்கையறை விளையாட்டுகள் குறித்து அவரின் வீடு தேடிச் சென்று அவர் மனைவியின் முன்னிலையில் பேசுவது தவிர்க்கவியலாததாகிப் போகும்.

அவரது மனைவியும் சமூக அக்கறையோடு பதிவுகள் எழுதிவருகிறார். நீதி பற்றி மிகுந்த அக்கறை கொண்டவராக உள்ளார். ஆகவே நான் அவருடைய பக்கத்திலும் சிலக் கேள்விகளை எழுப்பியுள்ளேன்.

·         Kotravai Kotravai Hi Gayathri

We do not know each other, however the need for the talk arises following a blog post written by your Husband. I am left with no option other than involving you because your husband has touched upon our Personal Life. Me and My Husband are writers. My Husband had shared some opinion about few ‘men’ in the Tamil Literature and their ‘interest’ in motivating Female Writers during a book release event held in Chennai. Your Husband Mr. Abilash Chandran happened to be an audience.

Following that Abilash had written a post titled Santhegakkeskalukku oru Kathai (ofcourse with the fear of mentioning our name) in which he turned the whole conversation as if it was a personal grief of my Husband. The post talks about 2 stories in which he talks about wives indulging in ‘friendship’ (or extramarital affair) and the kind of men who are suspicious about them in-spite of being staunch leftist. The 2nd story says that so and so husband is so suspicious that even his shadow guards / spies the wife when ‘male’ friends talk to his wife (in the night).

There were quite a few audiences during the event and those who read the post could easily relate it to the speaker of that particular day and had to directly pull our names.

Following that few friends has questioned Abilash, but he failed to answer. Now we have also registered our views on this. We sought answer from Abilash and so far we have witnessed only silence.

He has peeped into our bedroom without our permission, though we do not wish to do the same, I would like to know what is your take on this behavior of your Husband, bcos this is not about a general post and write-up he has touched upon a personal life and has unnecessarily pulled my name who was not even present during the event, nor do I have any acquaintance with Abilash.

Do you think Abilash should Apologize?

Abilash seems to be interested in knowing our bedroom game, I and Vasumitra are quite open in sharing about our lives, please let me know when we can drop into your house.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQC1HO6KN1oL22Rb&w=154&h=154&url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-TR727p9Wh9w%2FUwMMG9hbKhI%2FAAAAAAAABr4%2F0HjbZatN3WM%2Fs1600%2FToryFair..png
saavinudhadugal.blogspot.com
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQDbSgAhBgcAQx4Z&w=154&h=154&url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-QApqEi09TYY%2FUwL_lT9RPII%2FAAAAAAAABqQ%2Fr0aD3Zgfhss%2Fs1600%2Fvoyeurism.jpg
makalneya.blogspot.com
.......................................................ஞானம்என்பது ஞாபகங்களின் வலி
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai Story Written by Abilash Chandran

Story Written by Abilash Chandran - சந்தேகக் கேஸ்களுக்கு ஒரு கதை

ஒரு நண்பர் ஒரு பெண் எழுத்தாளரின் வீட்டுக்கு போன கதையை சொன்னார். நிழல் கூட முன்னே தான் விழும். ஆனால் அங்கு அப்பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கையில் எழுத்தாளரின் கணவர் இவர் முதுகுக்கு பின் ஒரு கருநிழலாக நின்று கண்காணித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு நிறைய ஆண் நண்பர்கள். வெறும் நண்பர்கள் தாம். ஆனால் கணவருக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம். இதைச் சொல்லி வீட்டில் தினமும் சண்டை.
சில நாட்கள் போன பின் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. “நாங்க சைபர் கிரைமில் இருந்து பேசுகிறோம். நீங்க பேஸ்புக்கில் பெண்களை தோந்தரவு செய்கிறீர்கள் என புகார் வந்த்து. எச்சரிக்கவே இந்த அழைப்பு. இனி எந்த பெண்ணிடமாவது சேட் செய்தால் ஆக்‌ஷன் எடுப்போம்” என்று. நண்பர் இதென்ன விநோதமாக இருக்கிறதே என்று குறும்பேசி எண்ணை இணையத்தில் போட்டு தேடினால் அது பெண் எழுத்தாளரின் கணவனின் எண். அவர் இது போல் பல நண்பர்களை மிரட்டி உள்ளதாய் பிறகு அறிய வருகிறது. அவர் ஒரு தீவிர இட்துசாரி. ஆனால் கடுமையான சந்தேகப்பிராணி கணவன். தினமும் மனைவியை டார்ச்சர் செய்து செய்து ஒரு கட்டத்தில் அந்த பெண் தனியாய் பிரிந்து போய் விட்டார்.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai ஒரு இலக்கிய கூட்டம் போயிருந்தேன். அங்கு ஒரு பேச்சாளர் மேடையில் தன் மனைவியை ஒரு எழுத்தாளர் இரவில் போன் செய்து நூல் விட முயல்வதாக அழுதார். அதற்கு பின் கூட்டம் ஒரு குடும்ப பிரச்சனையை தெருவில் உட்கார்ந்து கிழவிகள் “ஆமால்ல” என மோவாயில் கையை வைத்து பேசுவது போல் சென்றது. பேசியவர் திரும்ப திரும்ப “எழுத்தாளர்கள் ஏன் கல்யாணம் ஆன பொண்ணுங்களா டார்கெட் பண்ணுறாங்க?” என அரற்றினார்.
இதன் உண்மைத்தன்மை ஒரு புறம் இருக்கட்டும். மனைவியை சந்தேகப்படுவதாகத் தான் இந்த கேஸை பார்க்கிறேன். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது தான் பாலியல் தொந்தரவு. ஆனால் தெரிந்த ஒரு ஆண் நண்பருடன் பேசுவது அப்பெண்ணின் விருப்பம், ஒரு தனிப்பட்ட தேர்வு. இதில் குறுக்கிட கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால் பிரச்சனை முழுக்க முழுக்க கணவனுடையது. இப்படியான சூழலில் கணவன் என்ன செய்யலாம்?

நம்பி விட்டு விடுவது நல்லது. கணவனோ மனைவியோ கள்ளத்தொடர்பு உருவாக்க நினைத்தால் எவ்வளவு கண்காணித்தாலும் தடுக்க முடியாது. அதனால் ஒன்று நம்ப வேண்டும். அல்லாவிட்டால் பிரிந்து விட வேண்டும். நடுவே இருப்பவர் கதி ஆப்பில் வால் மாட்டிய குரங்கினுடையது தான். எனக்கு இதையெல்லாம் பார்க்கையில் அரேபிய இரவுகளில் வரும் அந்த கதை நினைவு வந்தது.

ஒரு மன்னரின் பிரியமிக்க மனைவி அவரது அடிமைகளுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். இதைப் பார்க்கிற மன்னர் மனைவியையும் அடிமைகளையும் கொல்லுகிறார். பிறகு மனம் நொடிந்து, வாழ்வில் நம்பிக்கை இழந்து, “பெண்கள் ஏன் இப்படி துரோகம் செய்கிறார்கள்?” என யோசிக்க துவங்குகிறார். ஏற்கனவே அவரது தம்பி தன் சொந்த மனைவியின் துரோகம் எண்ணி சோகத்தில் அண்ணனை பார்க்க வந்திருக்கிறார். இப்போது இருவரும் சேர்ந்து மாறுவேடத்தில் பரதேசம் போகிறார்கள். ஓய்வெடுக்க ஒரு மரம் மீது அமர்கிறார்கள். அங்கிருந்து பார்க்க ஒரு வானுயர ஜின் தெரிகிறது. இந்த அரக்கன் ஒரு பெரிய பெட்டியை வைத்திருக்கிறான். அதன் மீது பிரம்மாண்டனாம சங்கிலியும் பூட்டும். இதைத் திறந்தால் பூட்டிட்ட இன்னும் நூறு நூறு பெட்டிகள் உள்ளே. இதற்கெல்லாம் உள்ளே ஒரு அழகான மானிடப் பெண். அவளை வெளியே எடுத்து கொஞ்சி விட்டு பின் தூங்கி விடுவான். அப்போது மரத்தில் இருக்கும் மன்னரையும் தம்பியையும் பார்க்கும் அவள் அழைக்கிறாள். தன்னோடு செக்ஸ் வைக்க் கேட்கிறார். மன்னர் பயந்து மறுக்கிறார். இல்லாவிட்டால் ஜின்னை அழைத்து அவர்கள் தன்னிடம் தவறாய் நடக்க முயன்றதாய் சொல்வேன் என மிரட்டுகிறாள். அவர்கள் பயந்து போய் உறவு கொள்கிறார்கள். முடிந்த்தும் அடையாளத்துக்காக அவர்களின் மோதிரங்கள் கேட்கிறாள். அப்போது அவள் தன்னிடம் சேர்ந்துள்ள நூற்றுக்கணக்கான பிற மோதிரங்களையும் காட்டுகிறாள். மன்னரும் தம்பியும் மூக்கில் விரல் வைக்கிறார்கள். “பூமியில் இருந்து வானம் வரை பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் ஒரு ஜின்னாலே தன் மனைவி துரோகம் செய்வதை தடுக்க முடியவில்லை. நாமெல்லாம் எம்மாத்திரம்” என சட்டென்று ஒரு பல்ப் அவர்களுக்குள் எரிகிறது. அமைதியாகிறார்கள். அப்போது பார்த்து ஜின் எழுந்து கொள்ள கதை இன்னொரு திசையில் போகிறது.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai ஆக கணவர்கள் சந்தேகப்பட்டு ஒரு எல்லைக்கு மேல் போவது இருவரின் மனநலனுக்கும் நல்லதல்ல. மேலும் பெண்கள் மீது சந்தேகப்படும் போது தான் அவர்கள் பழிவாங்கும் நோக்கில் உண்மையாகவே உங்களுக்கு துரோகம் இழைப்பார்கள்.
தாம்பத்யம் கடவுள் மாதிரி. நம்பிக்கை வராவிட்டால் நாஸ்திகனாகவே இருந்து விட வேண்டும்!

·         Kotravai Kotravai Hi Gayathri you seem to concerned about justice, can you please let me know what would be the justice for Abilash for having written such a post which I have shared below
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai Your Husband Abilash has blocked me too and has still not responded to any of our questions. Don't you think that Abilash should have had the moral of Registering what Vasumithra shared as his opinion as it happened clearly mentioning it in the direct speech and called for a healthy discussion.
·         https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn2/t5/s40x40/1085667_559480574_4372675_q.jpg
Kotravai Kotravai Dont you think this is an cowardly act. He should have dared to document what Vasumithra spoke and should have registered his view point on that and called for a discussion from the fraternity. This is called discourse




Feb 17, 2014

குதிரைகள் காட்டிக் கொடுத்த நாக்கு


நேசமித்ரன்,  லக்‌ஷ்மி சரவணகுமார் அபிலாஷ் மற்றும் அதுபோன்ற ‘தூய இலக்கிய படைப்புக்கர்த்தாக்களுக்கு’,

கொற்றவை எழுதிக்கொள்வது.

வணக்கம். உங்கள் மனநலனும், உடல்நலனும் நன்றாக இருக்கிறதா?

நான் என் சொந்த வாழ்க்கை குறித்த சுய சரிதம் ஒன்றை எழுதலாம் என்றிருந்தேன். நவீன தமிழும், சிறந்த கற்பனைத் திறனும் படைத்த ஒருவர் அதை எழுத வேண்டும் என்று நினைத்தபோது எனக்கு உங்கள் பெயர்கள் அடிபட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக திறன் சார்ந்து உங்கள் பெயர் அடிபடாமல், என் படுக்கையறை வரை நீங்கள் எட்டிப்பார்க்கும் தகவல் வந்தது. அப்போதுதான் விளங்கியது, என் அனுமதி இல்லாமலேயே நீங்கள் என் சுய-சரிதையை கிசு-கிசுக்களாக உதிர்த்துவருகிறீர்கள் என்று. கிசு-கிசுக்கள் சுவாரசியத்தைக் கெடுத்துவிடும், ஒருவகையில் அது ’தனியுரிமை மீறலும் கூட’. சில வருடங்கள் பொறுத்திருந்தால் எனது வாழ்க்கையை நானே நிச்சயம் சுய-சரிதையாக எழுதுவேன் என்று உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சரி அது ஒருபுறம் இருக்கட்டும், படுக்கையறையை எட்டிப்பார்க்கும் விசயத்திற்கு வருவோம். திடீரென்று இது என்ன தலைவலி என்று நீங்கள் யோசிக்கலாம், ஆனால் உங்கள் நாவில் நரம்பின்றி நீங்கள் பேசிவரும் விசயங்கள் என் காதுகளில் வந்து சேரும்போதோ அல்லது இணையத்தில் படிக்க நேரும்போதோ எனக்கு தலைவலி வருவதில்லை மாறாக ஆத்திரம் வரும்… ஆனால் இந்த சுரணை கெட்ட வசுமித்ர அதை தணித்துவிடுகிறான்.

முதலில் நேசமித்ரனுக்கு - காலத்தில் கொஞ்சம் பின்நோக்கிச் செல்வோம்..

தேனியில் ஒரு ‘இலக்கியச் சந்திப்பு’ நடந்து, அதன் தொடர்ச்சியாக முகப்புத்தகத்தில் நீங்கள் வைத்த பதிவுகளுக்கு எனது ‘நண்பன்’ வசுமித்ர எதிர்வினையாற்றினான். அதில் உங்கள் படைப்பு சார்ந்த சில விமர்சனங்களும் வைக்கப்பட்டவுடன் நீங்கள் வெகுண்டெழுந்து இந்த சமூகத்திற்கு சில உண்மைகளைப் போட்டுடைத்தீர். ஆனால் அப்போதும் நான் மௌனம் காத்து வந்தேன். ஆனால் என் மௌனத்தை நீங்கள் உங்களின் அந்த கேவலமான போக்கிற்கு கிடைத்த வரவேற்பு சமிக்ஞையாக கருதிவிட்டீர்கள் போலும். அதை தொடர்ந்து கொண்டே இருந்தீர்கள்..

நேசமித்ரன் அப்போது நீங்கள் வசுமித்ர பற்றி வைத்த விமர்சனங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இவர் மட்டும் என்ன பெரிய கவிஞரா, ரமேஷ் பிரதனை காப்பி அடிக்கிறார், வன்முறையாளர், பேசினால் அடிப்பார், ரவுடி, அய்யோ பயமாக இருக்கிறதே, ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் பின்னால் இருக்கும் ஆங்கிலம் கூட படிக்கத் தெரியாதவர் இப்படியாக படைப்பு பற்றி விமர்சனத்திற்கு நீங்கள் தனிமனித தாக்குதல்களைத் தொடுத்தீர்கள்.

ஆனால் அக்கணத்திலும் எனக்கு வியப்பாக இருந்த ஒன்று – கூடவே வாழும் ஒரு துணையான என்னிடம் நீங்கள் வசுமித்ர பற்றி புகழ்ந்தவைகள் சொற்சாட்சியாக நிற்கும் என்பதை எப்படி மறந்துபோனீர்கள் என்பதுதான். இருந்தாலும் நான் இந்த ‘இலக்கிய’ சண்டைகளுக்குள் வரக்கூடாது, இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள் நாளை கூடிவிடுவார்கள், போனால் போகட்டும் அவதூறுகளுக்குத்தான் 1000 சொற்கள் தேவைப்படுகிறது, உண்மை மௌனத்தின் வழி காலத்தோடு உரையாடுகிறது என்று அமைதி காத்தேன். ஆனால் தாங்கள் அந்த மௌனத்தின் மதிப்பை அறியாது போயிருக்கிறீர்கள். ஆச்சரியமாகத்தான் உள்ளது.

இதற்கு முன்னர் லக்‌ஷ்மி சரவணகுமார் - சம்பந்தேமே இன்றி, அவருக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை கூட இருந்தது கிடையாது (தமிழ் இலக்கியவாதிகள் என்றாலே அலர்ஜி ஏற்படாத குறைதான்), அவருடைய பெண் தோழி ஒருமுறை ஒரு நிகழ்ச்சியின் முடிவில் வீட்டிற்கு அழைத்தார், சென்றேன், பேசினேன், வந்தேன் அவ்வளவுதான். ஆனால் எவர் மீதோ இருந்த வெறுப்பு என் மீதான பொறாமையாக எப்படி உருவெடுத்தது என்று தெரியவில்லை. மிகவும் மோசமான ஒரு ஸ்டேட்டஸ் ஒன்றை போட்டார். அதற்கும் நான் மௌனமே காத்தேன்.  அதற்குள் ஒரு இதழாசிரியர், எங்கள் நலம் விரும்பி அவரிடம் தொடர்பு கொண்டு கண்டித்திருக்கிறார், பதிவும் நீக்கப்பட்டுவிட்டது. பின்னர் வசுமித்ர ‘இன்னா செய்தாரை அவர் நாண நண்ணையம் செய்துவிடல்’ என்பதற்கேற்ப அவரை வீட்டிற்கு அழைத்து உணவளித்து, சில அறிவுரைகளை வழங்கி, உதவி தேவையென்றால் கேட்க தயங்காதீர்கள் என்று சொல்லி அனுப்பினார். பாருங்கள் ஒரு வன்முறையாளர் தன் காதலியை தூற்றியவரிடம் எத்தனை பெரிய வன்முறையை செலுத்தியிருக்கிறார்… வசுமித்ர மாதிரி ஒரு சுரணை கெட்டவனை நான் பார்த்ததேயில்லை.

அதேபோல் லக்‌ஷ்மி சரவணகுமாரும் வசுவிடம் மன்னிப்பு கேட்டதால் அது அத்தோடு முடிந்து போனது ஆனால் இப்போது அபிலாஷ் எழுதிய பதிவின் மூலம் இந்த ‘இலக்கிய கர்த்தாக்கள்’ செய்வதென்ன என்பதை நடந்தவற்றிலிருந்தே விளக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

 சரி நேசமிதரன், உங்கள் கதைக்கு வருவோம், நீங்கள் தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது முகப்புத்தகத்தில் எங்களோடு ஓரிருமுறை சாட்டிங்கில் உரையாடியிருக்கிறீர்கள். குறிப்பாக வசுவின் கவிதை பால் ஈர்ப்பு கொண்டு அவரோடு நிறைய உரையாட விருப்பத்தில் இருந்தீர்கள். பின் தமிழ்நாடு திரும்பியிருந்தீர்கள்.

கூடங்குளம் எதிர்ப்புக்காக கவிதை அரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யும் நிகழ்வில் நானும் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். அதனையொட்டி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்க உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர்கள் உங்களிடம் ஒருமுறை முன்னரே பேசியதாக தெரிவித்து மேலும் சில விவரங்கள் கேட்டீர்கள். (நீங்கள் ஒரு பரந்த மனதுடையவர், வளர்ந்து வருபவர், உதவிக் குணம் நிறைந்தவர், சமூக அக்கறை கொண்டவர் என்றெல்லாம் அந்த அமைப்பு தோழிகளிடம் தெரிவித்திருந்தேன்…. பாருங்கள் நான் தான் எவ்வளவு அப்பாவி என்று)

பின்னர் நமது பேச்சு இங்கு செயல்படும் பெண்கள், அவர்களது படைப்புகள் சார்ந்து சென்றது. இங்கிருக்கும் பெண்கள் பெரும்பாலும் உடல் சார்ந்து, பாலியல் தேவை சார்ந்தே சுதந்திரம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் நான் அதிலிருந்து மாறுபட்டு எழுதுவதாகவும், பெண்களையும் நோக்கி நான் கேள்விகள் எழுப்புவதாகவும், தீவிரவாதப் பெண்ணியமல்லாத ஒரு பெண்ணியத்தை சரியாகப் பேசுவதாகவும் சொன்னீர்கள் (புகழ்ந்தீர்கள்!!). அதனாலேயே என்னைப் பொருட்படுத்தி இவ்வளவு நேரம் பேசுவதாகவும் தெரிவித்தீர்கள். அப்போது நான் சொன்னேன்: இவ்வளவுக்கும் வசுமித்ரவே காரணம், அவன் தான் நான் கவிதை என்று கிறுக்கியதை, எனது ஆண் வெறுப்பு மனோபாவத்தை, சிந்தனையை மாற்றி அமைத்தவன். அவன் ஒரு இரக்கமற்ற விமர்சகன், ஆனால் அதுதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது என்கிற ரீதியில் பதில் சொன்னேன். நீங்களும் உங்கள் எழுத்து இன்று மெருகேறியிருப்பதற்கும் வசுமித்ர தான் காரணம், பல வருடங்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோது அவர் பேசியது, அவரது சிந்தனை, கேள்விகள், கவிதை இவையெல்லாம் மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்ததாகச் சொன்னீர்கள்.

அதன் பிறகு கவிதை அரங்கில் நான் கவிதை வாசித்தபோது எனது கவிதையில் வசுமித்ரவின் தாக்கம் இருப்பதாகச் சொன்னீர்கள். ஆம் அவன் என் ஆசான் அவனின் மாணவியாக அறியப்படுவதில் எனக்கொன்றும் பிரச்சனை இல்லை என்றேன்…

அதன்பின்னர் தேனி நிகழ்வு… அற்பப் பேச்சுகள்…முகப்புத்தக வீரவசனங்கள்… அதில்தான் நீங்கள் வசுவைப் பற்றி மேற்சொன்ன கருத்துகளை வைத்தீர்கள்… ஐயா… அதெப்படி மற்றவரை விமர்சிக்கும்போது ஒரு சிறந்த படைப்பாளியாக இருந்த வசு, உங்களை விமர்சித்தவுடன், கேள்வி கேட்டவுடன் ரவுடியானான்? உங்கள் எழுத்தின் தரம் உயர காரணமான அறிவையும், திறனையும் பெற்றிருந்த  ஒருவன் எப்படி ரமேஷ் பிரேதனை காப்பி அடித்து எழுதுபவன் ஆனான்? சுயமாக ஒரு சொல்லை எழுதத் தெரியாதவன் – சுயம் என்றால் என்ன நேசமித்ரன், நிகண்டுகளையும், கூகிள் தேடலையும் ‘ஃபியுஷன்’ செய்யத் தெரியாதவன் என்பதன் உருவகப் பெயரா? நீங்கள் ‘சுயம்’ என்ற சொல்லை உச்சரித்தால் எனக்கென்னவோ அப்படித்தான் புரிகிறது.

ஏன் நேசமித்ரன் ப்ளாட்பார்ம் டிக்கெட் பின்னால் இருக்கும் ஆங்கிலம் படிக்கும் மொழி அறிவு பெரிதா இல்லை சக மனிதர்களிடம் உண்மையாக நடந்து கொள்ளும் பண்பு பெரிதா? உங்களுக்கு அத்தகைய பண்பிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

ஆம் அவன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான், ஆனால் 17 வயதில் வறுமை அவன் குடல்களை தின்று கொண்டிருந்தாலும், பஸ்ஸுக்கு இருக்கும் காசில் டீ குடித்து பசியாறி… பஸ்ஸில் செல்லாது பல கிலோ மீட்டர்கள் நடந்தே ஏதாவது நூலகம் சென்று அங்கு மார்க்ஸையும், எங்கல்ஸையும், லெனினையும், புரட்சியையும், உலக இலக்கியங்களையும் (அதாவது சமூக அவலங்களை சரியான அரசியல் பார்வையோடு பேசும் படைப்புகள், உங்களைப் போன்று நிகண்டுகளை உருவேற்றி உளரும் படைப்புகள் அல்ல அவை) படித்து படித்து தனது வயிற்றை நிரப்பிக் கொள்வான். ஆமாம் அங்கில மொழியின் அவசியம் அவனிக்கில்லை ஏனென்றால் கூகிள் திரட்டியில் கட்&பேஸ்ட் செய்பவருக்கும், ஆங்கில இலக்கியங்களிலிருந்து ‘சுட’ விரும்பும் நபர்களுக்கே அதன் அவசியம் இருக்கிறது…அவருக்கு ஆங்கில அறிவு இல்லாததைப் பற்றி உமக்கென்ன கவலை…சொல்ல முடியுமா?  ஆங்கிலம் என்பது பொது அறிவா? இல்லை மொழி அறிவா? ஆங்கிலம் நம் நாட்டிற்கும், உலகிற்கும் செய்வது என்னவென்று உங்களுக்கு தெரியாதா?

ரவுடி, வன்முறையாளன் – மிகப்பெரிய வன்முறையாளர்கள் யார் தெரியுமா…அகந்தை கொண்டவர்கள், சமூக அவலங்களை மிகை உணர்ச்சியாக தங்கள் படைப்புகளில் ஏலம் விடுபவர்கள், நேர்மையற்றவர்கள், சுயநலம் மிக்கவர்கள்….இப்படியாக…

இதில் நீங்கள் எந்த இடத்தில் பொருந்துவீர்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை…

சரி உங்களது சமீபத்திய புரட்டுக்கு வருவோம்:

1.  ஊற்றி கொடுப்பது பற்றி பேசுகிறாரே வசு மட்டும் ஒழுங்கா அவர் தனது வீட்டிற்கே நண்பர்களை அழைத்து ஊற்றி கொடுக்கவில்லையா? (தம்பி நானும் ஊத்திக் கொடுத்தவந்தான் ஆனா மதுவுக்கும் சுயமரியாதை இருக்குன்னு பயந்து பயந்து செய்வேன். இங்க வெத்தலை போட்டவனெல்லாம் வித்துவான். - http://makalneya.blogspot.in/2013/06/blog-post_26.html) – விரிவாகப் பேசலாம்…வசு ஊற்றி கொடுப்பதற்கும், ‘இலக்கியவாதிகள் ஊற்றி கொடுப்பதற்கும் உள்ள வேறுபாடு தொடங்கி..)

2.  வசு கொற்றவையை அடித்து அது பல பேரிடம் பஞ்சாயத்திற்கு சென்றிருக்கிறது தெரியுமா? இவர் மட்டும் என்ன பெரிய ஒழுங்கா? – இதற்கும் அவரது படைப்பின் மீதான விமர்சனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?  அவர் என்னை அடித்தது குறித்து நான் எப்போது உங்களிடம் முறையிட்டேன். நீங்கள் எழுத்தாளரா இல்லை கட்டப்பஞ்சாயத்துக்காரரா இல்லை ??????

மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் அதையும் கேட்கலாம். பதில் கிடைக்கும். ஆனால், பெண் விடுதலைச் சிந்தனை குறித்து எழுதி வரும் எனக்கு என்னைக் காத்துக் கொள்ளத் தெரியாது எனும் உங்கள் மூடநம்பிக்கை சிரிப்பை வரவழைக்கிறது.

உங்களுக்கான சில கேள்விகள்:

1.  சக பெண் எழுத்தாளர்களிடம் (பெண்களிடம்) கவிதை வாசிப்பு, கவிதை ஊக்குவிப்பு, இலக்கிய அறிவூட்டல் என ‘சேவை’ செய்துவரும் நீங்கள், உங்கள் மனைவிக்கும் அத்தகைய அறிவூட்டலை செய்கிறீர்களா? (ஒருவேளை அவருக்கு இந்த துறையில் விருப்பமில்லையென்றால், அவருக்கு விருப்பமான துறையில் அவரை ஊக்குவிக்க, முன்னேற்ற ஏதேனும் பங்களிப்பு செய்கிறீர்களா? (பொதுவாக இது நானும் வசுவும் உரையாடும் விஷயம்… இதைத்தான் அந்த நிகழ்ச்சியில் வசுவும் பேசினார்).

இலக்கியத்துறையில் உங்கள் மனைவியை வென்றெடுக்க முயற்சித்திருக்கிறீர்களா?

2.  இலக்கியக் கூட்டங்களுக்கு உங்கள் மனைவியை அழைத்து வருகிறீர்களா? வந்துருக்கிறீர்களா.. நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை. (இல்லையென்றால், ஏன் என்று விளக்க முடியுமா).

3. ’இலக்கியச் சேவை’ செய்ய ஊர் ஊராக பயணிப்பது போல் உங்கள் மனைவிக்கும் அத்தகைய சுதந்திரங்களை வழங்குகிறீர்களா?

4.  மேற்சொன்ன அனைத்தையும் வசுமித்ர செய்கிறான், அதற்கு மேலும் செய்கிறான்… சுயமரியாதை, சுதந்திரம், கொள்கை இவற்றை சொல்லாடல்களாக மட்டும் வைக்காமல் அதை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்கிறான்… எல்லாவற்றிற்கும் மேல் ஒரு வன்முறையாளனாகிய அவன் எனக்கு கருப்பை சுதந்திரம் வழங்கியுள்ளான்…… உங்கள் மனைவிக்கு அத்தகைய சுதந்திரத்தை நீங்கள் வழங்கியுள்ளீர்களா? குறைந்தபட்சம் அப்படியொரு சுதந்திரம் பெண்களுக்கு உள்ளது என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

மேற்சொன்ன கேள்விகள் சந்தேகக்கேஸ்களுக்கு ஒரு கதைசொல்லும் கதைசொல்லியான அபிலாஷ் சந்திரனுக்கும் பொருந்தும். இந்தப் பதிவை நான் நேசமித்ரனை நோக்கி வைக்க புத்தகக் கண்காட்சி நடக்கவிருந்த சமயத்திலேயே எழுதிவிட்டேன் ஆனால் அதைப் பதிவிட வேண்டாம் என்று தடுத்தவனும் அந்த சுரணை கெட்ட வசுமித்ரதான்…

இறுதியாக

இடதுசாரி என்றால் குறி இருக்காதா அபிலாஷ் (& மற்றவர்கள்) பாருங்கள் ஒரு இடதுசாரிக்கு போய் காமம் எழுகிறது என்று மதவாதிகள் பேசுவது போல் உங்களைப் போன்றோர் பேசிவருகிறார்கள். உலகமகாக் காவியங்களை படிப்பவர்களும், தலைசிறந்த இலக்கியங்களைப் படைப்பவர்களுமான உங்களுக்கு நாகரீகம் என்ற ஒன்று தெரியாமல் போனது ஏன். கணவன் மனைவிக்குள் சண்டைகள் வரக்கூடாது என்று எண்ணுவது வேடிக்கையாக இல்லை… எல்லாவித உணர்வுகளும் உரிமைகளும் அங்கு சமமாக இடமளிக்கப்படுகிறதா என்பதே விஷயம்… எங்களுக்குள் எல்லாம் சமமாகவே இருக்கிறது… வசு எனக்காக செய்திருக்கும் தியாகங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா… நீங்களெல்லாம் தாஸ்தாவெஸ்கி, அன்பு, காதல், நனவிலி மனம் என்று எழுதிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறீர்கள்… வெட்கமாக இல்லை?

பொதுவாக ‘இலக்கியம் வளர்ப்பவர்கள்’ செய்வது என்ன என்று கூட்டத்தில் வசு பேசினால் அது குறித்து உரையாடாமல் அது ஏதோ அவன் சொந்த புலம்பல் போல் மாற்றி இப்படி ஒரு கீழ்த்தரமான பதிவை எழுதும்போது உங்கள் மனைவி உங்கள் அருகில் இருந்தாரா…. ஆனால் நீங்கள் அந்தப் பதிவை இட்டிருந்த நேரம் வசு சென்னையில் இருந்தான் நான் அவனுக்கு தொலைபேசி வாயிலாக என் முத்தங்களை வழங்கிக்கொண்டிருந்தேன்… மற்ற விவரங்களை நாம் நேரில் பேசுவோம்… உங்கள் மனைவியையும் அழைத்து வாருங்கள்…. வசுபற்றி பேச என் மகளையும் அழைத்துவருகிறேன்… நான் பேசவேண்டியிருக்காது வசுபற்றிய கேள்விகளுக்கு (அவன் குணம் சார்ந்து) என் அருமை மகள் உங்களுக்குப் பதில் அளிப்பாள்

எனக்கு வசுவுடன் பிரச்சினை இருந்தால் நான் அவனை அடித்துக்கூட அதை தீர்த்துக்கொள்வேன்… உங்கள் மனைவி உங்களை அடிக்கும் சுதந்திரத்தை நீங்கள் அவருக்கு வழங்கியிருக்கிறீங்களா?  நான் உங்கள் இலக்கியச் சந்திப்புகளில் வந்து முறையிட்டேனா என் படுக்கையறையில் குறை என்று? சொல்லுங்கள்

வசுவின் நிழல் என்னைக் கண்காணிப்பதாகப் பூடகமாக எழுதியிருக்கிறீர்கள் உங்களுக்கான பதில் நித்ரா நீயல்லா வானம் ஒரு சிறு கரும்புள்ளி எனும் அவனது கவிதைத் தொகுதியில் இருக்கிறது.

குறளி இதழுக்கு ஆசிரியர்கள் வசுவும் அநந்தனும் ஆனால் ஒரு எழுத்தாளர் எப்போது பார்த்தாலும் எனக்கு ஃபோன் போட்டு குறளி குறித்து பெண் விடுதலை குறித்து பேசுவார் ஒரு எழுத்தாளர்… அதுவும் இரவில்தான்… இதை எப்படி புரிந்துக்கொள்வது… நான் பலமுறை சொல்லி விட்டேன் குறளி தொடர்பாக நீங்கள் வசுவிடம் பேசலாமே என்று ஆனால் இன்னமும் எனக்குத்தான் ஃபோன் வரும்… பலமுறை நான் போனை எடுப்பதே இல்லை… வசு பாவம் ஏன் அவாய்ட் பண்ற என்று கேட்டதற்கு… அவரிடம் பேச எனக்கு என்ன இருக்கிறது விருப்பமில்லை என்றேன்…(பாருங்கள் சந்தேகப்பேர்வழியின் கருணையை – சுரணை கெட்டவன்) இது என் சுய முடிவு… நான் பலமுறை தவிர்த்தும் அவர் இறுதியாக லேண்ட்லைனில் ஒருமுறை தொடர்புகொள்ள எண் தெரியாமல் எடுத்துவிட்டேன்… முக்கியமாக ஏதுமில்லையென்றால் பிறகு பேசுகிறேன் என்று வைத்துவிட்டேன்… இதுக்கூட நான் சொல்லித்தான் வசுவுக்கு தெரியும்… இதுபோல் இன்னும் சில தொடர்புகளை நான் தவிர்க்கிறேன்… இது என் மனநிலை சார்ந்தது இதில் உங்களின் பிரச்சினை என்ன? என்னைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா சொல்லுங்கள்?

வசுவின் நிழல் என்னைக் கண்கானிப்பதாக எழுதியுள்ளீர்கள்…. உங்களது குறி கண்காணிக்கிறதா இல்லையா என்று நான் காயத்ரியிடம் கேட்கலாமா அபிலாஷ்… இந்தக் கேள்வி நேசமித்ரனுக்கும் பொருந்தும்…. அந்தக் குழந்தையை அவர் அடிக்காமல் பார்த்துக்கொள்கிறாரா என்று எவரேனும் எனக்குக் கேட்டுச் சொல்லலாம்…

நான் தாலி அணிவதில்லை, மெட்டி பொட்டு, வளையல் ஏதும் கிடையாது உங்கள் மனைவிகள் அப்படி இருக்கிறார்களா? என் அத்தை வீரலட்சுமி தாஸ்தாவெஸ்கி, சில்வியா ப்ளாத், போர்தியு, சார்த்தர், நீட்ஷே ஏன் பெரியாரைக் கூட படித்ததில்லை… அவளது அம்மா செல்லம்மா பள்ளிக்குக்கூட சென்றதில்லை ஆனால் இவர்கள்கூட என் வெளிப்பாடு பற்றி கவலைப்பட்டதில்லை… ஏன் பிள்ளை வேண்டி எங்கள் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதில்லை… நீங்களோ உங்கள்  தாயாரோ உங்கள் மனைவிக்கு கருப்பை சுதந்திரம் கொடுத்துள்ளீர்களா… கொடுப்பீர்களா?

மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக சொல்கிறேன் என் சுயசரிதையை எழுதும் உரிமையை நான் இதுவரை யாருக்கும் வழங்கியதில்லை… இனியும் வழங்கப்போவதில்லை… கிசுகிசுக்களாக எழுதி என் வாழ்வின் அற்புதங்களை வெற்றுச் சொற்களாக விரயமாக்காதீர்கள்…