Dec 14, 2012

Human Emancipation – Speech delivered in Socio Fest – Liberate’12, Loyola College on 14.12.12


IMG_2695
Women’s liberation and Justice for laborers is Human Emancipation to me. To understand how and why this is important one needs liberation of mind. Liberating ourselves from all ideologies that has been injected in our minds over all these years is the primary need.
How do we liberate our minds and work towards Human Liberation? Our mind is nothing but a medium that has been tuned for ‘others’ – by others here I mean identity. Identity for what? ‘power’, ‘fame’ and ‘money’. Inorder to gain these and to retain the gained ‘benefits’ our “fore fore ‘fathers’ ” believed in certain social system consisting of hierarchy – an order of caste, class and gender.
This hierarchy was ‘theoritized’  and made as law by putting ‘Man’ as the head of the family / society because they believed that would only aid them to hold on to power and wealth. It is said that the ancient society has been a commune living headed by women in which there was equal distribution of wealth and natural resources. There was no ‘lord’ and ‘slave’. Considering the external factors, men and women arrived at a division of labor for the safety of ‘women’ as she is the primary factor in ‘reproduction’ and her life was so important. But later an unequal distribution of wealth arose. This happened because of change in means of production. After invention of certain ‘tools and technology’ for ‘mass production’ a particular group of society gained power by acquiring / grabbing lands and means of production. They became land lords, owners, capitalists etc etc. They took control of manmade (rather women made) means of production and also natural resources and primarily the reproductive force of mankind – ‘THE WOMEN”.
To ensure mass production and high profits by effective use of the means of production they created a new social division of labor and that is the ‘labor class’ – women were pushed to the secondary level and were defined new social role of ‘House work’ – by which their one and only duty is to reproduce children for tomorrow’s labor need; to effective feed and maintain them to become the most effective labor. In India it was further intensified by the caste order and gender roles defined by ‘Religious scriptures’. That is how women became house wives and men became economic slaves of the great ‘competitive economy’.
Men have to run to make money to build houses, buy car, buy jewels for wives, put children in ‘best of the schools’ and nowadays men have to run for ‘six packs’ as well. Is money not important? Yes it is! But how much is the question? What is the labor hour required to make that desired money? You and me work 8 hours a day and can make 20,000 to 1 L doing a desk job, but at the same time a rickshaw man can hardly make Rs. 150 a day, wy? If brain is superior so is physical labor! But why are they looked upon as slaves and secondary creatures? And if a man runs for money ignoring a family, is a women able to understand that, accept that and if women wants to earn and be a professional is a man able to accept that? But still all of us want to make ‘money’.
Unless we understand this fundamental social division of labor and unequal distribution of wealth, we will not even realize that each one of here is slaves and we got to question this social order.
Ok when we come back to women, many of you might not even know that women did not even have rights to vote, right to education etc., later they revolted, thousands of women labors went on struggle, they did not even have a ‘toilet’ in work place. Women like Alexandra kollantai, Clara Zetkin were key people among the leaders who lead the revolt of working women and we celebrate their victory as working women’s day. Today Women’s day has become a shopping festival and it is reiterated that ‘you are girly, you are feminine, you are women – so shop, shop, shop’. Our girls here should understand that women’s liberation is just about wearing what we like and doing what we want to…. It is about question what is this thing called ‘girly, feminity’ etc., who is defining them, who is benefitting out of it?
Later when women also won their rights and attained some economic growth, Men were influenced to think that women are their enemies, grabbing their opportunities etc., they think that they have sacrificed / broad mindedly let women work. This is ridiculous. Every person born on this earth has right to live and right to earn his / her own livelihood.
What we need is equal opportunities for all and that too without hierarchy.
What we do not need is gender bias, class bias, caste bias, religious bias, creed bias.
“Say No to Unequal distribution of wealth and natural resources”.
IMG_2696

Dec 11, 2012

ஒலிக்காத இளவேனில் – கவிதை நூல் அறிமுகம்.




இதயம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்காக ஏங்குகிறது
தொண்டையோ ஒரு கத்திக்காக ஏங்குகிறது
ஆன்மாவோ பனிச்சுவர்களிடையே நடுங்குகிறது
அது ஒருபோதும் பனியிலிருந்து தப்ப முடியாது.

-      ம்யாக்கோவ்ஸ்கி


பனியை இங்கு கொலைக்களமாக ம்யாக்கோவ்ஸ்கி ஏன் விரித்தான். தற்சாவும் விருப்பதிற்கிணங்காத முறையில் நிகழும்போது கவிக்கு சொல்ல இறுதியாக என்ன வார்த்தைகள் மிஞ்சும், கவியின் இறுதியுணர்ச்சி எதைச் சொல்லும். கையகல இருப்புகளுக்காகவா இத்தனை அழித்தொழிப்பு. இங்கு உண்மையில் கவிதைகளுக்கு என்ன இடம் இருக்கப் போகிறது. கவிதை மானுடமனத்தை இயற்கையாக ஆண்டுகொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக கவிதை மட்டுமே இருக்கிறது ஆனால் போர்க்களத்தில் கவிதை பாடிக்கொண்டிருக்க முடியாது எனச் சொன்ன லூ சூனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளுவதில் பேராவலோடு இருக்கும் காலகட்டத்தில்தான் நாம் பிறந்திருக்கிறோம். வெற்றிபெற்றவர்களின் ஆங்காரக் கூச்சலிடையே தோல்வியுற்றவர்களின் கசந்த அழுகைகள் மறந்துவிடுகின்றன. அவைகள் முணுமுணுப்பது கவிதைகளின் வாயிலாகத்தான். அக்கவிதைகளை வரிகளை வைத்து எடைபோடமுடியாது என காலம் தன் இருப்பை வைத்துச் சொல்லுகிறது. அக்காலமோ அகால உணர்ச்சியை முன் வைக்கிறது. அகாலத்தின் துயர்களைச் சொல்லியபடி எனக்குத் தெரிந்து வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதிகள் என மரணத்துள் வாழ்வோம், பெயரிடாத நட்சத்திரங்கள், இப்பொழுது ஒலிக்காத இளவேனில். இம்மூன்று தொகுதிகளின் தலைப்பே வீழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவின் குரலாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்கெதிரே பறிபோகும் நிலமும் உடலும், உடல் சார் உளமும் கருகும்போது சொல்லமுடியாதவர்களின் குரலாய் ஒலிக்கிறது இக்கவிதைகள். உள்ளபடியே கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் கவிதைகள் கூறும் இலக்கண அல்லது இலக்கிய விதிகளை சற்றுப் புறந்தள்ளிவிட்டுத்தான் இத்தொகுதியை வாசிக்க முடியும். வாசிக்க வேண்டும் இது வேண்டுகோளே. அஞ்சிச் சாகும் மக்கள் இறக்கும்போது எழுதவோ சொல்லவோ ஒரு வார்த்தை எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில மரணங்கள் சில மனிதர்களுக்கு வாழ்வின் ஆசுவாசத்தை ஏன் தருகிறது என்ற மானுட உளவியலையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தீராத்துயர். மனிதர்களை மனித இருப்புக்களுக்காய் கொலை செய்வதை எந்த மன அமைப்பு விரும்புகிறது.

கவிதை என்பதை மனநிலை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா. மனம் திறந்து நமது உணர்வுகளை வாய்மொழியாக பேசுவதற்கும் அதை அச்சில் ஏற்றுவதற்குமான எந்த இடைவெளியில் உணர்வுகள் கவிதையாகின்றன. ஓசையும் ஓசையின்மையும் அதை சாத்தியப்படுத்துகிறதா? வடிவமா அல்லது கவிதை எழுதுதல் என்பது ஒரு அறிவார்த்த வெளிப்பாடு, ரசனை, படைப்பு கலை என்கிற பூடகங்கள் ஒருவரை கவிதை எழுதத் தூண்டுகிறதா.

மானுட வரலாற்றில் தோன்றிய முதல் கவிதை எதுவாக இருக்கும். காலம் காலமாக அது குழந்தை என்ற பதிலையே கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு சிறந்த ஓவியத்தை, கண்களை ஈர்க்கும் தோற்றம், சிறந்த கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் கட்டிடம், இவ்வளவு ஏன் ஒரு சிறந்த கதை, உரைநடை கூட மனம் கவரும் விதத்தில் இருந்தால் கவிதை போல் இருக்கிறது என்கிறோம்.

ஆக கவிதை என்பதற்கான விளக்கமாய் அது கொடுக்கும் அனுபவமே பிரதானமாய் இருக்கிறது வடிவமல்ல என்பது தெளிவு. அந்த அனுபவத்தை சொற்செறிவுடன், சொற்சிக்கனத்துடன் சொல்வதற்கேற்ற வடிவமாக உரைநடையல்லாத வடிவம் அமைகிறது. தற்போதைய காலகட்டத்தில் உரைநடைக் கவிதைகளும் வந்துள்ளன. கவிதை என்பது ரசனை சார்ந்த ஒன்றாக கருதப்பட்டாலும் ஒரு கவிதை உடனடியாக நம்மைக் கவர்வதும், மற்றொன்று பிடிக்காமல் போவதற்கும் அது தரும் அனுபவமே காரணமாக இருக்கிறது.

எதிலிருந்து கவிதை, அனுபவத்தைத் தருகிறது. நமது தேர்வு, விருப்பங்கள், இலட்சியத் தேடல்கள் அதன் உட்கூறுகளாக இருக்கின்றன. உ.ம் படைப்பை தூய இலக்கியம் என்று கருதுபவர்களின் பிரதானத் தேர்வாக காதல், காமம், உடலியல் இன்பம், மொழிப் பயன்பாடு ஆகியவை இருக்கிறது.  கூடுதலாக சமூகம் பற்றிய இவர்களது அக்கறை இரக்க பாவனை கொண்டதாக இருப்பதால் அத்தகைய வியாக்கியானங்களை, இரக்க பாவனைகளை சமூகக் கவிதையாகக் கருதும் போக்கு நிலவுகிறது. இந்த தேர்வானது அவநம்பிக்கை, அயர்ச்சி, இயலாமை, வெறுமை என்பதாக நீள்கிறது.

கலை மக்களைப் பேசவேண்டும் என்று கருதுவோரின் தேர்வாக அரசியல், சமூக மாற்றம் இவற்றை முன் வைக்கும் புரட்சிகர கவிதைகள், விடுதலை முழக்கங்கள், அழித்தொழிப்பிற்கெதிரான கலகக் குரல்கள் ஆகியவை பிரதானத் தேர்வாக இருக்கின்றது.  அதிகாரத்திற்கெதிரான விமர்சனங்கள், மாற்றம் குறித்த நம்பிக்கைகள், அணி சேர்தல் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் கவிதகள் இப்பிரிவினரை ஈர்க்கிறது. இங்கு ’நான்’ என்பது
‘நாம்’ என்பதாகவே அமைகிறது.

இந்த இரண்டு வகையினரின் கூட்டுக்கலவையாக இருக்கிறது பெண் கவிதைகள். பெண் உடல் என்பது சமூக உடலேயாகும். சமூகம் நிர்ணயித்திருக்கும் உடலையே அவள் சுமந்துகொண்டிருக்கிறாள். அவளது உடலே அவளுக்கு அந்நியமான ஒன்றாக கட்டமைக்கப்பட்ட சூழலில் அவள் முதலில் பிரதிகளில் இருந்து தன் உடலை மீட்பது பிரதானமாகிப் போனது. பெண் உடலை ரசிப்பதற்கான ரசனை அளவீடுகள் பெண் பற்றிய கவிதை எழுத்தலுக்கு ஒரு கோனார் உரையை கொடுத்திருக்கிறது. பெண்களுக்கு ஆண்கள் பற்றிய அத்தகைய உரைகள் வழங்கப்படவில்லை, அப்படி அவள் வர்ணிக்கும் உரிமையும் அவளுக்கு கிடையாது. அதையும் மீறி அவள் எழுதினால் அவள் ‘காம வெறி’ பிடித்தவள். சமூகம், அரசியல் வெளிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டிருக்க அவள் தனது பாடல்களாக, கவிதைகளாக தனது வெளியாக உடலைத் தேர்வு செய்யும் நிலையை வரலாறு ஏற்படுத்தியது. அதனோடு அவள் அன்றாட வாழ்வில் குடும்ப அமைப்பிற்குள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பொதுவெளியில் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள், தொடர் ஒடுக்குமுறைகள், போரினால் உடல் சிதைக்கப்படும் சூழல் ஆகியவை பெண் எழுதுவதற்கான தேவையை உருவாக்கியது.

இது வெறும் ரசனை வெளிப்பாடாகவோ, அறிவார்த்த பறைசாற்றலாகவோ, அந்நியப்பட்டுப்போகும் தூய இலக்கியமாகவோ இல்லாமல் சமூகப் பண்பாட்டுப் பிரதிபலிப்பாக இருப்பதற்கு அவளது அனுபவமே காரணம். இங்கு தேர்வு என்பது சாத்தியமில்லாமல், அனுபவமே பெண் எழுத்தை தீர்மானிக்கிறது. ஆக பெண்கள் இயல்பிலேயே புரட்சிகர எழுத்துக்களை, சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட எழுத்துக்களை படைக்கும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அடிப்படைத் தேவைகளுக்கும், தனது இருப்பிற்குமான போராட்டங்கள் நடத்தி சற்று முன்னேறிவிட்ட பிறகு மேட்டுக்குடி  பெண் உரிமை சிந்தனையானது உடலியல் இன்பங்களைப் பேசுதல், காமத் துயர்களைப் பேசுதல் விரகதாபம், பெண் சுய இன்பம் என்கிற அளவில் திசைதிருப்பப்பட்டுள்ளது. இதில் அவர்கள் காண மறுப்பதாக நான் காண்பது பெண் உடல் என்பது உடலியல் இன்பங்களில் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிறது என்பதே அது. பெண் உடல் என்பதை பெண் விடுதலை அரசியலாக மாற்றும் வல்லமை எழுத்திற்கு உண்டு.

பாலியல் பேதமின்றி அனைவரும் வர்க்க அடிப்படையில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறோம் என்பது உண்மை, ஆனால் இனவாத அடிப்படையில் ஒரு இனமானது தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு இலக்காகிய கொடூரம் நாம் வாழும் காலத்தில் இலங்கையில் அரங்கேறியது. சிங்கள இராணுவத்தினரால் பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டது அந்த இனவாதத்தின் உச்சபட்ச காட்டுமிராண்டித்தனம். அந்த மண்ணில் பிறந்து சித்திரவதைகளை அனுபவித்து மடிந்து போனவர்கள் ஆயிரக்கணக்கானோர், சிலர் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர், சிலர் அகதி முகாம்களில் மேலும் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, துரோகங்களை பலரும் தங்களின் படைப்புகள் வாயிலாக பதிவு செய்துள்ளனர். அநீதிகள், துரோகங்கள் மட்டுமல்லாது அவர்களின் வாழ்வுகளிலும் பல்வேறு உணர்ச்சிகள், அனுபங்கள், நிகழ்வுகள் இருக்கும் என்பதை கவிதை வடிவில் எடுத்துரைக்கும் மற்றோர் படைப்பு ஒலிக்காத இளவேனில்.

இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு பெரும் கொடை அந்த மண் தனது மொழியை பெரும் வளத்துடன், அழித்தொழிப்புகளிடையே காத்து வந்திருக்கிறது என்பதுதான். மொழி அழிக்கப்பட்டால் இனமே அழிந்து போகும் என்பதை உலகறியும். மொழியின் அடிப்படையில் அழிக்கப்படும் தங்கள் உயிரையும், உடமையையும் காக்க நடந்துவரும் போராட்டங்கள் துயர் மிகுந்த பாடல். இந்த மொழிப்போரின் கோரப் பிடிகளிலிருந்து தப்பித்து புலம் பெயர்ந்து தங்கள் தாய் மண்ணை சுதந்திரமாகக் காவும் அந்த ஒரு கணத்திற்காக பரிதவிக்கும் உள்ளங்களின் வடிகாலாக விட்டுவைக்கப்பட்டிருப்பது எழுத்து மட்டுமே என்றால் அது மிகையல்ல.

தலித் உடலும், பெண் உடலும் ஒன்று என்பார்கள். ஆனால் போர்களினால் அலைகழிக்கப்படும் உடல்கள் மீது நிகழும் ஒடுக்குமுறை மற்ற எல்லாவற்றையும் விட முற்றிலும் மாறுபட்டது.  குறிப்பாக பெண் உடல்கள். சிறுவர்களின் உடல்கள். எல்லாப் போர்களிலும் முதலில் சிதைவுறுவது பெண் உடல்களே. ஏகாதிபத்திய பீரங்கிகள் நிலங்களைக் குறிவைத்து தொடுக்கும் குண்டுகளையும் விட மிகவும் கொடூரமான குண்டுகள் இராணுவத்தினரின் குறிகள். அவைகள் ப்ளாஸ்டிக் குறிகள். அந்தக் குறிகள் துளைப்பது யோனிகளை அல்ல, ஒரு தேசத்தின், ஒரு இனத்தின் தன்மானத்தை. ஒவ்வொரு போரும் இதையே உணர்த்துகிறது.

ஒலிக்காத இளவேனில் 17 புலம்பெயர் இலங்கைத் தமிழ் பெண்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு. தான்யா, பிரதீபா கனகா, தில்லைநாதன் ஆகியோர் கவிதைகளை தொகுத்துள்ளனர். வடலி பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

எந்த ஒரு படைப்பும் ஆதரமாய் ஒரு தேவையைக் கொண்டிருக்கிறது. ஒலிக்காத இளவேனிலுக்கு தம்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துன்பியலையும், தம் மண்ணில் நசுக்கப்படும் குரல்வளைகளுக்கு பதில் குரலாகவும் இருப்பதே அத்தேவை.

ஒலிக்காத இளவேனில் என தலைப்பு தொடங்கி உள்ளே கவிகள் எழுதியிருக்கும் கவிதைகளின் பெரும்பாலான தலைப்புகள் அனைத்தும் நிச்சயமற்ற வாழ்வின் அலைச்சல்களைக் கதறியபடியே சொல்கிறது,

 நிச்சயமற்ற வாழ்விற்கு பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை
என்று ரேவதி பேசுகையில்
எவருக்காகவும் காத்திருப்பதில்லை- காலம்
விரைந்துகொண்டேயிருக்கிறது

என தன் வரிகளை கனத்த இயலாமையுடன் முன் வைக்கிறார் நிவேதா

கனவுகள் மாத்திரம்
காற்றில் அலைகின்றன
என் கவிதைகளைப் போல என தன்னையே முன் வைத்து நகர்ந்து
ஏதோ ஒரு
காய்கறிக் கடையில்
எங்கேனும் ஒரு
வீதி மருங்கில்
எப்போதாவது தொலைபேசியில்
முடிவற்ற
துர்வாடையாய்
நம் தலைக்கு மேல்
நிரம்பி வழியும்
நரகங்கள்
பற்றிப் பேசலாம்


இத்தகைய எளிய வரிகள் விதிக்கப்படாத சாவைத் தலைக்குமேல் சுமந்து கொண்டு அன்றாட நரகத்தைப் பேச அழைக்கின்றன. சாவைப் போலொரு பேச்சென இக்கவிதையைச் சொல்லலாம்.

திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி

என உலகியங்கும் கொடூரத்தை முன்வைத்து நகர்ந்திருக்கிறார். ஆழியாளின் கவிதை தொடர்ந்து பிணங்களின் தோற்றவுருக்களை விவரித்து அவைகள் பலிதீர்க்கப்பட்டதற்கான கருத்தியல்களை எழுதிச் செல்லுகிறார். முக்கியமாய்

மரணவெளியில் மறைக்கப்பட்டு
வாழ்விக்கப்படும் பெண்கள் நாங்கள்
எனும் இரு வரிகள் தரும் துயரம் மீளமுடியாத உணர்ச்சியைத் தருகிறது.

இத்தொகுதியில் எழுதியிருக்கும் தமிழினி, சரண்யா,வசந்தி கவிதைகள் இத்தொகுதிக்குள் ஒலிக்கும் துர்மரணத்தை முன் வைத்தே பேசுகின்றன. புலம்பல்கள் கவிதையா எனக் கேட்டால் அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காலத்தையே சுட்டிக்காட்டுப் பேசுகிறது என்பேன். சரண்யா எழுதியபடி..

ஆண்களால் கொல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு

இவ்வரிகள் அதற்கு சாட்சியாக்குகின்றன.

மொனிக்கா, துர்க்கா, மைதிலி இவர்களும் தங்களது இயலாமைகளை கவிதைகளென முன்வைத்திருக்கிறார்கள்.


நீங்கள் எச்சரித்தது போலவும் இல்லாமலும்
ஆனாலும் வாழ்வேன்!
என் எல்லாக்
காயங்களிலிருந்தும்
உடைவுகளிலிருந்தும்
நோவுகளிலிருந்தும்
ஆத்திரங்களிலிருந்தும்
ஏமாற்றங்களிலிருந்தும்…

என வரும் வரிகள் நேரடியாக ஆள்வோரின் ஆணைகளுக்கு தங்கள் பதில்களைத் தந்துவிடுகின்றன. இந்திரா, தர்சினி, தான்யா, பிரதீபா,கற்பகம் யசோதரா,ரெஜி,ஆகியோரின் கவிதைகளும் சாவின் விரும்பவியலா மணத்தைக் கடத்துகின்றன.

கவிதை புரியாமல் போய்விடுமோ என்கிற ஒரு அகப் போராட்டத்தை கவிஞர்கள் நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்கள். அதனால் கவிதை முடிந்த பின்பு சில பின் வரிகளை உடைத்து போட்டு அதை விளக்கு முயற்சி நடைபெறும். அதற்கு ஒரு உதாரணம்:

அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள் நிவேதிதாவின் கவிதை

.............
.................

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..........
கழுத்தை நெரிக்கும்
“ஆம்பிளை’த்தனங்களைப் பற்றி
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி...
இன்னமும்,அந்தரத்தில் அலைவு7ண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி....

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..........

நிவேதாவின் இந்த வரிகளைலேயே கவிதை முடிந்து விடுவதாக நான் கருதுகிறேன். முலைகள் என்ன பேச வேண்டுமோ அதை வாசகர் மனம் உணரும், பின்வரும் விளக்கங்கள் கவிதை அனுபவத்தை சற்று தொந்தரவு செய்கிறது. வாசகர் அடையக்கூடிய இதுபோன்ற சிறு அனுபவக் குறிப்புகளுக்கப்பால் ஆணாதிக்கத்தை கூறு போட்டு எடுத்துரைப்பதில் இத்தொகுதியின்  அனைத்து கவிஞர்களின் கவிதை மொழியும், படிமங்களும் குறிப்பிடத்தக்கவை.

தொகுதி முழுக்க இறைஞ்சும் வார்த்தைகள், தசைகளை இறுக்கும் வார்த்தைகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. தொகுதியிலுள்ள பெயர்களை எடுத்துவிட்டால் அனைத்தும் ஒரே கவிஞருடையதோ எனத் தோன்றும் அளவிற்கு அது நம்மைக் கொண்டுவிடுகிறது. போரின் வாதையைச் சொல்ல வந்த கவிதைகளில் இலக்கிய நயம் தேடிப் பயணிப்பதில் எனக்கு எப்பொழுதும் உவப்பில்லை. எல்லோருக்கும் இழப்பில் சொல்ல இருக்கும் ஒரு சொல்லை கவிஞர்கள் மட்டும்தான் எழுதவேண்டுமென்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஒரு ஆன்மாவுக்கு கல்வியால் ஆகப்போவது ஏதுமில்லை. ஏனெனில் அனைத்தும் பட்டித்தவர்களே ஆயுதத்தைத் தூக்குவதோடு அதற்குப் போதுமான கருத்தியலையும் எழுதுகிறார்கள். ஈவிரக்கமற்ற முதலாளிக்கு கவிதைகளால் ஒரு பயனும் இல்லை. பணத்தையும் பேரத்தையும் தவிர ஆள்வோர்களுக்கு கவிதையால் என்ன பயன். அவர்கள் நம்மை எழுத வைக்கிறார்கள். எழுத்து மாற்றத்தைக் கொண்டுவரும். அதற்கு கவிதைகள் சாட்சி. அல்லற்றபட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ..............

(இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை)

Dec 2, 2012

பெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெஸ்


நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்களில் நடந்திருக்கும் ஆதிக்க வெறியாட்டத்தில் சாதிப் பிரச்சனை இருக்கிற்தா – இருக்கிறது; வர்க்கப் பிரச்சனை இருக்கிறதா – இருக்கிரது; இவைகளோடு மற்றுமொரு முக்கியப் பிரச்சனை ஒன்றிருக்கிறது – அதுதான் பெண் உரிமை பிரச்சனை. (The question of women’s rights). நிலப்பிரபுத்துவ அமைப்பானது உழைப்பைச் சுரண்ட அடிமைக் கட்டமைப்புகளை உருவாக்கியது, சத்ரிய பார்ப்பனியக் கூட்டு அதை மனுதர்மச் சட்டமாக்கியது. அந்த சட்டங்களைப் பெண்ணின் கருப்பையில் திணித்தது. சாதிய பற்றாளர்கள், சாதியக் கட்சிகள் இந்த ஆணாதிக்க பார்ப்பனிய இந்துத்துவ சாதியச் சட்டங்களை தங்கள் பொருளாதார, சமூக, அரசியல் அதிகார ஆதாயக் காரணிகளுக்காக அப்படியே பிடித்துக் கொள்கின்றனர். நடைமுறைப்படுத்துகின்றனர்.
பெரியார் இருந்திருந்தால் இந்த சாதிச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவ்வளவு தைரியமாக சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பேசியிருக்க முடியுமா?
ஹிந்து கோட்பில் மூலம் அம்பேத்கர் முன் மொழிந்த உரிமைகளுல் ஓர் முக்கியமான உரிமை பெண்கள் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான், அவ்வரைவுக்கு ஆதரவு கிடைக்காமல் பதவியையே துறந்தார் அம்பேத்கர். சாதி மறுப்பு திருமணத்தை எதிர்ப்பதென்பது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைக்கெதிராகப் பேசுவதென்பதாகும்.
பண்டைய தாய்வழிச் சமூகம் சிதைந்து தந்தைவழி ஆணாதிக்க சமூகம் மோலோங்கியபோது நிலப்பிரபுத்துவ அமைப்புக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட சட்டங்கள் பெரும்பாலும் பெண்ணை அடக்குவதன் மூலம் ஒரு சாதியை, சமூகத்தை, இனக்குழுவை, இனத்தை அடக்கி ஆள திட்டமிட்டது. தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக இன்றும் அது பல சாதிக் கட்சிகளால் பின்பற்றப்படுகிறது.
ஊழல் செய்வதில்கூட பல நவீனங்களை உள்வாங்கிக்கொண்ட ஆதிக்க சாதி அரசியல் கட்சிகள் சாதி விசயத்தில் மட்டும் இன்னும் ஆண்டானைப்போல நடந்து கொள்வது பிற்போக்குத்தனமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டிவிட்டர், முக நூல் போன்ற இணையதளங்களில் வைக்கபடும் கருத்திற்கு பாய்ந்து வந்து கைது செய்யும் வல்லமை படைத்த அரசுகள் வெளிப்படையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யத்தக்க கருத்துக்களைப் பேசிவரும் காடு வெட்டி குரு, பா.ம.க நிறுவனர் இராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பழ. கருப்பையா போன்ற சாதியக் கட்சிகள், சாதிய பற்றாளர்களை ஏன் இந்த அரசு இன்னும் கைது செய்யவில்லை.
சாதி வெறியில் வீடுகளை எரிப்பது, சூரையாடுவது போன்ற வன்கொடுமைகளை திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சமூக உணர்வு ஏற்பட்ட பின்னர் தான் இத்தகைய கொடூரங்களுக்குப் பின் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் விளங்கியது.
மீசையை முறுக்கி, தோளை விடைத்துக் கொண்டு சாதிக் கொடுமைக்கெதிராக பொங்கு எழுந்த அந்த ‘ஆண் கதாநாயக வீரர்கள்’ எவரேனும் இந்த ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கெஹ்டிராக ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிட்டிருக்கிறார்களா? ‘தாய் குலம், தங்கைக் குலம்’ இப்படி ஒடுக்கப்படுவதை வேடிக்கப் பார்க்கும் இவர்களில் சிலர் தமிழ், தமிழ் தேசியம் என்றால் மட்டும் களத்தில் இறங்குகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழர்’ என்றால் வெறும் ஆண்கள் மட்டும்தான் போலும்.
சின்மயி விவகாரத்தில் ஒரு பேட்டியில், உரையாடலின் ஒரு தொடர்ச்சியாக அவரது தாயிடம் அப்படியே உங்கள் மகளைப் ஆபாசப் பாடல் பாடுவதையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்றேன். அதைப் பிடித்துக் கொண்டு குஷ்புவிடம் சின்மயி முறையிட, இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான பெண்களும் இந்த காலத்தில் இருக்கிறார்களா? அவருக்கு ஒரு கேக்கைப் பரிசளித்து தூக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வேண்டும் என்றார். இந்த பெண் உரிமை பாதுகாவலர்கள் சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு என்பதில் அடிப்படையில் ஒடுக்கப்படுவது பெண்ணின் உரிமை என்பதை அறியவில்லையா? கூடுதலாக அதைக் காரணமாக வைத்து சாதிய ஆதிக்கப் போக்கில் தலித் கிராமங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதி வெறியாட்டம் குறித்து இவர்கள் ஏதாவது கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்களா?
இந்த சினிமாக்காரர்கள் சிலரின் கபட நாடகங்களையும், ஆணாதிக்க மனப்பான்மையும் தெரியாமல் உழைக்கும் வர்க்கமானது மீண்டும் மீண்டும் இவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் பெண் விடுதலை பற்றியும் கவலைப்படுவதில்லை, சமூக விடுதலைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
ஆக தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் இந்த ஆதிக்க சாதி, இடைநிலை சாதிக் கட்சிகளில் பெண் உரிமை, பெண் விடுதலைச் சிந்தனை இவைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட தலைமைகள் இருக்கின்றனவா என்பதே இப்போது இந்த நிகழ்வு நம் முன் வைக்கும் மிகப் பெரிய கேள்வி.
பொதுவாக அரசியல், சாதி, இன உணர்வு, மொழி உணர்வு என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தம் நலன் ஆண் நலனே. இங்கு கூடியிருக்கும் தோழர்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் இந்த ஆணாதிக்க அரசியலை விடுத்து பெண் உரிமையை நிலைநாட்டுவதின் மூலம் சாதி ஒழிப்பை மேற்கொள்வதின் அவசியத்தை உணர்ந்தவர்கள் என்று நம்புகிறேன்.
பெண் விடுதலையும், சாதி ஒழிப்பும் பின்னிப் பிணைந்தவை – உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம், பெண் உரிமைகளைக் காக்கும் அறிவூட்டுவோம்..
சாதி-வர்க்க-பாலின வேறுபாடுகளைக் களைய ஒன்றுபட்டு போராடுவோம்.
30.11.2012 அன்று சென்னை மெரியல் ஹால் அருகில் தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆற்றிய உரை (சறிய திருத்தங்களுடன்).
http://saektamilnadu.wordpress.com/

Nov 22, 2012

ஆர்பாட்ட தேதி அறிவிப்பு


தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்:
தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்:
நாள்: நவம்பர் 30,2012
இடம்: மெமோரியல் ஹால்
நேரம்: மாலை 4 முதல் 6 மணி
அனைத்து உழைக்கும் மக்களே! சாதி மறுப்பாளர்களே! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்.

Modern Era Male Dominance – in CMPA


Page:9
Universal dominance of men in complex societies forces us to speak for empowering women. Till the end of nineteenth century, women have never occupied a position of higher status or greater political power than men in any society, anywhere, anytime. And, all the religious and mythological systems contain fictions to explain and justify the gender bias. Male domination has always been inherently social and it has not depended on individual characteristics! In India, The Indecent Representation of Women (Prohibition) Act, 1986, was enacted with the specific objective of prohibiting indecent representation of women through advertisement, publication, writing and painting or in any other manner.
Due to technology developments, internet, satellite based communication, audio-visual messaging etc constituted a new platform for doing disgrace to women. Hence, the Union Cabinet on October 11, 2012, made forwarding of pornographic multimedia messages from phones and internet liable for stringent punishment – imprisonment up to seven years with a fine upto Rs 5 lakhs. After making the amendments based on the recommendations of National Commission for Women, the Union Government stated “These amendments seek to ensure that more effective protection is provided against indecent representation of women by covering newer forms of communication like internet, multimedia messaging beyond the print and audio-visual media. This would aid in addressing the problem of increased objectification of women, thereby ensuring dignity of women”. More details are available at: www.ncw.nic.in/frmReportLaws04.aspx. In the given social structure, it is necessary for us to analyze every major social condition or process that has maintained women’s subordination at all levels.
Nirmala Kotravai, Founder, MASES – Movement Against Sexual Exploitation and Sexism, clearly emphasizes “In the name of radicalism and freedom, the male dominant ideological sphere of the modern era seems to treat women only as a product of sexual desire. Mass Media plays a very important role in ‘objectification’ of women.  The sexist (characterizing based on sex classification as male and female) ideology in mass media is reflecting in advertisements, item songs in films and in the gender roles. Few magazines who identify themselves as ‘political weeklies’ also engage themselves in this sexual exploitation by publishing ‘exposing’ pictures of actresses in the middle pages or cover pages. The term modernization seem to give justification for such male benefiting, male readership targeted exploitation of women’s body.  For the sake of ‘money’ Men objectify, women lend themselves to it, without realizing that it demeans the ‘self respect’ of women, it denigrates womanhood propagating that a woman is all about ‘flesh’ and ‘only flesh’.  It is proving to be set back in emancipation of woman. These men and women have to realize that while the male dominant ideological sphere grants them freedom to expose does it empower the women in decision making? Does it empower them to enter politics; does it honor the 33% reservation? Do women have rights over their reproductive capacity?  Tell a slave, he is a slave he will revolt, said Dr Ambedkar. Woman, modernization is converting you a modern slave, realize and revolt”. Further, Nirmala Kotravai clearly affirms “While we say Male dominance, one needs to understand that it is not about the dominance of an Individual Male but it is the ‘ideological’ structure which prevails in the society. This means that it is about the social structure built upon at the interest of Men assigning superiority to Men and propagates that Men are stronger and Women are weaker. There is no biological proof for such classification. Difference in characteristics is to be considered different and not as weaker”.

Nov 20, 2012

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !


saek/TN/02/2012
தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !
*  தமிழக அரசே!
  • நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான சாதி வெறியர்களின் சொத்துக்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கு.
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும், சாதி வெறியைத் தூண்டும் பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளை, அமைப்புகளை தடை செய்.
*  தமிழக மக்களே!
  • அரசின் ஆதிக்க சாதி கூட்டிற்கு எதிராகவும் தர்மபுரி சாதி வெறி ஆட்டத்திற்கு துணை நின்ற உளவுத் துறை – காவல் துறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அணி திரள்வோம்.
  • அனைத்து உழைக்கும் மக்களே! சாதி மறுப்பாளர்களே! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்
இவண்,
சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம், தமிழ்நாடு
தொடர்புக்கு – jmacd.tamilnadu@gmail.com
ஒருங்கிணைப்பாளர்கள்:
1.     கி. பழனி – மக்கள் சனநாயக குடியரசு கட்சி – 9176264717
2.     தி. மோகன் – 984069511
3.     கோ. நீலமேகம் – புரட்சியாளர் அம்பேத்கார் விழிப்புணர்வு பாசறை – 9710015123
4.     கொற்றவை – மாசெஸ் – kotravaiwrites@gmail.com
5.     அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சி கழகம் – 9047521117
6.     பி.சி சண்முகசுந்தரம் – சி.பி.ஐ (எம்.எல்) – 971077547
7.     சாலமன் – இந்திய மக்கள் முன்னணி – 9444539376
தொடர்புடைய சுட்டிகள்
http://www.thehindu.com/news/states/tamil-nadu/dharmapuri-incident-serious-hc/article4082173.ece
http://articles.timesofindia.indiatimes.com/2012-11-08/coimbatore/34993610_1_dalit-boy-dalit-houses-caste-violence
http://thealternative.in/inclusivity/dharmpuris-caset-blackened-walls/
http://newindianexpress.com/states/tamil_nadu/article1342654.ece
http://www.firstpost.com/politics/dharmapuri-violence-why-dalits-are-unsafe-in-dravidian-tamil-nadu-522135.html
http://tamil.oneindia.in/news/2012/11/12/tamilnadu-dharmapuri-inspector-suspended-making-night-rounds-164561.html
http://amarx.org/?p=666
Source: http://saektamilnadu.wordpress.com/2012/11/20/23/

Nov 19, 2012

"ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்"


"ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்" என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஒன்றை சேவ்தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் நடத்தியது.

17-11-2012 இலயோலா கல்லூரியில் நடந்த இக்கூட்டத்தில் FACEBOOK பதிவுகள் தொடர்பான கருத்துரையை நிகழ்த்தினார் நிர்மலா கொற்றவை.

ஒளிப்பதிவு: பிரபாகரன் அழகர்சாமி

Nov 15, 2012

பெண்களும் சுற்றுலாவும் – ஒரு பெண்ணியப் பார்வை.




பெண்களுக்கு வாளைக் காட்டிலும் பேனா
ஒரு முக்கிய அனுகூலத்தைக் கொண்டதாயிருக்கிறது.

                                                                           -       ரோஸ்லிண்ட் மைல்ஸ்

சுற்றுலா  என்பது மனதிற்கு மகிழ்வைத்  தரக்கூடிய ஒன்று, குடும்பத்தோடு  நண்பர்களோடு கூடிச் சுற்றி இன்புற்று களித்திருக்க ஒரு தருணமாக சுற்றுலா அமைகிறது.  சுற்றுலாக்களில் பல் வேறு வகைக்கள் உள்ளன, பண்டைய வரலாற்றுச் சின்னங்களை மட்டுமே காண்பதற்கான் பாரம்பரியச் சுற்றுலா (Heritage tour), கோயில் தளங்களுக்கு செல்லும் பக்திச் சுற்றுலா (pilgrimage tour), காடுகளுக்குள் பயணித்து விலங்குகளைக் காணும் சுற்றுலா (wild life tour), மலையேற்றம், பங்கி  ஜம்பிங் போன்ற சாகசங்களுக்கான சுற்றுலா (adventure tour) என்று மனமகிழ் சுற்றுலாக்கள் நிறைய உள்ளன.

உலகமயமாக்கலின்  விளைவாக மனமகிழ் சுற்றுலாக்களுக்கப்பால் மூன்றாம் உலக நாடுகளைக் குறி வைத்து இப்போது மருத்துவ சுற்றுலா, தொழிற்சாலை சுற்றுலா எனும் பெயரால் வணிக சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீப காலங்களில் எகோ-டூரிசம் எனும் பெயரில் இயற்கையை மாசுபடுத்தாத முறைகளில் அமைக்கப்பட்ட சுற்றுலா தளங்கள், பயண முறைகள் எனும் சுற்றுலாக்கள் தோன்றியுள்ளன.  உண்மையில் அது அப்படித்தான என்பதைப் பின்னர் பார்ப்போம். 

சுற்றுலாவுக்கும்  பெண்களுக்குமான தொடர்பு  எத்தகையது? வேலை வாய்ப்பு, மேலாண்மை, புதிய திட்டங்கள் இவைகளில் பெண்கள் இடம் பெறும் விகிதாச்சாரப் பிரச்சனையோடு இதில் பெண்களின் பங்கு  முடிந்து விடுகிறதா? மேற்சொன்னவற்றை சிறப்பாக செய்வதற்கான கல்வியை  கற்று தேர்ந்து வேலை வாய்ப்பைப் பெற்று பணி செய்து பதிவு  உயர்வுகள் பெற்று, விருதுகள்  பெற்று பரிமளிப்பதோடு அது  நிறைவடைகிறதா.

பொதுவாக, நமது கல்வி முறை நமக்கு தகவல்களை வழங்குகிறது ஆனால் அறிவை  அல்ல, சமூக பொறுப்புணர்வை  வளர்த்தெடுக்கும் அறிவை  அவை வழங்குவதில்லை, குறிப்பாக  ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படும் மக்கள் சமூகத்திற்கான மேம்பாடு குறித்து அவை பேசுவதேயில்லை. அது வழங்கும் சமூக சிந்தனையானது கரிசனம். இரக்கப் படுவதற்கும் பிச்சை போடுவதற்கும் சொல்லித் தரும் கல்வி என்றால் அது மிகையல்ல. அதன் விளைவு அங்கலாய்ப்பு, சமரசம். இப்படிபட்ட பொது கட்டமைப்பிலிருந்து விடுபட்டு சமூகத்தின் யதார்த்த நிலைகளை ஆய்ந்து, குறைபாடுகளைக் களைந்து மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான உண்மைக்கல்வி வழங்கும் கல்விக் கூடங்கள் வெகு சில.

சமூக  யதார்த்தங்களை பல்வேறு  கண்ணோட்டங்களிலிருந்து  ஆய்வு செய்யலாம். நிலவும்  கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு  செய்வதற்கும், பெண்ணியக்  கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு  செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள்  என்ன.  பால் அடையாளத்தின் அடிப்படையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை திறனாய்ந்து, பெண் விடுதலைச் சிந்தனைக்கு வழிவகுப்பது, பெண்களை ஒரு இயக்கமாக ஒருங்கிணைப்பது என்று பெண்ணியத்தைப் புரிநிது கொள்ளலாம். சமூக நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பெண்ணுக்கு சம உரிமை கிடைக்கிறது, அவளுக்கான பாத்திரம் என்ன, இடம் என்ன எனும் கேள்விகளின் ஊடாக ஒரு நிகழ்வினால் பெண் பயனடைகிறாளா, சுரண்டப்படுகிறாளா என்பதை கண்டறிவது மிக மிக அவசியம். ஏனென்றால் பெண்ணை ஒடுக்குவதன் மூலம், பெண்ணுக்கு உரிமையை மறுப்பதன் மூலம் பின் தங்கியிருக்கப்போவது பெண் மட்டுமல்ல, சமூகமும் தான். அந்த விடுதலைப் போராட்டத்தில் உயர்வுவாதத்தை வைக்காமல், சுதந்திரம் என்பதை தனித்த ஒரு பொருளாக காணாமல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக பங்களிக்கும் வகையில் பெண் இனத்தை மீட்டு, அவளையும் இணைத்து, சமத்துவதற்காக போராடுவதும்சாதி, மதம், பால், இனம், உடல், அறிவு என்ற பாகுபாடில்லாத  சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான  முயற்சியை எடுப்பது பெண்ணியம்.

இக்கண்ணோட்டத்தின் படி நாம் எவ்வாறு சுற்றுலாவை அணுகுவது.  சுற்றுலா என்பதில் அடிப்படையாக இருப்பது நிலம். கேளிக்கை எனும் தொழிற்முறையாக இருந்தாலும் சரி, மருத்துவ சுற்றுலாவாக இருந்தாலும் சரி. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்களின் உதவியோடு நவீன காலனியாக்க செயல் திட்டமாக மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கும் ஒரு ஏற்பாடே சுற்றுலா.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குட்டலூர்  இதற்கு சிறந்த உதாரணம். புலி பாதுகாப்பு எனும் பெயரில்  உலக வங்கியின் பெரும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இதனால் ஆதிவாசிகளும், குறு விவசாயிகளும் நிலங்களை இழந்து நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் எகோ டூரிசம்எனும் பெயரில் இந்த காடுகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 1 புலிகளின் பெயரால், பசுமை திட்டம்  எனும் பெயரால் நிலத்தின் பூர்வ குடிகளை அப்புறப்படுத்தி வாழ்வாதாரத்தை குலைக்கும் ஒரு செயலுக்கு பச்சை சாயம் பூசும் பெயர் எகோ டூரிசம்’.  இதில் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். நிலத்துக்கும் பெண்ணுக்குமான தொடர்பு மிக நெருக்கமானது, ஆனால் நிலத்திற்கு இருக்கும் மதிப்பு பெண்ணுக்கு இருப்பதில்லை. விவசாயமும் அழிந்து வருகிறது. அதை கண்டுபிடித்த பெண்ணும் அழிக்கப் படுகிறாள். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். வாழ்வாதார நிலங்கள் பறிக்கப்பட்டு, வேலை வாய்ப்பும் கிடைக்காத சூழல் ஏற்படும் போது அங்கு இறையாவது பெண்கள், கூடுதலாக குழந்தைகள். ஆம் அவள் விலை மகளாகிறாள். எகோ டூரிசம் மட்டும் தான் இதை செய்கிறதென்றில்லை. ஆசியா முழுமையிலும் (உலகம் முழுமையிலும் என்று சொல்லலாம்) பாலியல் தொழில் என்பது சுற்றுலா தளங்கள் மூலம் ஊற்றி வளர்க்கப்படுகிறது. அதற்கு செக்ஸ் டூரிசம்என்றும் பெயர் இருக்கிறது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளே முதலில் இந்த சுற்றுலாவை அறிமுகப்படுத்தியது. பாலியல் தொழிலை நாம் ஒழுக்கவாதத்தின் அடிப்படையில் மறுக்கவில்லை, சுதந்திர தேர்வென்பது வேறு, தொழிற்முறை என்பது வேறு.  மனிதர் என்ற நிலையிலிருந்து தரவிறக்கம் செய்து அவர்கள் பண்டங்களாக்கப் படுகின்றனர். 2தொழில் என்று வந்தாலே அங்கு சுரண்டல், தரகு, அடிமை முறை எல்லாம் வந்து விடுகிறது.  பாலியல் தொழிலுக்காக பல்லாயிரம் கணக்கான பெண்கள் கடத்தப்படுகிறார்கள்.

நம்படியாத தகவல் ஒன்று உள்ளது. சுற்றுலா பயணி சற்று நீண்ட காலம்  தங்குபவராய் இருந்தால்  ’திருமணம்எனும் பெயரில்  இந்த சதை வியாபாரத்தை குறைந்த  விலைக்கு பேசி முடிக்கின்றனர். அத்தகைய ஆண்களுக்கு அவர் ஊரிலேயே திருமணம் முடிந்திருக்கும். எத்தனையோ பெண்கள் இதனால் கருவுற்று கணவனோடு செல்லவும்  முடியாமல் , துன்புறுகின்றனர். 3

இதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது  குழந்தைகள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் சிறுவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில் கோவளம், கோவா பகுதிகள் இப்பாதக செயல்களில் ஈடுபடுகின்றன. ஃபீடோஃபில்  க்ளப்புகள்’ அமைத்து சர்வதேச  இணைப்பு இதில் தீவிரமாக ஈடுபடுகிறது.  4

அதேபோல் சுற்றுலாத் தளங்களில் சூதாட்டம், கஞ்சா, குடி ஆகியவை கோலோச்சுகிறது. இப்பழக்கங்களாலும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள், குழந்தைகள். பாலியல் நோய் தொற்று ஏற்படுகிறது. சில வேளைகளில் அது உயிர் பறிக்கும் ஒன்றாக வடிவம் எடுக்கிறது.  ஒவ்வொரு நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுற்றுலா தளங்களில் பாலியல் தொழிலின் வடிவங்கள் மாறுபடுகின்றன நடன பார்கள், நடன காட்சிகள், நிர்வாண கிளப்புகள், பாலியல் உறவு கொள்வதை கன்னாடி வழியாக காண்பதற்கான இடங்கள் என்று செயல்பட்டு வருகின்றன. பாலே நடனம், பெல்லி நடனம் எனும் பெயரால் பெண்கள் பாலியல் பண்டமாக்கப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் பணம் கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் அதிகம். 

பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல்  சுரண்டல் மட்டுமல்லாது உழைப்பு  சுரண்டலும் சுற்றுலா சுற்றுலாத்தளப் பணிகளில் நடைபெறுகிறது. இத்துறையில் பெண்களே அதிகம் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் பெரும்பாலும் உடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. அதில் ஒரு வகை அவளது வெளித் தோற்றத்தைக் கொண்டு ஆண் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது, மகிழ்விப்பது என்பதாகும். இரண்டாவது சுத்தம் செய்யும் பணி. இந்த சுத்தம் செய்யும் பணியில் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்களையே ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தலும் நடைபெறுகிறது. ஆண்களை விட பெண்கள் இப்பணிகளில் 10 முதல் 15 சதவிகிதம் குறைவான சம்பளத்தையே பெருவதாக சுற்றுலாவில் பெண்கள் எனும் உலக அறிக்கைச் சொல்கிறது.  லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளுக்கான ஐ.நா பெண் இயக்குனர் கிளாடிஸ் அக்கோஸ்டா சுற்றுலாத் துறையில் பெண்களின் பங்களிப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது என்கிறார். மேலும் கரிபியன் தீவில், 84% சம்பளமற்ற குடும்ப உழைப்பு பெண்களால் மட்டுமே செலுத்தப்படுகிறது. சுற்றுலாவில் பாலியல் சமத்துவத்தை ஊக்குவிக்க இவ்விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.என்கிறார்.

பாலியல் சுரண்டல்கள், உழைப்புச் சுரண்டல்கள் ஒருபுறம் இருக்க நாம் ஏற்கணவே சொன்னது போல் சுற்றுலாவின் பெயரால் நிலச் சுரண்டல் குறித்து காண்போம்.

மிகவும் சமீபத்திய உதாரணம் –  முல்லைப் பெரியார் அணை பிரச்சனை: அணை பலவீனமாகிவிட்டது, நில  அதிர்வு ஏற்பட்டால் இடிந்து விழும் என்று கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்களுக்குப் பின் இருப்பது நிலச் சுரண்டல், தொழிற்முறை முதலீடுகள். அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில முதலாளிகள் ரிசார்ட்அமைப்பதற்காக நிலங்களை வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பதின் மூலம் இரண்டு விதமான ஆதாயங்கள் குறிவைக்கப்படுகின்றன. 1. ரிசார்ட்டுகளைக் கட்டித் தொழில் செய்வது. [ரிசார்ட்டுகள் பாலியல் தொழிற்கூடமே). 2. வருடம் பூராவும் தொடர்ந்து வர்த்தக ரீதியில், மானியத்துடன் மின்சாரம் தயாரித்து லாபமடைவது. தமிழ்நாட்டிற்கு அப்பாலும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

பெரும்பாலும்  சுற்றுலாத் தளங்கள் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. நகர வாழ்வில் தன்னைத் தொலைத்தவர்களுக்கு, நீர் என்பதை குப்பிகளில் காண்பவர்களுக்கு அமைதியான, நீர் பொழியும் தளங்கள் கவர்ச்சிக்குறியவை. ஆகையால் இவ்விடங்களைக் குறி வைத்து கடலோரப் பகுதிகள் சூறையாடப்படுகின்றன. கடலோரப் பகுதியில் வாழும் மீனவ மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். படகு சுற்றுலா எனும் பெயரில் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் படகு உலா நடைபெறுகிறது. இதிலிருந்து வெளியேறும் டீசல் மாசு கடல் வளத்தை, நீர் வளத்தை, காடுகளின் வளத்தை சிதைப்பதை நாம் கவனத்தில் கொள்கிறோமா. ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் தொங்கும், ஆனால் இவ்விடங்களில் வீசப்படும் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் தானே செல்கிறது. கடல் வளம் பாதிக்கும் போது மீன் பிடி தொழிலும் பாதிக்கப்படுகிறது.

மனமகிழ் சுற்றுலா மட்டுமல்லாது, தொழிற்முறை சுற்றுலா திட்டங்களும் கடல் பகுதியையே மையமாகக் கொள்கின்றன. அந்நிய பெருமுதலாளிகளுக்காக  இங்கு சிறப்பு பொருளாதார  மண்டலங்கள் அமைக்கப்படுகிறது.  பெருமுதலாளிகளின் மூலதனத்திற்கு  எந்த சிக்கலும் ஏற்படாதிருக்க  உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ் காட் ஒப்பந்தம் , எஃப்.டி.ஏ  ஒப்பந்தங்கள் போடப்பட்டு பூர்வகுடிகளின் நிலங்கள், தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகள் தாரைவார்க்கப்படுகிறது. இந்த SEZ களில் இந்திய சட்டங்கள் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது, பாலியல் அத்துமீறல் நடந்தால் கூட அதை விசாரிக்கும் உரிமை இங்கிருக்கும் நீதி மன்றங்களுக்கு இல்லை. அதுமட்டுமல்லாது பொது சொத்தான மின்சாரம், நீர் எல்லாம் இலவசமாக அல்லது மானியமாக வழங்கப்படுகிறது. இதன் தேவைக்காகத்தான் கூடங்குளம் போன்ற ஆபத்து நிறைந்த உற்பத்தி முறைகளை அரசு நிறுவுகிறது.  இன்று நாடு முழுவதும் நடந்து வரும் பூர்வகுடிகளின் போராட்டம் நிலத்திற்காகவே, அதில் பெண்களின்  பங்கு அளப்பறியது. 

வளங்களைச் சுரண்டுவதோடு தனியார் மய சுற்றுலாக்கள் மனிதர்களை காட்சிப் பொருளாக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது. இதுவும் ஆதிவாசிகளை குறிவைத்து நிகழ்கின்றன. அந்தமான் நிகோபாரில் ஜாரவாஸ் ஆதிவாசிகளைக் காட்சிப் பொருளாக்கியதைக் கண்டித்து உச்ச நீதி மன்றம் அவர்கள் வாழும் சுற்றுப் பகுதியில் வணிக செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. ஜாரவா பூர்வகுடிகள் இனம் அழிந்து வருகின்றது. 300 மட்டுமே எஞ்சியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது  சூழலியல் மாற்றம், உலக வெப்பமாதல் சுற்றுலா தளங்களில்  எறியப்படும் கழிவுகளிலிருந்து வெளியேறும் மாசு சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. எகோ டூரிசம் என்பதே கட்டுக்  கதை, ஏனென்றால் அந்த பகுதிகளுக்குச் செல்வதற்கும் விமானத்தில்  தான் செல்கின்றனர். அதிலிருந்து  வெளியேறும் கார்பன் டையாக்ஸைட் ஓசோன் மண்டலத்தை தாக்குவதை இல்லை என்று சொல்ல முடியுமாஅந்த தளங்களில் எரியப்படும் கழிவு, பயன்படுத்தப்படும் அளவுக்கதிகமான தண்ணிர், இயற்கையின் பெயரால் விற்கப்படும் பொருட்களின் விலை என்று எத்தனை சுரண்டல்கள் நிகழ்கின்றன. அந்த பொருட்களை தயாரிப்பதில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள்ளப்பட்டது என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியுமா? 34 டிகிரி செல்சியசுக்கு மேலாக ஏறும் ஒவ்வொரு செல்சியஸ் வெப்பத்தினாலும் அரிசி, சோளம், கோதுமை போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் விளையும் பயிர்களின் அளவில் 10% வீழ்ச்சியடைகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம். சுற்றுலாத் தளங்களின் பெருக்கத்தால் நிலங்கள் அழிவதோடு, அறிய மிருகங்கள் பறவைகள் அழிகின்றன.  கடற்கரை மாசுபடுவதால் 58% பவழப்பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ளது. பவளப்பாறை என்பது பூகம்பத்திலிருந்து காக்கும் தன்மை கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . எகோ டூரிசப் பகுதிகளில் புவி வெப்பமடைவதில்லையா? கடற்கரையை மக்கள் மாசுபடுத்துவதில்லையா?
அத்தளங்களில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டப் பொருட்களைக் கொண்டு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது தவிர சிறு சிறு விசயங்கள் அழகியல் ஊட்டப்பட்டு பசுமையாக காட்சியளிக்கும். ஆனால் இதுவும் ஒரு வியாபார உத்தியே அன்றி, உண்மையான அக்கறை என்று சொல்லிவிட முடியாது.

இப்படி சுற்றுலாத் துறை என்பது பெண்களை நேரடியாகப் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி சுரண்டுவதோடு மட்டுமல்லாமல், அவளது உழைப்பிற்கு குறைந்த கூலி தருகிறது, உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் அதிகமாக அவளைச் சுரண்டுகிறது என்பதோடு வாழ்வாதாரங்களைப் பறித்து அங்கும் பெண்களைக், குழந்தைகளை மறைமுறகமாகச் சுரண்டுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண்கள், குழந்தைகள் கல்வி கற்பது இயலாத ஒன்றாகும். கல்வியில் முன்னேறாத போது உயரிய பணிகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு உழைக்கும் கூலிகளாக மீண்டும் முதலாளிகளுக்கே பயன்படுகின்றனர்.

குறிப்பு:

1, 2, 3, 4 - கே.பி சசி அவர்கள் எழுதி இன்னும் வெளிவராத கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

(புதிய கோடங்கி இம்மாத இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. உலக சுற்றுலா தினத்தன்று அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் ஆற்றிய உரையின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்.)