Dec 11, 2011

மதவாதம் முன்வைக்கும் மக்கள் நலன் என்ன - ஓர் இணைய விவாதம் - இறுதிப் பகுதி

இதுவே இறுதிப் பகுதி....வீண் விவாதத்தை முடித்துக் கொள்வது என் நேரத்தை காக்க எனக்கு அவசியமாகிறது...அடிப்படைவாதிகளிடம் நேரத்தை விரையம் செய்வதைவிட, இன்னும் இரண்டு புத்தகங்களை கூடுதலாக படிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்...


Bharat Voice Sujin:
கண்டிப்பாக விவதத்தை முடிக்கலாம் சகோதரி. முடியாமல் தொடரும் விவாதம் வீண் என்பார்கள். இந்த விவாதத்தின் எனது முடிவுரையும், உங்கள் கருத்துக்கான எனது பதிலும்.

சாவர்கரின் இந்து யார்? சித்தாந்தத்திலேயே அவர் பாரதத்தை புன்னிய பூமி என்று தான் விளக்கியுள்ளார். ஆதலால், நான் இந்து யார்? என்ற சாவர்கரின் விளக்கத்தை அவர் கூறியபடி தானே கூற முடியும். இதுபோக, என் தேசம் எனக்கு புன்னிய பூமி தான். பெருமைமிக்க பாரத தேசத்தை புன்னிய பூமி என்று அழைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். "இந்தியா" தான் தற்போதைய பெயர் என்கிறிர்கள். இது தவறு. பாரத அரசியல் சட்டத்திலேயே "பாரத்" என்ற பெயரும் Officialஆக உபயோகிக்க வழிவகை செய்துள்ளது. பாரதம் என்ற சொல், ஆட்சிமுறை திரிபு அல்ல. பாரதம் என்ற சொல் எங்கள் புராணங்களிலேயே உபயோகிக்கப்பட்ட சொல் தான். பாரதம் என்பது ஒன்றுபட்ட நாடு என்று விஷ்ணுபுராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. அப்புராணத்திலேயே பாரத தேசத்தில் எல்லைகள் வரைக்கும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அரசியல் லாபத்துக்காக பாரதம் என்ற சொல்லை உபயோகிக்க வேண்டிய அவசியமும் இல்லை. காரணம், பாரதம் என்ற ஒன்றுபட்ட நாடு தான் இன்று இருக்கிறதே. இதில் என்ன அரசியல் லாபம் தேடுவதற்கு இருக்கிறது? பாரதத்தை மீண்டும் துண்டாக்க நிணைப்பவர்கள் தான், அரசியல் லாபத்திற்காக செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். புராணங்கை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால், இந்து என்ற ஒற்றைச் சொல் பாரதத்தை ஒன்றாகவே வைத்திருக்கும். உங்களின் பிரிவினை கோசங்கள் எல்லாம், காந்தி காலத்திலேயே மடிந்து போய்விட்ட ஒன்று. பிரிவினை கோசத்தை எரியவைத்தாலும், அதை அனைக்கும் சக்தி எங்களிடம் உள்ளது.

12 minutes agoBharat Voice Sujin
இந்து மதம் தான் என்றுமே இந்நாட்டின் மதமாக இருந்துள்ளது. இந்து என்ற பெயர் வேண்டுமானால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததாக இருக்கலாம். ஆனால், எங்கள் மதம் பாரத தேசத்தில் யூக யூகமாக வாழ்ந்து, எங்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சைவம், வைணவம் போன்ற வழிபாடுகள் பார்பனியச் சொல்லாடலா? இதை கேட்டு சிரிப்பு தான் வருகிறது. எதற்கேடுத்தாலும் பார்பனன் தானா? சைவ நாயன்மார்களில் மீனவ தொழில் செய்த ஒருவர் நாயன்மாராக உள்ளாரே, அவர் கூட பார்பனரா? பக்தியின் உச்சம் என்று புகழப்படும், கண்ணப்பர் என்ற வேடுவர் யார்? என்னும் எத்தனையே சொல்லலாம். இந்து மதத்தை சும்மா தாக்க வேண்டும், அதனை வைத்து உங்கள் கம்யூணிச, நாத்தீக சித்தாந்தங்களை பாரத தேசத்து இந்து மக்களிடம் திணிக்க வேண்டும் என்பதற்காக, மறுபடியும் மறுபடியும் இந்து மதம் என்பது பிராமணர்க்கு மட்டுமே உரிய மதம், பார்பனர்க்கான மதம் என்று திரும்ப திரும்ப சொல்வதான் எந்த பயணும் இல்லை. பெரியார் போன்றவர்களாலே முயர்ச்சிக்கப்பட்டு தோல்வியை தழுவிய வாதம் தான் இது. என்னும் சொல்ல போனால், பெரியார் போன்ற இந்து மத வெறுப்பாளர்கள் வளர்ந்த பின்பு தான், இந்து அரசியலின் அவசியத்தையும், இந்து ஒற்றுமையின் தேவையையும் மக்கள் புரிந்து கொண்டனர். நீங்கள் கூறும் மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு எல்லாம், இந்து மதத்தின் ஒரு பகுதி. தற்போதும் இந்த வழிபாடுகள் எல்லாம் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக. பஞ்ச பூத வழிபாடு, கங்கை வழிபாடு போன்ற வழிபாடுகள் அனைத்துமே இயற்கை வழிபாடுகள் தான். ஒரு வகையில் பார்த்தால், ராமர், கிருஷ்னர் வழிபாடுகள் கூட மூதாதையர் வழிபாடு தான். இது போன்று, சிறு தேவ வழிபாடு என்பது இந்து மத வழிபாடு அல்ல என்று கிறுத்தவ அறிவாளிகளின் உதவியோடு சில நாத்தீகர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். சுடலைமாட சுவாமியின் வரலாற்றை இவர்கள் அறிந்திருப்பார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. நான் முன்பே கூறியது போல, அவரவர் சித்தாந்தங்கள் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தை எதிர்க்க கூறப்படும் பொம்மை வாதங்கள் தான் இவை எல்லாம். இதில் ஒன்று தான் வேதம் என்பது உணவுக்காக இறைவனிடத்தில் வேண்டுவது என்பதேல்லாம். நான்கு வேதத்திலும் பல்லாயிர கணக்கான ஸ்லோகங்கள் உள்ளன. இவை அனைத்துமே இப்பாடி தான் என்ற உங்களின் வாதம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்று நீங்களே சிந்தித்து பார்க்க வேண்டும்.

12 minutes agoBharat Voice Sujin
உங்களின் கம்யூணிச கண்ணோட்டத்தில் நீங்கள் சாதி முறையை கூறுகிறிர்கள். சரி. ஆனால், ஒரு பெரிய சுற்று சுற்றி மறுபடியும் சாதிக்கு இந்து மதம் தான் காரணம், ஏற்ற தாழ்வுக்கு இந்து மதம் தான் காரணம் என்று கூறுவது தவறு. ஏற்ற தாழ்வுக்கு ஒரு சில சாதிகள் காரணம் என்று கூறுவது தான் சரியே தவிற, மதம் அல்ல. சத்திரிய குலம் ஆட்சி செய்தது எப்போது? பிரிட்டிஸ் ஆட்சிக்கு முன், எத்தனையோ அரசர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சத்திரியர்களா? எத்தனையோ பிராமணர்கள் மன்னர்களாக இருந்துள்ளனரே? இதைத்தான் நான் வர்ண முறையில் இருந்து திரிந்த சாதிய முறை என்று நான் முந்தைய பதிலில் கூறினேன். நீங்கள் கூறுவது போல, வர்ணத்தின் தமிழ் சொல் தான் சாதி என்பது தவறு. கோத்ரம் என்பதின் தமிழ் சொல்லைத் தான் சாதி என்பார்கள்.

8 minutes agoBharat Voice Sujin
பிராமணரின் கடமை என்பதே அனைவருக்கும் பூஜை செய்வது தான். இதில் மன்னர், சூத்திரர் என்ற பார்வை எல்லாம் கிடையாது. மனுவை பெரிய வில்லன் போன்று சித்தரிக்கிறீர்களே, அவர் கூறுவது என்ன தெரியுமா? "எவர் ஒருவர் தன் குலத்தை பெரிது படுத்தி தவறான வழியில் சம்பாதிக்கிறானோ, இது அவர் தன் வாந்தியை தானே உண்பதற்கு சமம்." என்கிறார். மனு தர்மம் என்பது திரிக்கப்பட்டுவிட்டது என்பது தான் நிஜம். அதை நான் ஒத்துக்கொள்கிறேன். மனு தர்மத்தில் சுமார் 2685 சுலோகங்களில், 1471 சுலோகங்கள் சிலரின் சுயநலத்திற்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது சுலோகங்கள் மத்தியில் எழும் Contradictionஐ வைத்தும் கூறுகின்றனர். மனு தர்மம் சாதி ஏற்ற தாழ்வுகளை ஆதரிக்கிறது என்று கூறுவது தவறு. மனு தர்மம் கூறுவது: சூத்ரோ ப்ராம்மணதாமேதி ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம் க்ஷ்த்ரியாஜ்ஜாதமேவம் து வித்யாத் வைச்யாத் ததைவச. அதாவது, சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். க்ஷத்திரியன் மற்றும் வைசியன் வேறு வர்ணத்தை அடையலாம் என்பது தான் இதன் பொருள். இந்த ஸ்லோகம் என்ன கூற வருகிறது என்றால், எப்போது ஒரு சூத்திரன் தன் நிலையை பிராமண நிலைக்கு உயர்த்துகிறானோ அப்போது, அவன் பிராமணன் ஆகிறான். அதே போல, எப்போது ஒரு பிராமணன் தன் குணத்தில் இருந்து தாழ்கிறானோ, அப்போது அவன் சூத்திர வர்ணத்தை அடைகிறான். இதே போல, வைசியரும், க்ஷத்திரியனும் வேறு வர்ணத்தை அடையலாம். விளக்கமாக சொன்னால், வர்ணம் என்பது ஒருவன் தொழிலை வைத்து தான் அமைகிறது. அதன் படி, ஒரு சூத்திரன் வேதங்களை கற்று, பிராமணக்கான நிலையை அடையும் போது அவன் பிராமணன் ஆகிறான். ஆக, வர்ணம் என்ற முறையில் பரம்பரை தொழில், எற்ற தாழ்வு என்ற வர்த்தைக்கே இடமில்லை. வர்ணம் என்பது வர்ண்ஜ (Vrinja) என்ற வார்த்தையில் இருந்து வந்தது. வர்ண்ஜ என்பது தெரிந்தெடுத்தல் எனப்படும். இதற்கு வலு சேர்கும் வகையில் தான் மேலே கூறப்பட்ட ஸ்லோகம் அமைந்துள்ளது. வர்ணம் என்பது யாரோ நமக்காக தரும் பட்டமல்ல. நாமாக நமக்காக தெரிந்து எடுப்பது தான் வர்ணம்.

7 minutes agoBharat Voice Sujin
சூத்திரர் பற்றிய என் கருத்தை நீங்கள் விமர்சித்தீர்கள். சூத்திர வர்ணம் என்பது ஒரு தொழில். அவ்வளவு தான். ஒரு பியூணை எடுத்துக்கொள்ளுங்கள். ஐரு பியூண் ஒரு பள்ளியில் வேலை செய்கிறார். அவரின் தொழில் குணம் என்பது, அங்குள்ள ஆசிரியரையோ, தலைமை ஆசிரியரையோ ஒப்பிடும் போது குறைவாக தெரியும். அதை தான் விசேஷ குணம் என்று குறிப்பிட்டேன். இதில் என்ன மனித தன்மை இல்லை? அதுவும், வர்ண முறைபடி, யார் வேண்டுமானாலும் எந்த வர்ணத்தை வேண்டுமானாலும் அடையலாம் என்பது தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உண்மையான தெய்வ பக்தி இருக்குமிடத்தில் உழலல் மட்டுமல்ல, பிற தீய குணங்களும் இருக்காது. ஒரு சில சாமியாரை கொண்டு எல்லாரும் இப்படி தான் என்று கூறுகிறீர்கள். அப்படியானால், நாத்தீகம் கம்யூனிசம் பேசுபவனும் தவறு செய்கிறான். அதை வைத்து, எல்லா நாத்தீகணும் இப்படி தான். எல்லா கம்யூனிஸ்ட்டும் இப்படி தான் என்று கூறினால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா? அனுமன் பற்றி நீங்கள் கூறிய தகவல்கள் தவறு. சூரிய பகவான் ஒளியில் பிறந்தார் என்றேல்லாம் யார் கூறியது? அதே போல, இந்து மதமா? எல்லாம் பிராமணன், எல்லாம் பிராமணன் என்று கூறுகின்றீர்களே, ராமாயணத்தை எழுதியது யார்? ராமர் என்ன பிராமணரா? கிருஷ்ணர் எந்த குலத்தில் வளர்ந்தார்? போன்ற கேள்விகளுக்கு பதிலை தேடுங்கள். எனக்கு தெரிந்து அனைத்து குறிப்புகளுமே, வியாசரின் பிறப்பை ஒரே மாதரித்தான் கூறுகிறது. உங்களிடம் உள்ள பிரச்சனையே இது தான். "இந்து எதிர்ப்பு" என்னும் ஒரு கருத்தை உங்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டு, அதை எதிர்க்க பிராமண மதம், பார்பனிய மதம் என்று கூறுகின்றீர்கள். Birth base caste system பற்றி நான் எனது முந்தைய கருத்திலே தெளிவு படுத்திய பின்பும், பறையர் பிராமணர் ஆக முடியுமா? தேவர் ஆக முடியமா? என்று வினா எழுப்புவது, பிராமணர் ஆக பணம் வேண்டும் என்று கூறுவது எல்லாம், சும்மா இந்து மதத்தை தலித்து விரோதியாக காட்டத்தான். வர்ண முறை நடைமுறையில் இருந்த வரை, கல்வி கூட அனைவருக்கும் இலவசமாக தான் வழங்கப்பட்டது.

3 minutes agoBharat Voice Sujin
இந்து மதம் ஏற்ற தாழ்வு அற்றது என்பதை குறிப்பிட, வியாசரே மீனவ பெண்ணுக்கு தான் பிறந்தார் என்று கூறியதும், அவர் அப்படி பிறந்தால், அவர் சொல்வதை கேட்க வேண்டுமா? என்கிறீர்கள். இதுவே, உங்களின் குரல் தலித்துக்காகவா? இல்லை, இந்து விரோதத்துக்காகவா? என்பதை காட்டுகிறது. தண்ணீர் தர மாட்டேன் என்கிறான் என்றால், அது தேசிய கோசமா? இல்லை, உங்களைப் கொள்கை சாந்த இயக்கங்கள் போல அரசியல் அதிகாரம் பெற போடும் நாடக கோசமா? தேசிய கட்சியான காங்கிரஸ், பாஜ கூட இப்படி கோசம் போடுகின்றனர். இதுவும் தவறு தான். சரி. தனி நாடாக இருந்தால் மட்டும் உங்களுக்கு தண்ணீர் கிடைத்துவிடுமா? அது சரி, நீங்கள் தாங்கி பிடிக்கும் கம்யூனிச வழிவந்த மார்க்சிஸ்ட்டுகளே சீனாவுக்கு அடிவருடி, பாரத - சீன யூத்தத்தின் போது, சீன பக்கம் சாய்ந்தவர்கள் தானே? அதனால், தேசியம், தேச பற்று எல்லாம் நாத்தீக _ கம்யூனிஸ்ட்களிடம் எடுபடாது என்பது உண்மை தான். மதத்தை எதிர்கிறேன் என்கிறீர்கள், நாத்தீகம் என்கிறீர்கள். ஆனால், முஸ்லீம், கிறுத்தவ மதங்களை எதிர்த்து எத்தனை முறை மசூதி, சர்ச்சு முற்றுகை போராட்டம் உங்கள் சித்தாந்தத்தில் உள்ளவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது? தலாக், தலாக் என்று கூறுவது பெண் அடிமை தனமாகவே, இல்லை அறிவியல் சர்ந்தோ தவறாக நாத்தீகர்களுக்கு தெரிவதில்லையே. ஏன்? கோவிலில் தமிழ் அர்ச்சனை தான் செய்ய வேண்டும் என்கிறீர்கள். அது கூட ஒரு வகையில் இந்து ஒற்றுமைக்கு நன்மை தான் செய்கிறது. ஆனால், குராண் அரபி மொழியில் ஓத கூடாது என்று ஏன் யாரும் போராடுவதில்லை? மார்க்சிடம் வர வேண்டியுள்ளதா? யார் வர வேண்டியுள்ளது? சரி. கம்யூனிச சித்தாந்தம் என்பது ஆங்கிலேய காலத்திலேயே வந்துவிட்டது நம் நாட்டுக்கு. ஆனால், அதன் வளர்ச்சி எப்படியுள்ளது? அதே சமயம், இந்து ஒற்றுமை சமீப காலமாக எந்த வேகத்தில் செல்கிறது? இந்து ஒற்றுமையை, நான் அரசியல் கட்சிகளின் வளர்ச்சியை வைத்து கூறவில்லை. இந்து உரிமைக்காகவும், இந்து ஒற்றுமைக்காகவும், இந்து துவேஷங்களை எதிர்த்தும் போராட முன்வந்துள்ள மக்கள் சக்தியையும், கடல் போல கோவில் குவியும் இந்து மக்களின் மக்கள் சக்தியை முன்வைத்து தான் கூறுகிறன். எத்தனை கால ஆனாலும், எங்கள் புன்னிய பாரத பூமி மக்கள் எங்கள் தெய்வத்தை ஆன்மீகத்தின் மூலம் தேடுவார்களே தவிற, மார்கஸையும், ஸ்டாலினையும் தேடமாட்டார்கள். பொன்னான தங்களின் நேரத்தை செலவு செய்து விவாதித்ததற்கு என் நன்றிகள். வாழ்க பாரதம். வெல்க பாரதம்.

 ______________________________________________________

Nirmala Kotravai
உங்கள் நோக்கம், இந்துத்துவத்தின் நோக்கம் ஆகியவற்றை மிகச் சரியாக விளக்கினீர்கள்...மார்க்சிய, பெண்ணிய, பெரியாரிய, அம்பேத்கரிய, பௌத்த சிந்தனைகளை இன்னும் தீவிரமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் எனும் உறுதி மொழியை எனக்கு நானே மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறேன்...நன்றி


Bharat Voice Sujin
நன்றி. வருங்கால அரசியல் மேடையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

Nirmala Kotravai:
ஹா..ஹா...அரசியல் மேடையேறி புண்ணிய பாரத பூமியைக் காப்பது உங்கள் விருப்பமாக இருக்கலாம்...எனது விருப்பம் மேடையில் ஜொலிப்பதல்ல....அது மானுட விடுதலை...நான் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கிறேன் என்று உணர்ந்தேன்...அடிமைபட்ட வரலாற்றை சமத்துவ சிந்தனையாளர்களின் நூல்களைப் படித்து உறுதி செய்து கொண்டேன். அதிலிருந்து விடுதலைப் பெறுவதற்கான வழிமுறைகளை நான் நடைமுறைபடுத்திப் பார்த்து அதில் வெற்றியும் கண்டுள்ளேன்...என் போல் அடிமைப்பட்டுகிடக்கும், அல்லது அப்படி உணர்ந்து ஒன்றிணையும் நபர்களோடு சேர்ந்து என் குரலையும் ஒலிக்கச் செய்கிறேன்..அவ்வளவுதான்...

இப்படிக்கு,
அமெரிக்க, ஐரோப்பிய, அதிகார வர்க்க இந்துத்துவ அடிவருடிகளுக்கெதிராக அறச்சீற்றம் கொள்ளும் கம்யூனிஸ்டு அடிவருடி (உங்கள் மொழியில் சொன்னால் சீன அடிவருடி...)


புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி.

நன்றி. கொற்றவை.

No comments:

Post a Comment