Sep 1, 2020

தலித்தியத்தின் பெயரால் சாதிய வன்மம்

 தங்களின் சொந்த சாதி வெறியிலிருந்து மீள முடியாமல் வர்க்க நீக்கமும் செய்துகொள்ள மனமின்றி முதலாளித்துவ / நவதாராளவாத நலன்களுக்காக இந்த சமூகத்தின் கேடான சாதியத்தை, துண்டு துண்டான அடையாளங்களை தம் அரசியல் வளர்ச்சிக்காக, நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ளும் கூட்டம் எல்லா சாதியிலும், வர்க்கத்திலும் உண்டு.

காஞ்சா அய்லய்யா போன்ற ’தலித்திய’ அறிவுஜீவிகளும், தமுஎகச போன்ற போலி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு கூட்டமும், சில தலித்திய என்.ஜி.ஓ பண்பாட்டு மையக் குழுக்களும் அத்தகைய ஆதிக்க சாதிய அரசியலை செய்வதில் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரான கம்யூனிச வெறுப்பு அரசியலை தலித்தியம் என்னும் பெயரில் செய்து வருவதை அம்பலப்படுத்தி வருகிறோம். அதற்கு அவர்கள் அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொள்வதையும், அம்பேத்கரிடம் சாதியப் பிரச்சினைக்கு உண்மையில் தீர்வு உள்ளதா என்பதையும் சில மார்க்சியர்கள் விவாதத்திற்கு உட்படுத்தி வருகிறோம்.

காஞ்சா அய்லாவின் இதற்கு முன்பு எழுதிய ஒரு பதிவுக்கு நான் எதிர்வினை ஆற்றிய போது இனவாத தமிழ் தேசியர் ஒருவரும், ‘தலித்திய’ கருணையாளர்களும் பொங்கி எழுந்தனர். இதோ இப்போது மறுபடியும் அய்லய்யா கம்யூனிஸ்ட்கள் குறித்து அவதூறு செய்துள்ளதோடு கம்யூனிஸ்டுகளை தொடர்ந்து பிராமின் கம்யூனிஸ்ட் என்று கேவலமான சாதியப் புத்தியில் எழுதியுள்ளார். (Dr Ambedkar - "they (Indian left) are just a bunch of Brahmin boys, drummer boys" என்று கூறி இதற்கு வழிகாட்டியுள்ளார்).

சில பெரியாரிஸ்டுகளும், தலித்திஸ்டுகளும் சில கம்யூனிஸ்டுகளை பூனூலிஸ்டுகள் என்று எந்த தார்மீக அறமும் இன்றி கூறுவதை நாம் கண்டுள்ளோம். இது அப்பட்டமான சாதி வெறி அரசியல் மட்டுமின்றி, மார்க்சிய வெறுப்பு. அதோடு, தனியுடைமையை ஒழிப்பதே தம் விடுதலைக்கான வழி என்பதை தலித்துகள் உணர்ந்துவிட்டால் தம் பிழைப்பு என்னாவது என்னும் சுயநலம் நிறைந்த பிழைப்புவாதமன்றி வேறு ஏதுமில்லை.

காஞ்சா அய்லய்யாவின் கம்யூனிஸ்டுகள் பற்றிய சாதிய அவதூறுகளுக்கு தோழர் மூர்த்தி என்பவர் எழுதியுள்ள மறுப்பு கீழே உள்ளது. மேலும் தோழர் டி.வி ராவை “பிராமண கம்யூனிஸ்ட்” என்றும் தோழர் டி.நாகி ரெட்டியை “சூத்திர கம்யூனிஸ்ட்” என்றும் பேசியுள்ளார்..

// Ilaiah speaks of “those days” in Andhra…and of Tenali, which was known as centre for cunning brahminism…of Brahminical, vegetarian communism etc etc…//

சாதிய வன்மம் நிறைந்த ஒருவரால் தான் கம்யூனிஸ்டுகளை இப்படி சாதிவாரியாகப் பார்க்க இயலும். இவர்களின் இந்த கீழ்த்தரமான சாதி வன்ம அரசியலால் கம்யூனிஸ்டுகள் “அவர் இந்த சாதியாக இருந்தாலும்…” என்னும் விளக்கங்களைக் கொடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்….

// VSR came up in such an atmosphere:Though he was born into a Brahmin community, since his young age, he never followed or practiced any customs, traditions and beliefs of that community. He did never wear the so-called ‘sacred thread.’ He became a staunch Marxist and communist by the age of 25 years. He devoted his entire life to the working class movement, until he breathed his last on 8th September, 1998. . He was an anti-thesis of comfortable, arm-chair intellectual, Brahmin communist, imagined or created by Ilaiah. There were many Brahmin cadres who never wrote anything beyond their party work reports, but worked in masses, and a couple of them were shot dead too.// என்று தோழர் மூர்த்தி பதிலளிக்கிறார்.

இப்படி கட்டுரை நெடுக கம்யூனிஸ்டுகள் எப்படி வர்க்க நீக்கம் சாதி நீக்கம் செய்துகொண்டு உழைக்கும் வர்க்க அரசியலுக்காக தங்களையே அர்ப்பணித்துக்கொள்கின்றனர் என்றும் ஒரு காலத்தில் தலித்துகள், இடைநிலைசாதி உழைக்கும் வர்க்கத்தினர் சாதி மறந்து கம்யூனிஸ்டுகளுடன் அணிதிரண்டு எப்படி போராடினர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

உற்பத்தி முறையில் மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றம் / வளர்ச்சி & அதன் விளைவாக உழைப்புசார் உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் புதிய வர்க்கங்களை தோற்றுவித்துள்ளது. அது இடைநிலை மற்றும் தலித் சாதிகளிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை புதிய நடுத்தர / மேட்டுக்குடி வர்க்கமாக முன்னேற வழி வகுத்துள்ளது. அப்பிரினிவரில் உள்ள சில ‘அறிவுஜீவிகள்’ / அரசியல் சக்திகள் தம் குட்டி முதலாளித்துவ நலனிலிருந்து சாதியப் பாகுபாடுகளை தம் அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

கம்யூனிச வெறுப்பரசியலை வளர்க்க மார்க்சியம் இந்தியாவுக்கு ஏற்ற சித்தாந்தமல்ல, கம்யூனிஸ்டுகளுக்கு சாதி ஒழிப்பில் அக்கறை இல்லை என்று நிறுவ சாதி அடிப்படையில் அவர்களை அவதூறு செய்து தம் பிழைப்பை நடத்துகின்றனர். சிலர் கிறித்தவ நிறுவன என்.ஜி.ஓ.களின் ஆதரவோடு செவ்வனே இதை செய்கின்றனர் என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன.

என்னதான் அய்லய்யாக்கள், ஒரு விமர்சன நூலை தம் சாதி வெறியிலிருந்து நரகல் என்பவர்கள், வழக்கு தொடுத்து அச்சுறுத்துபவர்கள், கலர் கலரான பண்பாட்டு மையங்கள் மார்க்சியத்தையும் - கம்யூனிஸ்டுகளின் அர்ப்பணிப்புகளையும், போராட்டங்களையும் தியாகங்களையும் - நிராகரிக்க முயற்சித்தாலும் வர்க்க முரண்பாடும் உழைப்புச் சுரண்டலும் இருக்கும் வரை எத்தகைய அவதூறுகளையும் துடைத்தெறிந்துவிட்டு கம்யூனிஸ்டுகள் இயங்கிக் கொண்டே இருப்பார்கள்… வரலாறே அதற்கு சாட்சி.


Article: https://countercurrents.org/2020/09/life-and-work-of-com-vuppuluri-subba-rao-renowned-working-class-leader-viewed-in-the-light-of-controversy-created-by-kancha-ilaiah/?fbclid=IwAR3N15PMka0i_8JaHO0sGxwWvjaVVXVBTRLQfnZDIlFOPgCzXM1vNLbAAxs 

 


No comments:

Post a Comment