Apr 3, 2014

லஷ்மி சரவணகுமார் உங்களது மனநோய்க்கான மருந்து


10 மணி விவகாரம் குறித்த உங்களது உல்டாப் பதிவில் உங்கள் ஸ்டேட்டஸ் - //எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் தொந்தரவு செய்கிறார்கள். இவ்வாறு தொலைபேசிக் கொள்வதன் மூலம் தங்களது கலை தாகத்தை தீர்த்துக் கொள்வதாக அபிப்பிராயப்படும் அவர்களிடம் இது குறித்து உரையாட வேண்டும்... சசி கலா - வாங்க உரையாடுவோம்...//

நீங்கள் ஓரு ஆணாதிக்கவாதியாக இருக்குறீர்கள் என்பது எனக்குக் கூடுதல் அதிர்ச்சி தருவதாக உள்ளது. அதுவும் உங்கள் மனைவிக்கு நான் அண்ணியாகவும், பாலியல்வாதத்திற்கு எதிரான ஒரு அமைப்பை நடத்தி வருவதாலும் என் கண்களுக்கு உங்கள் இரட்டை வேடம் அப்பட்டமாகப் புலப்படுகிறது.

ஏன் லஷ்மி சரவணகுமார் மேற்சொன்ன ஸ்டேட்டசில் கூட உங்களால் ஆண்களை அனுமதிக்க முடியாத அளவுக்கா நீங்கள் கார்க்கியின் இரவு பேச்சு சுதந்திரத்திற்குத் தடை விதித்துள்ளீர்கள். 10 மணிக்கு மேல் ‘கலை தாகத்தை’த் தீர்த்துக்கொள்ள பெண்கள் மட்டும்தான் தொடர்பு கொள்கிறார்களா? ஆண்கள் தொடர்பு கொள்வதே இல்லையா? என்ன இது விந்தையாக உள்ளது.

அப்படியென்றால் அபிலாஷ் சந்திரன் எழுதிய சந்தேகக் கேஸ்களுக்கு ஒரு கதை  என்பது உங்களுக்கான நல்லறத்தைப் போதிப்பதற்குத்தானோ? என்ன இருந்தாலும் லஷ்மி சரவணகுமார் என் நாத்தனார் கார்க்கியை நீங்கள் இவ்வளவு குழந்தைத்தனமாகக் கையாளக்கூடாது. மேலும் கலைத்தாகத்தைத் தீர்க்கும் வேட்கைப் பெண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்பது போல் உரைத்து ஆண்களின் கலைத்தாகத்தைக் குறைவாக மதிப்பிட்டிருக்கும் உங்களது பாலியல்வாதப் பார்வையை, ஆண்களை மட்டம் தட்டும் உங்கள் அகம்பாவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

லஷ்மி சரவணகுமார் நீங்கள் ஒரு முற்போக்குவாதி என நினைத்திருந்தேன், ஆனால் நீங்கள் ஒரு மூட நம்பிக்கைவாதி என்பது உங்களது பின்வரும் கருத்துரையின் வாயிலாக மிகவும் பரிதாபத்திற்குரிய வகையில் வெளிப்பட்டுள்ளது.

// உங்களுக்கு தோழி கார்கி அவர்கள் குறித்து அனேக விசயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.... அவருக்கு நான் ஒரு இலக்கிய ஆசான் மட்டுமே, எதை வாசிக்க வேண்டும் எப்போது வாசிக்க வேண்டும் என்பதை மட்டுந்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்... அதை வைத்துக் கொண்டு அவர் பயணப்பட்டிருக்கும் தூரம் அசாத்தியமானது.//

விளங்கிவிட்டது உங்கள் வாழ்வின் லட்சியம் என்னவென்று விளங்கிவிட்டது லஷ்மி சரவணகுமார். நீங்கள் வசுமித்ரவாக விரும்புகிறீர்கள், உங்கள் வாழ்நாள் தோழர் கார்க்கியைக் கொற்றவையாக்க கனவு காண்கிறீர்கள். பாவம், அது நிறைவேறாத ஆசையாகப் போகிறது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கப்போய்த்தான் நீங்கள் இப்படி ஒரு கமெண்ட் எழுதியாவது உங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முனைந்திருக்கிறீர்கள்.

ஒருவேளை கார்க்கிக்காவது கொற்றவையாவதற்கு 1% வாய்ப்பிருக்கலாம். ஏனென்றால் இந்த ஆணாதிக்க உலகத்தில் தொடர்ந்து ஆண்களின் காதலாலும், அவர்களுடனான வாழ்க்கையாலும், குடும்பச் சூழலாலும் கொடுமைகளை எதிர்கொண்ட ஒரு பெண்ணாக, அதிலிருந்து விடுபட்டு தன் சுயத்தை கண்டுபிடித்து தான் தானாக வாழத் துடிக்கும் ஒரு பெண்ணாக, ஒருவேளை கர்க்கி தன்னை வாழ்வின் துன்பியல்களிலிருந்து விடுவித்துக்கொள்ள நினைத்தாலும், அதற்குத் தேவையான அறிவையும், கல்வியையும், வாழ்வியல் அறிவையும், பண்புகளையும், கட்டுப்பாடுகளையும் கற்றுத்தர நீங்கள் வசுமித்ரவாக முடியாதே. ஊர்பக்கங்களில் சொல்வார்களே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உங்களால் ஒருபோதும் வசுமித்ரவாக முடியாது.

ஒரு பெர்வர்ட்டாக இருக்கும் நீங்கள்  கார்க்கியைப் பக்கத்துத் தெருவிற்குக்கூட ஒரு ஆளுமை நிறைந்தப் பெண்ணாகப் பயணப்பட வைக்க முடியாதே, பின் எப்படி அவர் அசாத்தியமான தூரத்திற்கு பயணப்பட முடியும். ஏன் இந்த மூட நம்பிக்கை உங்களுக்கு.

வசுமித்ர ஒரு போதும் அடுத்தவர் அந்தரங்கத்தை புனைவாக பாலியல் அடையாளத்தை உல்டா செய்து ஸ்டேட்டஸ் போட்டதில்லை. அப்படிப் போட்டுவிட்டு அவசர அவசரமாக அதை அழித்தும்விட்டு முகப்புத்தகத்தை விட்டே சில நாட்கள் ஓடி ஒளிந்து கொள்ளவுமில்லை. பின்னர் எவரிடமும் எஸ்.எம்.எஸ்கள் அனுப்பி கெஞ்சியதில்லை. அதன்பிறகு எவர் வீட்டிற்கும் சென்று விருந்து உண்டு அவர்கள் கழிவறையில் சிறுநீர் கழித்து பின்பு அவர்கள் படுக்கையறையை மறைந்திருந்து எட்டிப்பார்த்தோ அல்லது கற்பனையாகவோ அவர்கள் குடும்ப வாழ்க்கையை எழுதியதில்லை. இதுபோன்ற வக்கிரங்கள் வசுமித்ரவுக்கு எப்போதும் கைவராது. அதேபோல் உங்களுக்கும் வசுமித்ரவின் அறிவோ, கொள்கைகளோ, பண்புகளோ எல்லாவற்றிற்கும் மேல் துணைவியின் பேரில் மரியாதைக்குறிய ஒரு காதலோ வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் நீங்கள் சித்தியைக் காதலிப்பவர்.

உங்களின் மனநோய் தீர முதலில் நீங்கள் வசுமித்ரவாகவே முடியாதே என நினைத்து துன்பப்படும் அந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுங்கள்.

அதன்பிறகு கார்க்கியை கொற்றவையாக்கும் வேட்கை உங்களுக்கு இருப்பின், வசுமித்ர கொற்றவையின் இணைவும் அவர்கள் வாழ்க்கையின் சாதனைகளும் உங்களுக்கு அகத்தூண்டுதலாக இருந்து, அதன்பேரில் நீங்கள் கார்க்கியைக் கொற்றவையாக்க கணவு கண்டு, அதன் இயலாமை உங்களைத் தொந்தரவு செய்கிறது என்றால் நான் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்.

உங்களது இந்தக் கேவலமான வக்கிர புத்திகளோடு நீங்கள் ஒருபோதும் வசுமித்ரவாக முடியாது. அதனால் நீங்கள் கார்க்கி மனோஹரனை கல்வி கற்க வசுமித்ரவிடம் அனுப்புங்கள். அவன் என்றைக்கும் கற்றுத்தருவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டவன். ஒரு பெண் எப்படி ஆளுமையாவது, ஆனாதிக்க அறிவை எப்படி களைந்தெறிவது அதேவேளை தீவிரவாதப் பெண்ணியப் போக்கில் ஆண் வெறுப்பையும் கற்றுக்கொள்ளாமல் ஒரு சமதர்மக் கல்வியை கற்றுக்கொள்வதற்கு வகை செய்வார். வசுமித்ரவிடம் கல்வி கற்ற பின்னர் கார்க்கி மனோஹரன் தன்னையும் மீட்டுக்கொண்டு இந்த சமூகத்தில் உங்களைப் போன்ற மனநோய் மிகுந்த எழுத்தாளர்கள், பாலியல்வாதப் போக்குக்கொண்டவர்கள், தாழ்வுமனப்பான்மையால் அடுத்தவர் படுக்கையறையை எட்டிப்பார்த்துப் புனைபவர்கள், சித்தியைக் காதலிக்கும் மனநோய் கொண்டவர் ஆகியோரை மீட்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒருவேளை அவரும் விலங்குகளாக மாறி அடுத்தவர் அந்தரங்கத்தை சதா சர்வ காலமும் எழுதுபவர்களுக்கு எதிராக மாப்வெஸ் (Movement against pervert writings and elimination of sexism, mapwes) எனும் ஒரு அமைப்பைத் தொடங்கக்கூடும்.

ஆனால் ஒரே ஒரு பெருவிளைவிற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வசுமித்ரவிடம் கற்ற பின்னர் உங்கள் வாழ்நாள் தோழர் கார்க்கிக்கு ஏற்படப்போகும் அறிவுப்பசிக்கு உங்களால் ஒருபோதும் தீனி போட முடியாது. 

அதுமட்டுமல்லாமல் நாளை உங்களுக்கு ஒரு பெண்ணோடு திருமணமாகிஒரு மகள் பிறந்த நிலையில்… அவருக்கு அறிவுப்பசியும் புரட்சித்தாகமும் மேலோங்கிய நிலையில், அவரது கணவரான உங்களது வக்கிரத்தைப் பொறுக்கமுடியாமல் உங்களையும், உங்களது மகளையும் கூட தூக்கி எறிந்துவிட்டுப் போகக்கூடும்.  

என்னுடைய அச்சமெல்லாம் அப்படி உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து வேறு ஒருவரைத் திருமணம் செய்து உண்மையான அறிவின் துணையோடு ஒரு எழுத்தாளராகி மகிழ்ச்சியோடு வாழும்காலத்தில் அவர்களது வாழ்கைகயைக் கண்டு பொறாமை கொண்டு அப்பெண்ணின் அந்தரங்க வாழ்வை முகப்புத்தகத்தில் எழுதி ஆர்கசமடயும் வக்கிர மனநிலையோடு இன்னொரு லஷ்மி சரவணகுமார் ஒருவன் முளைத்துவிடக்கூடாது என்பதுதான்.  



1 comment:

  1. பெண்ணியம் பேசுகின்ற பெண்ணியவாதிகளின் கதியே இப்படி என்றால் சாதாரண பெண்களின் நிலை அதோகதிதான்...

    ReplyDelete