Oct 19, 2010

கிரீடங்கள் அடிமைகளுக்கென செய்யப்படுவதில்லை





புன்னகையின் நரம்புகள் கொண்டு பின்னப்பட்ட நாற்காலி
மகாசாம்ராஜ்ஜியம்

இருவரை
அழுத்தத்துடன் முத்தமிடுகிறான் சூரியன்
செம்மண்ணை
நிழல் ஒன்று போல் முத்தமிடுகிறது

பாலைவனம் பற்றிய உரையாடலில் உலர்கிறது நாக்குகள்
கொலைகள் பற்றிய புரிதல் வரை
பயணிக்கிறது கால் தடங்கள்

சிறகு பற்றிய கணவு
ரகசியமாக வைக்கப்பட்டது

தேரில் ஒன்றாக பயணம் செய்தாலும்
தேரோட்டி அரசனாவதில்லை
ஒரு போதும் கிரீடங்கள்
அடிமைகளுக்கென செய்யப்படுவதுமில்லை

உதட்டின் சொந்தக்காரர்களுக்கே
குரலும் சொந்தமென்ற விதியெங்குமில்லை

நம்பிக்கை விரியுமளவுக்கு
நடத்தைகள் விரிவதில்லை
அன்பின் அதிகாரத்தின் முன்
கண்ணீர் மண்டியிட்டே கிடக்கிறது

மகா சாம்ராஜ்யத்தில்
பொம்மைகளுக்கே நாற்காலி....

3 comments:

  1. மகா சாம்ராஜ்யத்தில்
    பொம்மைகளுக்கே நாற்காலி....

    ReplyDelete
  2. //நம்பிக்கை விரியுமளவுக்கு
    நடத்தைகள் விரிவதில்லை//

    நல்லா இருக்கு!

    ReplyDelete