Apr 18, 2020

கண்காணிப்பு அரசியல் என்பது இடதுசாரி அரசியல் அல்ல


இனி நான் யாருக்கும் 'தோழர்' இல்லை! இனி எமக்கும் யாரும் 'தோழர்கள்' இல்லை! Simplifying life amidst uncultured, mean-spirited so called 'leftists'. Better to stay away (self-Isolation) than feeling traumatized by certain left-let downs! This is to do with people and not left politics!

ஒரு பெண்ணின் கவிதை தொகுப்பிற்கு எதிரான அடக்குமுறை பாணி ஆணாதிக்க தாக்குதல்கள், அம்பேத்கரை விமர்சித்த எனது மொழிப்யெயர்ப்புக்கு எதிரான ‘தலித்திய-கம்யூனிஸ்ட்’ தாக்குதல்கள் என தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் ‘பல இடதுசாரி’களின் வன்மம் நிறைந்த எதிர்வினைகள் என்னை மன அதிர்ச்சிக்கே உள்ளாக்கியிருக்கிறது. அத்தகையோர் இணைய வன்முறையில் (cyber bullying / cyber harassment) வலதுசாரிகளுகு சற்றும் குறைந்தோர் அல்லர் என்பது என்வரையிலான அனுபவம்.

ஓர் இடதுசாரி அமைப்பு மற்றும் தனிநபர்கள் சிலர் ஒரு கவிதை தொகுப்பிற்கு எதிராக நடந்துகொண்ட விதம் எந்த வகையிலும் இடதுசாரி பண்புடைய செயலாகாது என்று கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக எழுதியதற்கு என் மீது ‘கண்ட’ முத்திரைகளை குத்தினார்கள். ஆனால் ஒரு போராட்டம் என்று வரும்போது ஆதரவு வேண்டி அழைப்பார்கள்! கூட்டத்திற்கு கூப்பிட்டு அவமானப்படுத்துவார்கள்! “இதெல்லாம் யாரு? இவங்களை எதுக்கு மேடைக்கு ஏத்துறீங்க? நம்மாளுங்கள மேடைக்கு ஏத்து” என்று ஒரு சிவப்பு சட்டை - கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் சொன்னபோது நான் அவர் பின்னால் தான் நின்று கேட்டுக்கொண்டிருந்தேன்! ஆரம்பகாலத்தில் இது போல் பல மோசமான அனுபவங்கள்!

இருப்பினும் கம்யூனிஸ்டுகள் என்றால், மார்க்சியம் என்றால் எனக்கு உயிர்! அவர்கள் மீது பெரும் மரியாதை எனக்கு எப்போதும் உண்டு. கம்யூனிஸ்டுகளின் தியாகமின்றி, போராட்டமின்றி இன்று நாம் இந்த வாழ்வை இப்படி அனுபவிக்க முடியாது என்கிற நன்றி கடன் எனக்கு எப்போதும் உண்டு.

பறையர் ஆதிக்க அரசியல் சூழலில் அருந்ததியருக்கு நியாயம் வேண்டி செல்ல ‘கம்யூனிஸ்ட்’ என்கிற அடிப்படையில் அழைப்பார்கள் அம்பேத்கரை விமர்சித்ததும் சாதிவெறி பிடித்தவர் என்று பண்பற்ற ஆணாதிக்க வசைகளை, வன்மம் நிறைந்த சாதிய வசைகளை வைப்பார்கள். அவர்களும் தங்களை இடதுசாரிகள் / முற்போக்காளர்கள்/ சமூக போராளிகள் என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி ஒவ்வொன்றையும் தனியாகவும், வசுவோடும் இணைந்துமே எதிர்கொண்டு 10 வருட காலங்கள் மார்க்சிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்துள்ளேன். விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் 5,6 ‘நபர்கள்’ அப்போது ‘மனிதர்களாக’ ஆதரவு தெரிவித்தார்கள். அவ்வளவே! இங்கு மற்ற ‘லாபியிஸ்டுகளுக்கு’ சாதாரண வெட்டிப் பேச்சுகளுக்கு கிடைக்கும் ஆதரவு கூட நான் மேற்கொண்ட மார்க்சிய அறிவூட்டலுக்கான விமர்சன போராட்டங்களுக்கு பெற்றதில்லை என்பதே உண்மை!

ஆதரவுகளை எதிர்பார்த்ததுமில்லை! நான் சிலரிடம் சொல்வதுண்டு ‘நான் அரசியல் தீண்டாமைக்கு உள்ளான ஆள்! தலைக் கணக்கு தேவையென்றால் நம்மை உடன் சேர்த்துக்கொள்வார்கள் (கொச்சையாக சொல்வதெனில் பயன்படுத்திக் கொள்வார்கள்) அதன் பிறகு தாக்கப்படுகையில் வேடிக்கை பார்ப்பார்கள் (வெகு சில தோழர்கள் தவிர), மார்க்சிய எதிர்ப்பாளர்கள் பெண்ணான என்னையும், இன்னொரு பெண்ணான ரங்கநாயகம்மாவையும் கொச்சை கொச்சையாக திட்டி புக்கு போட்டு கூட்டம் நடத்தி தங்கள் அடையாள அரசியலை அரங்கேற்றுவார்கள்! அப்போதும் வேடிக்கை பார்ப்பார்கள். கண்டும் காணாதது போல் இருப்பார்கள். ஏன்னா அது சாதிய பிரச்சினை என்னும் சென்சிட்டிவ் இஷ்யூ… எனக்கு ஆதரவு தெரிவிச்சா அப்புறம் அடுத்த டார்கெட் அவங்கதான்… அப்ப எங்க போச்சு பெண் ஒற்றுமை, கம்யூனிஸ்ட் ஒற்றுமைன்னு கேட்றாதீங்க? இது சுயபச்சாதாபமல்ல. இந்த வெளியை சரியாக புரிந்து கொண்ட வரையறுப்பு அவ்வளவே!

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் துணிந்து நின்று என் எழுத்துகளின் வாயிலாக, செயல்பாடுகளின் வாயிலாக நான் யார் என்பதை தூற்றியவர்களே நாணும் அளவுக்கு மெய்ப்பித்து காட்டினேன். ஒரு கட்டத்தில் ‘ஆதெண்டிக் நபர்களின்’ ஆதரவும், ‘சான்றிதழும்’ கிடைத்தது. நன்றிகள்.

தனிப்பட்ட வாழ்விலும், சமூக வெளியிலும் பெரும் இழப்புகளை சந்தித்துக்கொண்டு தான் இங்கு இந்த இடதுசாரி அரசியல் களத்தில் இயங்க வேண்டியுள்ளது. எல்லாரும் அப்படித்தான் இயங்குகிறார்கள். எனவே ஒருபோதும் அதற்காக நான் துவண்டதில்லை!

ஆனால் தற்போது ’பாலுறவுவாதம் / பாலியல் சுரண்டல்’ என்னும் பெயரில் நடந்து வரும் இணைய வழி பகிர்வுகள் அறமற்ற வகையில் செல்கிறது. எடுத்துக்கொண்ட பிரச்சினை மற்றும் நோக்கத்திற்கு மாறான திசையில் சென்று விட்டது. அது ‘மார்க்சியத்தின்’ பெயரால் நடக்கிறது! இதைவிட கேவலம் ஏதும் இருக்க முடியாது!
என் மனதின் அறம் வீழ்த்தப்பட்டதாக உணர்ந்ததால் நான் என் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தற்காலிகமாக முகநூலில் இருந்து வெளியேறினேன். தற்போது அரசியல் பேசுவதில் இருந்தும் விலகி இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.

என்ன நியாயங்கள் சொன்னாலும் கண்காணிப்பு அரசியல் மற்றும் பெண்களின் அந்தரங்கங்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வக்கிரம் பிடித்த இந்த ஆணாதிக்க சமூகத்தின் பத்தினி vs வேசி என்னும் வியாக்கியானங்களுக்கு இடதுசாரி அரசியலின் பெயரால் தீனி போடப்படுகிறது. அதை கண்டு சகித்துக் கொள்ளும் கல் மனம் எனக்கில்லை. இப்படி செய்துதான் இந்த சமூகத்தையும், மார்க்சிய தத்துவத்தையும், பெண்ணியத்தையும், பெண்களையும் காக்க வேண்டுமெனில், நான் அவளில்லை! மார்க்சியத்தை போதிக்கும் அவசியமும் எனக்கில்லை என்னும் மனநிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்!

I am traumatized because of certain incidents and let me do it my own way. Thanks in advance for any of your advises! I have had enough! I am always a leftist! But choosing to stop talking about it! That’s it. And most importantly please do not tag me in any posts!

யாரும் எனக்கு எந்தவித ஆறுதலையோ, ஆலோசனைகளையோ வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் உள்பெட்டியில் உரையாட வர வேண்டாம். நான் என்னோடு உரையாட வரும் ஒவ்வொருவரையும் எப்போதும் பொருட்படுத்தி பதில் அளிப்பேன். அது மனிதர்களுக்கு அளிக்கும் மரியாதை. ஆனால் இது விசயமாக யார் பேச வந்தாலும் என்னால் அதற்கு இடமளிக்க முடியாது என்பதை மிகுந்த மரியாதையுடனும், வருத்தத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் ஏதோ பெரிய ஊடக பிரபலமில்லை ஊடகத்தின் வாயிலாக அறிக்கை விட. ஒரு சில்லறை இந்த சில்லறை ஊடகத்தில் தான் தனக்கான தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். எனவே ‘மீண்டு’ வந்து இதை இங்கு பதிவு செய்கிறேன்.
இறுதியாக, ‘scams & exposures’ என்னும் பாணியிலான செயல்பாடுகளில், அதிலும் குறிப்பாக ஆணாதிக்க வக்கிர சமூகம் நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு அலையும் காமம் சார்ந்த விசயங்களை அம்பலப்படுத்துவது, கேள்விக்கு உட்பத்துவது பெரிய சமூக சேவை, மனித உரிமை காக்கும் செயல் என்று செயல்படும் நபர்கள் இனி எக்காரணம் கொண்டும் தயவு செய்து என்னை தொடர்புகொள்ளாதீர்கள். பாலியல் சுரண்டலில் இருந்து ஒரு பெண்ணை காக்க வேண்டும், தவறான வழிநடத்தல் செய்யும் ‘குழு’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட மீட்பர்(கள்) சட்டத்தை நாடியிருக்க வேண்டும். தேவைப்படும் ஆதாரங்களை திரட்ட சட்டத்தின் ஆணைபடி காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கும். அதைவிடுத்து தனிநபராக களம் இறங்க, அதிலும் அதை இணையத்தின் வழி அரங்கேற்ற யார் அதிகாரம் வழங்கியது? கண்காணிப்பு அரசியலில் ஈடுபடும் அதிகாரம் தனிநபருக்கு உள்ளதா? எந்த அமைப்பில் இருந்தாலும் தனிநபருக்கு அந்த அதிகாரமில்லை. ஒருவேளை ஏதோ ஒரு வகையில் ‘சமூக அக்கறை’ சார்ந்து சில ‘அமைப்புகளுக்கு’ அந்த அதிகாரம் வழங்கப்படுமாயின் அது மிகவும் ஆபத்தானது. மனித உரிமையின் அடிப்படியில் அது எதிர்க்கப்பட வேண்டும்.

காவல்துறையோ, சட்டமோ புகார்களை எடுத்துக்கொள்ள மறுத்திருப்பின் அதற்கெதிரான போராட்டத்தை தொடுக்கலாம் என்னும் அரசியல் அறியாதவரா நாம்?

பாடம் புகட்டுங்கள்! பாடம் புகட்டுங்கள் என்று சிலர் கூப்பாடு போடுவதும். கானொளி வெளியிட்டதில் உடன்பாடில்லை… உடன்பாடிருக்கு.. பலவித கருத்துகள் மோதட்டும் அப்போதுதான் ஒரு தெளிவு ஏற்படும் என்று மாறி மாறி பேசுவோரும் என்ன சாதிக்க விரும்புகிறார்கள்? இதுவும் ஒருவித அதிகார மனோபாவமே. வலுவுள்ளோர் வலுவற்றோரை மிரட்டுவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை.

இதுவரை நடந்திருக்கும் காமக் களியாட்ட எக்ஸ்போஷர்களால் இந்த சமூகத்தில் ஏதேனும் மாறியிருக்கிறதா? பிட்டு படம் பார்க்க விரும்பும் வக்கிரம் பிடித்தவர்களுக்கு விருந்தளித்ததை தவிர இங்கு என்ன மாறியிருக்கிறது? இதுபோன்ற பாலியல் எக்ஸ்போஷர்கள் உண்மையில் முதலாளித்துவ / குட்டிபூர்ஷுவா வக்கிரம் பிடித்த தன்முனைப்புவாதமன்றி எந்த வகையிலும் அறமார்ந்த செயலாகாது. எந்த வகையிலும் அது சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது. அதிகாரம் படைத்தோர் கைலாசா அமைத்து தங்கள் காமக் களியாட்டங்களை தொடர்வார்கள். எளியோரும் வரியோரும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்வார்கள். அவ்வளவே! (தப்பு செய்யும் போது தைரியமா செஞ்சீங்கல்ல… அப்ப இதையும் தைரியமா எதிர்கொள்ளுங்கன்னு தங்கள் அரைகுறை அகவாத ஒழுக்கவாத பிட் நோட்டீசை எடுத்துக்கிட்டு சிலர் வருவாங்க!)

மார்க்சியம் என்பது புறவயமாக சமூகத்தை அணுக கற்றுக்கொடுக்கிறது. அது பெருங்கருணை! அதை இன்று கேலிக் கூத்தாக்கிவிட்டார்கள்! அதன் வழியில் நின்று பார்த்தால் எப்போதும் கருத்தியல் போர் தொடுக்க வேண்டுமே அல்லாது தனிமனித எக்ஸ்போஷர்களை மூன்றாம் நபராக தனிமனிதர்கள் செய்வது அறமாகாது!

அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்தாமல், குடும்ப உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் மறுக்கப்படும் பெண் உரிமை சார்ந்த சிக்கல்களை களையாமல் சில மிரட்டல்கள் மூலம் தனிநபர் மாற்றங்களை எதிர்பார்ப்பது எத்தனை அபத்தமானது, அராஜகமானது! This is a one-sided stand! மார்க்சிய தத்துவார்த்த அறிவூட்டல் மற்றும் கருத்தியல் விவாதங்கள் மூலமாக முதலில் சமூகத்தின் அறிவுநிலையையேனும் மாற்றியுள்ளோமா? ஆணாதிக்க சமூகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்பது இப்படித்தானே முன்னெடுக்க வேண்டும்! அதேபோல் தனிமனித சுதந்திரம் என்று பாலுறவு விசயத்தில் பேசுவோருக்கும் அதன் சாதக பாதகங்களை விளக்கி உரையாடலாம். ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதுஅவரவர் சுதந்திரம்! அதனால் யாரேனும் பாதிக்கப்படுகையில் அவரவர் அதை எதிர்கொள்ளட்டும். சட்டத்தை நாடட்டும்! சமூக சீரழிவு நேர்கிறதென்றால் அதையும் சட்டத்தின் முன் வைத்து முறையிடுங்கள். Moral Policing is not the solution for this!

அதுவரை பாதிக்கப்படுவோரை கைவிட்டுவிட வேண்டுமா என்றால்… சட்டத்தை நாட வழிவகை செய்யுங்கள்! அவ்வளவே! போராட கற்றுக்கொடுங்கள். நீங்கள் நாட்டாமையாகி பஞ்சாயத்து செய்யாதீர்கள். இது ஒருவகை இணையதள கப்-பஞ்சாயத்து! இதுவும் ஆணாதிக்கமே!

பாதிக்கப்பட்ட பெண், பாதிக்கப்பட்ட பெண் என்றால் அந்த பெண் தன் அடையாளங்களை மறைத்து தனக்கு நேர்ந்த துன்பங்களை பொதுவெளியில் பகிர, சட்டத்தை நாட, காவல்துறையை நாட, ஊடகத்தை நாட இங்கு ஆயிரம் வழியுள்ளது மீட்பர்கள் ஏன் அப்படி வழிநடத்தவில்லை? பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏன் பொதுவெளிக்கு வர அஞ்சுகிறார்? சமூகத்தை காக்கும் அக்கறை அவருக்கு இல்லையா? அதற்காக போராட வரமாட்டாரா? அப்படியென்றால் தவறு செய்து தன் அடையாளத்தை மறைத்துக்கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது, ஏனென்றால் வெளியில் வந்துவிட்டார்… மற்ற பெண்கள் இந்த மிரட்டலாளர்களின் ஆணைக்கு இணங்காமல் இன்னும் அந்த குழுவிலே இருக்கிறார்கள், எனவே அசிங்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்… அல்லவா?

இதுபோல் எனக்கு ஆயிரம் கேள்விகள் உள்ளன.

இப்போது இதன் பொருட்டு வன்மம் கொண்டு என்னையும் கண்காணிக்க தொடங்குங்கள்! நாம் அதற்காகத் தான் ‘முற்போக்கு’ அரசியல் கற்றோம்!

வாழ்க உங்கள் சமூக சேவை!

இனி என்னுடைய இந்த முகநூல் பக்கமானது வெறும் தனிப்பட்ட விளம்பரப் பலகையாக மட்டுமே இருக்கும். Just a personal page for fun and some light hearted ‘talks’. ஆமாம்! இனிமேல் ஜாலியா பேசுவோம்! தனியாதாங்க! குழுவா இல்ல https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;)

You wana call me ‘opportunist’, ‘weak’, ‘emotional’, ‘stupid’, ‘anti-revolutionary’, ‘individualistic approach’ blah blah blah… pl go ahead! I have had enough branding from ‘many leftists’ already! Ofcourse I have seen enough as well! When the left movements (individuals here and there are condemning) are silent about an Individual’s Moral Policing sort of Sexual scam exposures happening in the name of Marxism or lefitism (infact one movement had encouraged it and justified such activities in the past) and not willing to condemn it – not even women’s movement are coming forward to condemn this! Then let me stay away from left politics!

I did write about Free-Sex and the ill effects of hyper-sexualization from Marxist point of view after few people tagged me in their posts! But that was pure theoretical! That is education and not slandering. But I was always against personal defamation, moral policing, taking 'proofs' in an unauthorized manner and requested the ‘good shepherd’ in polite manner not to do such things and also informed that incase such things happen I will not be a part of it. Hence when it happened, I quit!

Thank you Friends! No more ‘comradeship’! am sure you have got nothing to loose in this! But I have much to loose! But that’s ok… I am used to loses! Authentic and Committed leftists may unfriend me https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4c/1/16/1f642.png:)

Always love to Marxism and Proletarian revolution ❤️


No comments:

Post a Comment