Oct 29, 2017

அமைப்பதிகாரம்



தோழர்களே,

ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை நூல் வந்த நாள் முதல், இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பிரிவினரின் தாக்குதல்கள் ஆர்.எஸ்.எஸ். ஒடுக்குமுறையை விடவும், ஆபாசமானப் பேச்சைவிடவும் மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. ஆதவன் தீட்சன்யா, கருப்பு கருணா, முகமது சிராஜுதீன், சம்சுதீன் ஹீரா, பெரோஸ் பாபு (ஆதரவாளர்) என்று தொடங்கிய இந்த கும்பல் தாக்குதல்களை செய்தவர்கள் சிபிஎம் - தமுஎகச என்று அறிய முடிந்தது.

அமைப்பின் அதிகாரத்திலிருந்து இவர்கள் கேவலமானப் பேச்சுக்களை பேசியும் முகநூலில் எழுதியும் வந்தார்கள். தேனியில் நடந்த  கூட்டத்தில் பேசவிடாமல் வெளியேற்றப்பட்டு வசுமித்ர - வை ஒரு ரவுடி போல் சித்தரித்து தள்ளிவிட்டார்கள்.

இதெல்லாம் குறித்து நாங்கள் பதிவு செய்து வந்தோம். அவ்வப்போது பகடி செய்து பதில்கள் அளித்து வந்தோம். அவர்கள் பாணியில். ஆனால் அறிவுபூர்வமாக எங்களை எதிர்கொள்ள முடியாத இவர்கள் முகநூல் எங்கிலும் ஒரு கும்பலாக சேர்த்துக்கொண்டு எங்களுக்கு சாதி முத்திரை குத்தும் வேலைகளை செய்துவந்தனர்... வருகின்றனர். குறிப்பாக வசுமித்ர யாரிடமாவது உரையாடினாலோ அல்லது எங்களின் நண்பர்கள் ஏதேனும் பதிவெழுதினாலோ அங்கு சென்று "தேவர் ஜெயந்தி 30 ஆம் நீதி என்பது", "பசுமித்ரா, குசுமித்ரா" என்றெல்லாம் தரம் கெட்ட  முறையில் வம்பிழுப்பது போல் எழுதி மன உளைச்சலை எற்படுத்தி வந்தார்கள்.

பலமுறை கண்டும் காணாமலும் இருந்த நாங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் பாணியில் 'தரமிறங்கி' பதிலடி கொடுக்கத் தொடங்கினோம். ஏனென்றால் நாங்கள் தனி நபர்கள். எங்களை நாங்கள் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும். அவர்களை காக்க 'அமைப்பாகத் திரண்டு' மார்க்சியத்தைக் காக்கும் 'பலம்' அவர்களுக்கு இருக்கிறது.

பொதுவாக இது போன்ற சில்லறை அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் நான் விலகியே இருந்துளேன். அல்லது தொகுத்து நூலாக  பதிலடி கொடுத்துள்ளேன். இம்முறை முகநூலில் பதிலடி கொடுக்கும் அவசியம் ஏற்பட்டது, ஏனெனில் இந்துத்துவத்தை கடுமையாக, குறிப்பாக தேவருக்கு தங்க கவசம் வழங்கிய நிகழ்வை விமர்சித்து எழுதிக்கொண்டிருக்கையில், சிராஜுதீன் என்பவர் கார்த்திக் மேகா பக்கத்தில் மீண்டும் பசுமித்ரா, குசிக்குமார் என்று ஆபாசமாகப் பதிவெழுதினார் .

பொறுமைக்கும் ஊர் எல்லை உண்டு!

இவர், தான் அமைப்பில் வேலை செய்வதை தியாகத்திற்கு  இணையாகவும், புரடசிகரப் பனி எனவும், வசு  மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கிறார் என்றும் எழுதியவர். இதற்கு பதில் கொடுத்த போது சின்னையா காசி என்பவர் மிகவும் ஆபாசமாகப் பேசினார். சரளமாக ஒருமையில் தான் இவர்கள் பேசுவார்கள். இதுதான் இவர்கள் கற்ற மார்க்சியம்.

தனி நபர் கருத்து என்பார்கள் ஆனால் நாங்கள் பதிலடி கொடுத்தால் அமைப்பாக திரண்டு ஆபாசமாகப் பேசுவதுடன் மிரட்டலும் விடுவார்கள். எல்லாவற்றுக்கும் முகநூலில் ஆதாரம் உண்டு.

நேற்றும் இதே தான் நடந்தது. நெல்சன் பாபு என்பவர் இம்முறை களம்  இறங்கினார்.மிக ஆபாசமாக பேசவும் தொடங்கினார். அதை முன்வைத்து, விமர்சனப் ண்பை வளர்க்கத்  தெரியாத சிபிஎம், எப்படி மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று தொடங்கி, சாதி ஒழிப்பில் பின்னடைவு - சிபிஎம் போன்ற அமைப்பில் உள்ள அடையாள அரசியல் என்று நான் பதிவிடத் தொடங்கினேன்.

தொடக்கத்தில்  நாங்கள் நடந்ததை சொல்லி முறையிட்டோம். ஒவ்வொரு முறையும் அமைப்பைக் காட்டி மிரட்டுவதால் அமைப்பிடம் கேள்வி கேட்கிறோம், உண்மையில் ஒரு பண்புள்ள அமைப்பானது எங்களை அழைத்தோ அல்லது அலுவலகம் வாருங்கள் பேசுவோம் என்று சொல்வதுதான் தார்மீகம். ஆனால் அதற்குள் நெல்சன் பாபு என்பவர் தாக்குதலைத் தொடங்கினர். இனியும் அமைதியாக சென்றால் அமைப்பின் அதிகாரம் ஓங்கிவிடும் என்பதால் நாங்களும் அவர்களின் 'தரத்திற்க்கு' இறங்கினோம்.

கொற்றவை பெண் தோழர் அவரை விட்டுவிடுவோம் என்னும் 'சமத்துவ' கருத்துக்களை உதிர்த்த அவர் வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி , உளவாளி என்று தொடங்கி அரிக்குதா, வா பார்க்கலாம்,உங்க அப்பனையெல்லாம் பார்த்தவங்க என்று தொடர்ந்தார். அவரின் ஒவ்வொரு வசைக்கும், நான் சி.பி.எம்மின் வரலாற்று துரோகங்களை முன் வைத்து கேள்வி கேட்கத் தொடங்கினேன். ஏனென்றால் இவர்கள் அமைப்பாகத் திரண்டும் அமைப்பின் பெயரைச் சொல்லியும் தானே மிரட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி தொடர்ந்து இந்த அவதூறுகளை செய்து எங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

பொதுவெளியில் எப்படி உரையாடவேண்டும், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்னும் பண்புகளை, வழிகாட்டுதலை செய்யும் பொறுப்பு அமைப்பிற்கு உள்ளதா இல்லையா என்பதே என் கேள்வி. இதற்கு முன்பே  அமைப்பில் உள்ளவர்களிடம் கடிதம் வாயிலாக முறையிட்டோம், பதிலுக்கு அவர்கள் கேவலத்தை உதிர்த்ததைத் தவிர வேறேதும் செய்யவில்லை. அவர்கள் அமைப்பினர் பேசினால் தனிநபர் கருத்தென்பதும் அவர்களை நாங்கள் பேசினால் அமைப்பாகத் திரண்டு ஆபாசத் தாக்குதல் தொடுப்பதும்  ஒடுக்குமுறை இல்லையா?. இவர்கள் தான் நடிகர் விஜய்க்காக கருத்து சுதந்திரம் என்று போராடுபவர்கள்.

தோழர்களே, நான் இடது களத்திற்கு வந்த நாள் முதல் 'இடது ஒடுக்குமுறையை' கடுமையாக எதிர்கொண்டுள்ளேன். ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டதாலேயே என்னைப் பற்றிய முன் முடிவுகளுக்கு வந்து, தொடக்கத்தில் ஒரு புரட்சிகர அமைப்பு தாக்குதல் தொடுத்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த வேகத்தோடு செயல்பட்டேன், ஆனால் எனக்கு சோர்வை ஏற்படுத்தி தனிமைப்படுத்தி விலக்கச்  செய்தவர்கள் இடதின் பெயரால் இயங்கும் ஒரு சில தோழர்களும், அமைப்பும் தான். ஒரு நிகழ்ச்சியில் தோழர்கள் எனக்களித்தப் பணியை செய்துகொண்டு இருந்தேன். மேடையில் தொகுத்தளிக்கும் வேலை, "இவங்களை எல்லாம் ஏங்க மேடை ஏத்துறீங்க, நம்ம அமைப்புலருந்து யாரையாவது ஏத்துங்க, இவங்கல்லாம் விளம்பரம் தேடுறவங்க" என்று பேசினார்.ஒரு 'தோழர்'. இது போல் பல சம்பவம் "பாப்பாத்தியோட சேர்ந்து சொந்த சாதியை காட்டிக்கொடுக்குறீங்களா".... வசு முரடன், சாதி வெறி பிடித்தவன், ரவுடி இப்படியாக.. எங்கள் தனிப்பட்ட வாழவை 'இலக்கியவாதிகள்' எழுதி மன உச்சம் அடைந்தனர். அதிலும் விளம்பரம் தேடவே என் மக்களைக் கூட விட்டு விட்டு வந்ததாக எழுதினார்கள். இவர்கள் 'தலித்திய, முற்போக்காளர்கள்....

இதையெல்லாம் கண்டு நான் மேலும் ஒதுங்கி நின்றேன். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க மறுத்தேன். தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என எது வந்தாலும் (அவர்களின் வியாபார நோக்கமும் ஒரு காரணம்).

இந்துத்துவவாதிகள், அரசியல் கட்சிகள் , தலித்திய நம்பிக்கை உடைய தோழர்களைக் காட்டிலும் இந்த இடதுசாரி நபர்களின் வன்மமும், பண்பும், மிரட்டலும் தான் எனக்கு வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது. மேற்சொன்னவர்கள் கூட எங்களிடம் இவ்வளவு ஆபாசமாகவும், வன்மத்தோடும் உரையாடியதில்லை. ஆனால் இந்த சி.பி.எம் நபர்கள், ஒரு சில புரட்சிகரக் கட்சிகளில் உள்ள 'தோழர்கள்' செய்யும் இந்த அராஜகத்தைக் கண்டிக்க இங்கு மற்ற அமைப்புகளுக்கு விருப்பமில்லை என்பது விளங்கி விட்டது. ஒரே காரணம் நாங்கள் அமைப்பில் இல்லை.

தோழர்களே இங்கு இதுதான் அமைப்பின் வாயிலாக நாம் அடையக்கூடிய நன்மை என்றால் மன்னித்து விடுங்கள் நாங்கள் விலகியே  இருக்கிறோம்.

இதுவரை நான் முகநூலில் இருந்து விலகியது, எழுத்திலிருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்தது என்று எல்லாவற்றிற்கும் காரணம் சி.பி.எம் நபர்கள்... ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசுவதாகக் சொல்லி அடையாள அரசியலை முன்னெடுக்கும் ஒரு சில இடதுசாரி ஆதரவாளர்கள், எழுத்தாளர்களே.

வலதுசாரிகள் அச்சுறுத்தல்கள் என்னை ஒரு போதும் அசைத்ததில்லை... ஆனால் இடதுசாரிகளாக கும்பலாக சேர்ந்துக்கொண்டு ஒரு சிலர் செய்யும் தாக்குதல்களும், ஒடுக்குமுறையும், கொடுக்கும் பட்டங்களும் , மொழியும் மனம் வெறுக்கக் செய்து விட்டது..... அறிவு அகந்தை, அமைப்பு அதிகாரம், வரட்டுத் தனமான வாதங்கள், முன் முடிவுகளோடு முத்திரை குத்துதல் இதைத்தவிர இந்த 7 வருடங்களில் இந்தப் பிரிவினர் மத்தியில் நான் ஆரோக்கியமாக எதையும் காணவில்லை....


வாழ்க கருத்துக் சுதந்திரம்.... எங்களுக்கான உரிமைகளைத்தவிர.......

No comments:

Post a Comment