Nov 6, 2011

மதம் என்ற குருட்டுப் பூனையும், பெண் உடலும்:



படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் என்ற எனது கட்டுரைக்கு இருவிதமான கருத்துக்கள் பகிரப்படுகிறது. துரதிஷ்டவசமாக இரண்டுமே மதவாதமாக இருக்கிறதே ஒழிய பெண் உடல் சுரண்டப்படுவது குறித்த கண்டனங்களையோ அல்லது அதை மாற்றுவதற்கான தீர்மானங்களாகவோ இல்லை. இசுலாமிய பின்னூட்டம் “இதனால் தானே இசுலாம் உடம்பை மூட சொல்கிறது, புர்க்காவை அணியச் சொல்கிறது”...”முதலில் மேலாடை வேண்டி சுதந்திர போராட்டம், இப்போது ஆடையே வேண்டாம் என்று போராட்டம்...சுதந்திரம் என்றால் என்ன தெரியுமா...” என்பது


இந்துத்துவ பின்னூட்டம் ”கட்டுரையின் மையப்பொருள் பெண்களை நுகர்வு பொருளாய் பார்ப்பதை பற்றி பேசுகிறது, ஆனால் கட்டுரையின் இறுதியில் இஸ்லாமிய கிராமத்தை பற்றி சொல்லியிருக்கிறீர்கள், பெண்களை போகப்பொருளாய் பார்ப்பதற்கு மாற்றாய் பெண்களை புர்காவில் அடைத்து வைக்க சொல்கிறது இஸ்லாம் இதை பற்றி கட்டுரையில் சொல்லமால் விட்டுவிட்டீர்களே? புர்கா பற்றிய உங்கள் பார்வையையும் அறிய விரும்புகிறேன்

எல்லா மதமும் பெண்களை ஆணாதிக்கக் கோட்பாட்டுக்குள் அடைத்துத்தான் வைத்திருக்கிறது, புர்க்கா என்பது வெறும் பௌதிக குறியீடு அவ்வளவுதான். எனது கட்டுரைகள் எந்த மதம் மேன்மையானது என்று பேசும் பொருட்டு எழுதப்படவில்லை, ஏனென்றால் மதங்கள் வேற்றுமையை வளர்த்து ஒடுக்குமுறையை ஏவ பயன்படுகிறதே ஒழிய சமத்துவத்தை நடைமுறைபடுத்த அவை உதவவில்லை.  கடவுள் பற்றாளர்கள் தங்கள் மதத்தில் உள்ள நன்மைகளைப் பின்பற்றும் பொழுது, மற்ற கடவுள் போதனைகளையும் பின்பற்றுவதில் ஏன் தயக்கம் கொள்கின்றனர்? ஏன் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையால், சடங்குகளால், குறிப்பிட்ட பூசாரிகள் மூலம் மட்டுமே கடவுளை அடைய முடியும் என்று நம்புகின்றனர்.  கடவுள் ஒருவனே அவன் சிவனே, விஷ்னுவே, ஏசுவே, அல்லாவே, யெகோவாவே என்று சொல்லும் நபர்கள் ஏன் இவர்கள் அணைவரையுமே கடவுளாக ஏற்றுக்கொண்டு, எல்லா மதங்களின் வழிபாட்டு முறையையும் பின்பற்ற தயங்குகின்றனர். எல்லா பிரார்த்தனை முறைகளையும்  பின்பற்றினால் ஒருவேளை  கடவுளை எளிதில் சென்றடைந்துவிடலாமே. ஒரு கடவுளே எல்லோரையும் படைத்திருந்தால் ஏன் ஒவ்வொரு இனமும், கூட்டமும் தங்களுக்கான கடவுள்களை தனித்தனியே பிரித்து மோதிக்கொள்ளும் பொழுது தன்னை வெளிக்காட்டிக் கொண்டு தான் ஒருவனே, தனக்காக எல்லோரும் அடித்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவதில்லை...ஏன் எல்லா இறைத் தூதர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர்.  பிறப்புக்கு பெண் காரணமாயிருந்தாலும் அவளது கரு மட்டும் தெய்வீகத்தன்மையினால் உருவாகியது என்று பிதற்றும் மதவாதிகள் பெற்றெடுத்த அன்னையை ஓரம் கட்டிவிட்டு அவளுக்குப் பிறந்த ஆண்மகனை, அல்லது அவளது கணவனை மட்டும் மூலக் கடவுளாக வழிபடச் சொல்வது ஏன்?

தாய் தெய்வங்களை, தாய்வழிச் சமூகத்தை குலைத்து ‘லிங்க வழிப்பாட்டை  (ஆண் தெய்வ) நிறுவுவதற்கு, சமூக அதிகாரத்தை, பொருளாதார அதிகாரத்தைக் கைபற்ற  ஆண்கள் உருவாக்கியதே ‘ஒரு கடவுட் கோட்பாடு, ஆண் இறைத்தூதர் கோட்பாடு’.  //யூத மதம், பௌத்தம், கன்பூசிய மதம், கிறித்தவ மதம் மற்றும் இஸ்லாம் ஆகிய ஐந்து பிரதான நம்பிக்கை அமைப்புகள் ஒவ்வொறும் அதனதன் வழியிலேயே, தமது இயல்பினாலேயே பெண்களின் தாழ்ந்த நிலைமையை வலியுறுத்தி, ஆண்களின் மேலாதிக்கத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் ஆணைகளுக்கு அவர்கள் கீழ்படியவேண்டுமென்று கோரின//

பெண்ணின் உற்பத்தி திறன் மீதிருந்த பொறாமையினால் பெண்ணின் உடற்பாகங்கள் பற்றிய அருவருப்பான, தாழ்வான கருத்துக்களை உடல் மீது ஏற்றிவைத்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சார்ப்புத் தன்மையை உறுவாக்கியதற்கு உதவியதே மதக் கோட்பாடுகள். //பெண்ணினது உடம்பில் எந்த பாகமும் ஏதாவது ஒரு வழியில் பீதி, அச்சம், கோபம் அல்லது ஆழமான பயத்தை தோற்றுவிக்காமலிருக்கவில்லை//.

பெண்ணின் தலைமுடி உட்பட சிற்றின்ப வேட்கையை தூண்டிவிடமுடியும் எனும் மதக் கோட்பாடே புர்க்காவை அணிந்து கொள்வதற்கான அடிப்படை, அதாவது பெண் உடல் பாலுறுவுக்கு அழைப்புவிடக்கூடியது என்று பெண்ணை தன் உடலை புர்க்கா போட்டு மூடச் சொல்கிறது. பெண் உடல் பாவத்தின் சின்னம் என்று மநு ஸ்மிருதி ஒரு விதமாக சொல்கிறது, குரான் வேறு விதமாக சொல்கிறது, பைபிள் வேறுவிதமாக சொல்கிறது அவ்வளவுதான்.  “கன்னிகள் பூப்படைவதுதான் தேவதூதர்களின் வீழ்ச்சிக்கு காரணம்” என்று டெர்ர்டுலின் எனும் கிறத்தவ பாதிரியார் சொல்லியிருக்கிறார். “ஒரு பெண் குளியலறைக்குச் செல்லும் போதெல்லாம் சைத்தான் அவளுடனிருக்கிறான் அவளது உடம்பு சைத்தானின் விளையாட்டரங்கம்” என்று முகம்மது அறிவித்தார். ஆண்களின் உடம்பு பற்றி, மனம் பற்றி ஏன் இத்தகைய கருத்தாக்கங்கள் இல்லை. 

ஒரு பெண் நபி கூட இல்லாமல் இருக்கும் வரலாற்று சூழலில், இஸ்லாமிலும் பெண் தெய்வம் இருந்திருக்கிறாள் என்பதை சர் ரிச்சர் பர்ட்டன் விவரிக்கிறார்:

   “அரேபியாவின் ஆற்றல் மிக்க முத்தொகுதி தேவதையின் ஓர் அம்சமான அல்-உஸ்ஸா மெக்காவில் காபா என்ற ஸ்தலத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கிறாள். அங்குப் பண்டைக் காலப் பெண் மதக்குருக்கள் அவளுக்கு சேவை செய்தனர். அவள் விசேஷ தெய்வமும், பெண்களின் பாதுகாவலனும் ஆவாள். இன்றும் அந்த காபா இருந்து வருகிறது. இஸ்லாம் சமயத்தின் மிகவும் புனித ஸ்தலமாகக் கருதப்படுகிறது. 

ஆற்றல் மிக்க அம்மனின் பெண்குருக்கள் அப்புறப்படுட்தப்பட்டு அந்த இடத்தை ஆண் குருக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.   

அதேவேளை பெண்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்க மறுக்கிறது, சில இஸ்லாமிய நாடுகளில் பெண் உறுப்புக்கு சுன்னத் என்ற பெயரில் கிளிட்டோரிஸை அறுத்தெரியப்படுகிறது, சிறு துவாரத்தை மட்டும் விட்டு பாலியல் உறுப்பை தைத்து விடப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பெண் புணர்ச்சியில் உச்ச நிலையை உணரக்கூடாது என்பதுதான். பெண் உடல் பலகீனமானது, பாதுகாப்புத் தேவை என்று சதா ஓதிக்கொண்டேயிருக்கும் ஆண் பலசாலிகள் ஆரம்பக்கால இஸ்லாமியப் பெண்கள் ஆயுதமேந்தி ஆண்களோடு சேர்ந்து நின்று கடுமையான போர்களில் ஈடுபட்டுள்ளனர் எனபதை அறிந்திருக்கின்றனரா என்று தெரியவில்லை . ஒரு கௌரவிக்கப்பட்ட வீராங்கனையும் போர்த் தலைவியுமான சலாயம் பிண்ட் மல்ஹான், கர்ப்பம் தரித்துள்ள தனது வயிற்றைச் சுற்றிலும் உடைவாள்களையும், குத்தீட்டிகளையும் கட்டிக் கொண்டு முகம்மதுவுடனும் அவரைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து அக்கம்பக்கமாக  நின்று போர் செய்திருக்கிறாள். மற்றொரு பெண், பைஸாண்டியர்களுக்கெதிரான கடுமையான போராட்டத்தில் போரின் நிலவரத்தைச் சாதகமாக மாற்றியிருக்கிறாள். அப்பொழுது ஓர் உயரமான குதிரை வீரன் முகத்தையும் கழுத்தையும் கறுப்புத் துணியால் மூடிக் கொண்டு, தள்ளாடிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகளை ஒன்று திரட்டி உற்சாகப்படுத்தி அசகாய வீரட்துடன் போராடியிருக்கிறான். அந்த வெற்றிக்குப் பின்னர், காவ்லாபிண்ட் அல்-அஸ்வார் அல்-கிண்டிய்யா என்ற அரபு இளவரசிதான் அந்த ‘குதிரை வீரன்’ என்று தயக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்”//

//மற்றொரு இஸ்லாமியப் பெண் வீராங்கனை தன்னுடைய உடைவாளைப் போன்றே நாவன்மையுடையவள், புகழ்பெற்ற ‘ஆயிஷா ஆவாள், நபிகளின் மனைவிகளில் ஒருவர். நல்லொழுக்கமுடைய இஸ்லாமிய மனைவிகள் உட்படுகிற அடிமைத்தனத்திற்கு எதிராக வீரமான மதி நுட்பத்துடன் போராடியவள் என்று ஆயிஷா புகழ்பெற்றாள். முகம்மதுவையே எதிர்ப்பதற்கும் திருத்துவதற்கும் அவள் தயக்கம் காட்டவில்லை.....இதனால் முகம்மதுவே தன்னைப் பின்பற்றுபவர்களிடம் ‘உங்களுடைய பாதி சமயஞானத்தை இந்த சிவந்தமுகமுடைய பெண்ணிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆணையிட்டார்”//

பெண்கள் பற்றிய மதிப்பீட்டில் சில ஆணாதிக்க கருத்துக்களை நபிகள் வெளிப்படுத்தியிருந்தாலும்  நபிகள் பெண்களை நேசிக்கச் சொன்னார், தனக்கு சமமாக கருதச் சொன்னார். (ஏசுவும், புத்தரும் கூட). நபிகள் சொன்ன அணைத்தும் அப்படியே பின்பற்றப்படுகின்றனவா என்பது முதல் கேள்வி, குறிப்பாக சொத்து சேர்க்கும் வழிமுறையில்? பெண்களிடமிருந்து பாதி சமயஞானத்தைப் பெற சொல்கிறார் நபி, அப்படி ஒரு பெண் சமயஞானத்தை முழுக்க முழுக்க பெண்ணிய நோக்கில் பெண்களை முதன்மை படுத்தி ஆணாதிக்க தாக்கமின்றி, பெண்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்தி போதித்தால் ஆண்கள் அதை பின்பற்றத் தயாராக இருக்கின்றனறா. அப்படி ஒரு பெண் ஆண்களுக்கு பாதுகாப்புக் கருதி புர்க்கா அணியச் சொன்னால் அணிந்து கொள்ள உடன்படுவரா?

பெண்களுக்கு திருமணத்தின் போது கொடுக்கவேண்டிய மஹர் என்பதை சில ஆண்கள் தங்கள் சௌகரியத்திற்கு மாற்றிக் கொண்டு அவளுக்கு அநீதி இழைப்பது, தலாக் சொல்வதை சாதகமாக்க்கிக் கொண்டு நஷ்டஈடு வழங்காமல் விடுவது பற்றிய வழக்குகள் நீதி மன்றத்திற்கு சென்றிருக்கின்றன.  வேறு திருமணம் செய்து கொள்வதற்காக பெண்களை இப்படி கைவிடச் சொல்லி நபிகள் கற்றுக் கொடுத்திருக்கமாட்டார் என்றே நம்புகிறேன். 

ஆண்களின் கைப்பாவைகளாக சுதந்திரம் பற்றியப் தவறான புரிதலினால் மீண்டும் ஆண்களுக்கே இறையாகிறீர்கள் என்று சொன்னவுடன் பெண்ணின் உடல் விசயத்தில், கற்பு விசயத்தில் ஆண்கள் உருவாக்கிய மதக் கேடயத்தை பிடித்துக் கொண்டு வரும் மதப்பற்றாளர்கள், தங்கள் கடவுள்கள், இறைத் தூதர்கள் சொல்லவில்லையென்றாலும், தங்களது சுயசிந்தனையின் மூலம், மனசாட்சியை பயன்படுத்தி பெண்களின் சமத்துவத்திற்கு, சுதந்திரத்திற்கு, சுயமரியாதைக்கு அவசியமாகும் சிபாரிசுகளை, திருத்தங்களை மேற்கொள்வார்களானால் அல்லாவும், ஏசுவும், சிவனும், விஷ்ணுவும், மோசசும் செவிமடுக்க தயங்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.  அப்படி அவர்கள் மறுப்பார்களேயானால் அவர்களையும் ஆணாதிக்கவாதிகள் என்றே கருதவேண்டியிருக்கிறது.

(இஸ்லாமிய நம்பிக்கையாளர்களின் பின்னூட்டங்களே அதிகமாக இருந்ததால் இஸ்லாம் பற்றிய குறிப்புக்கள் இதில் அதிகமாக இருக்கிறது.  மேலும் இதில் பின்னூட்டமிட்ட அவர்கள் பெண்கள் சுதந்திரம் குறித்துப் பேசினாலே அது பாலியல் என்ற அடைவுக்குள்தான் கொண்டுவருகின்றனர். பெண்களை எச்சரிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தால் உடனே தங்கள் மதப் பெருமைக்கு சாதகமாக அதைப்பயன்படுத்திக்கொள்ள விழைகின்ற்னர்.  பெண்களின் சுதந்திரம் மட்டுமல்ல இஸ்லாம்...குரான் ஆண்களுக்குச் சொன்ன அனைத்தையும் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்ற கேள்வியையும் இதனுடன் இணைக்கிறேன்.)

உதவிய நூல்: உலக வரலாற்றில் பெண்கள், ரோஸ்லிண்ட் மைல்ஸ்.


5 comments:

  1. இந்துத்துவ பின்னூட்டம் என நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டத்தை இட்டது நான்தான், எந்த அடிப்படையில் அது இந்துத்துவ பின்னூட்டம் என முடிவுக்கு வந்தீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இஸ்லாமை விமர்சித்தால் அவன் இந்துத்துவவாதியா? நீங்கள் எழுதிய கட்டுரையுடன் எனக்கு முரண்பாடு இல்லை ஆனால் கட்டுரையின் இறுதியில் "இஸ்லாமிய பெரும்பான்மை நிரம்பிய" என மத அடையாளத்தை முன்னிறுத்தியது நீங்கள்தான். இது நீங்கள் இஸ்லாமை முன்னிறுத்துவது போல உள்ளது அதனால்தான் நான் உங்களிடம் புர்க்கா பற்றிய கேள்வியை எழுப்ப வேண்டியதாயிற்று.

    ReplyDelete
  2. காயல்பட்டினம் எனும் கிராமத்தை இஸ்லாமிய கிராமம் என்றும், அப்படி ஒரு கிராமத்தை உதாரணம் காட்டியதற்காகவே நான் இஸ்லாமியச் சார்பில் பேசுகிறேன் என்றும் நீங்கள் எதை வைத்து குறிப்பிட்டீர்களோ அதே அடிப்படையிலேயே கட்டுரையின் மையப்புள்ளியைத் தாண்டி இஸ்லாமியக் குறியீடாக இருக்கும் புர்க்காவை பற்றி நீங்கள் கேள்வியெழுப்பியதை இந்துதுவ பின்னூட்டம் என்று நான் கருதவேண்டியதாயிற்று.
    பின்னூட்டத்தின் தொனியிலிருந்து அவ்வாறு சொல்லியிருக்கிறேன், அதில் தவறிருப்பின் மன்னிப்பையும் பதிவு செய்கிறேன். அதே போல் உதாரணத்தை வைத்து நான் இஸ்லாமை முன்னிறுத்துவதாக சொல்லும் உங்கள் பார்வையில் இருக்கும் தவறை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள் என்று நான் எதிர்ப்பார்க்கப் போவதில்லை. இஸ்லாமை முன்னிறுத்துவதற்கும், சில தனி மனிதர்களின் (இஸ்லாமியர்களின்) செயல்பாட்டை முன்னிறுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை நான் அறிவேன். மேலும் அத்தகைய மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியவர்கள் இஸ்லாமியர்களாகவும், அவர்கள் வசிக்கும் ஊர் இஸ்லாமியப் பெரும்பான்மையினர் வசிக்கும் ஊராக இருக்கும்பொழுது அதை அப்படித்தான் குறிப்பிட முடியும்.
    இங்கு நான் மார்க்கத்தை தூக்கிப் பிடிக்கவில்லை, ஆனால் உங்கள் கேள்வியில் // பெண்களை புர்காவில் அடைத்து வைக்க சொல்கிறது இஸ்லாம் இதை பற்றி கட்டுரையில் சொல்லமால் விட்டுவிட்டீர்களே? புர்கா பற்றிய உங்கள் பார்வையையும் அறிய விரும்புகிறேன்”// என்பதில் நீங்கள் நேரடியாக ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தையும் அதன் போதனைகளையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. பதிலளித்தமைக்கு நன்றி, பொதுவாய் நிறைகளை விடுத்து குறைகளை காண்பதே மனித இயல்பு. இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தின் சிறப்புகளாக விளையாட்டு,கூடி உண்பது,கூட்டுத் திருமணங்கள், காவல் நிலையம் மற்றும் திரையரங்கு இல்லாதது,மஹர் என பல காரணங்களை அடுக்கியிருந்தீர்கள். இஸ்லாமையையும் பெண்களையும் பற்றி பேசும்பொழுது புர்காவை பற்றிய நினைவு வருவது இயல்பென்றே நினைக்கிறேன்,"இஸ்லாமிய பெரும்பான்மை" எனும் ஒருவார்த்தைக்காக மட்டும் பின்னூட்டம் இடவில்லை, அந்த பத்தி முழுவதுமே அந்த கிராமத்தின் பெருமை பேசியிருந்ததால் புர்காவின் நினைவு வந்தது அதை பின்னூட்டமாக பகிர்ந்து கொண்டேன். நான் மார்க்கத்தை நேரடியாக கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக கூறியிருக்கிறீர்கள், அது உண்மைதான். ஒரு மார்க்கத்தை நோக்கி கேள்வி கேட்பது தவறான விசயமா என்ன?

    ReplyDelete
  4. வணக்கம்..ஒரு மார்க்கத்தின் நல்ல பண்புகளை சுட்டியதுமே நீங்கள் புர்க்கா பற்றின குறை ஒன்றை வைக்கும்போது நிறைகளை விடுத்து குறைகளை முன்வைப்பது பற்றி அறிகிறேன். எந்த மதமானாலும் அது பெண்ணை இரண்டாம் பட்சமாகத்தான் வைக்கிறது. ஆனால் இந்து மதம் பெண்களை ஒரு உயிராகக் கூட, இன்னும் அழுத்திச் சொன்னால் பழங்குடி அமைப்பு, பழங்குடி வழிபாடு தவிர பார்ப்பனியம் பெண்ணை தீண்டாத்தகாதோராய்த்தான் வைக்கிறது. புர்கா பற்றி நான் சொல்லவேண்டியவைகளை சொல்லியிருக்கிறேன்.

    நல்ல பண்புகளைச் சுட்டி பெருமை பேசுவது எப்படி தவறு இல்லையோ அதே சமயம் மாற்றுகளை கேள்வி எழுப்புவதும் தவறில்லை. நான் மார்க்கத்தைப் பற்றி எழுதுகையில் இன்னும் ஆழமாக அது குறித்து உரையாடலம்.

    ReplyDelete
  5. இஸ்லாமிய மார்க்கத்தின் மேல் உள்ள கோழைத்தனமான வெறியின் காரணமாகவே இக்கட்டுரை முதுகெலும்பற்ற கட்டுரையாளரால் வரையப்பட்டது என்பதை தெளிவாக உணரக்கூடியதாகவுள்ளது..

    நாத்திகம் எனும் மடமையில் மூழ்கியுள்ள உங்களைப் போன்ற எழுத்தாளர்களாலும் இதுபோன்ற மடமையை நம்பி எழுதிப்பிழைக்கும் இணையத்தளங்களாலும் என்றைக்குமே இஸ்லாத்திற்கு எதிராக ஒரு முடியையும் பிடுங்கிவிட முடியாது... இப்படித்தான் கோழிமுட்டைக்குள் இருந்து கொண்டு இல்லாதது பொல்லாததை எழுதி தங்களுக்குத் தாங்களே திருப்திப்பட்டுக்கொள்வதோடு.... உலகிலேயே தோன்றிய இருக்கின்ற வரப்போகின்ற அனைத்த மார்க்கங்களிலும் பெண்களுக்கு 100க்கு 100வீதம் கண்ணியத்தையும் உரிமையையும் வழங்கி அவர்களை பேணுகின்ற ஒரேயொரு மார்க்கம் இ்லாமிய மார்க்கம என்பது இக்கட்டுரை வரைந்த உங்களுக்கும் சரி இதையொரு கட்டுரையென்று வக்காளத்து வாங்கி பிரசுரித்த இணையமும் சரி நன்றி நன்றாக புரிந்த ஒன்று...

    உண்மையாகவே தூங்குபவனை எழுப்பிவிடலாம்.. ஆனால் தூங்குபவன் போன்று நடிப்பவனை எழுப்ப முடியாது.. நீங்கள் எல்லாம் 2 வது தரப்பு...

    உண்மை எதுவென்று உங்களது மனச்சாட்சிக்கு நன்கு தெரிந்தும் தெரியாதது போல் வரட்டு கௌரவத்திற்காகவும் வீண் புகழுக்காகவும் பேராசைக்காகவும் நடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்..

    உங்களைப் போன்றவர்கள் பற்றி ஏற்கனவே புனித குர்ஆன் எச்சரித்துவிட்டது... அதாவது وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ ۚ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا

    (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;' ஆகவேஇ விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும்இ இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். 18:29 என்பதாகும்..

    நீ பெண்ணுக்காக எழுதுகிறாய் என்பதற்காக எதையும் எழுதிவட்டால் அதெல்லாம் உண்மையாகிவிடாது.. இஸ்லாமியன் என்ற பெயரைக்கொண்டு சில விலங்குகள் பெண்களுக்கெதிராக செய்யும் கெடுதிகளை வைத்து இஸ்லாமிய மாரக்கத்தை கீழத்தரமாக நினைக்கும் நீ ஒரு எழுத்தாளனும் இல்லை கட்டுரையாளனுமில்லை... நீ நரகத்தில் விழும்போது நீ ஆதரித்த, உன்னைப் புகழ்ந்த, உனக்கு வாக்காளத்து வாங்கிய எந்த நாயும் உன்னைக் காப்பாற்ற வராது.. என்டைக்கு நீ திருந்தி உண்மையை உணர்ந்து இறைவனின் பக்கம் மீளுகின்றாயோ அன்டைக்கு உன்னை வரவேற்கும் சத்திய மாரக்கம் இஸ்லாம்..

    நீ பெண் பெண் என்று இஸ்லாத்திற்கு கேடு விளைவிப்பதாக நினைத்துக்கொண்டு நீயே உன் தலையில் மண்ணைப் போடுகின்றாய்.. ஆனால் இன்றைய உலகில் அனைவரும் வியப்போடும் ஆச்சரியத்தோடும் காண்பது உலகில் இஸ்லாமிய மார்க்கம் தவிர்ந்த எந்த ஒரு மார்க்கத்திலும் மக்கள் சத்தியத்தை நம்பி உண்மையை ஏற்று நுழைவது மிக மிக சொற்பமே... ஆனால் இன்று உலகளாவிய ரீதியில் ஆண்களை விட பெண்கள் இஸ்லாத்தை நாளாந்தம் பல ஆயிரக்கணக்கானவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.. அவர்களே மார்க்கத்தை படித்து மற்றவர்களையும் அழைத்துக்கொண்டிருக்கி்ன்றார்கள்.. இது உனக்கும் நன்றாக தெரியும்...

    பெண்களுக்கெதிரான மார்க்கம் இஸ்லாம் என்றால் அதை விட்டு விலகுபவர்கள் அதிகம் இருக்க வேண்டும். மாறாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள் உண்மையை உணர்ந்தவர்களாக... ஆனால் உன்னைப் போன்ற வடிகட்டிய முட்டாள்களுக்கு அது தெரிந்தும் நடிக்கத்தான் இயலுமெ தவிர வேறு எந்த பிரயோசனத்தையும் அடைய முடியாது.....

    கௌரி மகாலிங்கமான நான் இன்று இஸ்லாத்தோடு இணைந்து சத்தியத்தில் வாழ்நது வரும் எனக்கு இன்று உன்னுடைய பித்தலாட்டமான கட்டுரையை வாசிக்க கிடைத்தது.. அதற்கு என்னுடைய பதிலை சொல்ல வேண்டுமென்ற காரணத்தால் தான் இந்த பதில்..

    ReplyDelete