Jun 9, 2021

அம்பேதர் என்ன ஒரு கூட்டத்தின் தனிச் சொத்தா

 அம்பேத்கர் எழுதியதை மேற்கோள்களாக, போஸ்டர்களாக பயன்படுத்திக்கொள்ளக் கூட அவரை தொழுபவருக்கு மட்டுமே உரிமை உண்டு அப்படியிருக்கையில் அவரது சிந்தனைகளை திறனாய்வு செய்வதா! அது மகா பாவம்! அல்ல அல்ல சாதி வெறி! இதுதான் அம்பேத்கரியவாதிகளின் எழுதா விதி.

அம்பேத்கர் எழுதியதில் புரட்சிகரமாக, சாதகமாக உள்ள எழுத்துகள் மட்டுமே இதுவரை எடுத்தாளப்பட்ட நிலையில் அவரது எழுத்துகள் வாயிலாக அவரது மதப் பார்வை மற்றும் பொருளாதாரப் பார்வை எத்தகையது என்பதை ரங்கநாயகம்மா திறனாய்வு செய்தார். வழக்கம் போல் அதை சாதிய அவதூறுகளாலும், வசைகளாலும், மிரட்டல்களாலும் (வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க வேண்டும் என்று அப்போதே ஒருவர் எழுதினார் ). அதனைத் தொடர்ந்து “சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலை நான் தொகுத்தேன், மொழிபெயர்த்தேன். என்னுடைய பதிலுரைகளையும் இணைத்தேன்). ஆனால் அந்நூலை பற்றி அம்பேத்கரியர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை!

ஏனெனில் அதன் தலைப்பில் “அம்பேத்கர்” இல்லை.

அடுத்ததாக, ரங்கநாயகம்மா மறுப்பு நூல் வந்ததாக சொல்லப்பட்டது. வழக்கம் போல் சுயசாதி பற்றிலிருந்தும், அரசியலில் பிழைத்திருக்க வேண்டியும் ரங்கநாயகம்மாவின் சொற்களை திரித்து! அல்லது அவர் இதைத்தான் சொல்ல வருகிறார்! இப்படித்தான் பொருள் கொடுக்கிறார் என்று தங்கள் வசதிக்கேற்ப, தங்கள் “வட்டத்தினரை” ஆசுவாசப்படுத்த முயலும் ஒரு நூல் அது!

இதற்கிடையே அம்பேத்கரை கடவுளாக மாற்றி சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடமே தீர்வுள்ளது என்று அடையாள அரசியல் செய்யும் போக்கிற்கு (இதன் பிரதான நோக்கம் மார்க்சியத்தை ஒழிப்பது, கம்யூனிஸ்டு அரசியலை ஒழிப்பது) - எதிராக அம்பேத்கரது புத்தரும் அவரது தம்மமும் என்னும் நூலை வசுமித்ர எழுதினான். அதை அறிவித்தவுடன் ஒரு கூட்டம் தன் சதி வேலைகளைத் தொடங்கியது. மார்க்சியம் என்றால் என்னவென்றே அறியாத “புலி எதிர்ப்பு போராளி” ஒருவர் களம் இறங்கினார். ரங்கநாயகம்மாவின் அறிவை மட்டமாக பேசியதற்கு எதிர்வினையாக வசுமித்ர ஒரு கேள்வியை வைத்தான்! அதை திரித்து இன்று இந்த நொடிவரை வசுமித்ர அம்பேத்கரை அவதூறாக பேசிவிட்டான் என்று ஒரு கூட்டம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது வசுமித்ர அதற்கு விளக்கமளிக்கிறான்.

அம்பேத்கரின் எழுத்துகளை இப்படி புரிந்து கொள்ளக் கூடாது, அப்படிப் புரிந்துகொள்ளக் கூடாது! இடையிலிருந்து பேசாதீர்கள், முழுவதுமாக படியுங்கள், அந்நூலை அம்பேத்கர் எழுதவே இல்லை, அதை தொகுத்தார்! அது அவருடைய மேற்கோள்! அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதினார்! அவர் எழுதவில்லை! இப்படி வகை வகையாக அம்பேத்கரின் “தவறான” சில வரலாற்று மற்றும் அரசியல் ரீதியான எழுத்துகளுக்கு விளக்கம் கொடுத்தனர்!

இப்போது நாம் விளக்கம் கொடுத்தால் ஒரே ஒரு பதில் தான் வரும் – சாதி வெறி!

யாருக்கு சாதி வெறி என்பதை இனியும் நாங்கள் விளக்க வேண்டியதில்லை!

ஆனால், மேற்சொன்ன சமாளிப்புவாதங்களை நாம் எல்லா மத நூல்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கத் தொடங்கினால் அது எத்தகைய அறிவார்ந்த சூழ்நிலையை இங்கு ஏற்படுத்தும்?

கம்யூனிசத்தைப் பன்றித் தத்துவம் என்றார், மார்க்ஸியம் பற்றி எதிர்மறையாக பேசினார்! தாழ்த்தப்பட்டவர்கள் கம்யூனிசத்தை நாடினால் நாடே அதோகதிதான் என்பார்! ஏன்? ஏனென்றால் அன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பை கண்டுகொள்ளவில்லை! அவர்கள் மேல் இருந்த கோவத்தில் அப்படி பேசினார் என்று மீண்டும் சமாளிப்புவாதம்! அப்படியெனில் மார்க்ஸையும், மார்க்சியத்தையும் ஏன் அவர் மறுக்க வேண்டும்? அது வன்முறைய்ப் பாதை என்று ஏன் முடிவுக்கு வரவேண்டும்? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் உள்ளிட்டோர் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அனைவரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை! ஆனால் மார்க்சியத்தை எதிர்மறையாக சித்தரிக்கையில், குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் அரசியலை மடைமாற்றம் செய்கையில், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை குலைக்க அதை முன்னெடுக்கையில் அதற்கு காரணமாக அமையும் அரசியல் சித்தாந்தத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை உள்ளது.

ஆதாரம் எங்கே ஆதாரம் என்கிறார்களே அம்பேத்கர் மார்க்ஸை விமர்சிக்க எதை ஆதாரமாக கொடுத்துள்ளார்?

எல்லாவற்றுக்கும் மேலாக பொருள்முதல்வாத விஞ்ஞான சித்தாந்தத்தை கருத்துமுதல்வாத (கால் பொருள்முதல்வாத??) சித்தாந்தத்தோடு ஒப்பிட்டு மார்க்சியம் உதவாது பௌத்தமே தீர்வு என்று போதித்து சென்றார். இதை நாம் திறனாய்வு செய்யக் கூடாதா?

அம்பேத்கரது எழுத்துகள் என்ன ஒரு கூட்டத்தின் / சாதியின் தனிச்சொத்தா?

அம்பேத்கர் ஒரு பொருளாதார அறிஞர் என்னும் அடிப்படையிலும் மார்க்சியர்கள் அவரை விமர்சிக்கலாம்! விமர்சிப்போம்!

சாதியத் தலைவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸா புத்தரா என்றோ, மார்க்சியமா பௌத்தமா என்றோ ஆய்வுகள் செய்யவில்லை. சாதி ஒழிப்பிற்கு தீர்வு தம்மிடம் உள்ளது என்றும் சொல்லவில்லை! எனவே நாங்கள் அத்தகைய சாதியத் தலைவர்கள் குறித்து பேசவோ, ஆய்வு செய்யவோ ஒன்றுமே இல்லை! இதுகூட தெரியாத அறிவிலிகள் ஏதோ அறிவுபூர்வமாக கேள்வி எழுப்புவதாக நினைத்துக் கொண்டு “அவரை விமர்சிச்சியா, இவரை விமர்சிச்சியா?” என்று உளறிக்கொண்டிருக்கின்றனர்!

அவர்களது உளறல்களும் வசைகளும் அம்பேத்கருக்கே இழுக்கு சேர்க்கிறது! எங்களது ஆய்வுகள் அல்ல!

வசுமித்ரவின் விளக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்

// ஆண்குறி என்பது ஆபாசமான வார்த்தையல்ல. அது ஆணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ஒரு சொல். அவ்வளவே. ஆண்குறிக்கான வசைச் சொற்கள் என்னவென்று தெரியாதவர்கள் அல்ல நாம். விசயத்திற்கு வருகிறேன்.//

// அம்பேத்கரின் பௌத்தப் புரிதலை முன்வைத்தே அந்தக் கேள்வியை எழுப்பியிருந்தேன். அந்தக் கேள்விக்கான அடிப்படை அவசியமும் இருக்கிறது.

அம்பேத்கரது பௌத்தமானது புத்தரின் ஆண்குறி உள்ளிட்ட அங்க இலட்சணங்களை எப்படிப் பதிவு செய்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாகப் பார்க்கலாம். அதற்கு முன்னதாக சிவனின் ஆண்குறி குறித்து அம்பேத்கரின் வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்.

//

https://www.facebook.com/makalneya/posts/5980320278652594

 

No comments:

Post a Comment