Sep 11, 2022

சாதி வெறி சாதி வெறி என்று கூவிக்கொண்டு திரிபவர்களுக்கு

 ரங்கநாயகம்மா அம்பேத்கரை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் ஒரு புத்தகத்தை தான் எழுதியுள்ளாரா? கொற்றவையாகிய நானும் அதை மட்டும் தான் மொழிபெயர்த்துள்ளேனா?

இராமாயணம் விஷ விருட்சம், இதுதான் மகாபாரதம், வேதங்களில் என்ன இருக்கிறது என்று அனைத்தையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் விமர்சித்துள்ளார்.

இதுதவிர குழந்தைகளுக்கான பொருளாதாரம், மார்க்சின் மூலதனத்திற்கு அறிமுகம். இந்திய தத்துவங்கள் கபிலர் தொடர்ங்கி மார்க்ஸ் ஏங்கல்ஸ் வரை ஒவ்வொருவரின் தத்துவங்களையும் அறிமுகம் செய்கிறார். இதுதவிர நிறைய புத்தகங்கள், கட்டுரைகள்!

அம்பேத்கர் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் ஆய்வில் மார்க்சியத்தை எதிர்மறையாக சித்தரிக்கிறார். ஒரு மார்க்சியர் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். காலச் சூழலில் நான் கண்ட கள அரசியலின் விளைவாக அந்த புத்தகத்தை நான் மொழிபெயர்த்தேன். ஆனால் புத்தகம் வந்த நாள் முதல் இங்கே அரங்கேறிய அராஜகமும், தாக்குதல்களும், அவதூறுகளும், ஆபாசப் பேச்சுகளும் கொஞ்ச நஞ்சமல்ல! மனம் துவண்டு போவதும், மீண்டு எழுவதுமாக இந்த 5,6 வருடங்கள் கழிந்தன. மேலும் மேலும் பலமாகத் தான் எழுகிறேனே ஒழிய, சாய்க்க இயலாது. மார்க்சியம் அந்த அறிவுத் தெளிவையும், துணிவையும் வழங்கி உள்ளது.

ரங்கநாயகம்மாவின் இராமாயணம் ஒரு விச விருட்சம் நூலையும் நான் மொழிபெயர்த்து வருகிறேன். அக்கப்போர்களின் காரணமாக மிகவும் தாமதமாகிறது.

குழந்தைகளுக்கான பொருளாதாரக் கல்வி மொழிபெயர்ப்பு முடிந்து வடிவமைப்பு காரணமாக முடங்கி, தற்போது வெளிவரும் நிலையில் இருக்கிறது!

உரையாடல்னு போட்டுட்டு கமெண்ட்ஸ க்ளோஸ் பண்ணிடுறோமாம்! இவங்க தரப்பு மட்டும் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டிருக்காங்க போல!

5 வருடங்களாக சமூக ஊடக தளத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். அதனை தொகுத்து வந்த நூல் தான் சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் தொடரும் விவாதம்! சாதி, வர்க்கம், கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்கள் செய்த சரி என்ன, தவறு என்ன? பெரியார் அம்பேத்கர் பங்களிப்பு என்ன, சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத் திட்டம் என்று எல்லாவற்றுக்கும் பதில் உள்ளது. ஆனால் இந்த புத்தகம் பற்றி வாயே திறக்கவில்லை அந்த அராஜக கும்பல்.

தலைப்பில் அம்பேத்கர் போதாது என்று உள்ளது.

எப்படி நீ எங்க தலைவர விமர்சிக்கலாம் என்று சாதிக் கட்சிகளில் எப்படி கொந்தளிப்பார்களோ, அப்படித்தான் இவர்களும் கொந்தளித்துக் கொண்டு மிகவும் மோசமாக பேசினார்கள். பேசி வருகிறார்கள். இதையெல்லாம் எவ்வளவோ பார்த்துட்டோம்.

கண்டபடி பேசியும் பொருமையாகவே பதில் சொல்லி வந்தும், ஏதோ ஒரு கணத்தில் அவர்கள் பாணியில் இறங்கி பதில் சொன்ன உடன் வழக்கும் தொடுத்தார்கள். ஒரு stationல மட்டும் இல்ல, பல ஊர்களில் புகார் கொடுத்தார்கள் வசுமித்ர மீது. இதுதான் இவர்கள் உரையாடல் நடத்தும் இலட்சணம்.

சிபிஎம்மை வைத்தே வழக்கு போட வைத்தது தான் இவர்கள் சாமர்த்தியம் ஏனென்றால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே இவங்கள ஏத்துக்கல என்ற உணர்வை ஏற்படுத்துவது. அதன் மூலம் எங்களை போலிகள் என்று கட்டமைப்பது! இந்த அரசியல் எல்லாம் சாதாரண மக்களுக்கு புரியாது!  ஆனால் அது தவறு என்று இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்பு அறிக்கை வெளியிட்டது!  கருத்துச் சுதந்திரம், உரையாடல் என்று பேச இந்த பிரிவுக்கு தகுதி இருக்கிறத?

உணர்ச்சிகரமான பேச்சுகள் மூலம் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் ரசிகர்களும் ரசிக மனோபாவத்தில் வன்மத்தைக் கொட்டிக் கொண்டிருப்பார்கள். சாதிக்கட்சி தொண்டர்கள் போல்!

இவர்களை தூண்டி விட்டவர்களுக்கெல்லாம் அப்பவே பதில் சொல்லியாச்சு! அந்த தூண்டுகோல்கள் யாரும் நேரில் பார்த்தால் உரையாட வருவதே இல்லை! அடுத்தடுத்து வசுமித்ரவும் 2 புத்தகங்கள் போட்டு உரையாடிக் கொண்டே தான் இருக்கிறார். அவர் முகநூலில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார். ஆபாசமாக பேசுபவர்களையும் பொருட்படுத்தி.. நானாவது முடக்கிவிட்டு போய்விடுவேன்.

ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், உரையாடல்னு பேசுனா மட்டும் போதாது, அதை கடைபிடிக்கனும்! “அடையாளச் சிக்கல்” அனுமதிக்காது! அதிலிருந்து மீள்வதற்கு வர்க்க உணர்வைப் பெற வேண்டும். அதற்கு மார்க்சியம் அவசியம் தேவை!

ஒண்ணு மார்க்சியத்த படிங்க.. இல்லையா 5 வருஷமா எழுதிப் போட்டிருக்குறதை எல்லாம் தேடிப் படிங்க..

அடுத்தும் புத்தகங்கள் வந்துட்டே தான் இருக்கும்! என்ன முத்திரை வேணா குத்துங்க.. வழக்கு கூட தொடுத்துக்கோங்க.. முதலாளித்துவ அடையாள அரசியலுக்கு எதிரான எங்கள் போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

டிவிட்டர்ல உக்காந்த நக்கல் அடிச்சுட்டிருக்கவங்களையெல்லாம் பொருட்படுத்தி பதில் சொன்னாதான் உரையாடல்னு எந்த சட்டம் சொல்லுது. உங்க தலைவர்கள் அப்படிதான் எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்காங்களா? உங்க immaturityku ஒரு அளவே இல்லையா.

அம்பேத்கர் விமர்சனம் மட்டும் தான் நான் எழுதியும், பேசியும் உள்ளேனா? பெண்கள் விடுதலை, இஸ்லாமியர் மீதான அடக்குமுறை, சிஏஏ, அரசின், முதலாளித்துவத்தின், சாதி ஆதிக்கம், ஆணவக்கொலை என்று  எத்தனையோ பிரச்சினைகள் குறித்துப் பேசிக் கொண்டு தான இருக்கேன். அப்ப சாதிவெறியரா தெரியல போல!

முத்தையா படத்த  பாராட்டுறனாம், உயர்த்திப் பிடிக்குறனாம். எங்க உயர்த்திப் பிடிச்சிருக்கேன். வசு நடிச்சதுக்கு வாழ்த்து சொல்லி ஒரு டிவீட் .. பிறக்கு அப்பா மகன் பகைய பேசிருக்குன்னு ஒரு டீவீட் பண்ணதுக்கு இம்புட்டு குதிப்பு! ஆனா சு.வெங்கடேசன் அதே மேடைல, ஆடியோ ரிலீஸ்ல கலந்துகிட்டாரு. சூர்யா அடுத்து அவரோடு ஏதோ படம் பண்ணப் போறதா சொல்றாரு… அப்ப சு. வெங்கடேசனும் சாதி வெறியரா?

முத்தையா படத்த மட்டும் தான் பாராட்டுறேனா? உங்க அல்பத்தனத்துக்கு அளவே இல்லையா? ஊரே பாராட்டிய சுழல் பற்றிய எனது பார்வை வேறாக இருந்தது. ஏன் இன்னைக்கு ரஞ்சித்துக்கு ஆதரவா பேசிட்டு இருக்குற லெனின் பாரதியோட மேற்குத் தொடர்ச்சி மலைய எப்படி தூக்கிட்டு சுத்துனோம். கம்யூனிஸ்ட்களை தப்பா காட்டிருக்க என்று அவரை எதிர்த்தபோது, “சுயவிமர்சனமா” எடுத்துக்குவோம் தோழர்னு சொன்னதும் இந்த கொற்றவை தான்! வரலாறு தெரியாம எதையாச்சும் உருட்டிட்டு திரியுறது!

காலா படம் வந்த போது தாக்குதல் தொடுத்தவர்களுக்கு எதிராக பேசியவர்களில் நானும் ஒருவர். அதற்காக ரஞ்சித்தின் அரசியல் மற்றும் இடதுசாரி அரசியல் பார்வை பற்றிய விமரசனத்தை வைக்கவே கூடாது என்பது என்ன மாதிரியான கருத்து சுதந்திரம்? பாராட்டும் போது நாங்க நட்பு, விமர்சனம் பண்ணா சாதி வெறியர்! காமெடியா இல்ல! ரஞ்சித் தான் ஒட்டுமொத்த தலித்துகளின் பிரதிநிதியா என்ன?

தலித் மக்களுக்கு எதிராக எங்கே பதிவு செய்திருக்கிறோம். தத்துவார்த்த விவாத தளத்தில் அறிவுஜீவியான அம்பேத்கரை அறிவுத் தளத்தில் அவரது கண்ணோட்டங்கள், ஆய்வுகளைத் தானே விமர்சிக்கிறோம்! தத்துவார்த்த விவாதங்கள் எப்படி நடக்கும் என்று ஒன்று தெரிந்திருந்தால் அதை எப்படி அனுக வேண்டும் என்று தெரியும். உலகாயதம் என்கிற நூலையாவது வாங்கிப் படியுங்கள். மேலும் அம்பேத்கரை நாங்கள் மட்டும் தான் விமர்சித்துள்ளோமா? இதுகாரும் வந்துள்ள நூல்களைத் தேடிப் படியுங்கள்.

அவ்வளவு ஏன், என்னோட ரெண்டாவது புக்கையாச்சும் படிச்சுட்டு பதில் சொல்லுங்களேன்!

சீதா ராமம் படத்த பாராட்டிட்டேனாம், உடனே நான் ஆர்.எஸ்.எஸ், சாதிவெறி! அந்த போஸ்டுக்கு கீழையே ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஷேர் பண்ணிருக்கேன் அதை தேடிப் பாருங்க.. நான் ஒரு படத்துல  சில விசயங்களை வேற மாதிரி பார்க்குறேன். ஒருவேளை சில விசயங்கள நான் பார்க்கத் தவறி இருந்தா சுட்டிக் காட்டுனா கத்துக்கப் போறேன்.. உடனே ஓடி வரது ஒரு ரப்பர் ஸ்டாம்ப தூக்கிட்டு! ஏன்னா இவங்களுக்கு இவங்க அடையாளத்த நிறுவிட்டே இருக்க யாரையாச்சும் திட்டிட்டே இருக்கனும்! குறிப்பா இவங்க அரசியல அம்பலப்படுத்துறவங்கள துடைத்தழிக்கனும்.. சாதிவெறி கட்சிகள் போல், இந்தப் பக்கமும் ஒரு கூட்டம் அப்படித்தான் இருக்கு!

தோழர் திருமா கேட்ட மாதிரி “அப்ப யாரோட தான்யா வேலை செய்யப் போறீங்க”

-            

 அறிவுபூர்வமாக எதிர்கொள்ளாமல் சாதியரீதியாக தாக்குதல் தொடுக்கும் நபர்களைப் பார்த்து உங்களுக்குத்தான் சாதியபுத்தி இருக்கிறது என்கிறார். இதை Reverse Casteism என்பார்கள். நீங்கள் செய்வதும் இதுதான்! ஆனால் அது காலாவதியாகிப் போன எதிர்வினைகீறல் விழுந்த ரெக்கார்ட்! – 5 வருஷ பதிவுகள தேடிப் படிங்க!

 ஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை

http://saavinudhadugal.blogspot.com/2016/08/blog-post.html

புத்தகத்தின் கருத்தைத் தவிர மற்ற அனைத்தையும் ஆராயந்தார்கள்https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid02z69rxUURAK5rcvfKUsiwHx4ummXCxH1Aa92fEM8iAEvw8MpVjx4g87hkVsyc2gicl

 இராமாயணம் ஒரு விஷ விருட்சம் - ரங்கநாயகம்மா

 http://saavinudhadugal.blogspot.com/2020/03/blog-post_28.html

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid02itVyaLVrSDhrb4Tihe5WRxZy2U5MSvd44Bz2vdEKin7PPiMgd4gHAUg791DiQXrFl

 

 

No comments:

Post a Comment