Dec 16, 2014

இதுவரை ஏன் இதனை எவரும் முயற்சித்திருக்கவில்லை?:



‘பாலியல் தொழிலை ஒழிக்க முடியாது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்பன போன்ற நூற்றாண்டுகால வழமையான பேச்சுக்களுக்கு மத்தியில், அத்தொழிலை ஒழிப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கும் வெற்றியானது தீர்வை நோக்கி ஒளியூட்டும் ஒரு தனித்த கலங்கரை விளக்கம் போல் உள்ளது. ஐந்தே வருடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சுவீடனில் குறைந்துள்ளது. தலைநகர் ஸ்டால்க்ஹோமில் தெருவோர பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காகக் குறைந்துள்ளன. ஜான்களின் (பாலியல் வாடிக்கையாளர்) எண்ணிக்கையும் 80% குறைந்துள்ளன. பல சுவீடிஷ் தெருக்களில் பாலியல் தொழில் முற்றிலுமாக மறைந்துவிட்டது. சுவீடனில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக இருந்தபோது, இருபதாம் நூற்றாண்டின் கடந்த மூன்று பத்தாண்டுகளாக அதிகரித்து வந்த பிரபல சுவீடிஷ் விபச்சார விடுதிகளும், மசாஜ் பார்லர்களும்கூட மறைந்துவிட்டன.

பாலியல் தொழிலுக்கு சுவீடன் நாட்டின் தீர்வுஏன் இதை எவரும் முன்னரேமுயற்சி செய்திருக்கவில்லை?

கூடுதலாக, பாலியல் தொழிலுக்காக சுவீடனுக்குக் கடத்தப்படும் வெளிநாட்டுப் பெண்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்றளவிற்கு வந்துவிட்டது. கடந்த சில வருடங்களில் வருடத்திற்கு 200 முதல் 400 பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டனர் என்று சுவீடிஷ் அரசாங்கம் கூறுகிறது. அண்டை நாடான ஃபின்லாந்தில் வருடத்திற்கு 15,000 முதல் 17,000 பெண்கள் கடத்தப்படுகின்றனர் எனும் நிலையை ஒப்பிடுகையில் மேற்சொன்ன எண்ணிக்கை வெகு சொற்பமே.
மற்ற எந்த நாடுககளோ அல்லது மற்ற எந்த சமூகப் பலப்பரீட்சை முயற்சிகளோ சுவீடனின் நம்பிக்கைக்குறிய முடிவை ஈன்றதில்லை.
மகத்தான இந்த சாதனையை அடைய அப்படி என்னதான் சிக்கலான சூத்திரத்தை சுவீடன் கையாண்டது?
வியப்புகுரிய வகையில், சுவீடனின் சூத்திரம் ஒன்றும் அப்படி சிக்கலானதல்ல. உண்மையில், அதன் கொள்கை மிகவும் எளிதானதாகவும், சமயோசித அறிவைக் கொண்டு எவரும் எளிதில் கண்டுவிடக் கூடியத் தீர்வாகவே தெரிகின்றது. அதனால்தான் உடனேயே இக்கேள்வி நமக்கு எழுகிறது, “ஏன் இதை இதுவரை எவரும் முயற்சிக்கவில்லை?”
சுவீடனின் 1999ஆம் ஆண்டின் புரட்சிகரமான சட்டம்
பல வருட ஆய்வுகளுக்குப் பிறகு 1999இல் சுவீடன் ஒரு சட்டத்தை அறிமுகம் செய்தது: அ) பாலின்பத்தை (Sex) வாங்குவதை குற்றமெனக் கருதுதல் ஆ) பாலின்பத்தை விற்பதை குற்றமற்றதாகக் கருதுதல். இந்தச் சட்டத்தின் பின் இருக்கும் புதுமையான கொள்கையை அரசு தனது சட்ட ஆவணத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறது:
“சுவீடன் நாட்டைப் பொறுத்தவரை, பாலியல் தொழில் என்பது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான ஆணாதிக்க வன்முறையின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் ஒரு சுரண்டல் எனவும் அது ஒரு பிரதான சமூகப் பிரச்சினை எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது… பெண்களை, குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக ஆண்கள் வாங்குவதும் விற்பதும் நடக்கும்வரை பாலியல் சமத்துவத்தை நாம் அடைய முடியாது.”
பாலியல் தொழில் பற்றிய சுவீடனின் இரண்டுபக்க சட்ட செயல்திட்டத்தோடு கூடுதலாக ஒரு பக்கமானது பாலியல் தொழிலிலிருந்து வெளியேற நினைக்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான சமூக நல நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மக்களுக்கான விழிப்புணர்வுக் கல்விக்காகவும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளபடியே, சுவீடனின் தனித்துவமான இந்த செயல்திட்டம் பாலியல் தொழிலை பெண்களுக்கெதிரான வன்முறையாகக் கருதுகின்றது. அதனால் பாலின்பத்தை வாங்குவதன் மூலமாக பெண்களை சுரண்டும் ஆண்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர், பெண் பாலியல் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், இதுநாள்வரை இருந்த பாலியல் தொழில்குறித்த மடத்தனமான ஆண் சார்பை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு கல்வி வழங்கப்படுகின்றது. அவர்களது கண்ணோட்டத்தை சட்டத்தின் பிடி கொண்டு இருக்கிப் பிடிக்கும் வகையில், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டத் தொகுப்பின் ஓர் அங்கமாக பாலில் தொழில் சட்டம் சுவீடனில்1999ஆம் வருடம் இயற்றப்பட்டது.

அதன் பாதையில் தொடக்ககாலத் தடைகள்
ஆர்வமூட்டும் வகையில், அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரான விரிவான திட்டமிடல் காலத்தின்போது முதல் ஓரிரு வருடங்களில் இந்தப் புதுமையானத் திட்டத்தில் பெரிதாக ஏதும் நடைபெறவே இல்லை. பாலியல் தொழில் சுவீடனில் சட்டபூர்வமாக இருந்த காரணத்தால் முந்தைய மனநிலையிலேயே இருந்த காவல்துறையானது மிகவும் குறைவான ‘ஜான்களையே’ கைது செய்தது. தோல்வியை உலகெங்கிலும் உள்ள எதிர்ப்புவாதிகள் மிதமிஞ்சைய வகையில் விளம்பரப்படுத்தியதோடு “பாருங்கள்! பாலியல் தொழில் எப்போதும் இருந்திருக்கிறது, இனியும் இருக்கும்” என எக்காளமிட்டனர்.
அவர்களது திட்டத்தை சரியாகப் புரிந்துகொண்ட சுவீடர்கள் அவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்கவில்லை. விரைவில் பிரச்சினையை அடையாளம் கண்டு அதற்கு தீர்வும் கண்டனர். அவர்களின் சிறப்பான முயற்சி எங்கு கோளாரில் சிக்கியது என்பதைக் கண்டுபிடித்தனர். சட்ட அமலாக்கப் பிரிவானது தன் கடமையை சரிவரச் செய்யவில்லை. சுவீடிஷ் மக்களும், சட்டமும் புரிந்துகொண்ட பிரச்சினையின் ஆழத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத காவல்துறைக்கே தீவிர பயிற்சித் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தது. பாலியல் தொழில் என்பது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க வன்முறை. சுரண்டுபவர்கள் மற்றும் வாங்குபவர்களே தண்டனைக்குரியவர்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாலியல் தொழிலாளிகள் உதவிக்குரியவர்கள் என்பதில் சுவீடன் அரசு உறுதியாய் இருந்தது. சுவீடிஷ் அரசாங்கம் பெரும் நிதியை ஒதுக்கி அந்நாட்டின் காவல்துறையினர், அரசு வழக்குறைஞர்கள், மேலிருந்து கீழ்நிலை வரையிலான அதிகாரிகள் ஆகியோருக்கு தீவிர பயிற்சி அளித்து, இலக்கையும் கண்டிப்போடு தெளிவுபடுத்தியது. அதன் பிறகே எவரும் ஒப்பிட முடியாத விளைவுகளை அந்நாடு கண்டது.
சட்டத்தின் தோல்வி அல்லது ஒழுங்கமைப்பு உத்தி
பாலியல் தொழில் பெருமளவில் நடைபெறும் ஒரு நாட்டில், நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் செயல்புரிந்த இந்த சுவீடிஷ் முறையானது ஓர் தனித்த உதாரணமாகும். 2003இல், பாலியல் தொழில் குறித்த தன்னுடைய அனுகுமுறையை மறுஆய்வு செய்யும் வகையில், சுவீடிஷ் அரசாங்கமானது மற்ற நாடுகளில் உள்ள பாலியல் தொழில் கொள்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்யுமாறு லண்டன் பல்கலைக்கழகத்தைப் பணித்தது. சுவீடனின் செயல்திட்டத்தை ஆய்வு செய்ததோடு, ஆய்வாளர்கள் ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உத்திகளான பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல், ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உத்திகளை ஆய்வு செய்தது. பாலியல் தொழிலை குற்றமென அறிவிக்கும் அமெரிக்கச் சட்டம் போன்ற சட்டங்கள் இருக்கும் சூழல்களை ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அதன் விளைவுகள் என்னவென்பது வெட்டவெளிச்சம். பாலியல் தொழிலாளிகளை மீண்டும் மீண்டும் கைது செய்வதன் தோல்வியும், பயனின்மையும் உலகறிந்ததே.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாடுகளில் கிடைத்த தரவுகளின்படி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற நிலையும், மரபார்ந்த நிலையிற்கு ஒத்ததாகவும், சொல்லப் போனால் அதனைவிட ஏமாற்றமளிப்பதுமாகவே இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் விளவு எதிர்மறையாகவே இருந்தது.
அவ்வாய்விபடி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற அனுகுமுறையானது:
  • பாலியல் தொழிலின் அனைத்து பண்புக்கூறுகளிலும் ஓர் அதிகரிப்பு,
  • பாலியல் தொழிலை மையப்படுத்திய திட்டமிடப்பட்ட குற்றங்களின் அதிகரிப்பு,
  • குழந்தைப் பாலியல் தொழில் அதிகரிப்பு
  • வெளிநாட்டுப் பெண்கள் கடத்தப்படுதல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையில் நம்பமுடியாத வகையிலான அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில், விபச்சாரம் என்பது ஒழுங்கிற்குட்பட்ட ஒரு தொழிலாக நிறுவப்பட்ட விக்டோரிய மாகாணத்தில், விபச்சார விடுதிகளின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தன. அதை ஒழுங்குபடுத்துவது மிகவும் கடினமானதாகி, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஊழல் மற்றும் பாலியல் தொடர்புடைய குற்றங்களின் ஊற்றானது விக்டோரியா. கூடுதலாக, பாலியல் தொழிலாளிகளிடம் நடத்திய ஆய்வில், அவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது சட்டபூர்வமாக்கப்பட்ட சூழலிலும் பாலியல் தொழிலாளிகள் அத்தொழிலில் தள்ளப்பட்டதாகவும், பலவந்தப்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தில் சட்டபூர்வமாக பாலியல் தொழில் செய்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 79% பேர் அத்தொழிலிருந்து விடுபட நினைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நாடுகளில் ஒவ்வொரு சட்ட அல்லது ஒழுங்கமைப்பு திட்டங்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைக்கும் நபர்களுக்கு உதவிகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தாலும், எதுவும் பயனளிப்பதில்லை. அதற்கு நேர்மாறாக, சுவீடனில், பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அரசாங்கம் எராளமான சமூக சேவை நிதி கொண்டு உதவி செய்தது.
சுவீடனின் 60% பாலியல் தொழிலாளிகள் அரசின் அந்த நிதித் திட்டங்களை செவ்வனே பயன்படுத்தி, பாலியல் தொழிலிலிருந்து வெளியேறினர்*.
* பாலியல் தொழில் கொள்கை பற்றிய ஸ்காட்டிய அரசாங்கத்தின் முழு அறிக்கையையும் படிக்க
ஏன் இதுவரை இதை எவரும் முயற்சிக்கவில்லை?
சுவீடனின் வெற்றி நாம் பின்பற்ற வேண்டிய பாதைக்கு இவ்வளவு தெளிவாக ஒளியூட்டிய பின்னரும், ஏன் இதுவரை எவரும் அப்பாதையைப் பின்பற்றவில்லை? அப்படி சொல்லிவிட முடியாது. ஃபின்லாந்து மற்றும் நார்வே அப்பாதையில் செல்வதற்கான அடிகளை எடுத்து வைக்கவிருக்கிறது. மேலும், தன்னுடைய ஆய்வின் பரிந்துரைகளை ஸ்காட்லாந்து எடுத்துக்கொள்ளும் எனில், அதுவும் அதே பாதையில் செல்லும். ஆனால், சுவீடனின் திட்டத்தை ஏன் மற்ற நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை எனும் கேள்விக்கு ஏன் மற்ற அரசாங்கங்கள் சுவீடனின் தீர்வை நடைமுறைப்படுத்திப் பார்க்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பாலியல் தொழிலாளிகளை ஆண் பலாத்காரத்திற்கும், ஆணின் வன்முறைக்கும் உள்ளாகும் பலியாள்களாகக் காண ஒரு அரசாங்கம் முதலில் பாலியல் தொழிலை ஆணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பதை விட ஒரு பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பது அவசியம். உண்மையில், பெரும்பாலான, சொல்லப்போனால் உலகின் அனைத்து நாடுகளும் பாலியல் தொழிலை மட்டுமின்றி மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் முதன்மையில் ஆணின் கண்ணோட்டத்திலிருந்தே காண்கின்றன.
அதற்கு நேரெதிராக, சுவீடன் நாடானது பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, 1965இல் திருமணத்தில் வல்லுறவை குற்றமென அறிவித்தது சுவீடன். 1980களில் கூட பெண்களுக்கு தன் உடல் மீதான கட்டுப்பாடு உண்டு என்னும் அடிப்படை உரிமையைக் கூட அமெரிக்கா போன்ற நாடுகள் உறுதி செய்யவில்லை. அதேபோல் அரசாங்கப் பணிகளில், அனைத்து மட்டங்களிலும் அதிகமான பெண்கள் வேலை செய்யும் நாடாக சுவீடன் நாடே திகழ்கிறது. 1999இல், அப்புரட்சிகரமான சட்டத்தை சுவீடன் நிறைவேற்றியபோது 50% பெண்கள் சுவீடிஷ் அரசாங்கத்தில் அங்கமாய் இருந்தனர்.
சுவீடனின் பாலியல் தொழில் கொள்கையானது முதலில் தயாரித்து ஆதரவு தேடும் பணியில் இறங்கியது பெண்களின் பாதுகாப்பிற்கான சுவீடன் நிறுவனம் (Sweden’s organization of women’s shelters) ஆகும். பிறகு சுவீடனின் இருகட்சிகளைச் சார்ந்த தனித்துவமான சக்திவாய்ந்த எண்ணற்ற பெண் பாராளுமன்றவாதிகள் அக்கொள்கையைப் பேணி வளர்த்து, போராடினர். அத்தோடு சுவீடன் நின்றுவிடவில்லை. 2002இல், முந்தைய பாலியல் தொழில் சட்டத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதல் சட்டங்களை இயற்றியது. பாலியல் சுரண்டலுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் 2002ஆம் ஆண்டின் சட்டமானது முந்தைய சட்டத்திலிருந்த ஓட்டைகளை அடைத்து, பாலியல் தொழிலை ஆதரிக்கும் தரகர்கள், ஆட்சேர்ப்பாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் விருந்தாளிகளின் வலைப்பின்னல்களைக் கண்டுபிடிக்கும் அரசாங்கத்தின் பணிக்கு வலு சேர்த்தது.
சுவீடனின் வெற்றிப் பாதையை நாம் ஏன் பின்பற்றக்கூடாது?
நம் நாடும் சரி மற்ற நாடுகளும் சரி, தந்தை ஆதிக்க சமூக அமைப்பின் இருளில் ஆழ மூழ்கி இருப்பது உண்மைதான் எனினும், சுவீடன் நடைமுறைப்படுத்திய கொள்கை மாற்றங்களை வலியுறுத்தக் கூடாது என்பதற்கு எவ்விதக் காரணங்களும் இல்லை. அடித்தளம் தகர்க்கப்பட்டு, வெற்றிக்கான சான்று நிறுவப்பட்டுவிட்டால், பின்னர் அப்பாதையில் செல்லும்படி மற்றவர்களை ஏற்கச் செய்வது எளிதான காரியமே.
நன்றி: http://www.eanil.com/?p=605#&page=2

Dec 5, 2014

அரசின் அதர்மம்



 தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் நடந்த 12 பச்சிளம் குழந்தைகளின் உயிரழ்ப்பு அனைவரது மனதையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே வாரத்தில் பிலாஸ்பூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் விளைவாகப் 12 பெண்கள் இறந்தனர் என்ற செய்தியும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வளவு உயிர் இழப்புகளுக்கும், துயரங்களுக்கும் நடுவிலும் மத்திய மாநில அரசுகள் சடங்குரீதியான அறிவுப்புகளை வெளியிட்டு, தப்பித்தல் மனப்பான்மையுடனேயே செயல்படுகின்றன. ஊட்டச் சத்து குறைபாடு, குறைமாத குழந்தைகள், இளம் தாய்மார்கள் கர்ப்பமுற்றது என்று காரணங்கள் ஒருபுறம் சொல்லப்பட்டாலும் இலக்குகளை பூர்த்தி செய்யச் சொல்லி மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி, செவிலியர்கள் பற்றாக்குறை, போதிய வசதியின்மை, சுகாதாரமின்மை, மருத்துவர்கள் பற்றாக்குறை, போதிய பயிற்சியின்மை, முறையான கண்காணிப்பின்மை என்று ‘இன்மை’களின் காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏதோ தற்போதுதான் ஆய்வு செய்து கண்டுபிடித்ததுபோல் அரசு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கிராமப்புற பகுதிகளில், அடித்தட்டு மக்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளதைப் பற்றியும், அது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அமர்த்தியா சென் உட்பட பல அறிஞர்கள், ஆர்வலர்கள் குரல் எழுப்பி வந்துள்ளனர். நலத்திட்டம், விசாரணை, ஆய்வு என்கிற பெயரில் அரசு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு, இருப்பிடம் ஆகியவை ஒருவரின் அடிப்படைத் தேவைகளை எவ்விதக் குறைபாடும், பாகுபாடும் இன்றி ஏற்படுத்திக் கொடுத்து, அவற்றை சரியாகப் பராமரிப்பதும் அரசின் கடமையாகும். உண்மையில் இப்பணிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டதே அரசு*. ஆனால் முக்கியத் துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கிவிட்டு சடங்கு ரீதியாக அவற்றை நடத்தி வருவதே இக்கொடுமைகளுக்குக் காரணம்.

தனியார் சேவையே அரசின் சேவை என்பதே இங்கு நிதர்சனம். தனியார் நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தோடு வாழ்வதற்காக எவ்வளவுக்கெவ்வளவு பொதுத்துறை நிறுவனங்களை மோசமாகப் பராமரிக்க முடியுமோ அதைச் செய்கிறது அரசு. இதில் மத்திய மாநில அரசுகளுக்குள் எந்தப் பேதமும் இல்லை.

இதற்கு முன்பு நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது ‘ஓட்டு’ என்னும் ஒரு நம்பிக்கை. மக்களை ஏமாற்றும், மக்கள் நலன்களைப் புறக்கணிக்கும் கட்சிகளுக்கு ஓட்டளிப்பதில்லை என்று மக்கள் முடிவெடுக்கும் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் தற்போது தேர்தல் வெற்றி என்பதும் மக்கள் கையில் இருப்பதைவிட பெருநிறுவனக் குழுமங்களிடமே இருக்கின்றது என்றால் அது மிகையல்ல. பெருநிறுவன முதலாளிகளோ பன்னாட்டு நிதி நிறுவனங்களின் அடிவருடிகள். மூலதனக் குவிப்பு ஒன்றே இவர்களது குறிக்கோள்.

இன்றைய காலகட்டத்தில் முதலாளிகள் தீர்மானிப்பவரே ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும். அவர்களின் தயவில் ஆட்சியில் அமரும் ‘முதலமைச்சர்’ அல்லது ‘பிரதமர்’ எப்படி முதலாளிகளுக்குத் துரோகம் செய்வார்? ஆக அவர்களால் முடிந்ததெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களை சீரழியச் செய்வதே. அதன் முதல்படி மோசமான பராமரிப்பு. மருத்துவத் துறையில் இப்போக்கு சகித்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சென்று விட்டது.

எதேச்சிகாரம் நிறைந்த அரசின் இயந்திரத்தில் பணிபரிபவர்களுக்கும் அதே மெத்தனப் போக்குத்தானே இருக்கும். மக்களின் வரிப்பணம்தான் தங்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற ஒரு தன்னுணர்வுகூட இல்லாமல் அரசுத் துறை அலுவலர்கள், குறிப்பாக மருத்துவத் துறைப் பணியாளர்கள் பலர் மக்களை அலைக் கழிப்பதையும், சேவை செய்ய மறுப்பதையும் நாம் அன்றாடம் காணலாம். இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி உண்மையில் மக்கள் சேவை ஆற்ற வேண்டிய அரசோ மக்களின் இடுப்பெலும்பை முறித்து தனது சேவையை தனியாருக்கு ஆற்றுகிறது.

மக்கள் இனியும் இறைஞ்சிக் கொண்டிராமல், அரசு விடுக்கும் அறிக்கைகளை நம்பிக் கொண்டிருக்காமல், அரசின் முதலாளிகளை கதிகலங்க வைக்கும் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். உதாரணமாக, அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்களோ, மரணமோ நேர்ந்தால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளின் கதவுகளையும் இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் போன்ற போராட்ட முறைகளில் ஈடுபடலாம்.

நாம் கத்தினால் அரசின் செவிகள் திறக்காது, ஆனால் முதலாளிகள் முகம் சுருங்கினாலே போதும் அரசு பதறி அடித்துக் கொண்டு மாற்றங்களைக் கொண்டு வரும். ஆக பொதுத்துறை நிறுவனங்களை காக்க தனியார் நிறுவனங்களைக் கைப்பற்றுவோம். பொதுத்துறை நிறுவனங்களை மூடினால் அதே ‘சேவையில்’ ஈடுபட்டிருக்கும் சுற்று வட்டார தனியார் துறை நிறுவனங்களுக்கு இழுத்து பூட்டு போடுவோம்.

நமக்காக அவர்களைக் குரல் கொடுக்க வைப்போம்!

இது ஒரு நீண்ட காலப் போராட்டமாக அமையும். மேலும் இதற்கெதிராக நிச்சயமாக கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவும் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்ற நூதனப் போராட்ட முறைகளை முன்னெடுப்பதோடு நாம் சட்டரீதியாகவும் உடனடி தீர்வுக்கு வழி வகை செய்யலாம். முதல் அமைச்சர்கள், பிரதம மந்திரி மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவம் பெற வேண்டும், அதை மீறினால் அவர்களது பதவிகள் பறிக்கப்படும் என்று ஒரு அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் அரசு மருத்துவமனைகளின் தலையெழுத்து திரைப்படங்களில் வருவது போல் ஒரே இரவில் மாறிவிடும்!

இது அதிகப்படியான கற்பனையோ! ஆனால் கற்பனையை மெய்யாக்கும் வலிமை மக்கள் சக்திக்கு உண்டு.


*அரசு தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட விளக்கத்தின்படி… பொதுபுத்தியின் புரிதலின்படி

Nov 11, 2014

செல்ஃபியும் சமூகமும்




சமீப காலங்களில், இணைய அத்துமீறல்கள் குறித்த செய்திகள் ஒரு தொடர் நிகழ்வாகி விட்டது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய ஒன்றுதான்.  இச்சூழலில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மற்றும் அவரது தோழியான நவ்யா (அமிதாப்பச்சனின் பேத்தி) என்று சொல்லப்படும் இருவர் காருக்குள் நெருக்கமாக இருக்கும் வீடியோ எம்.எம்.எஸ் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது இப்போது தீவிரமான விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

தம்மைத் தாமே படம் அல்லது வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பகிரும் செல்ஃபி எனப்படும் ஒரு சுய-புகைப்படப் பரிமாற்றமானது தற்போது மிகவும் பெருகிவிட்டது. பதின்பருவ வயதினர் முதல் வயதில் முதியவர்கள் வரை கிட்டத்திட்ட இதற்கு  அடிமைகளாகி வருகின்றனர் என்றால் அது மிகையாகிவிடாது.   

அழகு பற்றிய பிரக்ஞையும், அடையாளச் சிக்கலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஒருவகையில் இந்த சமூக அமைப்பானது ‘தகுதி’ படைத்தவர்களுக்கே மரியாதை கொடுப்பது அதற்கு முக்கியக் காரணம்.  இந்த வேட்கையை வியாபார நிறுவனங்கள் பலவகைகளில் உக்குவிக்கின்றன. 

புகைப்படங்களில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உடனுக்குடன் பார்க்கும் வசதியை இந்த செல்ஃபிகள் வழங்குவதால், ஒவ்வொரு உடையிலும், அலங்காரத்திலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்த்து ரசிப்பதோடு, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கருத்துப் (பாராட்டுகள்) பெறுவது கிட்டத்திட்ட ஒரு  போதைப் பழக்கம் போல் ஆகிவிட்டது. (ஆக்கப்பட்டுவிட்டது என்பதே பொருத்தமாக இருக்கும்).

 எந்த அளவுக்கு அடிமைத்தனம் கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்பதே நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். 

இணைய மற்றும் தொழில்நுட்ப தாக்கங்களுக்கு பதின்பருவ வயதினர் வெகு எளிதில் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் இதன் கவரிச்சித் தன்மையில் தன்வயம் இழந்து பகிரக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பல தொல்லைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் உள்ளாக நேர்கிறது. ஆணாதிக்கச் சமூக கட்டமைப்பின் விளைவாக, பாலியல் ரீதியாக அப்பெண்கள் பற்றிய தவறான முன்முடிவுகளுக்கு வரவும் இது வகை செய்கிறது.

பல வேளைகளில் சக தோழர்கள், காதலர்கள் என்று சொல்லிக் கொள்வோருமே பெண்களின் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் ஆபாசமாக உலவவிட்டு, சம்பந்தப்பட்டப் பெண்களை தங்கள் பாலியல்  இச்சைக்கு அடிபணியச் செய்வதும் நடந்துவருகிறது. ஆகவே எவராக இருப்பினும், புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க ஆயத்தமானால் - பெண்கள், சிறுமிகள் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, தங்களது அந்தரங்கத் தருணங்களை எவரும் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது.  ஏனென்றால், என்னதான்   ‘கேட்ஜெட்’டில் இருந்து அவை அழிக்கப்பட்டாலும்கூட இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அழிக்கப்பட்டக் கோப்புகளை மீண்டும் எடுத்துவிடலாம். பெரும்பாலும் நம் கேட்ஜெட்களை விற்பதற்காகவோ அல்லது பழுதுபார்க்கவோ கொடுக்கும் இடங்களில் நமக்குத் தெரியாம்லே நமது கோப்புகள் பிரதி எடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. நண்பர்களும் இத்தகைய திருட்டு வேலைகளைச் செய்யும் சாத்தியம் உண்டு.

வெறும் கட்டுப்பாடுகள் மூலம் நம் பிள்ளைகளை இதிலிருந்து நாம் காத்துவிட முடியாது. புறச் சூழலின் தாக்கம் அதி தீவிரமாக இருக்கையில் என்னதான் பெற்றோர்கள் கண்காணித்து வந்தாலும், எச்சரித்து வந்தாலும் பதின்பருவ வயதின் கோளாறு காரணமாக அது சர்வாதிகாரம் போல் அவர்களுக்குத் தோன்றி விடுகிறது. பல நேரங்களில் அவர்கள் மூர்க்கமாக எதிர்வினையாற்றும் அளவுக்கும் சென்று விடுகின்றனர்.

இச்சூழலில் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்: 
முதலில் அவர்களே இந்தச் சமூக வலைதளங்களை சிலக் கட்டுப்பாடுகளோடு கையாள வேண்டும்.

 குழந்தைகளுக்கு அரசியல் பொருளாதார அறிவூட்ட வேண்டும். அதாவது வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள், நுகர்வு கலாச்சாரம் இவற்றைப் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஒவ்வொரு விளம்பரத்தைப் பற்றியும் குடும்பமாகச் சேர்ந்து ஒரு விமர்சன உரையாடலை நிகழ்த்தலாம். அதில் வலியுறுத்தப்படும் அழகு, சிவப்பு நிறம், அந்தஸ்து, ஆடம்பரங்கள் என எல்லாமே போலியானது என்பதை குழந்தைகள் உணரும்படிச் செய்யலாம்.

நேரடியாக விமர்சிக்கப்படும் போது தம்மைக் குற்றவாளிகளாகப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள் என்று குழந்தைகள் கருதுவார்கள். ஆனால் இது ஒரு வணிகரீதியான மூளைச் சலவை, அதனால் ஏற்பட்டிருக்கும் சில ஆபத்தான நிகழ்வுகள் இவற்றைப் பற்றி குடும்பமாகப் பேசுவதும், அதுபற்றி குழந்தைகளின் கருத்தைக் கேட்பதும், அவர்களுக்குத் தங்களது பொறுப்பை உணர்த்துவதும் பயன் தரும்.

இரண்டாவதாக, ஒருவேளை ஒரு உணர்ச்சி வேகத்தில் படங்களைப் பகிர்ந்து எவரேனும் அதைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைகள் கொடுத்தால், அதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்துவதுடன், பிரச்சினையை நிதானமாகக் கையாள வேண்டும். மானம் அவமானம் என்று அச்சுறுத்தாமல் அந்த நிலையிலாவது அத்தளங்களைப் பயன்படுத்துவதை சிலக் கட்டுபாடுகளோடு பயன்படுத்தச் சொல்லி வழி நடத்தலாம். 

தம் மகனோ அல்லது மகளோ பதின்பருவத்திலேயே காதல்வயப்பட்டு அவர்கள் தனிமையில் இருக்கும் தருணங்களைப் பதிவு செய்து அதைப் பொதுவெளியில் காண நேர்ந்தால் ஆணாதிக்க ஒழுக்க விதிகளை மனதில் கொண்டு இச்சூழலைக் கையாளக் கூடாது. அதேவேளை எந்த ஒரு தவறான சீண்டல்களையும் மனத் துணிவுடன், தேவைப்பட்டால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் துணிவைப் போதிப்பதே நல்லது. மகனைப் பெற்றவர்களுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. பெண்கள் பற்றிய ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகளை, சினிமாக்கள் ஏற்றிவைக்கும் பாலியல் கவர்ச்சி பற்றிய கருத்துகளை மாற்றியமைக்கத் தேவையான அறிவை அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வறிவு கல்விக் கூடங்களுக்கு வெளியில்தான் கிடைக்கும்.

மற்றபடி இதில் ஒழுக்கரீதியான சரி தவறுகளுக்கு இடமில்லை. உண்மையில் இந்த தொழில்நுட்பங்கள் வரவேற்கத் தக்கவையே, குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்கள், நண்பர்களோடு மகிழ்ச்சிகரமானத் தருணங்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே. 

கவனமாகக் கையாண்டால் மகிழ்ச்சி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். 

நன்றி, உயிரோசை மாத இதழ்.



Sep 13, 2014

விடியல் பதிப்பகத்தின் மோசடி


விடியல் டிரஸ்ட், மற்றும் விடியல் பதிப்பகத்தின் மோசடி குறித்த ஓர் அறிவிப்பு.

வணக்கம்,

குறளி ஒரு சிற்றிதழாகத் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அதை ஒரு பதிப்பகமாக முன்னெடுக்கும் வேலைகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டப் பணியாக தோழர்கள் எஸ். பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் மொழிபெயர்த்துள்ள சிலப் புத்தகங்களை பதிப்பிப்பது எனும் முடிவெடுத்தோம். எஸ். பாலச்சந்திரனும், கோவிந்தசாமியும் மொழிபெயர்த்து தற்போதைய அளவில் 2014 ல் குறளி வெளியீடாக , முதற்கட்டமாக வெளிவரும் புத்தகங்கள்:

பெட்ரோ பராமோ
எரியும் சமவெளி
ஜோதி ராவ் பூலே
முமியா சிறையும் வாழ்வும்
சூரியனைத் தொடரும் காற்று
இந்தியா; காலத்தை எதிர்நோக்கி
பாட்ரிஸ் லுமும்பா அரசியல் சிந்தனைகள்
போர் தொடர்கிறது
தெபாகா எழுச்சி
லுமும்பா இறுதி நாட்கள்
மார்டின் லுதர் கிங்,

ஆகிய 11 புத்தகங்கள் அக்டோபர் இறுதியில் வெளிவருகிறது. இது தவிர எஸ். பாலச்சந்திரன், வெ.கோவிந்தசாமி இவர்களது  மற்ற புத்தங்களுக்குமான உரிமையும் குறளி பதிப்பகத்திடம் உள்ளது.

தோழர்கள் இருவரும் புத்தக உரிமையை எங்களுக்கு வழங்கும்போது ஒரு  பைசா கூட பெறாமல் அவ்வுரிமங்களை எங்களுக்கு வழங்கினர். எங்களுக்கு உரிமம் கொடுத்தது போக சில புத்தகங்களை எங்களுக்கு முன்னமே என்.சி.பி.எச்க்கும், பாரதி புத்தகாலயத்திற்கும் உரிமம் கொடுத்துள்ளனர். நிற்க.

மேற்சொன்னப் 11 புத்தகங்களையும் செழுமைப்படுத்தி வெளியிடும் பணியில் குறளி பதிப்பகம் ஏராளாமான பணத்தையும், காலத்தையும் செலவிட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வேலை செய்து, புத்தகங்கள் முடியும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம் எங்களைத் தொடலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் பதிப்பகம் ஆரம்பிக்கிறீர்களாமே…நல்லது… நாங்கள் பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி, இவ்விரண்டு நூல்களையும் விடியல் பதிப்பக வெளியீடாக கொண்டு வருகிறோம்  எனத் தகவல் சொன்னார்.  எங்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

விடியல் சிவா உயிரோடு இருந்த காலத்திலேயே அவரோடு பிணக்கு ஏற்பட்டு தோழர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும் விடியலில் இருந்து வெளியேறி இருந்தனர். விடியல் பதிப்பகத்திலிருந்து விலகியபோது தங்கள் படைப்புக்களை வெளியிடக் கூடாது என்று எழுத்து மூலமாக கடிதமும் அறிவிப்பு, கொடுத்திருந்தினர். எனவே சிவா உயிருடன் இருந்தவரை அவற்றை வெளியிடவில்லை. பின்னர் பாலச்சந்திரனும் கோவிந்தசாமியும், அவர்களின் அறத்திற்கும் கொள்கைகளுக்கும் ஒத்து வரும் பதிப்பக சூழல் இல்லாத நிலையில்,  தங்களது மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்வதை தவிர்த்து வந்தனர். இச்சூழலில் விடியல் சிவா இறந்து விட்டார். விடியலை டிரஸ்டாக சுவீகரித்துக் கொண்ட ‘முதலாளிகளின்’ போக்கு எங்களுக்கும் உறுத்தலாக இருந்து வந்த நிலையில், தோழர் கொற்றவை மொழிபெயர்த்த ரோசா லுக்சம்பர்க் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அவர்களுக்கு கொடுக்க விருப்பமில்லாமல் போனது. இந்நிலையில் பாலச்சந்திரனை சந்திக்க நேர்ந்தது.

இப்படிப்பட்டச் சூழலில் நாமே ஏன் பதிப்பகம் தொடங்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைக் கொண்டு வரக்கூடாது எனும் பேச்சின் முடிவில் உதயமானதே குறளி பதிப்பகம். இதில் ராஜாராமின் போக்கு விடியல் டிரஸ்டி-முதலாளி ராஜாராமின் பதிப்பக அபகரிப்புத் தாண்டி, தோழர் சிவாவின் உறவினரும் தோழருமான கல்யாணி குறித்து அவர் பேசிய ஆணாதிக்க ஆபாசப் பேச்சுக்கள்  செய்திகளாக எங்களுக்கு வரவே, இனி விடியலோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்தோம்.

பால் ஃப்ராலிச் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் ரோசா லுக்சம்பர்க் – அவரது வாழ்க்கையும், பணிகளும் எனும் புத்தகத்தை கொற்றவை மொழிபெயர்த்திருக்கிறார். விடியலுக்கு அதைக் கொடுப்பதாக சிவா இருக்கும் போது முடிவு செய்யப்பட்டிருந்தது. சிவாவின் மறைவுக்குப் பின்னர், ராஜாராமின் ‘உண்மை’ குணங்கள் தெரிய வருவதற்கு முன் மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை விடியலுக்கு மெயில் அனுப்பியிருந்தார் கொற்றவை. விடியல் ராஜாராம் மற்றும் ராமச்சந்திரனின் அதிகாரப் போக்கு பிடிக்காமல் போனதன் விளைவாக அப்பதிப்பகத்திற்கு தருவதாக இருந்த லுக்ஸம்பர்க் புத்தகத்தையும் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என முறைப்படி அறிவித்தார் கொற்றவை. மேலும் அப்புத்தகத்தில் ஆங்காங்கு திருகுவேலைகள் செய்யாதீர்கள் என்பதையும் சொன்னோம். எங்களது இந்த முடிவுக்கு விடியல் பதிப்பகத்தின் புத்தகவிற்பனையாளர் ராமச்சந்திரனின் அணுகுமுறையும் கூடுதல் காரணம். (அப்புத்தகத்தையும் அவர்கள் இதுபோல் திருகு வேலைகள் செய்து வெளியிட வாய்ப்பு உள்ளது)

பின்னணி இப்படி இருக்க, பாலச்சந்திரன் மற்றும் கோவிந்தசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. யுவான் ரூல்ஃபோவின் படைப்புகளை செழுமைப்படுத்தி புதிய இணைப்புகளோடு வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் இன்று விடியல் டிரஸ்டி ராஜாராம் எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

பெட்ரோ பராமோ, எரியும் சமவெளி இரண்டையும் விடியல் பதிப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அது எப்படி முடியும் அதற்கான உரிமத்தை தோழர் பாலச்சந்திரன் குறளி பதிப்பகத்திற்கு வழங்கி இருக்கிறாரே என்றோம். அதற்கு விடியல் டிரஸ்டி ராஜாராம் அம்மொழிபெயர்ப்புக்கு பாலச்சந்திரன் உரிமை கோரமுடியாது என்று சொன்னதோடு அது ‘கூட்டு உழைப்பு’ என்றும், அது போல் பலவேலைகள் நடந்திருக்கிறது அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறினார். அதற்கு  நாங்கள் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றதும் ‘வேலைகள் முடிந்து விட்டது வரும் செவ்வாய் புதனில் புத்தகம் வெளி வரும்’, (வரும் செவ்வாய் புதன் 16.09.2014, 17தேதிகளில் வெளிவருகிறது) அவர் பேசினால் நாங்க சமாளிச்சுக்கிறோம் என தெரிவித்தார். பாலச்சந்திரனிடம் நாங்கள் பேசியபோது - அவர் இது ஒரு  முறையற்ற செயல், கயமைத்தனம் அயோக்கியத்தனம் எனக் கூறியதோடு தோழர் கோவிந்தசாமியிடம் கலந்தாலோசித்ததன் படி, வழக்குத் தொடருவதே சரியான வழி என்ற  முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேற்கொண்டு மொழிபெயப்பாளர் ராஜாராம் சொன்ன வி.நடராஜ் அவர்களை பாலச்சந்திரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன மாதிரியான செயல் இது எனக் கேட்டதற்கு அவர் இவ்வேலையை கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) சொல்லித்தான் செய்கிறேன் அவர்தான் இதைச் செய்யச் சொன்னார் எனக் கூறியுள்ளார். எரியும் சமவெளி தொகுப்பில் பாலச்சந்திரன் மொழிபெயர்த்த 15 கதைகளை அப்படியே எடுத்தாள்வதோடு. மேலும் இரு சிறுகதையைச் சேர்த்து வெளியிடப் போகிறோம். இது கண்ணன்.எம்(ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை)  சொல்லியே நடக்கிறது. மேலும் இதை அவர்கள் புதிதாகச் செய்து தரச்சொன்னாலும் செய்வேன் எனவும் கூறியிருக்கிறார். இதில் வெளிப்படையாகத் தெரியும் அம்சம் எஸ் பாலச்சந்திரனின் உழைப்பை சுரண்டும் நோக்கமே. 

இதில் விடியல் பதிப்பக ட்ரஸ்டியான ராஜாராம். மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன் எம். (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) மூவரும் சேர்ந்து செய்யும் சதியெனவே கொள்கிறோம். சட்டப்படியான நடவடிக்கையை அவர்கள் மேல தொடுப்போம் என்பதை குறளி பதிவு செய்கிறது. மேலும் அவர் பாலச்சந்திரனிடம் இதைச் சொல்லும் போது எங்களது பார்வைகள் பதிவுகள் பதிப்பகத்திற்காக சம்பந்தப்பட்ட இந்த இரண்டு நூல்களையும் உங்களிடம் கேட்டு நீங்கள் கொடுக்கவில்லை, அதனால் இதை விடியலில் கொண்டு வருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு பெயர்தான் புரட்சிகரப் பதிப்பகமா…தோழர்கள்தான் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனுக்கே தெரியாமல் பதிப்பை மறுபதிப்பு செய்வது என்பது திருட்டுக்கு நிகரானது. அதை விடியல் பதிப்பகம் செய்திருக்கிறது தோழர்களே.
                                            
இது விசயமாக. மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரனும், குறளி பதிப்பகமும் வழக்கு தொடரும் என்று ராஜாராமிடம் தெரிவித்தபோது, ராஜாரம் “நீங்க  வழக்கு தொடர்ந்துக்கோங்க” என்று அதிகாரத் தொணியோடு முடித்துக்கொண்டார்.

விடியல் பதிப்பகத்திற்கு டிரஸ்டி-முதலாளி ராஜாராம் தலைமை ஏற்ற பிறகு இது அவர்களின் கைவந்த கலையாக மாறிவிட்டது. தோழர் முருகவேளின் 
‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் புத்தகத்திற்கு வேறொரு மொழிபெயர்ப்பு என்ற பெரியரில் போப்பு என்பவரை வைத்து ஆங்காங்கு அடித்தல் திருத்தல் வேலை செய்து தலைப்பில் உள்ள ‘ஒப்புதலை’ நீக்கிவிட்டு மோசடித்தனத்துடன் வெளியிட்டது.

இதில் மாபெரும் அறுவெறுப்பு எனச் சொல்லத்தக்கது என்னவெனில், ஏற்கனவே முருகவேளின் மொழிபெயர்ப்பில் ஏழெட்டுப் பதிப்புகள் கண்ட ’ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்வாக்குமூலம் ’ மொழிபெயர்ப்பை ஆங்காங்கு சில்லறை வேலைகள் செய்து பதிப்பித்ததோடு பின்னுரையில் சிவா உயிரோடு இருந்த பொழுது திருத்த நினைத்தார். இப்பொழுது இறந்துவிட்டார். அதனால் திருத்த முடியவில்லை, அவரது ஆத்மா சாந்தியடையும் விதமாக இம்மொழிபெயர்ப்பை வெளியிடுகிறோம் என்ற தொனியில் அப்புத்தகத்தை போப்பு என்பவரின் மொழிபெயர்ப்பாக வெளியிட்டது.

இப்போது அதே போல் தோழர் எஸ் பாலச்சந்திரனின் மொழிபெயர்ப்பை நாங்கள் வெளியிடுகிறோம் முடிந்ததைப் பாருங்கள் என்ற வார்த்தைகளை விடியல் ட்ரஸ்டி ராஜாராம் முன் வைக்கிறார்.

முருகவேளுக்கு செய்த அதே மோசடியை தோழர் பாலச்சந்திரன் விசயத்திலும் செய்யத் துணிந்த விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளை அதன் ஆதிக்கப் போக்குகளை முறையாக வழக்குத் தொடர்ந்து எதிர்கொள்வோம். பத்திரிக்கைகளுக்கும், புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் விடியல் பதிப்பகத்தின் மோசடிகளை எடுத்துரைப்போம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன். அப்புத்தகத்தில் தனக்குதவியர்களின் பெயர்களை அவர் எழுதியதற்கு, அதைக் கூட்டுழைப்பு எனச் சொல்லும் டிரஸ்டி ராஜாராம் ஒரு சுரண்டல் பேர்வழி என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவர்களின் திருகுவேலையாக, சம்பந்தப்பட்ட புத்தகத்தில் வேறொருவரை வைத்து ஆங்காங்கு சில வார்த்தைகளை மாற்றி வெளியிட்டால் அந்த அயோக்கியத்தனத்தையும் சான்றாராதரத்துடன் வெளிக்கொணருவோம்.

நம்மை போன்ற சிறு பதிப்பகங்களில் செழுமை படுத்த உதவுவோர் பெரும்பாலும் சக தோழர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை பதிப்பகங்கள் என்றால் ‘பதிப்பாசிரியர் (எடிட்டர்)’ இருப்பார். ஆனால் சின்ன சின்னத் திருத்தங்கல் சரி பார்த்தல்கள் மொழிபெயர்ப்பாளரின் பணிக்கு இணையாக முடியாது. அதன் காரணமாகவே உரிமம் மொழிபெயர்ப்பாளரிடமே இருக்கும்.  அப்படி இருக்கையில் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள் எனும் ராஜாராமின்  தொனியில் தெரிவது முதலாளித்துவ அதிகாரம், சட்டத்தை ஏமாற்ற எங்களுக்குத் தெரியும் எனும் ஓர் அகந்தை.  

தோழர்களே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகப் போராடுவதற்கான அறிவூட்டும் படைப்புகளைக் கொண்டுவருவதாக மார்தட்டிக்கொள்ளும் விடியல் பதிப்பகம், இப்போது உழைப்பாளிகளைச் சுரண்டி, மொழிபெயர்ப்பாளரின் தக்க அனுமதி இன்றி மோசடி செய்து காசு பார்க்கும் இழி நிலைக்கு இறங்கி விட்டது. இந்நிலைக்கு உடந்தையாக மொழிபெயர்ப்பாளர் வி.நடராஜ், கண்ணன்.எம் (ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி, புதுவை) உடந்தையாக இருக்கின்றனர் என்பதை அறிய எங்களிக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களுக்கு தக்க எதிர்வினையாற்ற இருக்கிறோம் என்பதை குறளி பதிப்பகம் அறிவிக்கிறது.

கூட்டு முயற்சி என்ற அபத்தமான வார்த்தையை வைத்து, விடியல் பதிப்பகமானது இவ்வேலைகளை தொடர்ச்சியாக செய்கிறது என்பதை இதன் வாயிலாக பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களுக்கும், பாப்பசிக்கும், வாசகர்களுக்கும் அறிவித்துக்கொள்கிறோம். விடியலின் இந்த மோசடிக்கு அவர்கள் ஆதரவளிக்கக்கூடாது எனும் வேண்டுகோளையும் இதன் மூலம் வைக்கின்றோம்.

விடியல் டிரஸ்ட்- விடியல் பதிப்பகத்தின் மோசடிக்கெதிராக குறளி பதிப்பகம் களம் இறங்கிப் போராடும். பதிப்புலகில் தொடர்ந்து வரும் விடியல் பதிப்பகத்தின், உழைப்புச் சுரண்டலுக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

Related Links

வியாபாரிகளிடம் சிக்கியுள்ளதா விடியல் பதிப்பகம்? - http://tinyurl.com/kvqk3xm

விடியல் பதிப்பகத்தின் விசமத்தனம் - http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/24651-2013-08-19-18-17-58

Sep 2, 2014

சாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா, ஆங்கிலம் வழி தமிழில் - கொற்றவை


‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல்   ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரைகள் எதையும் எழுதவில்லைதான்;  இருப்பினும், தனது எழுத்துக்களில்இந்தியாவில் உள்ள சாதியமைப்பு குறித்தும்மற்ற நாடுகளில் நிலவும் சாதிக்கு இணையான சில ஏற்பாடுகள் குறித்தும் சில அவதானிப்புகளைச் செய்துள்ளார் மார்க்ஸ்மார்க்ஸின் அவதானிப்புகளை உதவியாகக் கொண்டு சாதிக் கருத்தியல்களையும்அந்தப் பிரச்சனைக்குறியத் தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

உலகின் மற்ற இடங்களில் உள்ளதைப் போல் மார்க்ஸின் கோட்பாட்டுகளை எதிர்க்கும் (தெரிந்தோதெரியாமலோ அல்லது அரைகுறை அறிவோடோமனிதர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்.  இந்தியாவில் உள்ள அத்தகைய  எதிர்ப்பாளர்கள் மார்க்ஸின் கோட்பாடு குறித்து இரண்டுவிதமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் – (1) மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஆனால் அது அங்கும் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. (2) மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் மார்க்ஸின் கோட்பாடுகள் பொருத்தமானதாக இருக்கலாம்ஆனால் இந்தியாவுக்கல்லஏனென்றால் இங்கு சாதியமைப்பு நிலவுகிறது. மேலும், அது மார்க்ஸின் கோட்பாட்டு எல்லையின் கீழ் வருவதில்லை.

மார்க்ஸின் கோட்பாட்டிற்கு எதிராக வைக்கப்படும் இரண்டுவிதமான பார்வைகள் இவையேஎவ்வாறாயினும்இந்த இரண்டு பார்வைகளும் முற்றிலும் தவறானவைமார்க்ஸின் கோட்பாடு ‘உற்பத்தி உறவுகள்’* (உழைப்புசார் உறவுகள்) பற்றி பேசுவதால்அது மானுட சமுதாயத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்ஒவ்வொரு உறவுக்கும் பொருந்தும் வகையில் அது உள்ளது. 

எந்தவொரு நாடும் அல்லது சமூகமும்எந்த ஒரு காலகட்டத்திலும், உழைப்புசார் உறவுகளின்’ அடிப்படையிலேயே வாழ்கிறதுஒரு சமூகத்தின் இயல்பும் அதன் உற்பத்தி உறவின் அடிப்படையிலேயே அமைகிறது.

அந்த உற்பத்தி உறவுகள் குறித்து மார்க்ஸ் பேசினார்.  நூற்றுக்கணக்கானஆயிரக்கணக்கான வருடங்கள்உற்பத்தி உறவு எனும் அரங்கில் நிகழ்ந்த ‘உழைப்புச் சுரண்டல்’ குறித்து அவர் பேசினார்உழைப்புச் சுரண்டலினால் விழையும் எண்ணற்ற பிரச்சனைகளைப் பற்றி மார்க்ஸ் விவாதித்தார்அந்தப் பிரச்சனைகளுக்கு  ஒரு தீர்வையும் அவர் வழங்கினார்இவ்வாறாக நமதுப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வது நம் பொறுப்பில்தான் இருக்கிறதுமுதலில்இந்தியாவில் உழைப்புச் சுரண்டல் நிலவுகிறதா என்பதை  நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்மேலும்சாதிப் பிரச்சனையானது உற்பத்தி உறவின் வட்டத்திற்குள் வருகிறதா என்பதையும் நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்சாதிக்கும்உழைப்பிற்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் சந்தேகத்திற்கிடமின்றி மார்க்ஸின் கோட்பாடு இந்தியாவுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.

மானுட சமூகத்தின் எந்தப் பிரச்சனையும் உற்பத்தி உறவுகளோடு பின்னிப் பிணைந்திருக்கிறதுசாதிப் பிரச்சனையும் மனிதர்களோடு தொடர்புடையதால்அது உற்பத்தி உறவுகள் பற்றி பேசும் கோடாட்டின் பரப்புக்குள்ளேயே வருகிறது.

இந்தியா உட்பட ‘உழைப்புச் சுரண்டல்’ மற்றும் வர்க்க வேறுபாடு உள்ள அனைத்து நாடுகளுக்கும் மார்க்ஸின் கோட்பாடு பொருந்தக் கூடியதாகும்ஏனென்றால் உழைப்புச் சுரண்டலை கண்டறிந்து விளக்கிய சிரியான ஒரே கோட்பாடு அதுவே.

மேலும்மனித உறவுகளை ஏன் பயன் மதிப்பின் கண்ணோட்டத்திலிருந்து நிறுவ வேண்டும்அந்தக் கண்ணோட்டம் இல்லையென்றால் என்னவிதமான பிரச்சனைகள் எழும் என்பதையும் இக்கோட்பாடு விளக்குகிறதுஇதனால்உழைப்புச் சுரண்டல் இல்லாத ஒரு எதிர்காலத்திலும் சமூகத்தை ஒழுங்கமைக்க இந்தக் கோட்பாடு ஒரு வழிகாட்டியாகப் பயன்படும்.

சாதியமைப்பு என்பது இந்தியாவுக்கேயுரிய குறிப்பான பிரச்சனையென்றாலும்உழைப்புக்கும் அதற்குமுள்ள தொடர்பை புரிந்து கொண்டால்மார்க்ஸின் கோட்பாடு அதற்கு எவ்வாறு பொருத்தமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

நாம் சாதிகளை அவதானித்தால் – மேலோட்டமாக இருந்தாலும் கூட – அவற்றுள் குறிப்பிட்ட சில  வேறுபாடுகளை உறுதியாகக் காணலாம்அதாவது சில சாதிகள் கீழானதுசில சாதிகள் உயர்வானதுஎந்த அடிப்படையில் நாம் இந்த ‘மேல்-கீழ்’ வேறுபாட்டைக் காண்கிறோம்பொதுவாக சொல்வதானால்நிலம்மூலதனம்பணம் ஆகியவற்றை சொந்தமாகக் கொண்டிருப்பவர்கள்ஆதிக்கம் கொண்டு சமூக அமைப்புமுறை மற்றும் நிர்வாகத்திலும் ஈடுபடுபவர்கள் ஆதிக்க சாதியினர் வாழ்வாதாரத் தேவைகளுக்குக் கூட சொத்தில்லாமல் இருப்பவர்கள் ‘கீழ்’ சாதியினர்அவர்கள் உழைப்பாளிகளாகவும்அடிமைகளாகவும் வாழ்பவர்கள்அவர்கள் ‘மேல்’ சாதியின் ஆதிக்கத்திற்கும் ஆட்சிக்கும் உள்ளாகிகொடிய வறுமையிலும்சமூகத் தாழ்மையிலும் உழல்பவர்கள்.

‘மேல்’ சாதியினரிடையே, எந்த உழைப்பிலும் ஈடுபடாத’ ஒரு வாழ்க்கை முறையை காண்கிறோம்.  அல்லது அப்படியே அவர்கள் உழைத்தாலும்அது மூளை உழைப்பாகவோ அல்லது தூய்மையுள்ள உழைப்பாகவுமே இருக்கும்.  மாறாக, தாழ்த்தப்பட்ட சாதி நிலை இதற்கு நேர் எதிரானது.  உழைக்காமல் வாழ்வதென்பது  ‘கீழ்’ சாதிகளுக்கு கற்பனைக்கப்பாற்பட்டதுஅவர்கள் செலுத்தும் உழைப்பானது இருப்பதிலேயே கீழ்நிலையிலான உடல் உழைப்பாகும்மொத்த சமூகத்தையும் சுத்தம் செய்வதற்குத் தேவையான எல்லாவிதமான அசுத்த உழைப்பும் இந்த சாதிகளின் பொறுப்பு.
 பொருளாதார விதிகளின்படிமூளை உழைப்பிற்கு அதிக மதிப்பும்உடல் உழைப்பிற்கு குறைவான மதிப்புமே நிலவுகிறதுஇது மதிப்பின் இயல்பான உருவாக்க விதியின் அடிப்படையிலானதுஒரு குறிப்பிட்ட தொழிலை கற்று கொள்வதற்குத் தேவைப்படும் மூலாதாரங்களைப் பொறுத்து உழைப்பின் வகைகளுக்கான மதிப்பு தீர்மானிக்கப்படுகிறதுஅதில் ஏதும் ‘தவறில்லை’.  மூளை உழைப்பிற்கு அதிக மதிப்பும்உடல் உழைப்பிற்கு குறைவான மதிப்பும் நிலவுவதால்மூளை உழைப்பில் ஈடுபடும் நபருக்கு அதிக ஊதியம் கிடைக்கிறதுஉடல் உழைப்பில் ஈடுபடுபவருக்குக் குறைவான ஊதியமும் கிடைக்கிறது.

சுரண்டலின் அடிப்படையில் இயங்கும் சமூகங்கள்வெவ்வேறு உழைப்புகளுக்கிடையில் இயல்பிலேயே இருக்கும் இடைவெளியை மேலும் பெரிதாக்குகிறதுஇவ்வாறாகஅத்தகைய சமூகங்களும் அதன் மரபுகளும் மூளை உழைப்பை அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் அதிக மதிப்பைக் கொடுக்கின்றனமேலும்உடல் உழைப்பிற்கு அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் குறைவான மதிப்பையே கொடுக்கினறனசுரண்டலின் மேல் இயங்கும் சமூகங்கள் உடல் உழைப்பை மிக ஆழமாகச் சுரண்டுகின்றனகுறிப்பாக அடித்தட்டு உடல் உழைப்பை மிகத் தீவிரமாகச் சுரண்டுகின்றனசுரண்டலின் மேல் இயங்கும் சமூகங்கங்களில் ஒரு மருத்துவரையும் விவசாய உழைப்பாளிகளையும் எடுத்துக்கொண்டால்இருவரும் உழைப்பில் ஈடுபட்டாலும் வருவாய் மற்றும் அவர்களது வாழ்க்கை முறைகளுக்குமிடையே பெரும் வேறுபாட்டைக் காண முடியும்.

வெகு காலத்திற்கு முன்பிருந்தே இந்த அமைப்புமுறை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறதுஅதாவதுஒரு வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் கைப்பற்றிநிலத்திற்கு வாடகைவட்டி மற்றும் மூலதனத்திற்கு இலாபம் ஆகியவற்றை சொத்துரிமையின் பெயரால் உழைக்காமலேயே உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து வந்தது.  இந்தச் சுரண்டல் உறவுகளில் இருந்து உருவான உழைப்புப் பிரிவினை எப்போதும் உழைக்கும் மக்களை ஒரே வகையான உழைப்பில் பிணைக்கிறது.  உடல் உழைப்பில் ஈடுபடும் ஒரு நபர் தன் வாழ்நாள் முழுதும் அதே வகையான உழைப்பில் உழன்று நலிவுறுகிறார்ஏதோவொரு வகையான மூளை உழைப்பில் ஈடுபடவோஅத்தகைய உழைப்பிற்கு தொடர்பான கல்வியைப் பெறவோஅல்லது அத்தகைய உழைப்புக்கு நிகரான கூலியைப் பெறுவதையோ அந்த நபர் எதிர்பார்க்கக் கூட முடியாதுமருத்துவர்கள்பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற மூளை உழைப்பாளிகள் எந்த வகையான உடல் உழைப்பிலும் ஈடுபடத் தேவையில்லை. அவர்களுடைய சொந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கூட அவர்கள் கொள்ளத் தேவையில்லை.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மக்கள் தொகையின் ஒரு குறிப்பிட்ட பிரிவு எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் வாழ்கிறதென்றால்அவர்களுக்கும் சேர்த்து மீதமுள்ள பிரிவினர் உழைக்கின்றனர் என்று பொருள்இந்தியா அல்லது எந்தவொரு நாட்டிலும் நடப்பது இதுவே. இந்தியாவில்,  ‘மேல்’ சாதியினர் மூளை உழைப்பிலிருந்து வெளியேறாமல்தூய்மைப்படுத்தும் (அசுத்த – மொ.ர்) உழைப்பைச் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர் என்பதே அந்தச் சுமைகளை ‘கீழ்’ சாதியினர் மீது சுமத்துகின்றனர் என்பதைக் குறிக்கிறது.

இவையனைத்தும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையோடு தொடர்புடையதுஒரு வர்க்கம் உழைக்காமல் மற்ற வர்க்கத்தின் உழைப்பால் வாழ்கிறதென்றால் அது உழைப்புப் பிரிவினை எனும் பிரச்சனையேகூடுதலாகஒரு நபர் ஒரே வகையான உழைப்போடு பிணைக்கப்படுகிறார் என்றால் அதுவும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையேஉழைப்பு மற்றும் உழைப்புசார் உறவுகளின் தொடர்பில்லாமல் சாதிகள் தோன்றவில்லைதவறான சமூக உறவுகளினால் தோன்றிய பிரச்சனைகளுள் ஒரு பிரச்சனை சாதியப் பிரச்சனையாகும்உற்பத்தி உறவின் இயல்புஅதன் மதிப்பு விதிகள்உழைப்புப் பிரிவினை மற்றும் அதன் சொத்துரிமையோடு அது பின்னிப் பிணைந்திருக்கிறது.

இவ்வாறாக மார்க்சியம் பயன்படுத்தும் – பயன் மதிப்புபரிமாற்ற மதிப்புமூளை உழைப்புஉடல் உழைப்புஉழைப்பின் மதிப்புஉழைப்புச் சக்தியின் மதிப்புசொத்துரிமைஎஜமானர்தன்மைஅடிமை முறை மற்றும் இது போன்ற பல வகைப்பாடுகளினூடாகவே – போன்ற பொருளாதார கருத்துகளைக் கொண்டே  நாம் சாதியப் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்

மார்க்ஸ் (எங்கல்சுடன்இணைந்து சாதி குறித்து முதல் முறையாக ஜெர்மன் சித்தாந்தம்”  (1845-6) எனும் நூலில் பேசியிருக்கிறார். மூலதனம்’ (1867) நூலில் ஆறு அல்லது ஏழு இடங்களில் சாதி குறித்து சில அவதானிப்புகளையும்விளக்கங்களையும் மார்க்ஸ் கொடுத்துள்ளார்மார்க்ஸின் கோட்பாடுகளை பெரும் விளக்கங்களோடு விவரித்த இந்த அவதானிப்புகளையும் ‘மூலதனத்தையும்’ கொண்டுசாதியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளவும்அதன் தீர்வை நாம் கணடறியவும் முடியும்.

மார்க்சின் கோட்பாட்டின்படிமானுட வரலாற்று பரிணாம வளர்ச்சிக்கு ஒரு பொருளாயத அடிப்படை இருக்க வேண்டும்அது சரியான பதிலென்றால்உற்பத்தி உறவிலிருந்து எழும் ஒன்றே அதற்கு காரணமாக இருக்க முடியும். இருப்பினும், கடந்த காலத்திலிருந்து வரலாற்று பரிணாமம் குறித்து தத்துவாதிகளைடையே ஒரு  கருத்துமுதல்வாதம் நிலவியதுகடவுளின் விருப்பத்திலிருந்து அல்லது கடவுளின் மறு அவதாரமான அரசர்கள் அல்லது மதத் தலைவர்கள்  அல்லது ஏதோவொரு அதிசக்தியினாலேயே மானுட வரலாறு பரிணமிக்கிறது என்ற கருத்தே அது.

ஒரு பிரச்சனையின் பொருளாயத அடிப்படையைக் காணத் தவறும் ஒன்று ‘கருத்து முதல்வாதமே’

வரலாற்று நடைமுறை குறித்த கருத்துக்களைப் பொதுவாக விமர்சித்த மார்க்ஸ் ஹெகலியருக்கு பிந்தைய கருத்துமுதல்வாத சிந்தனைகளை குறிப்பாக விமர்சித்தபடி ‘ஜெர்மன் சித்தாந்தத்தில்’ பின்வரும் அவதானிப்புகளை வைக்கிறார்:

இந்தியர்கள் மத்தியில் நிலவும் பக்குவமற்ற (crude) உழைப்புப் பிரிவினையைக் காணும்போதும், எகிப்தியர்கள் தங்களது ஆட்சியிலும்மதத்திலும் சாதிய-அமைப்பை நிறுவியதைக் காணும்போதும்வரலாற்றியலாளர்கள் சாதிய அமைப்பு எனும் அதிகாரமே அந்த பக்குவமற்ற சமூக வடிவத்தை உருவாக்கிய சக்தி என்று கருதுகிறார்கள். (மாஸ்கோ பதிப்பு 176, பக். 63).

உழைப்புப் பிரிவினை சாதியத்தை உண்டாக்கியதா அல்லது சாதி உழைப்புப் பிரிவினையை உண்டாக்கியதா என்பதே கேள்விமார்க்சைப் பொறுத்தவரைஉழைப்புப் பிரிவினையே முதன்மையானதுபின்வந்த காலங்களில் அதுவே சாதித் தொழில்களாக மாறியதுசூழ்நிலை இப்படி இருக்கவரலாற்றியலாளர்கள் சாதியை முதன்மையானதாகக் கருதி அதுவே உழைப்புப் பிரிவினையை தோற்றுவித்ததாகக் கருதுகிறார்கள். அதனால்மார்க்ஸ் வரலாற்றியலாளர்களை விமர்சித்தார்.

சமுதாயத்தில், தொடக்கத்திலேயே சாதி எவ்வாறு தோன்றியிருக்க முடியும்அப்படி தோன்றியிருந்தால் அதற்கு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும்அப்படி இருந்தால்அந்தக் காரணமே அடிப்படை அம்சமாக இருக்க முடியும்.

மனிதர்கள் வாழ்வதற்குப் பல்வேறு வகையான உழைப்பு தேவைப்படுகிறதுஅவ்வாறு பல்வகைப்பட்ட உழைப்பு தோன்றிதொடரும்போதுஅதனுள் ஏதோவொரு பிரிவினை நேரும். ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை நாளடைவில் எவ்வாறு உருமாறியது’ எனும் கேள்வியை ஒரு புறம் வைத்தால்பல்வகைப்பட்ட உழைப்பின் இருப்பே அதன் ஆரம்ப அடிப்படையாக இருக்கும்.

சாதிகள் என்ன செய்கின்றன என்று நாம் அவதானித்தால்வெவ்வேறு சாதிகள் வெவ்வேறு வகை உழைப்பில் ஈடுபடுகிறது என்பதைக்  காணலாம்பண்டையக் காலம் தொடங்கிஇன்றையக் காலம் வரைசாதிக்கும் பல்வகைப்பட்ட உழைப்பிற்கும் தொடர்பு இருந்தே வந்திருக்கிறது.  தர்க்கரீதியாக சிந்தித்தால்பல்வகைப்பட்ட உழைப்பே உழைப்புப் பிரிவினையாகியது என்பதை உணரலாம்எனினும்எல்லா நாடுகளிலும்சமூகங்களிலும் பல்வகைப்பட்ட உழைப்பும்உழைப்புப் பிரிவினையும் நிலவுகிறதுஇந்தியாவில் மட்டும் உழைப்புப் பிரிவினை ஏன் சாதியாக உருமாறியது?

கணிசமான ஆய்வுகள் செய்தவர்கள் கூட இந்தக் கேள்விக்கு எந்த விடையையும் கொடுக்கவில்லை. சாதிகள் எங்கும் காணப்படவில்லைஅது இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. என்பதைத் தவிர ஆய்வாளர்கள் வேறெதையும் சொல்ல இயலவில்லை.

இவ்வாறாகசாதியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நம்  முன் இருக்கும் பணிதீர்வை அறிந்து கொள்வதற்கு முன் நாம் ஒரு விஷயத்தை ஆய்ந்தரிய வேண்டும், உழைப்புப் பிரிவினை சாதிக்கு வழிவகுத்ததா இல்லை சாதி உழைப்பு பிரிவினையை உண்டாக்கியதா’இந்தப் அம்சத்தை ஆய்ந்தரியாமல்நாம் தீர்வை நோக்கி ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது.

மார்க்சைப் பொறுத்தவரைஉழைப்பு பிரிவினையே முதன்மையானது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்அதுவே சாதிய அமைப்பாக திடப்பட்டுப் போனதுஇவ்வாறாகப்பிரச்சனைக்குக் காரணமான உழைப்புப் பிரிவினையை மாற்றுவதே  சாதிய அமைப்பிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு.

முதலாவதாக நிகழ வேண்டிய மாற்றம் என்னவென்றால்உழைக்காமலேயே சுரண்டி வாழும்  வர்க்கத்தை – உழைப்பு நிகழ்முறைக்குள் – இழுப்பதுசுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்ப்பில் ஈடுபடும் வர்க்கம் (இனிவரும் பத்திகளில் ‘உழைக்கும் வர்க்கம்’)  இந்தப் போராட்டத்தைத் தொடுக்க வேண்டும்அடிமைகள் காலகட்டத்திலேயே இந்த வர்க்கப் போராட்டம் தொடங்கிவிட்டது.

உடல் உழைப்பில் ஈடுபடும் ஒட்டு மொத்த கீழ்நிலை சாதிகளுமே உழைக்கும் வர்க்கத்தினரேசுரண்டல் உறவிலிருந்து விடுதலை பெறுவதே தங்களது இலக்கு என்று இந்த வர்க்கம் உணர வேண்டும்மேலும்போராட்டத்தின் ஊடாக உழைப்புப் பிரிவினையை மாற்றும் பணியையும் நிறைவேற்ற வேண்டும்மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டுமெனில்ஒரு சில நபர்கள் மட்டும் மூளை உழைப்பைச் செலுத்துவதுமற்றவர்கள் எப்போதும் உடல் உழைப்பில் ஈஎடுபடுவது எனும் நிலை மாறி எல்லோரும் ஏதோவொரு வகையில் உடல் உழைப்புமூளை உழைப்பு என இரண்டிலும் ஈடுபடும் நிலை மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான உழைப்பில் ஈடுபட வேண்டும்நம்முடைய அனுபவத்தின் வாயிலாக படிப்படியாக இதுபோன்ற புதிய உறவுகளை நிலைநிறுத்தவும், நீடித்திஇருக்கவும் செய்ய வேண்டும்தாங்கொணா உடல் உழைப்பைச் செலுத்திபல்லாயிரம் வருடங்களாக கொடுமையான அடிமை வாழ்க்கை வாழ்ந்து வரும் கீழ்நிலை சாதிகளை விடுவிப்பதற்கு இது மட்டுமே ஒரே வழிவர்க்க போராட்டத்தினால் மட்டுமே வழி சாத்தியமாகும்.

1846 டிசம்பரில்அன்னென்கோக் எனும்  ஒரு ருசிய அறிவுஜீவிப்ரூதோனின் ‘வறுமையின்  தத்துவம்’ எனும் புத்தகம் குறித்து மார்க்ஸின் கருத்தைக் கேட்டார்அன்னென்கோவின் கடித்தத்திற்குப் பதிலளித்த மார்க்ஸ்உழைப்புப் பிரிவினை குறித்து ப்ருதோனுக்கு சரியான புரிதல் இல்லைஅது எல்லா காலங்களிலுமே அது ஒரேமாதிரி இருப்பதாக அவர் கருதுகிறார் என்று கருத்தளித்து அன்னென்கோவுக்கு பின்வருமாறு எழுதினார் மார்க்ஸ்:

சாதிய விதிமுறை என்பதுகூட ஒருவகையான உழைப்பு பிரிவினைதான் இல்லையாஅதேபோல்கூட்டுஸ்தாபன (corporations) விதிமுறை என்பது மற்றொரு வகையான உழைப்பு பிரிவினை இல்லையாஇங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கிய உற்பத்தி முறையின் கீழ் உருவான உழைப்பு பிரிவினை 18 ஆம் நூற்றாண்டில் மறைந்து போனது. அதன் பிறகு,  நவீன பெரு-நிறுவன தொழில் நிறுவனங்களில் முற்றிலும் வேறொரு வகையான உழைப்புப் பிரிவினை தொடங்கவில்லையா? (தத்துவத்தின் வறுமைபக். 158ம் மாஸ்கோ 1966).

1847 இல்புருத்தோனின் புத்தகத்திற்கு விமர்சனமாக மார்க்ஸ், தத்துவத்தின் வறுமை’ என்று எழுதினார்அதில் அவர்:

தந்தைவழிச் சமூக அமைப்பின் கீழ்சாதியமைப்பின் கீழ்நிலப்பிரபுத்துவத்தின் கீழ்கூட்டுஸ்தாபன அமைப்பின் கீழ் நிலையான விதிகளின் படி ஒட்டுமொத்த சமூகத்திலும் உழைப்பு பிரிவினை இருந்ததுசட்டம் இயற்றுபவர் இந்த விதிகளை நிறுவினாராஇல்லைஅவை பொருளாயத உற்பத்திச் சூழலிலிருந்து பிறப்பவைபின்னர் அவை சட்டத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டதுஇந்த வகையில்உழைப்பு பிரிவினையில் பல்வேறு வகைகள் சமூக அமைப்பின் அடித்தளங்கள் ஆகுகின்றன. (பக். 118).

1859இல் மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பில்” முதலாளித்துவப் பொருளியலாளர்கள் உற்பத்திக்கும்பரிவர்த்தனைக்கும் இடையேயான உறவை எவ்வாறு தவறாக புரிந்து கொண்டார்கள் என்று கருத்து தெரிவிக்கையில்மார்க்ஸ் சாதி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“அல்லதுசட்டம் ஒரு சில குடும்பங்களக்கு மட்டும் நில உரிமையை நிலைத்திருக்கச் செய்யலாம்அல்லது பாரம்பரிய உரிமையாக உழைப்பை நிர்ணயிக்கலாம்இவ்வாறு சாதியமைப்பாக வலுபடுதலில் அது முடிவடைகிறது. (பக். 201, மாஸ்கோ பதிப்பு 1970).

1853 இல் ”இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” எனும் ஒரு கட்டுரையில் சாதி மற்றும் உழைப்புப் பிரிவினை குறித்து மார்க்ஸ் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்

இரயில்வே முறையின் விளைவாகத் தோன்றும் நவீன தொழிற்சாலைஇந்தியாவின் சாதிகளை தாங்கி நிற்கும்முன்னேற்றத்திற்கும் இந்திய சக்திக்கும் தீர்க்கமான இடையூராக இருக்கும் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும். (காலனியயம் குறித்துமாஸ்கோ பதிப்பு 1974, பக். 85).

“பருத்தி மற்றும் இதர மூலப் பொருட்களை தங்களது உற்பத்திக்காக மலிவான விலையில் உறிஞ்சவே ஆங்கிலேய மில்லாதிபத்தியம் (millocracy  மில் நிறுவன ஏகாதிபத்தியம்இந்தியாவுக்கு இரயில்களை மானியமாக கொடுக்க விழைகிறது என்பதை நான் அறிவேன். (பக். 84).

”…. நிர்பந்திக்கப்பட்டாலும், அனைத்து ஆங்கில பூர்ஷுவாக்களும் மக்களின் சமூக நிலையை மாற்றவோ அல்லது  அவர்களின் பொருளாயத நிலையிலிருந்தோ (அவர்களை) விடுவிக்கவோ மாட்டார்கள், இது உற்பத்திச் சக்தியின் முன்னேற்றததை மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல மாறாக அதன் மீதான மக்களின் பயன்பாட்டைச் சார்ந்தும் இருக்கிறது. ஆனால்,  அவர்கள் (பூர்ஷுவாக்கள்) இரண்டுக்குமான பொருளாயத அடிப்படைகளை வரையறுக்கத் தவறமாட்டார்கள்…” (பக். 85) [ All the English bourgeoisie may be forced to do will neither emancipate nor materially mend the social condition of the mass of the people, depending not only on the development of the productive powers, but on their appropriation by the people. But what they will not fail to do is to lay down the material premises for both.]
மார்க்ஸ் சொன்னதிலிருந்து (நவீன தொழிற்சாலைகள் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும்), அது உழைப்புப் பிரிவினையின் பாரம்பரிய அம்சங்களை மாற்றி அமைக்கும் என்பதை நாம் அறியலாம்.  அதேவேளை அத்தகைய மாற்றங்கள் உழைக்கும் வர்க்கத்தை விடுவிக்கப் போதுமானதாக இருக்காது என்றும் சொல்கிறார்அதுமட்டுமல்லாதுஉழைக்கும் வர்க்கம் உற்பத்தி சாதனங்களைப் பறிப்பதற்காக முதலாளிகள் வர்க்கத்திற்கு எதிராக போராட்டங்களைத் தொடுக்க வேண்டும் என்கிறார்இதன் மூலமாக,  உழைக்கும் வர்க்கத்திடமிருந்து சொத்துரிமை எனும் பெயரில் நில வாடகைவட்டி மற்றும் லாபம் என்று வசூலிக்கும் சுரண்டல் வர்க்கத்தின் உரிமைகளைப் பரித்து அதை ஒழிக்கவும் முடியும். அப்போது முதலாளி வர்க்கமும் தங்கள் சொந்த உழைப்பால் வாழும் தேவை உருவாகும்எல்லா மக்களும் உழைக்கையில்எஜமானர்-தொழிலாளர் உறவானது ஒருவருக்கொருவர் சமமாக இருக்கும் உற்பத்தியாளர் உறவாக மாறும்.
எங்கெல்லாம் சமமின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் உழைப்புசார் உறவுகளை மாற்ற வேண்டும்உழைப்பு பிரிவினையை மாற்றுவதென்பது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.
சாதிகளுக்கிடையில் நிலவும் உழைப்பு பிரிவினைஆண் பெண்களுக்கிடையே நிலவும் பாரம்பரிய உழைப்பு பிரிவினை இவையாவுமே இதன் கீழ் வருகின்றன.
சமூகத்தில் நிலவும் ”தவறான சமூக உறவுகளை” (மார்க்ஸின் சொற்களில் சொல்வதானால்மாற்ற வர்க்கப் போராட்டத்தின் பாதையிலிருந்து உழைப்புச் சுரண்டலுக்கெதிராக சரியான கண்ணோட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் போராட்டமே உழைக்கும் வர்க்கத்திற்கு உதவும்எஜமானர் வர்க்கத்திடமிருந்து அடிமைபட்டு கிடப்பதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள அதுவே சரியான பாதையாகும்.
ஒரு சமூகத்தில் கீழ்நிலை சாதியினர் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக இருக்கின்றனர்சுரண்டலின் அடிப்படையில் உருவான பாரம்பரிய உழைப்புப் பிரிவினைக்குள்ளாக வாழ்கின்றனர் என்றால்அத்தகையத் தவறான உழைப்பு உறவை நீக்குவதே சாதிய விடுதலைக்கான சரியான தீர்வு.
1867 இல் வெளியான ’மூலதனம்’ பாகம் ஒன்றில் சாதி குறித்து மார்க்ஸின் அவதானிப்புகள்:
பட்டறைத் தொழிலானது பொதுவாக சமுதாயத்தில் தொழில்கள் இயற்கையாகவே வேறுபட்டு வளர்ந்திருக்கக் கண்டு, அந்த வேறுபாட்டை அப்படியே எடுத்தாள்வதோடு, பட்டறைக்குள்ளேயே திட்டமிட்டு அதனைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நுணுக்கத் தொழிலாளியை தனித்தேர்ச்சி பெறச் செய்கிறது. மறு புறம், பகுதி-வேலையை ஒருவரது வாழ்க்கைத் தொழிலாக மாற்றுவதென்பது, முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபடும் தன்மை தனி ஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும்.  தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை, முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன; ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே. (மூலதனம், பாகம் 1, பக்.461, தியாகு மொழிபெயர்ப்பிலிருந்து இந்த மேற்கோள் எடுக்கப்படுள்ளது)

இந்தப் பதிவின் இறுதியில்மற்றொரு எழுத்தாளரின் அடிக்குறிப்பை மேற்கோள் காட்டி எழுதுகிறார் மார்க்ஸ்:

எகிப்தில் கலைகளும் தேவையான பூரணத்துவத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதுமற்றொரு வர்க்கக் குடிகளின் விவகாரங்களில் தலையிடாத கைவினைஞர்கள் வாழும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும்ஆனால்  வாழ்வாதாரத் தொழில் (life calling) மட்டும் இனங்களுக்குள்ளான பாரம்பரியத்திற்குட்பட்டது... மற்ற நாடுகளில் வணிகர்கள் தங்களது கவனத்தை பல தொழில்களுக்கிடையில் பகிர்ந்தளித்தனர்ஒரு சமயத்தில் அவர்கள் வேளான்மையை முயல்கின்றனர்மற்றொரு சமயத்தில் வாணிபம்வேறொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களை கவனிப்பதில் ஒருங்கே ஈடுபட்டிருந்தனர்சுதந்திரமான நாடுகளில்அவர்கள் மக்கள் மன்றங்களை அடிக்கடி கூட்டுபவர்களாக இருந்தார்கள்..... அதற்கு நேர்மாறாக எகிப்தில் அரசு விவகாரங்களில் தலையிட்டால்அல்லது ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டாலோ கைவினைஞர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டனர்இவ்வாறாக அவர்ள் தங்களது வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள இடையூறு எதுவும் இருக்கவில்லை..... மேலும்தங்களது மூதாதையர்களிடமிருந்து எண்ணற்ற விதிமுறைகளை உள்வாங்குவதால்அதிலிருந்து புதிய அனுகூலங்களைக் கண்டுபிடிக்க எப்போதும் ஆர்வமாய் இருப்பர். (பக். 461).

குறிப்பிட்ட தொழிலைச் செய்வோர், அவர்கள் மட்டுமே அந்தத் தொழிலில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக எகிப்தில் கைவினை தொழில் அத்தகையதொரு நிலையை எட்டியதுஅவர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லைஅப்படிச் செய்தால்அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்அதனால் ஒவ்வொரு தொழிலும் சிறப்புத் தொழிலாக உருவெடுக்கும் நிலைக்குச் சென்றது.

இதுவும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையோடு தொடர்புடையதேஇந்தியாவில் மட்டுமே சாதி எப்படி உருவானது என்பது நமக்குத் தெரியாதோ அதேபோல் எகிப்தில் மட்டும் தொழில்கள் குறித்த இத்தகைய கட்டுப்பாடுகளும்கடும் தண்டனைகளும் ஏன் நிலவியது என்பது நமக்குத் தெரியாது.  உழைப்பு பிரிவினை அத்தகையதொடு வடிவத்தை அங்கெடுத்தது என்பதை மட்டும் நாம் புரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாகஉலகெங்கும் உழைப்பு பிரிவினையின் வடிவங்கள் குறிப்பிட்ட அளவு மாறிக் கொண்டே வருகிறதுஇந்த மாற்றங்கள் இந்தியாவிலும் நிகழ்கிறது.  பாரம்பரியத் தொழில்கள் குறித்த விதிகளும் மாறி வருகிறதுஎனினும்இத்தகைய மாற்றங்கள் சாதிய நிறுவனத்தை மாற்றும் அளவுக்கு இருக்கப் போவதில்லைகீழ்நிலை சாதிகளுக்கிடையில் சாதி சார்ந்த தொழில்கள் நீடிக்கவே செய்கிறதுஏனென்றால் சாதி சார்ந்த தொழில்களை விட்டுவிட்டு மூளை உழைப்புக்குள் நுழையும் சாத்தியங்களை அவர்களுடைய  பொருளாதார சூழல் அவர்களுக்கு  வழங்குவதில்லை.

இதுவரையிலான மார்க்ஸின் அவதானிப்புகளின் அடிப்படையில்கடந்த காலத்தில் உழைப்பு பிரிவினையே சாதியப் பிரச்சனையின் அடிப்படையாக இருந்திருக்கிறது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்இருப்பினும்,  இந்தியாவில் மட்டும் ஏன் அது நடந்தது என்பதை விளக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை.
சாதியமைப்பு என்பது ஒரு வகையான உழைப்புப் பிரிவினையேசாதிய வேறுபாடுகளை தற்காக்கும் சட்டங்கள் இல்லையென்றாலும் சமூக நிலைமைகள் அனைத்தும் சாதியைக் கட்டிக் காக்கும் விதத்திலேயே இருக்கின்றன.

மீண்டும் மீண்டும் மார்க்ஸ் முன்வைத்த அவதானிப்புகளைத் தொடர்ந்துநாம் இந்தியாவின் வர்க்கங்களை ஆய்வு செய்வோமானால்எல்லா கீழ்நிலை சாதிகளும் உழைக்கும் வர்க்கத்தினராய் இருக்கின்றனர்மேலும்இந்தப் பிரிவினர் பெருமளவிலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்அவர்கள் இந்தச் சுரண்டலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்சுரண்டல்வாத சமுதாயம் உருவாக்கிய உழைப்புப் பிரிவினையை அவர்கள் மாற்ற வேண்டும்அதற்கு அவர்கள் வர்க்கப் போராட்டப் பாதையிலேயே செல்ல வேண்டும்அந்தப் பாதையை உணராதுஅதில் செல்லாது போனால்இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர வேறெந்த பாதையும் இல்லைபல்லாயிரம் ஆண்டுகளாகபல நூறு வருடங்களாக சாதியமைப்பில் உழன்று கொண்டிருப்பதுபோல்அது மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்அதிலிருந்து தப்ப வேறெந்த வழியும் கிடையாது.

எனினும்கீழ்நிலை சாதிகளின் அறிவுஜீவிகள் இன்னும் தங்களது கண்களை திறக்கவில்லை.  சுரண்டும் வர்க்கமானது ஒரு தந்திரோபாயமாக எறியும் இடஒதுக்கீடு எனும் பிச்சைக்கும் உண்மையான சுதந்திரத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை அவர்கள் இன்னும் உணரவில்லைகையளவு நிறைந்திருக்கும் மக்கள் கூட்டத்திற்கு விரலளவு உணவு கிடைப்பது போல் இட ஒதுக்கீடு எனும் பெயரில் கிடைக்கும் சலுகைகள் அவர்களை நிறைவடையச் செய்துவிடுகின்றது. அதற்காக அவர்கள் தங்களது கீழ்நிலை சாதிய நிலையை தக்கவைத்துக் கொள்வதே பாதுகாப்பு என்று நினைக்கின்றனர்சுரண்டும் வர்க்கத்தின் அரசாங்கத்திற்குள் ஊடுருவுவதே தங்களது இலக்கு என்று நினைக்கின்றனர்.

இந்தியாவில் பட்டியல் சாதிபட்டியல் பழங்குடிபின் தங்கிய சாதிகளின் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக அடங்கிய ஒரு அரசாங்கம் அமைகிறது என்றே வைத்துக் கொள்வோம்சாதியை ஒழிக்க அந்த அரசாங்கம் என்ன செய்ய முடியும்அதற்கான செயல் திட்டம் என்னவாக இருக்கும்சுரண்டல்வாத சொத்துறவுகளை அது எவ்வாறு அழிக்கும்அசுத்தப் பணிகளை செய்து வாழும் கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை அந்த செயல்திட்டங்கள் மாற்றியமைக்குமா?
மிஞ்சி மிஞ்சிப் போனால், ‘சாதிய வேறுபாடுகளைக் கடைபிடிக்காதீர்கள்!’ என்பன போன்ற மேம்போக்கான சட்டங்களை இயற்றும்அச்சட்டங்கள் எவரைக் கட்டுப்படுத்தும்சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு அது ஒரு பிராமண பெண்ணுக்கும்கம்மாளர் சாதி ஆணுக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடியுமா?  சட்டத்தின் உதவி கொண்டு ஏதாவது இரண்டு நபர்களை ஒன்றிணைக்க முடியுமாபொருளாதார நிலைமைகளை மாற்றாமல் சாதிய-கலப்புத் திருமணங்களுக்கு எப்படி வழிவகுக்க முடியும்?  நிர்வாகத்தின் துணை கொண்டு சமூக உறவுகளின் ஒற்றை அம்சத்தையாவது அதனால் மாற்ற முடியுமாஅப்படி என்றால் கீழ்நிலை சாதியினரை உள்ளடக்கிய அரசாங்கள் அரசாட்சியை கைப்பற்றி என்னதான் செய்யும்?

 அது எதனை அடையும் என்றால்சீர்கெட்டுப் போயிருக்கும் உழைப்பு சுரண்டுலுக்கு அது தனது பங்கை செவ்வனே ஆற்றும். ஆதிக்க சாதி பூர்ஷுவாக்களுக்கு பக்கத்தில் தாழ்த்தப்பட்ட பூர்ஷுவாக்களாக நிற்கும் ஒரு இடத்தை அடையும்.

 கீழ்நிலை சாதிகளின் அரசாங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்தலித் பூர்ஷுவாக்களை உருவாக்குவதே அவர்களுடைய ஒட்டுமொத்த குறிக்கோள்அதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமாகீழ்நிலை சாதிகளின் பூர்ஷுவாக்கள்கீழ்நிலை சாதிகளின் சாதாரண அடித்தட்டு மக்களை சுரண்டி பிழைப்பது என்பதன்றி வேறெதுவுமில்லைகீழ்நிலை சாதிகளின் அரசாங்கங்கள் இந்த நிலையை மிக அற்புதமாகச் சாதிக்கும். 
குறிப்பு:
(18-24, 2004 இல் ஃப்ராண்டியர் இதழில் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்தவர் பி.ஆர்பாபுஜிஇதன் தெலுங்கு பதிப்பு டிசம்பர் 2003 இல் தெலுங்கு புத்தகத்தின் நான்காவது பதிப்பின் பின்னினைப்பாக வெளிவந்ததுஆங்கில பதிப்பு ஆகஸ்டு 2001 இல் வெளிவந்ததால்அதில் இந்த கட்டுரை இடம்பெற முடியவில்லைஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டு செய்யப்பட்ட இந்தி மொழிபெயர்ப்பும் இந்த கட்டுரையில் இடம்பெற முடியவில்லைஇந்த கட்டுரையின் இந்தி மொழிபெயர்ப்பு ஜனவரி 2000 த்தில் ‘சமயந்தார்’ எனும் இதழில் சமீபத்தில் வெளிவந்தது.)

நன்றிகுறளி (குறளி 2013 இதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு கட்டுரை பல மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் (மொழிபெயர்ப்பு மற்றும் அச்சுப்பிழைகள்)  பதிவு செய்யப்பட்டுள்ளது)

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

* உழைப்புசார் உறவுகள் (labour relations) என்பதும் உற்பத்தி உறவுகள் என்பதும் ஒன்றுதான் என்று கைதேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரிடம் உரையாடியபோது தெளிவானது. 

 பொருள் உற்பத்திக்காக நடைபெறும் உழைப்பு நடைமுறையில் பொருளாக நேரடியாக மாறிவிடுவதால்,  லேபர் ரிலேஷன்ஸ் என்பதை உற்பத்தி உறவுகள் என்று சொல்வதில் தவறில்லை என்றார். அதேபோல் ஆசிரியரும் இரண்டு சொற்றொடர்களையும் பயன்படுத்துவதால், மார்க்சியத்தின் அடிப்படையிலிருந்து அவர் விலகவில்லை எனும் புரிதலோடு அவர் விளக்கியது எனக்கு உடன்பாடாக இருந்த காரணத்தால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்.