Jul 17, 2023

உடலரசியல் என்பது பாலியல் புரட்சி மட்டுமல்ல!

உடலரசியல் என்பது பாலியல் புரட்சி மட்டுமல்ல! உடலரசியல் என்பது பணம் கொண்ட முதலைகள் உழைக்கும் உடல்கள் மீது நிகழ்த்திடும் உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதும் தான்!

(அதை மட்டுமே பேசுவதாக அவதூறு செய்யும் முற்போக்கு எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களுக்கு!) 


ஆண் பெண் உறவில் பாலியல் நாட்டம் கடந்து அரசியல் பார்வை என்று ஒன்று இருக்கிறது! 

“முதலாளித்துவ சமுதாயத்தில் பின்பற்றப்படுகின்ற நுகர்வு வழிபாடு, வெகுஜனக் கலாச்சாரத் தரங்கள், நெருக்கமான உறவுகளை சுற்றுப்புற உலகத்தின் அழுத்தத்திலிருந்து தப்புவதற்குரிய பிரத்யேகமான வடிவமாக மாற்றுதல் ஆகிய காரணிகளும் இருபாலினருக்கும்* இடையிலுள்ள உறவுகளை மாற்றியிருக்கின்றன என்னும் உண்மையை நாம் மறக்க முடியாது. விஞ்ஞ்சான-தொழில்நுட்பப் புரட்சி பெண்களின் பொருளாதார நிலையில், ஆகவே அவர்களுடைய உளவியல் போக்குகளில் புதிய கூறுகளைப் புகுத்தியிருக்கிறது. சோவியத் தத்துவஞானி இஅந்திரேயெவா பின்வருமாறு எழுதுகிறார்: “அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகளிலும் மரபு வழிப்பட்ட திருமண உருமாதிரிகள் சிதைவடைதல் வெகு தூரம் போய்விட்டதென்பது உண்மையே. பொருளாதார சுதந்திரத்திற்கான போராட்டம், சிறு குடும்பம், பிறப்பு விகிதம் குறைந்திருத்தல் இவை அனைத்தும் சமூக ரீதியாக பெண்களின் பால் நடவடிக்கைக்குப் புதிய பின்னணியைப் படைத்திருக்கின்றன. நகரமயமாக்கல், நகர வாழ்க்கையின் முகமறியாத் தன்மை ஆகியவற்றின் விளைவாய் சமூகக் கண்காணிப்பின் வடிவங்கள் பலவீனமடைதல் பாலுறவு ஒழுக்கத்தின் மரபு வழிப்பட்ட வழிவங்களைச் சர்ச்சைக்கு உள்ளாயிருக்கின்றன. பாலுறவு வாழ்க்கையில் பெண்களுடைய பாத்திரத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. துல்லியமாக இந்நிகழ்வுகளே ஆன்கள் மற்றும் பெண்அளின் பாலுறவு நடத்தையில் புதிய சகாப்தத்தைத் தொடங்கியிருக்கின்றன; இந்த சகாபத்தம் பாலுறவு புரட்சி என்று அழைக்கப்பட்டது.”

……

சமூகப் புரட்சிக்குப் பதிலாக பாலுறவுப் புரட்சியை முன் வைக்கும் முயற்சி முதலாளித்துவ சித்தாந்திகளுக்கு மட்டுமின்றி, அராஜகவாத சித்தாந்திகளுக்கும் குறியடையாளமே. இத்தகைய “தத்துதவ ரீதியான” மாதிரிகள் மனிதனுடைய பாலுறவு மற்றும் திருமண-குடும்ப உறவுகளின் வளர்ச்சியில் நெடுங்காலத்துக்கு முந்திய கட்டங்களை நினைவூட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  உதாரணமாக, வரைமுறையற்ற பாலுறவை உயர்த்திப் போற்றி, ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலுள்ள உறவுகளுக்கு அது மாதிரியளவாக இருக்க வேண்டும் என்பது வர்க்கத்தன்மை இழந்தவர்களின் குணாம்சம்.  அவர்கள் அதை உண்மையான “சுதந்திரக்காதல்” என்கிறார்கள். ஆனால் அது உண்மையில் காதலை நிராகரிப்பதாகும்; விலங்குலகத்துக்கும் ஆதிகால மனித சமூகத்துக்கும் இடையிலிருந்த மாறும் கட்டத்தில் நிலவிய வரைமுறையற்ற புணர்ச்சிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறுவதாகும்.

…….

…..

சோவியத் நாட்டில் 1920களின் ஆரம்பத்தில் தோன்றிய “பாலுறவுப் புரட்சிக்காரர்களின் ”தத்துவக்” கருத்தோட்டங்களை கிளாரா ஜெத்கினுடன் வி.இ. லெனின் நடத்திய உரையாடலில் ஆழமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தினார். ”பாலுறவு வாழ்க்கையைப் பற்றி இளைஞர்களின் மாறிய அணுகுமுறை “கோட்பாட்டு ரீதியானது’, அது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.  பலர் தங்களுடைய நிலை ’புரட்சிகரமானது’, ‘கம்யூனிச’ நிலை என்று கூறுகிறார்கள்.  அது உண்மை என்று அவர்கள் மனப்பூர்வமாக நம்புகிறார்கள். ஒரு வயாதிகனாகிய என்னை, இது கவர்ச்சிக்கவில்லை. நான் சிடுசிடுப்பான சந்நீயாசி அல்ல. எனினும் இளைஞர்களின் – பல சமயங்களில் பெரியவர்களின் கூட – “புது பாலுறவு வாழ்க்கை” என்றழைக்கப்படுவது எனக்கு முற்றிலும் முதலாளி வர்க்க விபச்சார விடுதியின் மற்றொரு ரகமாகத்தான் தோன்றுகிறது. இதற்கும் கம்யூனிஸ்டுகளான நாம் புரிந்துகொள்கின்ற சுதந்திரமான காதலுக்கும் கடுகளவு ஒற்றுமை கூட இல்லை. கம்யூனிச சமுதாயத்தில் ஒருவருடைய உடற்பசியைத் தீர்ப்பதும் காதலுக்காக ஏங்குவதும் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பதைப் போன்றதே என்ற பிரபலமான தத்துவத்தை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள்.  நம்முடைய இளைஞர்கள் இந்த ‘ஒரு டம்ப்ளர் தண்ணீர்’ தத்துவத்தைக் கேட்டு வெறியடைந்துவிட்டார்கள். முற்றிலும் வெறியடைந்துவிட்டார்கள்… பிரபலமான ‘ஒரு டம்ப்ளர் தண்ணீர்’ தத்துவத்தை நான் முற்றிலும் மார்க்சியம் அல்லாத தத்துவமாகக் கருதுகிறேன்.  பாலுறவு வாழ்க்கையில் மனிதனுக்கு இயற்கையால் தரப்பட்டவை மட்டும் வெளியாகவில்லை, கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவையும்-உயர்ந்தமட்டமோ, தாழ்ந்தமட்டமோ-வெளியாகின்றன.  பாலுறவுக் காதல் வளர்ச்சியடைந்து மேலும் நாகரிகமடைவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் சுட்டிக்காட்டினார்… பாலுறவு விவகாரங்களில் அடக்கமின்மை முதலாளி வர்க்கத் தன்மையே, அது சீரழிவின் அறிகுறி.”

உயிரினம் என்ற முறையில் மனிதனுடைய சாராம்சத்தை இருபாலினருக்கும் இடையிலுள்ள உறவாக மட்டுமே வகைப்படுத்த முடியாது. ஆண், பெண் உடலுறவு மனிதனுடைய ஒத்திசைவான சுயவெளியீட்டில் பிரிக்க முடியாத கூறாக இருந்தபோதிலும், அவனுடைய எல்லாத் தேவைகளையும் விருப்பார்வங்களையும் இலட்சியங்களையும் அந்தத் துறையை மட்டும் கொண்டு பூர்த்தி செய்ய முடியாது.

பரஸ்பரக் காதல், கூட்டு உழைப்பு, கணவன் மனைவிக்கும் இடையிலான சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாட்டாளி வர்க்கத் திருமணத்தின் புதிய தண்மையைப் பற்றி எங்கல்ஸ் முக்கியமான முடிவுகளுக்கு வந்தார்….. //

இப்படியாக எது ஒன்றையும் உழைக்கும் வர்க்க சமூகப்-பொருளாதார அரசியல் கண்ணோட்டத்தில் அணுகும் உடலரசியல் கொண்டவர்களுக்கு.. இது தனியுடைமை / ஆணாதிக்கப் போலி ‘பாலுறவு ஒழுக்கம் / பத்தினித் தன்மை’ தொடர்பானதல்ல!  உழைக்கும் வர்க்க உடலரசியல் தரும் ஒரு வாழ்க்கை முறை / மனநிலை / தேர்வு! ஏனென்றால் இந்த அமைப்பின் கீழ் பாலியல் உரிமையிலும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது! பணமும், அதிகாரமும் கொண்டவர்களுக்கு விபச்சாரமும் தாராளவாத கருத்துக்களும் வாய்ப்புகளை வழங்குகின்றன, இங்கும் ஒரு சாரார் பாலியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாக, சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்! சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும், அனைத்து மனித உறவுகளிலும் இது தாக்கம் செலுத்துகிறது என்னும் நிலைமைகளை உணர்ந்து செயல்படுவது என்றாகும். 

பாலியல் ஒடுக்குமுறையை எதிர்ப்பதென்பது பெண் உடலை உற்பத்தி அலகாக மாற்றி வைக்கும் அடக்குமுறையை எதிர்ப்பதென்பதாகும். ஒதுக்கப்பட்டவர்களுக்காக” நாத்திகர்கள்  கோவில் நுழைவு  போராட்டம் நடத்துவது போல் தான் இதுவும்! (அதுக்காக கடவுளை ஏற்றுக்கொண்டதாகி விடாது!)

புனிதங்களைக் கட்டுடைப்பது! ஆதிக்கத்தைக் கட்டுடைப்பது! அதேவேளை இந்த நுகர்வு கலாச்சார விழுமியங்கள் கொண்ட ஆணாதிக்க சமூகத்தில் ”டிசைன் டிசைனாக உருட்டிக்கொண்டு வரும் நபர்களுக்கு’  உடலை இரையாக்கக் கூடாது என்னும் ‘உஷார் தன்மையோடு’…. இருப்பது என்னும் அளவுக்கு பெண் விடுதலை பேசுவோருக்கு தெளிவு உண்டு!

ஏனெனில் என் உடல் என் ஆயுதம்!

& some people’s ecstasy is in “knowledge” than a hard fuck!

 Read: 

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - எங்கல்ஸ்

வரலாற்றில் குடும்பமும் காதலும்

ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - கிளாரா ஜெட்கின் (ஆசிரியர்), விளாடிமிர் இல்லிச் லெனின் (ஆசிரியர்)

பெண்களும் சோசலிசமும் - அகஸ்ட் பெபல் 


*ஆண் பெண் என்று பேசுவதால் கம்யூனிஸ்ட்களை homophobia உடையவர்கள் என்ற ஒரு கருத்தை முதலாளித்துவ தாராளவாதிகள் பரப்புவதுண்டு. குடும்பம் (அல்லது ஆண் பெண் உறவு) என்பது உற்பத்தி அலகாகிவிட்டது என்னும் ஆய்வுப் பார்வையிலிருந்து அதை முன் வைத்து விவாதங்கள் நடக்கின்றன என்கிற புரிதல் தேவை! இன்றைய காலகட்டம் போல் Sex /Gender Specturm குறித்த விவாதங்கள் தீவிரமாக மேலெழாத காலகட்டம், அன்றைய நிலையிலான பிரதான முரண்பாடு / புரட்சிக்கான செயல்பாடுகள் என்கிற வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு எதையும் அணுக வேண்டும். அதற்கு மார்க்சியம் படிப்பது முன்நிபந்தனை!

*அதேபோல் கட்டற்ற பாலிறவு குறித்த மாற்றுக் கருத்துகளை வைப்பதால் கம்யூனிஸ்ட்களும் ஆணாதிக்கவாதிகள், பெண் விடுதலையை புறந்தள்ளியவர்கள் என்கிற பேச்சும் உண்டு. இதுவும் முதலாளித்துவ / தாராளவாத / குட்டிமுதலாளித்துவ அவதூறுகளே.

*சாதியப் பிரச்சின குறித்த அவதூறுகளும் இத்தகையதே.

*பாலுறவு / சாதியப் பிரச்சினை உள்ளிட்டவற்றை புரிந்துகொள்வதில் போதாமை அனைவருக்குமே இருக்கும்! கம்யூனிஸ்ட்களிடையே சிலரிடம் ஒரு வரட்டுவாத போக்கும் இருக்கலாம்! அதையும் உரையாடலுக்கு உட்படுத்தியபடியே இயக்கங்களும், தனிநபர்களும் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர்.

கம்யூனிஸ்ட் என்பதாலேயே ‘பரிசுத்த ஆவி’ உட்புகுந்தது போல் யாரும் முற்றும் அறிந்தவர்களாக இருக்கவும் முடியாது!

இங்கே ஏற்றத்தாழ்வு நிலவுகிறது, அநீதி நிலவுகிறது, சுரண்டல் நிலவுகிறது  அதை மாற்ற வேண்டும் என்கிற ஏதோ ஒரு புள்ளியில் தான் வலது பக்கம் போகாமல் இடது பக்கம் வருகிறோம்…. அதன் தொடர்ச்சியாக கற்றலும், இயங்குதலும் நடைபெறுகிறது!

ஆனால் மற்ற எந்த இயக்கங்களுக்கும் / நபர்களுக்கும் இல்லாத செழிப்பான, விஞ்ஞானபூர்வ வழிகாட்டுதல் கொண்டது மார்க்சியம்… அதனை படித்தால் மட்டுமே உணர முடியும்.. படித்தாலும் உணர உழைக்கும் வர்க்க உணர்வை தட்டியெழுப்பும் அரசியலூக்கமும் தேவைப்படுகிறது!

எதுவொன்றைப் பற்றியும் இவ்வளவு ஆழமான பார்வைகள் தேவைப்படுகையில்…. வெளியுலகத்தில் அனைத்தும் “கலவிமயமானதே” என்னும் போக்கைக் காணும்போது… கடுப்பா வருது! அதுக்கும் மேல… மார்க்சியத்துல அது இல்ல, இது இல்ல… என்று கொளுத்திப் போடும் ‘அறிவுஜீவிகள்’…. 

 

 

ஆண் பெண் உறவு பற்றிய வக்கிர கதையாட்

 Today's Roast

😝
ஆணும் பெண்ணும் பழகினாலே, அந்த ஆணைச் சுற்றி “என்னா மாமே உஷார் பண்ணிட்டியா, மேட்டர முடிச்சிட்டியா, ஃபிகரு எப்படி, ஐடம் எப்படி, முடிஞ்சா எனக்கும் உசார் பண்ணி விடு.. டேய் உனக்கெல்லாம் எப்புட்றா அது கரெக்ட் ஆச்சு…செம கை போல…” என்று பேசும் பலர் (ஆண்கள்) இருக்கிறார்கள்! அல்லவா?
கூடுதலாக பெண் உரிமை பேசும் பெண்களோடு நட்பென்றால் “எப்படி மச்சான் அது கூடல்லாம் உனக்கு செட் ஆகுது! பொண்ணா அது… பேயு! ஓவரா பேசுமே மாமே அது!.. ”
ஆணைப் பற்றி என்ன பேசுவார்கள்? “அவன்டல்லாம் கொஞ்சம் உஷாரா இரு! காஜி புடிச்சவன்! பொறுக்கிப் பய!” (இதைப் பேசுவதும், பெரும்பாலும் ஆண்கள் தான்).
இப்படியாக, ஆண் பெண் உறவில் எல்லா நேரமும் பாலுறுப்புகளைக் கண்காணிக்கும் மனநிலையிலேயே சமூகம் இருக்கிறது! இது ஒரு மன நோய்! தனக்கு அப்படி வாய்க்கவில்லையே என்பதால் வரும் பொறாமை! கூடுதலாக சமூகத்தின் அத்தனை விதிகளையும் மீறி சுதந்திரமாக வாழும் பெண்களின் தேவையெல்லாம் கட்டற்ற பாலியல் செயல்பாடுதான் என்னும் கூமுட்டைத்தனம்.
ஆண் பெண் உறவில் (not shrinking it in binary here! The society is curious about these binaries) பகிர்ந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது! குறிப்பாக அறிவுரீதியாக, அரசியல்ரீதியாக! அதேபோல் பாலியல் வகையினங்கள் (Sexuality) என்பதிலும் இங்கே பல வகைகள் உண்டு – Aromantic, Asexual என்றும் இருப்பார்கள் என்னும் அளவுக்கு இன்று இது குறித்து பேசப்படுகிறது.


இதையெல்லாம் அத்தகைய நபர்கள் படிப்பதே இல்லையா? மூளையை கழட்டி டிxகில வச்சிடுவாங்க போல! Two people together is not always about fucking!
அடுத்தவரின் நட்பு / உறவு பற்றி தெரிந்துகொள்ளும் குறுகுறுப்பில் அவதியுறும் நபர்களுக்கு உடம்பில் பாலுறுப்பைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதற்காக அடுத்தவருக்கும் உடம்பில் அதைத் தவிர வேறு எதுவுமில்லை என்ற எண்ணம் வந்துவிடுகிறது! (I mean no brain)
மனித மூளை எத்தனை மகத்துவமானது! அதை எதில் வீணடிக்கிறார்கள்! நாவை மஞ்சள் பத்திரிகை ஆக்க வேண்டாமே!
The Thumb rule here is: Don’t interrogate someone what’s cooking between the two, esp by seeing their social media posts, don’t get curious to know “hey what are you doing with her / him” and so on! (when I posted some pics / videos with one of my friend, people started asking him if we are living together .. some people openly in comment! Huh… like this there are so many & am sure many face this)…. If they wish to share about their “relationship” with you, they shall open up… or if you want to make a friendship / relationship with that person, have the guts to “pitch”…
& Sex (any relationship) is not a crime! Sex is personal! so stop getting nosy!

further

Jul 2, 2023

பொருளாதார விஷ ஊசி - எச்சரிக்கை


 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மிக சாமர்த்தியமாக சமூகத்தில் விஷ ஊசி ஏற்றுவார்கள். குறிப்பாக தாராளவாத (academic) அறிவுஜீவிகள்! அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்கள் அவர்கள். அவர்கள் ஏற்றுவது விஷ ஊசி என்று தெரிய நாம் மார்க்சியம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூலதனத்திற்கு அறிமுகம் என்னும் நூலையாவது படித்திருக்க வேண்டும்.

 மூலதன இருப்பையும், சுற்றோட்டத்தையும், அடுத்தவரின் உழைப்பை அபகரித்து இயங்கும் உற்பத்திமுறையை அப்படியே தக்க வைத்துக்கொள்ள முதலாளித்துவமானது வண்ண வண்ணமாக, புதிய புதிய சீர்திருத்தங்களை முன் வைத்து மக்களை தன் வயப்படுத்த முயலும். அதில் சிலர் நேரடியாக முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் என்று தெரியவரும், சிலரது எழுத்துக்கள் முதலாளித்துவ / மூலதன எதிர்ப்பு போலவும், மார்க்ஸை விட இவர் சிறந்த வழிமுறைகளை சொல்கிறார். பொருளாதார நிர்ணயவாதமாக இல்லாமல் ”ஜனநாயக சோஷலிசம்” பேசுகிறார் என்றெல்லாம் முன்வைப்பார்கள். மார்க்ஸைப் படிக்காதது போலவே நடிப்பார்கள். மார்க்ஸ் சொன்ன பிரச்சினைகளை இவர்கள் வேறு கலைச்சொற்கள் மூலம் வியாக்கியானம் செய்து, தீர்வை மூலதனத்திற்கு சாதகமாக வைப்பார்கள்.

கொச்சையான முதலீட்டிய எதிர்ப்பாளர்” அல்ல என்ற சொல்லாடல்களில் உள்ளது விஷம்! (இதுல தமிழ்ல terminology correction வேற)…

 மார்க்ஸ் எதிர்த்தது மூலதனத்தையல்ல… தனியுடைமை உற்பத்தி முறையை அதன் விளைவான சமூக-அரசியல்-பொருளாதார அமைப்பை. இதுவெல்லாம் புரிய கண்டிப்பாக மார்க்சியம் படிக்க வேண்டும்.

 பொதுவாக (98%) முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் பொருளாதாரம் என்பதை தனித்ததொரு entityயாக காண்பார்கள். ஆனால் மார்க்ஸ் பொருளாதாரம் என்பதை எந்த பொருளில் சொல்கிறார் என்பதில் தான் அது சமூக விஞ்ஞானமாக இருக்கிறது.

இத்தகையவர்கள் பிரச்சினைக்குரிய அல்லது அநியாயமாக கட்டி எழுப்பப்பட்ட ஆபத்தான கட்டிடத்தை தகர்ப்பதை விட்டுவிட்டு விரிசல்களுக்கு எப்படி பூச்சு வேலை பார்க்கலாம் என்று Capitalistic economic engineering வேலை பார்ப்பார்கள், அதாவது இலாபம் என்னும் தேவைக்காக உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி இயங்கும் அநியாயமான உற்பத்தி முறையை எதிர்க்காமல் விநியோகத்தை எப்படி நியாயமாக செய்யலாம் என்னும் சாமர்த்தியவாதமது.

 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் உழைப்புச் சுரண்டல் பற்றி பேச மாட்டார்கள், அல்லது அதை சரி செய்ய இதை செய்யலாம், அதை செய்யலாம் என்று நாய்க்கு எலும்புத்துண்டை எப்படி, எந்த விகிதாச்சாரத்தில் போடலாம் என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள். மார்க்ஸை முழுமையாக படிக்காமல் அல்லது படித்தாலும் வர்க்க உணர்வால் வளர்ச்சி, உயர்வு, “ஜனநாயகம்” (உண்மையில் அது போலி ஜனநாயகவாதம்) ஆகிய “இலட்சியவாத” மனம் கொண்டவர்களால் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. யாரும் இங்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை, ஆனால் உழைப்புச் சுரண்டல் மிக்க பொருளாதார அமைப்பை ஏற்பதென்பது உண்மையில் மானுடத்திற்கு செய்யும் துரோகம்.

மூலதனத்திற்கு வரி போடுவது, கூலியை ஏற்றிக் கொடுப்பது, தொழிலாளர் நலத் திட்டங்களை அறிவிப்பதென்று வகை வகையாக ஆலோசனை வழங்குவார்கள்…. ஆனால் இது எதுவுமே தனியுடைமை உற்பத்தி முறையை, அடுத்தவர் உழைப்பில் நடக்கும் செல்வக் குவிப்பையும், அதன் விளைவான படிநிலை சமூக அமைப்பின் வன்முறையையும் (சாதி உள்ளிட்ட அமைப்பு) தடுக்கப் போவதில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையில் சூழலியல் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற பரிந்துரையெல்லாம் நகைச்சுவையானது.. லாபத்துக்காக மனுசங்க ரத்ததையே உறிஞ்ச தயாரா இருக்குற காட்டேறிகிட்ட உறிஞ்சுன ரத்தத்தை அப்படியே ராவா நிலத்துல துப்பாத.. மரம் செத்துப் போய்டும், சுத்திகரிச்சு துப்புன்னு சொல்ல சொல்ற மாதிரி இருக்கு!

மூலதனம் (முதலீட்டிய மண்ணாங்கட்டி) என்பது வெறும் பணம் தொடர்பானது மட்டுமல்ல அது நிலம், வளம், உற்பத்தி சாதனங்கள், உழைப்பளர்களின் உழைப்புச் சக்தி உள்ளிட்ட அனைத்தும் செல்வந்தர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதற்கு ஏற்றவாறு தான் சமூக அமைப்புகளும், அரசு இயந்திரமும், கட்டுப்பாடு அம்சங்களும் தோன்றும். இவை இரண்டையும் பிரிக்கவே இயலாது என்பதைத்தான் மார்க்ஸ் மிக அழகாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார். (லெனினின் அரசும் புரட்சியுமாச்சம் படிக்கனும்). வர்க்கப் பகைமைகளின் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு என்கையில் அந்த அரசிடம் மன்றாடி மன்றாடி, சீர்திருத்தங்களை முன் வைத்து என்ன கிடைக்கும்? எலும்புத் துண்டு! அது போதுமா? அந்த இத்துப் போன எலும்பை தின்ன உடம்புல உயிரும் தெம்பும் இருக்கனும்ல.. அதை ஏன் ஒரு முதலாளி விட்டு வச்சிருக்கான் தெரியுமா? மறுபடியும் அடுத்த நாள் வந்து அவனுக்கு உழைச்சுக்கொட்ட.. சீர்திருத்தவாதிகள் இதைப் பேசுகிறார்களா?

 சீர்திருத்தங்களால் என்ன மிஞ்சும்? ஊறுகாய் போன்ற சமூகநீதி! இந்த காரணங்களால் தான் நாம் முதலாளித்துவ ஜனநாயகம் / சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இயக்கங்களை, தலைவர்களை எதிர்க்கிறோம். அதேவேளை மார்க்சியவாதிகள் ஒண்ணும் எதிர்காலத்தில் வாழ்பவர்கள் அல்ல, இன்றைய தேவைக்கு குறைந்தபட்ச சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்கிற காரணங்களால் அதன் போதாமைகள் மற்றும் ஆபத்துகள் தெரிந்தும் அதை ஆதரிக்கின்றனர். சிலர் அதோடு சமரசம் செய்துகொள்கின்றனர். இந்த புள்ளிகளில்தான் இங்கு கம்யூனிஸ்ட் முகாமகள் பிரிந்து முரண்பட்டு நிற்கின்றனர். இது புரியாம மொதல்ல உலக கம்யூனிஸ்டுகளே ஒன்று கூடுங்கள்னு அறைகூவல் விடுக்கனும்னு அடையாள அரசியல் பேராசிரிய பெருமக்கள் நக்கல் செய்வதுண்டு.

 மூலதனத்துக்கு வரி போட்டா, அதை எப்படி ஏமாத்தனும்னு முதலாளிகளுக்கு தெரியாதா என்ன? ஏற்கனவே இங்க பல வகையா நிறுவன உருவாக்க வழிமுறைகள் இருக்கு… வரி ஏய்ப்பு, வரி விதிவிலக்குன்னு எல்லாமே மூலதனத்துக்கு சாதகமானதுதான்!

ரொம்ப சிம்பிளா கேக்குறேன்.. இன்னா மயிறுக்கு நான் அடுத்தவனுக்கு உழைச்சு கொட்டனும்? எல்லாருக்கும் பொதுவா இருக்க வேண்டிய ”கச்சாப் பொருளையெல்லாம்” மூலதனங்குற பேர்ல 10 பேரு கட்டுப்பாட்டுல வச்சிருப்பாங்க, அவனுங்க முடிவு பண்ணுற அளவுக்கு நான் உழைக்கனும், அவனுங்க போடுற பிச்சைய நான் வாங்கிக்கனும், எப்ப நான் என் புருஷன் கூட படுக்கனும், என் புள்ளை குட்டிங்க கூட நேரம் செலவு பண்ணனுங்குறது…(அதையும் கூட சந்தோஷமா செய்ய போதுமான கூலியோ, ஓய்வு நேரமோ இருக்காது) வரைக்கும் அவனுங்க நிர்ணயிக்குற உழைப்பு நேரம் தான் முடிவு பண்ணும். இது இப்படித்தான இருக்கும்னு வாழ்றது ஒரு பொழைப்பா?

உன்னை யாருமா கூலி வேலைக்கு போகச் சொன்னாங்க.. உனக்கு திறமை இருந்தா நீயும் அவங்கள மாதிரி தொழில் பண்ணி பொழைச்சுக்கோன்னு வருவாங்க.. பெரு மூலதனம் இல்லாம இங்க என்னா மயிற புடுங்க முடியும்னு முடியாதுன்னு தெரிஞ்சுக்க மறுபடியும் மார்க்ஸ் தான் உதவுவாறு!

 சிறு குறு உற்பத்தியாளர்கள் நிலைமை என்ன ஆகிட்டுருக்குன்னு பார்க்கனும்!

எல்லாத்துக்கும் மேல நான் எதுக்கு அடுத்தவங்க உழைப்பை உறிஞ்சு வாழனுங்குறேன்!

 எல்லாத்தையும் பொதுவுல வை! எல்லாரும் சேர்ந்து உழைப்போம்! எல்லாத்தையும் பொதுவா பிரிச்சுப்போம்! இதுதான் மானுட நீதி… உண்மையான சமூக நீதி… மக்களாட்சி..

 மார்க்சியம் படிங்க.. மக்களாட்சி, சமூக நீதி, ஜனநாயகம், மனித உரிமைன்னு மூதலாளித்துவத்துக்கு வெண்சாமரம் வீசிக்கிட்டே, விச ஊசி ஏத்துற உள்ளூர், வெளியூர், சர்வதேச பேராசிரியர்கள் கிட்ட எச்சரிக்கையா இருங்க! அம்புட்டுதேன்!

 ஒரு உதாரணத்துக்கு இந்த கட்டுரை.. நேரம் கிடைக்கும் போது தமிழ்ல மொழிபெயர்க்கிறேன்’ 🙂

 https://newrepublic.com/article/117673/piketty-read-marx-doesnt-make-him-marx?fbclid=IwAR20mbC4Dp_tFEYz_E5ljuSKdEhTZ5ilDdoaadnpL57waVVBVQbv4vy6t7U

 உழைப்புச் சுரண்டலையும், மூலதனத்தையும் ஒழிப்போம்! படிநிலைகளை ஒழிப்போம். உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம்! அதற்காக மார்க்சியத்தை, கம்யூனிஸ்ட் அரசியலை (விமர்சனம் இருந்தாலும் அதை விவாதித்தபடியே) உயர்த்திப் பிடிப்போம் 🙂


மேலே உள்ள பதிவைப் படித்த பின் இந்த கட்டுரையை படித்து தெளிவு பெறலாம் 🙂

https://saavinudhadugal.blogspot.com/2018/11/blog-post.html?fbclid=IwAR0VJdPBjLxVN8gvfePb-2aVgi8lf-Z0vdrAmgpiBUFR5oaF79wm-D1MZ_E
மார்க்ஸின் மேற்சொன்ன அந்த விளக்கத்தை வைத்து நாம் ‘பொருளாதார அமைப்பு’ எனும் பதத்தை கவனிக்க வேண்டும். ’உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்’ என்பதை ‘உண்மை அடித்தளம்’ என்று குறிப்பிட்டு அவர் அதை ‘பொருளாதார அமைப்பின்’ அடித்தளம் என்கிறார்.