Showing posts with label பாலியல் அடக்குமுறை. Show all posts
Showing posts with label பாலியல் அடக்குமுறை. Show all posts

Mar 1, 2012

பெண்கள் தின நிகழ்வு







மாசெஸ் அமைப்பின் துவக்கம் மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்சார நிகழ்வு. தோழர்கள் சிவகாமி, அ. மார்க்ஸ், முனைவர் பத்மினி, கோ. சுகுமாரன், மோனிகா ஆகியோர் உரையாற்றுகின்றனர். மேலும் சில எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது தவிர… பிரபல ஓவியர்கள் கலந்து கொள்ளும் ஓவியப் பட்டறை நடக்கவிருக்கிறது. அது மாலை 3 மணி அளவில் துவங்கும். ஆர்வமுள்ளவர்கள் ஓவியர்களை சந்தித்து உரையாடலாம், நிகழ்வுக்கான ஓவியங்களை அங்கு வரைந்து பங்களிக்கலாம்.

Jan 20, 2012

ebay.in எதிர்ப்பு - மேலும் சில தகவல்கள்


ஈபேவுக்காதரவாக ink-shop-india நிறுவனத்தின் பதில்:

அன்புடன் கொற்றவை,

தேவையிற்ற சர்ச்சைகளை கிளப்ப முய்ற்சிக்காதீர்கள்.  ஈபே பெரும் பணிகளை செய்து வருகிறது. அவர்களின் ஊக்கத்தை முடக்காதீர்கள். ஓய்வு நேரங்களில் வேறு ஏதாவது பயனுள்ள வேலையைப் பாருங்கள்.


எனது பதில்:

Hello, ink-shop-india (3710)

உங்களது ‘ஸ்டார்’ மதிப்பீட்டையும், உங்கள் கருத்தையும் பார்க்கும்போதே உறுதியாக தெரிகிறது, ஈபேயை உங்களை ’விற்பதற்காக’ மன்னிக்கவும்... ‘உங்கள் பொருட்களை’ விற்பதற்காக....பயன்படுத்தி வருகிறீர்கள் என்று...எனக்கு / குழுவுக்கு அறிவுரை கூறுவதற்கு பதில் நீங்கள் அதை தொடரலாம்...எப்படி அவ்வளவு உறுதியாக உங்களுக்கு தெரியும்...எனக்கு ஓய்வு நேரம் இருக்கிறதென்று....

நாங்கள் ஈபேயை எதிர்த்து வருகிறோம், இன்ன்க் ஷாப்பை இல்லை....சரியா? அவர்கள் எங்களுக்கு பதில் சொல்லட்டும்..

உங்கள் பொருளற்ற கருத்துக்கு இனிமேல் பதில் எதிர்பார்க்காதீர்கள்....எனக்கு இந்த விவகாரம் குறித்து செய்வதற்கு நிறைய இருக்கிறது.


·        உங்களை விற்பது என்பது ஆணாதிக்க பார்வையில் சொல்லப்படும் உடல் விற்பனையல்ல.... முதலாளிகளிடம் மண்டியிடும் அடிமைச் சிந்தனை என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது தவிர ஈபே தளத்தில் வெளியிட்டுள்ள பாலியல்விற்பனையாகும் என்ற பரிந்துரையையும் பார்க்க நேர்ந்தது.http://reviews.ebay.com/Sex-sells-
eBay-style-using-gender-to-your-advantage?ugid=10000000001832065

பெண்களின் மனவோட்டம் பற்றிய குறைவான, ஆணாதிக்க மனப்பான்மையையே அது வெளிக்காட்டுகிறது Sex sells - eBay style; using gender to youradvantage : eBay Guides - பாலியல் விற்கும் - ஈபே பாணி: பாலின அடையாளத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துங்கள்..... என்பதே அது...

இவ்வெதிர்ப்பு சம்பந்தமான அணைத்து ஆவணங்களையும் அவர்களின் தொடர்பு முகவரிக்கு மென் கடிதமாக அனுப்பியுள்ளேன்.  அடுத்து நேரடியாக சென்று கொடுக்கப்படும்...குர்கானில் உள்ள அவர்கள் தலைமை அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்படும்... தொடர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறேன். உதவிகள் தேவை...இம்முயற்சி குறித்து உங்கள் தளங்களில் பதிவு செய்து ஆதரவு கோருங்கள்.

கைழுத்திடுங்கள்...நன்றி...


Jan 13, 2010

ஆணின் பெண் - பாகம் 2


நான் படித்த, கேட்ட பண்டைய இலக்கியங்களில் பெரும்பாலும் இல்லை முடிவாகவே சொல்லலாம் பெண் எப்பொழுதும் உணர்ச்சியை மட்டும் உணர்கிற வெளிப்படுத்துகிற ஒரு பிராணியாகவே சித்தரிக்கப்படுகிறாள். பெண்ணைப்பற்றி வரும் ஆண் சிந்தனைகள் [ இதில் சாபக்கேடு என்பது சக பெண்ணே இந்த ஆண்களின் வார்த்தைகளை நம்பி அவளும் அப்படியே எழுதத்தொடங்கியதுதான் ] அவள் அழகியலை வர்ணிப்பதாகவும், காதலன் பிரிவால் விரகதாபத்தின் உச்சியில் அவளும், அவளுக்கு ஒரு தோழியும் அறைகூவல் விடுவதாகவுமே உள்ளது. இதிலும் அழகு என்பது ஆண்களின் காமத்தை பேணுகிற ஒன்று மட்டுமே. ஏதோ ஓரிடத்தில் மட்டுமே அவளின் வீரம் (அதுவும் ஆண், பெண் தன்னை ஆண்டுவிடக்கூடாதென்ற நோக்கத்தில் கருணைக் கொள்கையை முன்வைத்து) குறித்து பேசுகின்றனர். மேலும் புராணங்கள், பதிவிரதைக் கதைகள் எல்லாம் பெண் மேற்கொள்ளவேண்டிய சகிப்புத்தன்மைகளை பட்டியலிடுகிறது. அவ்வாறு அவள் நடக்கும் பட்சத்தில் அவள் பத்தினித் தெய்வமாகிறாள். ஆண்களுக்கு கட்டுப்பட்ட தெய்வம். இல்லையேல் பிடாரி.

ஒரு முனையில் அழகியலை வர்ணித்து பெண்ணுக்கு ஆடை, ஆபரணங்கள் , அலங்காரங்கள் இவற்றின் மேல் மோகம் வரவழைத்தும், மறுமுனையில் ஒழுக்கம், பத்தினித்தன்மை ஆகிய அர்த்தமற்ற கூற்றுகளை அரங்கேற்றி அவள் தெய்வீகத்தன்மைக்கு உயரும் மோகத்தையும் சிறிது சிறிதாக ஏற்றியுள்ளர்கள் ஆண்கள். அழகியல் வர்ணிப்புகள் எல்லாமே ஓர் ஆணின் கண்களுக்கு விருந்தாக எவ்வாறெல்லாம் அவள் காட்சியளிக்க வேண்டும் எனும் விதியாக உள்ளதை நாம் அறியா வண்ணம் திறம்பட வகுத்துள்ளனர். அந்த கருத்து ஊசி ஏற்றிய விஷ மருந்து ஆண்டாண்டு காலமாய் பெண் மரபணுக்குள் புகுந்துகொண்டு, அணுக்களையே மாற்றியமைக்கும் வல்லமைப்பெற்று திகழ்கிறது.

இந்தியாவில் பெண்ணை அடிமைப்படுத்தியதில், பார்ப்பனியர்களின் பங்கு பெரிதும் உள்ளதாக நான் காண்கிறேன். (கடவுளின் பெயரால் மொத்த மக்கள் இனத்தையும் அடிமைப் படுத்திய பேருள்ளம் கொண்டவர்களாயிற்றே அவர்கள்). பெண்ணை தனிக் கடவுளாக வழிபாட்டு வந்த காலத்தில் (கொற்றவை), அவளை ஆண் கடவுளின் மனைவியாக கதைகள் புனைந்து, ஆடவும் பாடவும் கணவனின் காலடி பிடித்து சேவை செய்யவும், அவன் கோபம் கொண்டு சபிக்கும் பொழுது சாப விமோசனம் கேட்டு மன்றாடவும் வைத்து பெண்ணின் நிலையை இழிவாக விதித்தனர். பின்பு உழைப்புக்கு அஞ்சி, சோற்றுக்கு வழி வேண்டி கோவில்களை நிறுவி அங்கே பெண் தெய்வ சிலைகளை ததும்பும் முலைகளையும், வடிவமான இடையும் வைத்து வடித்து அப்பாவி மக்களுக்கு வக்கிரத்தை கடவுளின் பெயரால் அறிமுகம் செய்தனர்.

ஒவ்வொரு சாங்கியங்களாக தோற்றுவித்து, அதற்கு பின் பெரும் தத்துவங்கள் இருப்பதாக பொய் கூறி, கயமைகளைக் கற்பித்து அற்பமாக வயிற்றை கழுவிவந்த இவர்கள், ஒவ்வொரு ஆணுக்குள்ளும் புராணங்களில் கூறியுள்ளது போல் தன் மனைவி பெரும் சகிப்புத்தன்மை உள்ளவள்ளக, பதிபக்தியுடன் அடிமையாக திகழவேண்டும் எனும் பேராசையை அறியாமையை பயன்படுத்தி, அரசுகளை கையில் போட்டுக்கொண்டு விதைத்தனர்.

ஓர் ஆண், அவன் அடையப்போகும் பெண்ணுக்கு இப்படியெல்லாம் விதிகள் வைத்துவிட்டு, அவன் புணர்ச்சி அரிப்புக்கு தாசி குல மரபை அதிகார போக்குக்கொண்டு நிறுவி அனுபவித்து வந்திருக்கிறான், கடவுளின் பெயரால். இங்கு பெண்ணுக்கெதிரான எல்லா அநியாயங்களும் கடவுளின் பெயராலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். படுக்கைக்கு ஒத்துழைப்பவளை தேவதை என்றும், மறுப்பவளை தேவடியாள் என்றும் பட்டங்கள் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர் நம் உடன்பிறப்புகள்.

பெண்களை அனுபவிக்கவும், அடிமைபடுத்தவும், அவமானப்படுத்தவும் ஆண்கள் அவள் உறுப்பையே கையில் எடுக்கும் துற்பக்கியத்திற்கு ஆளாகியுள்ளர்கள். எதை அவர்கள் சாதனையாக கருதினார்களோ அதுவே அவர்களுக்கெதிராய் திரும்பும் காலம் நெருங்கிகொண்டிருக்கிறது.

ஆணின் பெண் - பாகம் 1

பெண் உறுப்பைப்பற்றி, பெண் எழுதக்கூடாது என்ற ஆணின் அதிகாரத்தை முன் வைத்து...

பல்லாயிரம் வருடங்களாக பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும், புணர்ச்சித் துணையாகவும் , வீட்டு வேலைக்காரியாகவும் இன்ன பிற அடிமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக இலக்கியங்கள், புராணக்கதைகள், ஒழுக்ககூறுகள், பெண் கடவுள் தன்மை என்று வரைந்து, பல பல வழிகளில் அவள் பிறப்பின் உண்மை அறியா வண்ணம் ஓர் மாயைக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அவளே அறியா வண்ணம் மிகவும் சாமர்த்தியமாக புனைந்திருக்கிறார்கள். இந்த மாயையின் பரிதாப கட்டம் என்னவென்றால், இப்புனைப்புகளை கண்டுகொண்டுவிட்டதாக ஒருவள் அறைகூவல் விடும் பொழுது, பெண்களே அதை எதிர்க்கவும், பேசும் பெண்ணின் மீது கல் எரிந்து கொல்லவும் கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் அவள் மூளையை, அவளே அறியாமல் சலவை செய்து வைத்திருப்பது தான்.

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் குறித்து கற்க வேண்டும். பின்பு பெண் ஏன் அடிமை ஆனால் எனும் பெரியாரின் புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பின்பு ஆண் பெண் உயிரியல், உளவியல் குறித்து ப்ராயிட், சிமோன் தே பொவ்வார் போன்றோரின் கூற்றுகளை படிக்க வேண்டும். இக்கல்வி பெண்ணுக்குரிய தாழ்வு நிலைகளை ஆண் சமூகம் எவ்வாறு கட்டமைத்திருக்கிறது என்று அறிய உதவும். இவற்றை உணர்ந்தவுடன் ஆணுக்கெதிராய் நாம் போர்க்களத்தில் குதிக்கவேண்டியதில்லை எனும் நிதானம் பிறக்கும். பண்டைய காலத்தில், அறிந்தே பெண்ணை அடிமையாக்கிய ஆணாதிக்கத்தை, அறியாமல் பின்பற்றிவரும் நம் சக இனமான ஆண்களுக்கு எடுத்துச்சொல்லும் பக்குவமும் , தன்னம்பிக்கை பிறக்கவும் இது போன்ற வாசிப்புகள் உதவும் என்று நான் கருதுகிறேன்.

உறுப்புகளும், கருப்பையும் மட்டுமே ஆணிடமிருந்து, பெண்ணை வேறுபடுத்திக்காட்டுகிறது. இயற்கை மிகவும் அழகாக ஒரு உயிருக்கு மற்றொரு உயிரை துணையாக படைத்துள்ளது. ஆதி காலத்தில் இவ்வுண்மைக்கு குறை ஏதுமின்றி, ஆண் பெண் பேதமின்றி வாழ்ந்துவந்ததாக பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

எங்கல்ஸ் - குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - தமிழில் நா. தர்மராஜன். இப்புத்தகத்தில் பாஹா பென்னின் கருத்தை குறிப்பிடுகிறார் ஆசிரியர்:
  1. தொடக்கத்தில் மனிதகுலம் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில்தான் இருந்தது. இந்நிலைக்கு ஆசிரியர் பொதுமகளின் முறை (hetaerism) என்று பெயரிட்டுருக்கிறார்.
  2. இந்த வரைமுறையற்ற புணர்ச்சி காரணமாக யார் தந்தை என்று நிச்சயிக்க முடியவில்லை ஆகவே மரபு வழியைத் தாய்வழியாகவே - தாய் உரிமைப்படிதான் - கணக்கிட முடியும்.
(மேலும் ஒரு பெண் பிள்ளை பெறுவதற்கு, ஆண் தான் தான் காரணம் என்று அறியவே பல காலங்கள் ஆனதாக நான் படித்தது நினைவுக்கு வருகிறது)

3. எனவே தாய்மார்கள் என்ற முறையில், இளம் தலைமுறையினருடைய பெற்றோர்கள் என்று பெண்கள் மட்டுமே திட்டமாக உறுதிப்படுத்தப்பட முடிந்த காரணத்தால் அவர்கள் மிகவும் உயர்ந்த சலுகையுடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டார்கள் என்கிறார். (gynaecocracy) (இது போன்ற வரலாற்றை நான் 'பெண் தெய்வ வழிப்பாடு' குறித்து ஆராய்ச்சி செய்த போதும் படித்திருக்கிறேன்)

4. ஒரு பெண் ஓர் ஆணுக்கு மட்டுமே உரியவள் என்கிற ஒரு தார மனத்துக்கு மாறிச் சென்ற நிலை ஆதிகால மதக் கட்டளையை மீறியதையே குறித்தது. இந்த மதக் கட்டளையை மீறியதற்கு கழுவாய் செய்தாக வேண்டும், அல்லது அதைப் பொறுத்துக் கொண்டு அனுமதி கொடுப்பதற்குப் பரிசம் தர வேண்டும், அதாவது அந்தப் பெண்ணைக் குறிப்பிட்ட காலத்துக்கு மற்ற ஆண்கள் துயிப்பதற்கு ஒப்படைக்கவேண்டும் என்று பாஹா பெயினின் சாட்சியங்களுடன் எங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.

சிமோன் தே பொவ்வார் அவர்கள் தன் புத்தகத்தில் - மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்தபோது பெண்கள் கருவுற்ற காலத்தில், வேட்டைக்குச் செல்வதும், இடம் பெயர்தலும் கடினமாக இருந்த காரணத்தால் வாழ்க்கை வசதிமுறைக்காக (மனமுவந்து) பணிகளை பகிர்ந்துகொண்டதாகவும் (பாலியியல் வேற்றுமையும், அடிமைத்தனமும் ஏதுமின்றி), அதுவே பின்பு ஆண்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டும் உரிமைப்பெற்றவராகவும், பெண்கள் வீட்டை பேணும் அடிமையாகவும் மாற்றியமைக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

பின்பு ஆண்டான் அடிமை, நிலப் பிரபுத்துவம், மன்னராட்சி, அரசமைப்பு என்று குழு மேலாண்மை முறை அதிகாரத்தின் கைக்கு மாறி வரும் பொழுது திருமணம், குடும்பம் ஆகிய வாழ்வியல் முறை சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் உள்நோக்கோடு மாற்றியமைக்கப்பட்டன. இம்மாற்றங்களுக்கேற்ப பெண்களை தயார் படுத்த தந்தை வழி சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டு, பெண்கள் தங்களை பலகீனமானவர்களாகவும் ஆண்களுக்கு சேவகர்களாகவும், புணர்ச்சித்துணையாகவும் ஆக்கப்படுகிறாள். உலகம் மிக எளிதாக ஆண்களின் உலகமாக அவர்களின் சிந்தனையாக மாறுகிறது. படைத்த, படைக்கப்பட்ட எல்லாம் பெண்ணுக்கு அடிமைக்கோலமாகவே ஆணுலகம் புனைந்தது . இலக்கியமும் விதிவிலக்கல்ல. அவள் பெண்ணுறுப்பை புனிதப்படுத்தும் போர்வையில், அதையே அவளுக்கெதிராக திருப்பி ஏவி விட்டிருக்கிறார்கள். தனிமனிதப் பேராசை, பின்பு கூட்டு விதியாக மாறி அதிகாரத்தின் துணையோடு கட்டமைப்பாக மருவி நிற்கிறது. ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது என்ற மார்க்சின் கூற்றை நாம் இக்கணத்தில் நினைத்தாலும் பெரும்பான்மை எப்பொழுதும் சரியான முடிவையே எடுக்கும் என்பதை நாம் நம்பக்கூடாதென்ற லெனினின் மேற்கோளையும் நாம் மறக்கமுடியாது.

பல மணமுறை எண்ணற்ற ஆண்டுகளாய் வழக்கிலிருந்து வந்துள்ளது, மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வியல் மாற்றங்களும்,ஆணின் உளவியல் காரணமாய் பொறாமைக் குணமும் ஒரு தார முறையை ஒரு மாற்றாக பரிந்துரைத்திருக்ககூடும், பின்பு பல அரசியல் காரணங்களால் ஒழுக்க விதிகள் புகுத்தப்பட்டு இன்று அது உச்ச நிலையை அடைந்து, மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது.