Showing posts with label கட்டமைப்பு. Show all posts
Showing posts with label கட்டமைப்பு. Show all posts

Feb 21, 2010

Few Thoughts

உங்கள் மனம் குளிர, உங்களை மகிழ்விக்க, உங்களை பொருட்படுத்த...நான் என் முகத்தை மாற்ற இயலாது...நல்லவள் எனும் பெயர், கற்பிதங்களின் படி நடக்கும் என் பொய்மைக்கு கிடைக்கலாம். நிஜத்தில் நான் கர்வி எனும் பெயர் எடுக்க விரும்புகிறேன்.

பெரும்பான்மையைப் போன்ற பிரதியாய் ஒருவர் இல்லையேல்..அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக விதிக்கிறது சமூக கட்டமைப்பு....... "


எழுதப்பட்டவை வரலாராகிறது...மற்றையது நிஜங்களாகிறது....

அப்பாவின் கனவு..மகளின் லட்சியம்...
கணவனின் கனவு...மனைவிக்கு அந்தஸ்த்து...
பெண்ணின் கனவு...இடுகாட்டின் விளைச்சல்....

மற்றவர்கள் கற்பித்ததால் போதும் என்று நினனத்து அடங்கியபின்னரும்..உள்ளே ஏதோ ஒரு அரூபமான அழுத்தம் தோன்றுகிறதே, எனக்கு அந்த உணர்வு போதாமை....போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கூற்றை உலகின் மிக ஆபாசமான வார்த்தை என்பேன் நான்...

நீங்கள் கிசுகிசுக்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் அன்பைப் பரிமார்க்கொண்டிருக்கிறோம்... எங்கள் அன்பை நாங்கள் சிம்மாசனத்தில் ஏற்றினோம் உங்களுக்கு படுக்கை அறை தெரிகிறது... எங்கள் உடல்களை பங்கு போடுவதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை... உங்கள் கற்பனைப் புனர்ச்சிகளுக்கு நாங்கள் வெளியேற்றம் செய்ய இயலாது...


என்னைப் பற்றி முழுக் கதையும் தெரிந்த பின், என்னைக் கட்டாயமாக நீங்கள் வெறுப்பீர்கள். அப்படி வெறுக்கவில்லை என்றால் நீங்கள் முட்டாள். அதையும் மீறி நீங்கள் புத்திசாலி என்றால்..நீங்கள் இந்த சமுதாயத்திடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்..