Showing posts with label நவீன கவிதை. Show all posts
Showing posts with label நவீன கவிதை. Show all posts

Sep 21, 2010

காத்திருத்தலின் நேரங்கள்


வாசமற்ற வேர்கள் இமைதிறக்கும் வேளையில்
குதிரையின் வேகத்தோடு
பாய்கிறது
அது
நிரம்பிப் பிசைகிறது
வேலிகாத்தான் முட்கள்

சில
நேரங்களில் விட்டுச்செல்கிறது
நடையதிரா பூனையின் கொடும் நகங்களை
காற்று நிரம்பிய வெம்மைத் திரவம்
வளரும் முட் செடிகள்
பூணை நகங்கள்
எரியும் மணம்
மகாப் பிரளயம்

இருண்டு ஒலித்தது
செவிகள்

காத்திருக்கிறது
அது
வீட்டின் சமையலறைக்கதவுகளில்
விட்டுச் செல்கிறது

அதீததில் கேட்கப்போகும்
உலை
கொதி
இசை கேட்க

Jul 13, 2010

சொல்லற்ற...


கண்ணீர்

லிபிகளற்றது
குற்றவுணர்வு அதற்கு அன்னியம்

அஃது

தீயின் பருப்பொருள்
சிசுவின் தொப்புள் உதிரம் தாங்கி
பாவங்கள் கழுவும்

பனிமலை

உச்சியில் கேட்கும் காற்றின் மௌனம்

கண்ணீர்
சிலுவை ஏறும் கணம்
விரியட்டும் சிறகு
திசைகளற்று

காற்றாய் கரைந்து போகையில்
பாதத்தில்
முத்தச் சுவடு
உண்மையின் வாடையை
கைப்பற்ற இயலாது தவிக்கும்

சொற்களினாலான கயிறு


அழைத்துக்கொண்டே இருக்கிறது
அது

தழுவிகிறேன்
கடந்த காலத்தை அறுத்தெறிய

மாறுவது காலம்
மாறாதது சொல்

அயர்ச்சியுறுகிறேன்

நான்