Showing posts with label ranganayakamma. Show all posts
Showing posts with label ranganayakamma. Show all posts

Dec 24, 2016

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்


என்னுரை

இந்தியா என்றதும் அதன் அடையாளமாகச் சொல்லப்படுவது அதன் பழமை வாய்ந்த பண்பாடு. அரசியல் சாசனத்தின்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதாவது இந்தியா ஓர் இந்து நாடாக இருப்பினும், மற்ற மதங்களை ‘அனுமதிக்கக்கூடிய’ ‘சுதந்திர’ நாடு எனப்படுகிறது. ஆனால், இந்து மதம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னர் பல தத்துவங்களையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், பண்பாடுகளையும் கொண்ட மக்கள் குழுக்கள் வாழும் பிரதேசங்களை, திணை வாரியாகப் பிரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட நாகரீகமாக (கண்டமாக) இருந்திருக்கிறது என்றே வரலாறு நமக்குச் சொல்கிறது.

காலப்போக்கில், பன்மைத்துவச் சமூகமாக இருந்த இந்த நாகரீகம், ஓரியல்பான சமூகமாக உருமாற்றம் செய்யப்படுகிறது. பல இனக்குழுக்களின், பிரிவுகளின் தத்துவங்களும், வழிபாட்டு நம்பிக்கைகளும் இணைக்கப்பட்டு ஒற்றை மத வடிவம் பெற்று இந்து மதம் என்றானது. மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு இது தொடர்புடையது. அதாவது, மனிதர்கள் தம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஈடுபடும் முக்கியமான நடவடிக்கையான பொருள் உற்பத்தி நடவடிக்கையோடு இந்த சமூக வரலாற்று வளர்ச்சி என்பது தொடர்புடையது. உற்பத்தி நடவடிக்கையின் விளைவாக மனிதர்களுக்குள் ஏற்படும் உறவை நாம் பொருளாதார உறவுகள், உற்பத்தி உறவுகள், உழைப்புசார் உறவுகள், சொத்துறவுகள், சமூக உறவுகள் என்கிறோம். இந்த உற்பத்தி நடைமுறையின் வரலாற்று வளர்ச்சியின் விளைவாக சமூகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் தோன்றுகின்றன.  து சமூகக் கட்டமைப்பு எனப்படுகிறது. இக்கண்ணோட்டத்தை நமக்கு வழங்குவது மார்க்சியம். 

இந்த சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாக (அடிக்கட்டுமானமாக) பொருளாதாரமும் (பொருளாயத), அந்த பொருளாதார முறை அல்லது உற்பத்தி நடைமுறைக்கேற்ற ஒழுங்கமைப்புகள் மேற்கட்டுமானமாகவும் இருக்கிறது என்று மார்க்சியம் விளக்குகிறது. உற்பத்தி நடைமுறையின் வரலாற்று வளர்ச்சியில், மனிதர்களிடையே முன்னர் சமத்துவமாக இருந்த உறவுகள் சிதைந்து ஏற்றத்தாழ்வு மிக்க மனித உறவுகள் தோன்றுகின்றன. இதுவே வர்க்க சமுதயாத்தின் தோற்றம். அனைவரும் உழைத்து, பொருட்களை அல்லது உழைப்பின் பலனை சமமாகப் பிரித்து வாழ்ந்த முறை சிதைந்து குறிப்பிட்ட மக்கள் உழைக்க, குறிப்பிட்ட பிரிவு உழைக்காமல் மற்றவரின் உழைப்பைச் சுரண்டி வாழும் முறை உருவானது.

இதுவே தனியுடைமை செல்வத் திரட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறை மற்றும் உழைப்புப் பிரிவினையைக் கொண்ட அமைப்பாகும். உழைக்கும் வர்க்கம், உழைக்காமல் வாழும் எஜமானர் வர்க்கம் ஆகியவை அதன் முரண்பட்ட பிரிவுகள். ஏற்றத்தாழ்வு மிக்க இந்த சுரண்டல் முறையினால் இந்த இரண்டு வர்க்கங்களுக்கிடையில் (அதிலும் உட்பிரிவுகள் உண்டு)  ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக ஒழுங்கமைப்புகளுக்கான தேவை எழுகிறது. அரசு, மதம், இராணுவம், நீதித்துறை ஆகிய நிர்வாக இயந்திரங்கள் இதன் விளைவாகவே தோன்றின என்பதையும் நமக்கு மார்க்சியம் விளக்குகிறது.

நிர்வாகத்தின் தேவை இயல்பானதுதானே என்பதே பொதுபொத்தியின் புரிதலாக இருக்கிறது. ஆனால் வர்க்க முரண்பாடுடைய சமூகத்தில், பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தி ஆதிக்கம் பெற்ற சமூகமானது தனது வர்க்க நலனுக்காகவே இத்தகைய ஒழுங்கமைப்புகளைத் தோற்றுவிக்கிறது. அதனால் இந்த ஒழுங்கமைப்புகளுக்கென்று ஒரு வர்க்கப் பண்பு உள்ளது. சுரண்டும் வர்க்கத்தின் பிரிதிநிதியாகி, உழைக்கும் வர்க்கத்தைப் பல்வேறு சித்தாந்தங்களுடன், பல்வேறு சட்டதிட்டங்களுடன் ஒடுக்கி ஆண்டு, உழைப்பு மற்றும் உற்பத்தியின் பலனை எஜமானர் வர்க்கத்திற்கு எந்தத் தொந்தரவுமின்றி கிடைக்குமாறு செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.

இந்த சமூக-அரசியல் பொருளாதாரத்தின் வர்க்கப் பண்பை புரிந்துகொள்ளாமல் இருப்பதன் காரணமாகவே நாம் நிலவுகின்ற அனைத்து அமைப்புகளையும், நிர்வாக இயந்திரங்களையும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் இந்த சுரண்டல்வாத உற்பத்தி முறையையும் இயல்பானது என்று கருதுகிறோம். அதில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை, அநீதிகளை தனித்தனிப் பிரச்சினைகளாக, நிர்வாக சீர்திருத்தக் கோளாறுகளாக, குறிப்பிட்டதொரு பிரிவின் கருத்தியல்களாக, சில தனிமனிதப் பேராசைகளாகப் புரிந்துகொள்கிறோம்.

ஆனால், அடிப்படையில் நடப்பது என்னவெனில், சுரண்டல்வாத உற்பத்தி நடைமுறையில், அதாவது உற்பத்திச் சாதன உடைமை, உற்பத்திக் கருவிகளின் உடைமை, உழைப்புப் பிரிவினை மற்றும் விநியோக முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தி நடைமுறையில், உழைக்காமல் வாழும் வர்க்கத்திற்கு இருக்கும் ஒரே குறிக்கோள் செல்வம் சேர்ப்பதாகும். உழைக்கும் வர்க்கத்திற்கும் அதுதான் வாழ்வின் இலக்கு என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவர்கள் செல்வம் சேர்ப்பதென்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பாட்டாளி வர்க்கத்திற்கு தம் உழைப்புச் சக்தியை விட வேறு உற்பத்திச் சாதனங்கள் இருப்பதில்லை. உற்பத்திச் சாதனங்களில், கருவிகளில் ஏதோ ஒன்றை தம் உடைமையாகப் பெற்ற வர்க்கமும் குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்க்க முடியும் (தம் உழைப்பினால்). ஆனால், உழைக்காமல் வாழும் எஜமானர் (முதலாளி) வர்க்கம் மட்டுமே பெரும் செல்வங்களைச் சேர்க்க முடியும்.

இந்தச் செல்வக் குவிப்பு பல்வேறு சுரண்டல் வருவாய்கள் மூலம் திரட்டப்படும். உழைப்புச் சுரண்டல் மூலம், அதாவது உழைப்பாளர்களை இயற்கைக்கு மாறாக கடுமையாக உழைக்கச் செய்து அதிக உற்பத்தியை ஈட்டுவது. அது உபரி மதிப்பு (மிகை மதிப்பு) எனப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அதைப் பங்கிட்டு கொடுப்பதற்குப் பதிலாக, இந்த உழைக்காத வர்க்கமானது அதனை இலாபம், முதலீடு, வட்டி, வாடகை, முதலீட்டாளர்களுக்கான இலாபப் பங்கு, நிர்வகிப்பதற்கான எஜமானர் சம்பளம், அசையாச் சொத்துக்களின் தேய்மானம் இப்படி ஏதேதோ கணக்குகளைக் காட்டி, உழைப்புக்குக் கூலி, முதலீட்டிற்கு இலாபம் (மற்றும் இதர வருவாய்) என்னும் ஒரு அநியாய பொருளாதார முறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

மேற்சொன்ன அந்த செல்வக் குவிப்பிற்காக, உழைக்காத வர்க்கத்திற்கு என்றென்றைக்கும் தேவைப்படும் முக்கியச் சக்தி அது உழைப்புச் சக்தியாகும். அந்த உழைப்புச் சக்தியை மிகவும் மலிவாகக் கைப்பற்றுவதற்கும், மற்றும் நிரந்தரமாக அந்த உழைக்கும் வர்க்கம் தமது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும், உழைக்கும் அடிமைகளாகவும் இருப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை இந்த தனியுடைமை அமைப்பு தோற்றுவித்தது, தோற்றுவிக்கிறது, பழையதைப் புதுப்பித்து நீட்டித்துப் பயன்படுத்திக்கொள்கிறது. மனித சமூகமும், மனித உறவுகளும் அதற்கேற்ற வகையில் கட்டமைக்கப்படுகிறது. அதைத்தான் நாம் சமூக மதிப்பீடுகள், பண்பாடு, மத நம்பிக்கை, ’நல்லதொரு’ சமூக அமைப்பு என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

மனித வாழ்வில் பிரதானப் பங்கு வகிக்கும் இந்தப் பொருளாதாரச் செயல்பாட்டை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஏனென்றால் நிலவுகின்ற சமூக அமைப்பை இயல்பானதென்றோ, இதுவே சாஸ்வதமென்றோ கருதுவதன் மூலம் நாம் அறியாமையில் மூழ்கி இருக்கிறோம் என்பதோடு, நம்மைப் போன்ற உழைக்கும் வர்க்கத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கி, சுரண்டி வாழும் ஒரு பிரிவின் செல்வக் குவிப்பிற்கு உழைத்துக் கொட்டும் பொருளாதார அடிமைகளாகவே வாழ்ந்து மடிவோம், நம் பிள்ளைகளை, அடுத்து வரும் தலைமுறைகளை உழைக்கும் அடிமைகளாகவே பிழைத்திருக்க விட்டுச் செல்வோம் என்றாகும்.

மனித சமூகத்தை, மனித உறவுகளை இந்தப் பொருளாதார அமைப்போடு (உற்பத்தி நடைமுறை) புரிந்துகொள்ளும்போது, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கான காரணங்கள் நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். எந்த ஒரு பிரச்சினையும் தனித்ததல்ல, ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆகவே நிலவும் இந்த தனியுடைமை செல்வக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட சுரண்டல்வாத சமூக அமைப்பை ஒழிப்பதன் மூலமே நாம் உண்மையான சுதந்திரம் பெற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும்  புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் பொது எதிரியை அடையாளம் கண்டு, சரியான செயல்திட்டத்தை வகுத்து முன்னேற முடியும்.

அந்தவகையில், உழைக்கும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த பலவித ஏற்பாடுகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கமைப்புகள் தோன்றியது என்று பார்த்தோம். அரசு, மதம், இராணுவம், நீதித்துறை ஆகியவை அந்த ஏற்பாடுகள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நான்கில், அரசு, இராணுவம், நீதித்துறை என்பது வெளிப்படையாகத் தெரியக்கூடிய நிர்வாக இயந்திரமாக இருக்கிறது. மதம் என்னும் அந்த நிறுவனம் மட்டும் ஏதோ இயல்பிலேயே தோன்றிய ஒன்றாகவும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் ஆசீர்வாதம் பெற்ற புனிதர்கள் வகுத்துக்கொடுத்த நன்னெறி என்றும் நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கிலும் இதுவே நிலைமை.

இதில், பண்பாடு, வழிபாட்டு நம்பிக்கைகள், சடங்கு, சம்பிரதாயம், போன்ற பழக்க வழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் பொதுவாக இருப்பினும், இந்தியாவில் மட்டும் மதத்தின் ஒரு கோட்பாடாக சாதி என்னும் பிறப்பின் அடிப்படையிலான தகுதியை வரையறுக்கும் படிநிலை ஏற்பாடு ஒன்று நிலவுகிறது. பல்வேறு தத்துவங்களோடு, இந்த சாதி என்னும் கோட்பாட்டையும் உள்ளடக்கியதே இந்தியாவின் மதம் என்று சொல்லப்படும் இந்து மதமாகும்.

வர்க்க சமுதாய தோற்றத்தில் ஒடுக்கும் வர்க்கமானது ஒடுக்கப்படும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த மதத்தை மிக முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தியது, அது இன்றைக்கும் தொடர்கிறது.

உற்பத்தி நடைமுறையின் வளர்ச்சியில் உற்பத்திச் சாதனங்களை (கருவிகளையும்) தனி உடைமையாகக் கொண்ட எஜமானர் வர்க்கம், அதற்கு உழைத்துக் கொடுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு இடைப்பட்ட வர்க்கமாக ‘மேய்க்கும்’ (மூளை உழைப்பு மூலம் நிர்வாகம் செய்யும்) கூட்டம், வணிகத் தொழில் செய்யும் கூட்டம், தரகுத் தொழில் செய்யும் கூட்டம், பகுதியளவு உற்பத்தி சாதனம் கொண்டு சிறு, குறு உற்பத்தியாளர்களாக இருக்கும் கூட்டம் என்று பலவேறு பிரிவுகள் உருவானது. இப்படி பல்வேறு தொழில்கள், வர்க்கக் குழுக்கள் உருவானதோடு, கலப்புகளும் நிகழ்ந்தன. பண்பாட்டு கலப்புகள், நம்பிக்கைக் கலப்புகளும் இதில் நிகழ்வது யதார்த்தமே.

இப்போக்கில், அரசும், மதமும் உருவாகும்போது, ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ற ஒழுங்கமைப்பிற்காகவும், உற்பத்திப் பெருக்கத்திற்காகவும் சில நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் மதத்தின் பெயரால் உருவாக்கப்படும்/இணைக்கப்படும் போது குறிப்பிட்ட பிரிவொன்று அதற்கு மூளையாக இருந்து அரசு-சமூக-மதக் கொள்கைகளை வகுக்கவும், அதற்குத் தலைமை தாங்கவும், வழிகாட்டவும், சில சட்டதிட்டங்களைப் படைக்கும் பொறுப்பைப் பெறுகிறது. அரசு நிர்வாகம் மற்றும் சமூக ஒழுங்கிற்காக இந்தியாவில் அத்தகைய கொள்கைகளை வகுப்போராக/தொகுப்போராக புரோகிதர் கூட்டம் என்று அறியப்படும் பிராமணக் கூட்டம் இருந்ததாக வரலாறு நமக்குச் சொல்கிறது.

நிலவிய சமூக-அரசியல்-பொருளாதார அமைப்புக்கு ஏற்ற வகையில் அரசுடன் இணைந்து இந்தப் பிராமணியக் கூட்டம் தொகுத்தும், படைத்தும் கொடுத்த மதச் சித்தாந்தங்களே இன்றைக்கு இந்து மதமாக அறியப்படுகிறது. அந்த சித்தாந்தமானது சமூக-அரசியல்-பொருளாதார மட்டத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதே இன்றைக்கும் தொடரும் வரலாறு.

பிராமணிய இந்து மத சித்தாந்தத்தின்படி ‘இந்திய மனிதர்கள்’ (மட்டும்) ஆன் பெண் உறவின் காரணமாகப் பிறக்காமல் ஒரு ஆண் கடவுளின் நெற்றியிலிருந்தும் (பிராமணர்கள்), தோளிலிருந்தும் (சத்திரியர்கள்), தொடையிலிருந்தும் (வைசியர்கள்), பாதத்திலிருந்தும் (சூத்திரர்கள்) பிறந்தார்கள். (பின் எப்போது அவர்கள் பெண்ணின் வயிற்றில் பிறக்கும் மனிதர்கள் ஆனார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்). ஆகவே, அப்பிறப்பின் அடிப்படையில் அவரவருக்கென்று ஒரு தகுதி இருக்கிறது. ஒரு மரபு இருக்கிறது - அது நால் வர்ணக் கோட்பாடு என்று தோன்றி இன்று அது சாதியாக இறுகி நிற்கிறது.

பிராமணிய இந்து மதச் சாதியமைப்பின்படி பிராமணர்கள் உயர்ந்தவர்கள், அவர்களுக்குக் கீழ் சத்திரியர்கள், பின் வைசியர்கள், பின் சூத்திரர்கள். ஆனால் இந்த நால் வர்ணத்தார்க்கும் கீழாக ஒரு சாதி அல்லது பிரிவாக இருப்பவர்கள் பஞ்சமர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் பிறப்பிலேயே மிகவும் ‘கீழானவர்கள்’ என்றும், ‘தீண்டப்படாதவர்கள்’ என்றும் வரையறுக்கப்பட்டு, கடுமையான கொடுமைகளுக்கு உள்ளானார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. 

இந்துமத சாதியமைப்பின்படி, இந்த படிநிலை அமைப்பின் கீழ் பிறப்பின் அடிப்படையில் இன்னார்க்கு இன்ன தொழில் எனும் உழைப்புப் பிரிவினை வகுக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்கில் உள்ளவர்களுக்கு ‘சுத்தமான’ உழைப்பும் (உடல் மற்றும் மூளை உழைப்பு), கீழ் அடுக்கில் உள்ளவர்களுக்கு ’அசுத்த’ உழைப்பும் (கடுமையான மற்றும் அசுத்த உழைப்பு) பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வர்க்கப் பிளவின் முக்கியக் கூறாக இருக்கும் இந்த உழைப்புப் பிரிவினையை திட்டவட்டமாக நடைமுறைப்படுத்த உதவுவது சாதியமைப்பாகும். ஆனால் இந்து மதம் என்னும் அச்சாரத்தோடு இயங்குவதால், இதில் நிலவும் உழைப்புப் பிரிவினை எனும் ஏற்பாடு புரிந்துகொள்ளப்படாமல், ஒடுக்குமுறை வடிவங்களான தீண்டாமை, சமூக விலக்கு, இன்ன பிற சமூகக் கொடுமைகள் மட்டுமே சாதி என்றும், அது தனித்ததொரு பிரச்சினை என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, மதம் மற்றும் இன்னபிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் தனியுடைமை பொருளாதாரத்திற்கு ஏற்ற சமூக-அரசியல் கட்டமைப்புகளே காரணமாக இருக்கின்றன.

அதாவது உழைப்புச் சுரண்டல் மூலம் பெருத்த இலாபம் ஈட்டி செல்வச் செழிப்போடு வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு என்று பொருள். ஆகவே, சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, மதச் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் என அனைத்துப் போராட்டங்களும், நீண்டகாலப் போக்கில் வர்க்கப் போராட்டப் பாதையில் இணைந்து - நிரந்தரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த – தனியுடைமையை ஒழித்து பொதுவுடைமையை நிறுவுவதாக இருக்க வேண்டும் என்பதே மார்க்சிய வழிகாட்டுதல்.

இவ்வாறாக, கம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும். இது ஆளும் வர்க்கத்திற்கே சாதகமாக அமையும். இந்தப் புரிதல் இன்றியே முற்போக்குத் தலைவர்களில் பலரும் தங்களின் அடையாளம் சார்ந்த பிரிவினரின் விடுதலையைப் பற்றி மட்டுமே கவலை கொண்டு அதற்கான போராட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பிரிவினைவாத மனநிலைக்குள்ளாகி பாதை மாறிப் போய்விடுகிறார்கள். தலித்தியம் என்பது அத்தகையதொரு அடையாள அரசியல் போக்காகும். அம்பேத்கரை முன்வைத்து இந்த பிரிவினைவாத பூர்ஷுவா அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.   ஆகவே, அம்பேத்கரின் சிந்தனைகளை பகுத்தாய்வது அவசியமாகிறது. அம்பேத்கரின் சீர்திருத்தவாதம், பௌத்த மதமாற்றம் மற்றும் அரசியல்-பொருளாதார பரிந்துரைகள் ஆகியவை உண்மையிலேயே தலித் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரக்கூடியதா என்பதை கேள்விக்குள்ளாக்குவதென்பது, தலித்தியத்தின் பெயரால் நடக்கும் பிழைப்புவாத பூர்ஷுவா அரசியலை அம்பலப்படுத்துவதென்பதாகும். 

சுதந்திர போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி கொண்டதன் காரணமாகவும், ஜான் டூயி போன்ற ஃபேபியன் சோஷலிசப் பொருளாதார வல்லுனர்களின் தாக்கத்திற்கு உள்ளானதாலும் அம்பேத்கர் மார்க்சியம் பற்றிய தவறான புரிதல்களை வளர்த்துக் கொண்டார் எனலாம். அதன் விளைவாக, மார்க்சியம் தலித் மக்களுக்கு எதிரானது என்று எதிர்மறையாக சித்தரிக்கும் அளவுக்கு சென்றார். இந்த மரபின் தொடர்ச்சியாக தலித் அரசியல் என்னும் அடையாள அரசியல் உருவாகி, இன்றைக்கு தலித் பூர்ஷுவா அரசியலாக உருமாறி நிற்கிறது. தலித் மக்களுக்கு சில சலுகைகளை, நிவாரணங்களைப் பெற்றுத் தருவது, பூர்ஷுவா பாராளுமன்ற அரசியலில் பங்குபெறுவது, சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமைக்கு எதிராக ஆங்காங்கே சிலப் போராட்டங்களை நடத்துவது என்பதைத் தாண்டி இந்த அரசியல் தலைமைகளிடம் சாதி ஒழிப்பிற்காக எந்த செயல்திட்டமும் இல்லை.

அம்பேத்கரியம் என்னும் கோட்பாட்டின்படி சாதி ஒழிப்பு மற்றும் தலித் விடுதலை என்று சொல்லும் இத்தலைவர்கள் மற்றும் தலித் பூர்ஷுவா அறிவுஜீவிகள் அதன்படி சாதி ஒழிப்பு எப்படி சாத்தியம் என்று விளக்குவதில்லை. ஆனால், சாதியப் பிரச்சினைக்கான தீர்வு அம்பேத்கரிடம் உள்ளது, சாதி ஒழிப்பு உள்ளிட்ட நூலில் உள்ளது என்று இவர்கள் கூறிவந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பு கருத்துகளை பரப்பி, உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் வேலையில் தீவிரமாக செயல்பட்டுவந்தனர். ஒருகட்டம்வரை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நேரடியாக வெறுப்பு பாராட்டி வந்த இந்த தலித் அடையாள அரசியலானது பின்னர் சூழ்நிலைக்கேற்ப கம்யூனிஸ்டுகளோடு இணைந்தும், தனித்தும் செயல்பட்டு வருகின்றது. ஆனால், அடிப்படையில் இந்தியாவுக்கு மார்க்சியம் பொருந்தாது, சாதி ஒழிப்பிற்கு மார்க்சியத்தில் தீர்வில்லை, அம்பேத்கரிடம் மட்டுமே தீர்வு இருக்கிறது என்பதே தலித் அரசியல் கோட்பாடாகும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய அறிவுஜீவிகள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையான எதிர்வினைகளை ஆற்றியுள்ளனர். மார்க்சியத்தை முன்வைத்து அம்பேத்கரின் சிந்தனைகளை, அவரது போராட்ட வழிமுறைகளை விமர்சித்து பல நூறு விமர்சனங்கள் வந்துள்ளன. அந்தப் பின்னணியில் வெளிவந்ததே ரங்கநாயகம்மா எழுதிய சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூல்.

ஆனால், மற்ற எந்த நூல்களும், விமர்சனங்களும் எதிர்கொள்ளாத தாக்குதல்களை இந்த நூல் எதிர்கொண்டுள்ளது. ரங்கநாயகம்மா நூலுக்கு தொடர்ச்சியாக சில விவாதங்களை பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்நூல் தொகுப்பு. வாசிப்பு வசதி கருதி பெரிய பாராக்களை உடைத்திருக்கிறேன்.

கடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்து ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அர்விந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன். நேரம் கிடைப்பதைப் பொறுத்து மற்றக் கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம், அல்லது வேறு யாரேனும் மொழிபெயர்த்துக் கொடுத்தால், அடுத்தப் பதிப்பில் அதை சேர்த்து வெளியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

                                                                                                      - கொற்றவை

Dec 23, 2016

சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம்

“பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.  சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.  அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதயாத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றே தான் வழி.

மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது.  மர்க்ஸின் பெருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.” - வி.இ. லெனின், 1913.

கம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும்.
கடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்த ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அரவிந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன்.
அரவிந்த் மார்க்சியக் கல்வியக ஆய்வுக் குழுவினர் சாதியமைப்பின் வரலாற்று வளர்ச்சியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கி, சாதி ஒழிப்பு அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பற்றிய ஆய்வுகளையும் முன்வைத்து பின்னர் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியமைப்பு பற்றிய தங்களது பார்வைகளை முன்வைத்திருக்கின்றனர். சாதி ஒழிப்பை உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்திற்கான செயல்திட்டம் என்னவாக இருக்கலாம் என்பதையும் பரிந்துரைத்துள்ளனர்.

சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் என்னும் இந்த நூலில் சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் என்னும் கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக சாதிய பிரச்சினைக்கான தீர்வு… நூலைத் தொடர்ந்து வந்த விமர்சனங்களுக்கு ரங்கநாயகம்மா அளித்த பதில்களின் தொகுப்பாக வந்த சாதி மற்றும் வர்க்கம்: மார்க்சியக் கண்ணோட்டம், விவாதக் கட்டுரைகளின் தொகுப்பு என்னும் நூலிலிருந்து சில கட்டுரைகளை, சில பகுதிகளை மொழிபெயர்த்துள்ளேன். மேலும், சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*: ஒரு புனரமைப்பு என்னும் தலைப்பில் பி.ஆர். பாபுஜி எழுதிய ஆய்வுக் கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனோடு, முகநூல் விவாதங்களுக்கு நான் அளித்த பதில்களைத் தொகுத்தும், விரிவுபடுத்தியும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளேன். இறுதியாக மார்க்சியம் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளை ஆய்வு செய்ய விரும்பும் தொடக்கக்கட்ட ஆர்வலர்களுக்காக சில கேள்விகளையும் கொடுத்துள்ளேன். அக்கேள்விகளுக்கு தாமாக ஆய்வு செய்து பதில் தேடி, சீர்தூக்கிப் பார்த்து சாதியப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் கொண்டிருக்கும் பாதை எதுவென சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியலாம்.




Sep 2, 2014

சாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா, ஆங்கிலம் வழி தமிழில் - கொற்றவை


‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல்   ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரைகள் எதையும் எழுதவில்லைதான்;  இருப்பினும், தனது எழுத்துக்களில்இந்தியாவில் உள்ள சாதியமைப்பு குறித்தும்மற்ற நாடுகளில் நிலவும் சாதிக்கு இணையான சில ஏற்பாடுகள் குறித்தும் சில அவதானிப்புகளைச் செய்துள்ளார் மார்க்ஸ்மார்க்ஸின் அவதானிப்புகளை உதவியாகக் கொண்டு சாதிக் கருத்தியல்களையும்அந்தப் பிரச்சனைக்குறியத் தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

உலகின் மற்ற இடங்களில் உள்ளதைப் போல் மார்க்ஸின் கோட்பாட்டுகளை எதிர்க்கும் (தெரிந்தோதெரியாமலோ அல்லது அரைகுறை அறிவோடோமனிதர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்.  இந்தியாவில் உள்ள அத்தகைய  எதிர்ப்பாளர்கள் மார்க்ஸின் கோட்பாடு குறித்து இரண்டுவிதமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் – (1) மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஆனால் அது அங்கும் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. (2) மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் மார்க்ஸின் கோட்பாடுகள் பொருத்தமானதாக இருக்கலாம்ஆனால் இந்தியாவுக்கல்லஏனென்றால் இங்கு சாதியமைப்பு நிலவுகிறது. மேலும், அது மார்க்ஸின் கோட்பாட்டு எல்லையின் கீழ் வருவதில்லை.

மார்க்ஸின் கோட்பாட்டிற்கு எதிராக வைக்கப்படும் இரண்டுவிதமான பார்வைகள் இவையேஎவ்வாறாயினும்இந்த இரண்டு பார்வைகளும் முற்றிலும் தவறானவைமார்க்ஸின் கோட்பாடு ‘உற்பத்தி உறவுகள்’* (உழைப்புசார் உறவுகள்) பற்றி பேசுவதால்அது மானுட சமுதாயத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்ஒவ்வொரு உறவுக்கும் பொருந்தும் வகையில் அது உள்ளது. 

எந்தவொரு நாடும் அல்லது சமூகமும்எந்த ஒரு காலகட்டத்திலும், உழைப்புசார் உறவுகளின்’ அடிப்படையிலேயே வாழ்கிறதுஒரு சமூகத்தின் இயல்பும் அதன் உற்பத்தி உறவின் அடிப்படையிலேயே அமைகிறது.

அந்த உற்பத்தி உறவுகள் குறித்து மார்க்ஸ் பேசினார்.  நூற்றுக்கணக்கானஆயிரக்கணக்கான வருடங்கள்உற்பத்தி உறவு எனும் அரங்கில் நிகழ்ந்த ‘உழைப்புச் சுரண்டல்’ குறித்து அவர் பேசினார்உழைப்புச் சுரண்டலினால் விழையும் எண்ணற்ற பிரச்சனைகளைப் பற்றி மார்க்ஸ் விவாதித்தார்அந்தப் பிரச்சனைகளுக்கு  ஒரு தீர்வையும் அவர் வழங்கினார்இவ்வாறாக நமதுப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வது நம் பொறுப்பில்தான் இருக்கிறதுமுதலில்இந்தியாவில் உழைப்புச் சுரண்டல் நிலவுகிறதா என்பதை  நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்மேலும்சாதிப் பிரச்சனையானது உற்பத்தி உறவின் வட்டத்திற்குள் வருகிறதா என்பதையும் நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்சாதிக்கும்உழைப்பிற்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் சந்தேகத்திற்கிடமின்றி மார்க்ஸின் கோட்பாடு இந்தியாவுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.

மானுட சமூகத்தின் எந்தப் பிரச்சனையும் உற்பத்தி உறவுகளோடு பின்னிப் பிணைந்திருக்கிறதுசாதிப் பிரச்சனையும் மனிதர்களோடு தொடர்புடையதால்அது உற்பத்தி உறவுகள் பற்றி பேசும் கோடாட்டின் பரப்புக்குள்ளேயே வருகிறது.

இந்தியா உட்பட ‘உழைப்புச் சுரண்டல்’ மற்றும் வர்க்க வேறுபாடு உள்ள அனைத்து நாடுகளுக்கும் மார்க்ஸின் கோட்பாடு பொருந்தக் கூடியதாகும்ஏனென்றால் உழைப்புச் சுரண்டலை கண்டறிந்து விளக்கிய சிரியான ஒரே கோட்பாடு அதுவே.

மேலும்மனித உறவுகளை ஏன் பயன் மதிப்பின் கண்ணோட்டத்திலிருந்து நிறுவ வேண்டும்அந்தக் கண்ணோட்டம் இல்லையென்றால் என்னவிதமான பிரச்சனைகள் எழும் என்பதையும் இக்கோட்பாடு விளக்குகிறதுஇதனால்உழைப்புச் சுரண்டல் இல்லாத ஒரு எதிர்காலத்திலும் சமூகத்தை ஒழுங்கமைக்க இந்தக் கோட்பாடு ஒரு வழிகாட்டியாகப் பயன்படும்.

சாதியமைப்பு என்பது இந்தியாவுக்கேயுரிய குறிப்பான பிரச்சனையென்றாலும்உழைப்புக்கும் அதற்குமுள்ள தொடர்பை புரிந்து கொண்டால்மார்க்ஸின் கோட்பாடு அதற்கு எவ்வாறு பொருத்தமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

நாம் சாதிகளை அவதானித்தால் – மேலோட்டமாக இருந்தாலும் கூட – அவற்றுள் குறிப்பிட்ட சில  வேறுபாடுகளை உறுதியாகக் காணலாம்அதாவது சில சாதிகள் கீழானதுசில சாதிகள் உயர்வானதுஎந்த அடிப்படையில் நாம் இந்த ‘மேல்-கீழ்’ வேறுபாட்டைக் காண்கிறோம்பொதுவாக சொல்வதானால்நிலம்மூலதனம்பணம் ஆகியவற்றை சொந்தமாகக் கொண்டிருப்பவர்கள்ஆதிக்கம் கொண்டு சமூக அமைப்புமுறை மற்றும் நிர்வாகத்திலும் ஈடுபடுபவர்கள் ஆதிக்க சாதியினர் வாழ்வாதாரத் தேவைகளுக்குக் கூட சொத்தில்லாமல் இருப்பவர்கள் ‘கீழ்’ சாதியினர்அவர்கள் உழைப்பாளிகளாகவும்அடிமைகளாகவும் வாழ்பவர்கள்அவர்கள் ‘மேல்’ சாதியின் ஆதிக்கத்திற்கும் ஆட்சிக்கும் உள்ளாகிகொடிய வறுமையிலும்சமூகத் தாழ்மையிலும் உழல்பவர்கள்.

‘மேல்’ சாதியினரிடையே, எந்த உழைப்பிலும் ஈடுபடாத’ ஒரு வாழ்க்கை முறையை காண்கிறோம்.  அல்லது அப்படியே அவர்கள் உழைத்தாலும்அது மூளை உழைப்பாகவோ அல்லது தூய்மையுள்ள உழைப்பாகவுமே இருக்கும்.  மாறாக, தாழ்த்தப்பட்ட சாதி நிலை இதற்கு நேர் எதிரானது.  உழைக்காமல் வாழ்வதென்பது  ‘கீழ்’ சாதிகளுக்கு கற்பனைக்கப்பாற்பட்டதுஅவர்கள் செலுத்தும் உழைப்பானது இருப்பதிலேயே கீழ்நிலையிலான உடல் உழைப்பாகும்மொத்த சமூகத்தையும் சுத்தம் செய்வதற்குத் தேவையான எல்லாவிதமான அசுத்த உழைப்பும் இந்த சாதிகளின் பொறுப்பு.
 பொருளாதார விதிகளின்படிமூளை உழைப்பிற்கு அதிக மதிப்பும்உடல் உழைப்பிற்கு குறைவான மதிப்புமே நிலவுகிறதுஇது மதிப்பின் இயல்பான உருவாக்க விதியின் அடிப்படையிலானதுஒரு குறிப்பிட்ட தொழிலை கற்று கொள்வதற்குத் தேவைப்படும் மூலாதாரங்களைப் பொறுத்து உழைப்பின் வகைகளுக்கான மதிப்பு தீர்மானிக்கப்படுகிறதுஅதில் ஏதும் ‘தவறில்லை’.  மூளை உழைப்பிற்கு அதிக மதிப்பும்உடல் உழைப்பிற்கு குறைவான மதிப்பும் நிலவுவதால்மூளை உழைப்பில் ஈடுபடும் நபருக்கு அதிக ஊதியம் கிடைக்கிறதுஉடல் உழைப்பில் ஈடுபடுபவருக்குக் குறைவான ஊதியமும் கிடைக்கிறது.

சுரண்டலின் அடிப்படையில் இயங்கும் சமூகங்கள்வெவ்வேறு உழைப்புகளுக்கிடையில் இயல்பிலேயே இருக்கும் இடைவெளியை மேலும் பெரிதாக்குகிறதுஇவ்வாறாகஅத்தகைய சமூகங்களும் அதன் மரபுகளும் மூளை உழைப்பை அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் அதிக மதிப்பைக் கொடுக்கின்றனமேலும்உடல் உழைப்பிற்கு அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் குறைவான மதிப்பையே கொடுக்கினறனசுரண்டலின் மேல் இயங்கும் சமூகங்கள் உடல் உழைப்பை மிக ஆழமாகச் சுரண்டுகின்றனகுறிப்பாக அடித்தட்டு உடல் உழைப்பை மிகத் தீவிரமாகச் சுரண்டுகின்றனசுரண்டலின் மேல் இயங்கும் சமூகங்கங்களில் ஒரு மருத்துவரையும் விவசாய உழைப்பாளிகளையும் எடுத்துக்கொண்டால்இருவரும் உழைப்பில் ஈடுபட்டாலும் வருவாய் மற்றும் அவர்களது வாழ்க்கை முறைகளுக்குமிடையே பெரும் வேறுபாட்டைக் காண முடியும்.

வெகு காலத்திற்கு முன்பிருந்தே இந்த அமைப்புமுறை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறதுஅதாவதுஒரு வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் கைப்பற்றிநிலத்திற்கு வாடகைவட்டி மற்றும் மூலதனத்திற்கு இலாபம் ஆகியவற்றை சொத்துரிமையின் பெயரால் உழைக்காமலேயே உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து வந்தது.  இந்தச் சுரண்டல் உறவுகளில் இருந்து உருவான உழைப்புப் பிரிவினை எப்போதும் உழைக்கும் மக்களை ஒரே வகையான உழைப்பில் பிணைக்கிறது.  உடல் உழைப்பில் ஈடுபடும் ஒரு நபர் தன் வாழ்நாள் முழுதும் அதே வகையான உழைப்பில் உழன்று நலிவுறுகிறார்ஏதோவொரு வகையான மூளை உழைப்பில் ஈடுபடவோஅத்தகைய உழைப்பிற்கு தொடர்பான கல்வியைப் பெறவோஅல்லது அத்தகைய உழைப்புக்கு நிகரான கூலியைப் பெறுவதையோ அந்த நபர் எதிர்பார்க்கக் கூட முடியாதுமருத்துவர்கள்பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற மூளை உழைப்பாளிகள் எந்த வகையான உடல் உழைப்பிலும் ஈடுபடத் தேவையில்லை. அவர்களுடைய சொந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கூட அவர்கள் கொள்ளத் தேவையில்லை.

குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மக்கள் தொகையின் ஒரு குறிப்பிட்ட பிரிவு எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் வாழ்கிறதென்றால்அவர்களுக்கும் சேர்த்து மீதமுள்ள பிரிவினர் உழைக்கின்றனர் என்று பொருள்இந்தியா அல்லது எந்தவொரு நாட்டிலும் நடப்பது இதுவே. இந்தியாவில்,  ‘மேல்’ சாதியினர் மூளை உழைப்பிலிருந்து வெளியேறாமல்தூய்மைப்படுத்தும் (அசுத்த – மொ.ர்) உழைப்பைச் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர் என்பதே அந்தச் சுமைகளை ‘கீழ்’ சாதியினர் மீது சுமத்துகின்றனர் என்பதைக் குறிக்கிறது.

இவையனைத்தும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையோடு தொடர்புடையதுஒரு வர்க்கம் உழைக்காமல் மற்ற வர்க்கத்தின் உழைப்பால் வாழ்கிறதென்றால் அது உழைப்புப் பிரிவினை எனும் பிரச்சனையேகூடுதலாகஒரு நபர் ஒரே வகையான உழைப்போடு பிணைக்கப்படுகிறார் என்றால் அதுவும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையேஉழைப்பு மற்றும் உழைப்புசார் உறவுகளின் தொடர்பில்லாமல் சாதிகள் தோன்றவில்லைதவறான சமூக உறவுகளினால் தோன்றிய பிரச்சனைகளுள் ஒரு பிரச்சனை சாதியப் பிரச்சனையாகும்உற்பத்தி உறவின் இயல்புஅதன் மதிப்பு விதிகள்உழைப்புப் பிரிவினை மற்றும் அதன் சொத்துரிமையோடு அது பின்னிப் பிணைந்திருக்கிறது.

இவ்வாறாக மார்க்சியம் பயன்படுத்தும் – பயன் மதிப்புபரிமாற்ற மதிப்புமூளை உழைப்புஉடல் உழைப்புஉழைப்பின் மதிப்புஉழைப்புச் சக்தியின் மதிப்புசொத்துரிமைஎஜமானர்தன்மைஅடிமை முறை மற்றும் இது போன்ற பல வகைப்பாடுகளினூடாகவே – போன்ற பொருளாதார கருத்துகளைக் கொண்டே  நாம் சாதியப் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்

மார்க்ஸ் (எங்கல்சுடன்இணைந்து சாதி குறித்து முதல் முறையாக ஜெர்மன் சித்தாந்தம்”  (1845-6) எனும் நூலில் பேசியிருக்கிறார். மூலதனம்’ (1867) நூலில் ஆறு அல்லது ஏழு இடங்களில் சாதி குறித்து சில அவதானிப்புகளையும்விளக்கங்களையும் மார்க்ஸ் கொடுத்துள்ளார்மார்க்ஸின் கோட்பாடுகளை பெரும் விளக்கங்களோடு விவரித்த இந்த அவதானிப்புகளையும் ‘மூலதனத்தையும்’ கொண்டுசாதியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளவும்அதன் தீர்வை நாம் கணடறியவும் முடியும்.

மார்க்சின் கோட்பாட்டின்படிமானுட வரலாற்று பரிணாம வளர்ச்சிக்கு ஒரு பொருளாயத அடிப்படை இருக்க வேண்டும்அது சரியான பதிலென்றால்உற்பத்தி உறவிலிருந்து எழும் ஒன்றே அதற்கு காரணமாக இருக்க முடியும். இருப்பினும், கடந்த காலத்திலிருந்து வரலாற்று பரிணாமம் குறித்து தத்துவாதிகளைடையே ஒரு  கருத்துமுதல்வாதம் நிலவியதுகடவுளின் விருப்பத்திலிருந்து அல்லது கடவுளின் மறு அவதாரமான அரசர்கள் அல்லது மதத் தலைவர்கள்  அல்லது ஏதோவொரு அதிசக்தியினாலேயே மானுட வரலாறு பரிணமிக்கிறது என்ற கருத்தே அது.

ஒரு பிரச்சனையின் பொருளாயத அடிப்படையைக் காணத் தவறும் ஒன்று ‘கருத்து முதல்வாதமே’

வரலாற்று நடைமுறை குறித்த கருத்துக்களைப் பொதுவாக விமர்சித்த மார்க்ஸ் ஹெகலியருக்கு பிந்தைய கருத்துமுதல்வாத சிந்தனைகளை குறிப்பாக விமர்சித்தபடி ‘ஜெர்மன் சித்தாந்தத்தில்’ பின்வரும் அவதானிப்புகளை வைக்கிறார்:

இந்தியர்கள் மத்தியில் நிலவும் பக்குவமற்ற (crude) உழைப்புப் பிரிவினையைக் காணும்போதும், எகிப்தியர்கள் தங்களது ஆட்சியிலும்மதத்திலும் சாதிய-அமைப்பை நிறுவியதைக் காணும்போதும்வரலாற்றியலாளர்கள் சாதிய அமைப்பு எனும் அதிகாரமே அந்த பக்குவமற்ற சமூக வடிவத்தை உருவாக்கிய சக்தி என்று கருதுகிறார்கள். (மாஸ்கோ பதிப்பு 176, பக். 63).

உழைப்புப் பிரிவினை சாதியத்தை உண்டாக்கியதா அல்லது சாதி உழைப்புப் பிரிவினையை உண்டாக்கியதா என்பதே கேள்விமார்க்சைப் பொறுத்தவரைஉழைப்புப் பிரிவினையே முதன்மையானதுபின்வந்த காலங்களில் அதுவே சாதித் தொழில்களாக மாறியதுசூழ்நிலை இப்படி இருக்கவரலாற்றியலாளர்கள் சாதியை முதன்மையானதாகக் கருதி அதுவே உழைப்புப் பிரிவினையை தோற்றுவித்ததாகக் கருதுகிறார்கள். அதனால்மார்க்ஸ் வரலாற்றியலாளர்களை விமர்சித்தார்.

சமுதாயத்தில், தொடக்கத்திலேயே சாதி எவ்வாறு தோன்றியிருக்க முடியும்அப்படி தோன்றியிருந்தால் அதற்கு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும்அப்படி இருந்தால்அந்தக் காரணமே அடிப்படை அம்சமாக இருக்க முடியும்.

மனிதர்கள் வாழ்வதற்குப் பல்வேறு வகையான உழைப்பு தேவைப்படுகிறதுஅவ்வாறு பல்வகைப்பட்ட உழைப்பு தோன்றிதொடரும்போதுஅதனுள் ஏதோவொரு பிரிவினை நேரும். ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை நாளடைவில் எவ்வாறு உருமாறியது’ எனும் கேள்வியை ஒரு புறம் வைத்தால்பல்வகைப்பட்ட உழைப்பின் இருப்பே அதன் ஆரம்ப அடிப்படையாக இருக்கும்.

சாதிகள் என்ன செய்கின்றன என்று நாம் அவதானித்தால்வெவ்வேறு சாதிகள் வெவ்வேறு வகை உழைப்பில் ஈடுபடுகிறது என்பதைக்  காணலாம்பண்டையக் காலம் தொடங்கிஇன்றையக் காலம் வரைசாதிக்கும் பல்வகைப்பட்ட உழைப்பிற்கும் தொடர்பு இருந்தே வந்திருக்கிறது.  தர்க்கரீதியாக சிந்தித்தால்பல்வகைப்பட்ட உழைப்பே உழைப்புப் பிரிவினையாகியது என்பதை உணரலாம்எனினும்எல்லா நாடுகளிலும்சமூகங்களிலும் பல்வகைப்பட்ட உழைப்பும்உழைப்புப் பிரிவினையும் நிலவுகிறதுஇந்தியாவில் மட்டும் உழைப்புப் பிரிவினை ஏன் சாதியாக உருமாறியது?

கணிசமான ஆய்வுகள் செய்தவர்கள் கூட இந்தக் கேள்விக்கு எந்த விடையையும் கொடுக்கவில்லை. சாதிகள் எங்கும் காணப்படவில்லைஅது இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. என்பதைத் தவிர ஆய்வாளர்கள் வேறெதையும் சொல்ல இயலவில்லை.

இவ்வாறாகசாதியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நம்  முன் இருக்கும் பணிதீர்வை அறிந்து கொள்வதற்கு முன் நாம் ஒரு விஷயத்தை ஆய்ந்தரிய வேண்டும், உழைப்புப் பிரிவினை சாதிக்கு வழிவகுத்ததா இல்லை சாதி உழைப்பு பிரிவினையை உண்டாக்கியதா’இந்தப் அம்சத்தை ஆய்ந்தரியாமல்நாம் தீர்வை நோக்கி ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது.

மார்க்சைப் பொறுத்தவரைஉழைப்பு பிரிவினையே முதன்மையானது என்பதை நாம் பார்த்திருக்கிறோம்அதுவே சாதிய அமைப்பாக திடப்பட்டுப் போனதுஇவ்வாறாகப்பிரச்சனைக்குக் காரணமான உழைப்புப் பிரிவினையை மாற்றுவதே  சாதிய அமைப்பிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு.

முதலாவதாக நிகழ வேண்டிய மாற்றம் என்னவென்றால்உழைக்காமலேயே சுரண்டி வாழும்  வர்க்கத்தை – உழைப்பு நிகழ்முறைக்குள் – இழுப்பதுசுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்ப்பில் ஈடுபடும் வர்க்கம் (இனிவரும் பத்திகளில் ‘உழைக்கும் வர்க்கம்’)  இந்தப் போராட்டத்தைத் தொடுக்க வேண்டும்அடிமைகள் காலகட்டத்திலேயே இந்த வர்க்கப் போராட்டம் தொடங்கிவிட்டது.

உடல் உழைப்பில் ஈடுபடும் ஒட்டு மொத்த கீழ்நிலை சாதிகளுமே உழைக்கும் வர்க்கத்தினரேசுரண்டல் உறவிலிருந்து விடுதலை பெறுவதே தங்களது இலக்கு என்று இந்த வர்க்கம் உணர வேண்டும்மேலும்போராட்டத்தின் ஊடாக உழைப்புப் பிரிவினையை மாற்றும் பணியையும் நிறைவேற்ற வேண்டும்மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டுமெனில்ஒரு சில நபர்கள் மட்டும் மூளை உழைப்பைச் செலுத்துவதுமற்றவர்கள் எப்போதும் உடல் உழைப்பில் ஈஎடுபடுவது எனும் நிலை மாறி எல்லோரும் ஏதோவொரு வகையில் உடல் உழைப்புமூளை உழைப்பு என இரண்டிலும் ஈடுபடும் நிலை மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான உழைப்பில் ஈடுபட வேண்டும்நம்முடைய அனுபவத்தின் வாயிலாக படிப்படியாக இதுபோன்ற புதிய உறவுகளை நிலைநிறுத்தவும், நீடித்திஇருக்கவும் செய்ய வேண்டும்தாங்கொணா உடல் உழைப்பைச் செலுத்திபல்லாயிரம் வருடங்களாக கொடுமையான அடிமை வாழ்க்கை வாழ்ந்து வரும் கீழ்நிலை சாதிகளை விடுவிப்பதற்கு இது மட்டுமே ஒரே வழிவர்க்க போராட்டத்தினால் மட்டுமே வழி சாத்தியமாகும்.

1846 டிசம்பரில்அன்னென்கோக் எனும்  ஒரு ருசிய அறிவுஜீவிப்ரூதோனின் ‘வறுமையின்  தத்துவம்’ எனும் புத்தகம் குறித்து மார்க்ஸின் கருத்தைக் கேட்டார்அன்னென்கோவின் கடித்தத்திற்குப் பதிலளித்த மார்க்ஸ்உழைப்புப் பிரிவினை குறித்து ப்ருதோனுக்கு சரியான புரிதல் இல்லைஅது எல்லா காலங்களிலுமே அது ஒரேமாதிரி இருப்பதாக அவர் கருதுகிறார் என்று கருத்தளித்து அன்னென்கோவுக்கு பின்வருமாறு எழுதினார் மார்க்ஸ்:

சாதிய விதிமுறை என்பதுகூட ஒருவகையான உழைப்பு பிரிவினைதான் இல்லையாஅதேபோல்கூட்டுஸ்தாபன (corporations) விதிமுறை என்பது மற்றொரு வகையான உழைப்பு பிரிவினை இல்லையாஇங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கிய உற்பத்தி முறையின் கீழ் உருவான உழைப்பு பிரிவினை 18 ஆம் நூற்றாண்டில் மறைந்து போனது. அதன் பிறகு,  நவீன பெரு-நிறுவன தொழில் நிறுவனங்களில் முற்றிலும் வேறொரு வகையான உழைப்புப் பிரிவினை தொடங்கவில்லையா? (தத்துவத்தின் வறுமைபக். 158ம் மாஸ்கோ 1966).

1847 இல்புருத்தோனின் புத்தகத்திற்கு விமர்சனமாக மார்க்ஸ், தத்துவத்தின் வறுமை’ என்று எழுதினார்அதில் அவர்:

தந்தைவழிச் சமூக அமைப்பின் கீழ்சாதியமைப்பின் கீழ்நிலப்பிரபுத்துவத்தின் கீழ்கூட்டுஸ்தாபன அமைப்பின் கீழ் நிலையான விதிகளின் படி ஒட்டுமொத்த சமூகத்திலும் உழைப்பு பிரிவினை இருந்ததுசட்டம் இயற்றுபவர் இந்த விதிகளை நிறுவினாராஇல்லைஅவை பொருளாயத உற்பத்திச் சூழலிலிருந்து பிறப்பவைபின்னர் அவை சட்டத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டதுஇந்த வகையில்உழைப்பு பிரிவினையில் பல்வேறு வகைகள் சமூக அமைப்பின் அடித்தளங்கள் ஆகுகின்றன. (பக். 118).

1859இல் மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பில்” முதலாளித்துவப் பொருளியலாளர்கள் உற்பத்திக்கும்பரிவர்த்தனைக்கும் இடையேயான உறவை எவ்வாறு தவறாக புரிந்து கொண்டார்கள் என்று கருத்து தெரிவிக்கையில்மார்க்ஸ் சாதி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“அல்லதுசட்டம் ஒரு சில குடும்பங்களக்கு மட்டும் நில உரிமையை நிலைத்திருக்கச் செய்யலாம்அல்லது பாரம்பரிய உரிமையாக உழைப்பை நிர்ணயிக்கலாம்இவ்வாறு சாதியமைப்பாக வலுபடுதலில் அது முடிவடைகிறது. (பக். 201, மாஸ்கோ பதிப்பு 1970).

1853 இல் ”இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” எனும் ஒரு கட்டுரையில் சாதி மற்றும் உழைப்புப் பிரிவினை குறித்து மார்க்ஸ் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்

இரயில்வே முறையின் விளைவாகத் தோன்றும் நவீன தொழிற்சாலைஇந்தியாவின் சாதிகளை தாங்கி நிற்கும்முன்னேற்றத்திற்கும் இந்திய சக்திக்கும் தீர்க்கமான இடையூராக இருக்கும் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும். (காலனியயம் குறித்துமாஸ்கோ பதிப்பு 1974, பக். 85).

“பருத்தி மற்றும் இதர மூலப் பொருட்களை தங்களது உற்பத்திக்காக மலிவான விலையில் உறிஞ்சவே ஆங்கிலேய மில்லாதிபத்தியம் (millocracy  மில் நிறுவன ஏகாதிபத்தியம்இந்தியாவுக்கு இரயில்களை மானியமாக கொடுக்க விழைகிறது என்பதை நான் அறிவேன். (பக். 84).

”…. நிர்பந்திக்கப்பட்டாலும், அனைத்து ஆங்கில பூர்ஷுவாக்களும் மக்களின் சமூக நிலையை மாற்றவோ அல்லது  அவர்களின் பொருளாயத நிலையிலிருந்தோ (அவர்களை) விடுவிக்கவோ மாட்டார்கள், இது உற்பத்திச் சக்தியின் முன்னேற்றததை மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல மாறாக அதன் மீதான மக்களின் பயன்பாட்டைச் சார்ந்தும் இருக்கிறது. ஆனால்,  அவர்கள் (பூர்ஷுவாக்கள்) இரண்டுக்குமான பொருளாயத அடிப்படைகளை வரையறுக்கத் தவறமாட்டார்கள்…” (பக். 85) [ All the English bourgeoisie may be forced to do will neither emancipate nor materially mend the social condition of the mass of the people, depending not only on the development of the productive powers, but on their appropriation by the people. But what they will not fail to do is to lay down the material premises for both.]
மார்க்ஸ் சொன்னதிலிருந்து (நவீன தொழிற்சாலைகள் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும்), அது உழைப்புப் பிரிவினையின் பாரம்பரிய அம்சங்களை மாற்றி அமைக்கும் என்பதை நாம் அறியலாம்.  அதேவேளை அத்தகைய மாற்றங்கள் உழைக்கும் வர்க்கத்தை விடுவிக்கப் போதுமானதாக இருக்காது என்றும் சொல்கிறார்அதுமட்டுமல்லாதுஉழைக்கும் வர்க்கம் உற்பத்தி சாதனங்களைப் பறிப்பதற்காக முதலாளிகள் வர்க்கத்திற்கு எதிராக போராட்டங்களைத் தொடுக்க வேண்டும் என்கிறார்இதன் மூலமாக,  உழைக்கும் வர்க்கத்திடமிருந்து சொத்துரிமை எனும் பெயரில் நில வாடகைவட்டி மற்றும் லாபம் என்று வசூலிக்கும் சுரண்டல் வர்க்கத்தின் உரிமைகளைப் பரித்து அதை ஒழிக்கவும் முடியும். அப்போது முதலாளி வர்க்கமும் தங்கள் சொந்த உழைப்பால் வாழும் தேவை உருவாகும்எல்லா மக்களும் உழைக்கையில்எஜமானர்-தொழிலாளர் உறவானது ஒருவருக்கொருவர் சமமாக இருக்கும் உற்பத்தியாளர் உறவாக மாறும்.
எங்கெல்லாம் சமமின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் உழைப்புசார் உறவுகளை மாற்ற வேண்டும்உழைப்பு பிரிவினையை மாற்றுவதென்பது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.
சாதிகளுக்கிடையில் நிலவும் உழைப்பு பிரிவினைஆண் பெண்களுக்கிடையே நிலவும் பாரம்பரிய உழைப்பு பிரிவினை இவையாவுமே இதன் கீழ் வருகின்றன.
சமூகத்தில் நிலவும் ”தவறான சமூக உறவுகளை” (மார்க்ஸின் சொற்களில் சொல்வதானால்மாற்ற வர்க்கப் போராட்டத்தின் பாதையிலிருந்து உழைப்புச் சுரண்டலுக்கெதிராக சரியான கண்ணோட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் போராட்டமே உழைக்கும் வர்க்கத்திற்கு உதவும்எஜமானர் வர்க்கத்திடமிருந்து அடிமைபட்டு கிடப்பதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள அதுவே சரியான பாதையாகும்.
ஒரு சமூகத்தில் கீழ்நிலை சாதியினர் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக இருக்கின்றனர்சுரண்டலின் அடிப்படையில் உருவான பாரம்பரிய உழைப்புப் பிரிவினைக்குள்ளாக வாழ்கின்றனர் என்றால்அத்தகையத் தவறான உழைப்பு உறவை நீக்குவதே சாதிய விடுதலைக்கான சரியான தீர்வு.
1867 இல் வெளியான ’மூலதனம்’ பாகம் ஒன்றில் சாதி குறித்து மார்க்ஸின் அவதானிப்புகள்:
பட்டறைத் தொழிலானது பொதுவாக சமுதாயத்தில் தொழில்கள் இயற்கையாகவே வேறுபட்டு வளர்ந்திருக்கக் கண்டு, அந்த வேறுபாட்டை அப்படியே எடுத்தாள்வதோடு, பட்டறைக்குள்ளேயே திட்டமிட்டு அதனைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நுணுக்கத் தொழிலாளியை தனித்தேர்ச்சி பெறச் செய்கிறது. மறு புறம், பகுதி-வேலையை ஒருவரது வாழ்க்கைத் தொழிலாக மாற்றுவதென்பது, முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபடும் தன்மை தனி ஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும்.  தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை, முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன; ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே. (மூலதனம், பாகம் 1, பக்.461, தியாகு மொழிபெயர்ப்பிலிருந்து இந்த மேற்கோள் எடுக்கப்படுள்ளது)

இந்தப் பதிவின் இறுதியில்மற்றொரு எழுத்தாளரின் அடிக்குறிப்பை மேற்கோள் காட்டி எழுதுகிறார் மார்க்ஸ்:

எகிப்தில் கலைகளும் தேவையான பூரணத்துவத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதுமற்றொரு வர்க்கக் குடிகளின் விவகாரங்களில் தலையிடாத கைவினைஞர்கள் வாழும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும்ஆனால்  வாழ்வாதாரத் தொழில் (life calling) மட்டும் இனங்களுக்குள்ளான பாரம்பரியத்திற்குட்பட்டது... மற்ற நாடுகளில் வணிகர்கள் தங்களது கவனத்தை பல தொழில்களுக்கிடையில் பகிர்ந்தளித்தனர்ஒரு சமயத்தில் அவர்கள் வேளான்மையை முயல்கின்றனர்மற்றொரு சமயத்தில் வாணிபம்வேறொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களை கவனிப்பதில் ஒருங்கே ஈடுபட்டிருந்தனர்சுதந்திரமான நாடுகளில்அவர்கள் மக்கள் மன்றங்களை அடிக்கடி கூட்டுபவர்களாக இருந்தார்கள்..... அதற்கு நேர்மாறாக எகிப்தில் அரசு விவகாரங்களில் தலையிட்டால்அல்லது ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டாலோ கைவினைஞர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டனர்இவ்வாறாக அவர்ள் தங்களது வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள இடையூறு எதுவும் இருக்கவில்லை..... மேலும்தங்களது மூதாதையர்களிடமிருந்து எண்ணற்ற விதிமுறைகளை உள்வாங்குவதால்அதிலிருந்து புதிய அனுகூலங்களைக் கண்டுபிடிக்க எப்போதும் ஆர்வமாய் இருப்பர். (பக். 461).

குறிப்பிட்ட தொழிலைச் செய்வோர், அவர்கள் மட்டுமே அந்தத் தொழிலில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக எகிப்தில் கைவினை தொழில் அத்தகையதொரு நிலையை எட்டியதுஅவர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லைஅப்படிச் செய்தால்அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்அதனால் ஒவ்வொரு தொழிலும் சிறப்புத் தொழிலாக உருவெடுக்கும் நிலைக்குச் சென்றது.

இதுவும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையோடு தொடர்புடையதேஇந்தியாவில் மட்டுமே சாதி எப்படி உருவானது என்பது நமக்குத் தெரியாதோ அதேபோல் எகிப்தில் மட்டும் தொழில்கள் குறித்த இத்தகைய கட்டுப்பாடுகளும்கடும் தண்டனைகளும் ஏன் நிலவியது என்பது நமக்குத் தெரியாது.  உழைப்பு பிரிவினை அத்தகையதொடு வடிவத்தை அங்கெடுத்தது என்பதை மட்டும் நாம் புரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாகஉலகெங்கும் உழைப்பு பிரிவினையின் வடிவங்கள் குறிப்பிட்ட அளவு மாறிக் கொண்டே வருகிறதுஇந்த மாற்றங்கள் இந்தியாவிலும் நிகழ்கிறது.  பாரம்பரியத் தொழில்கள் குறித்த விதிகளும் மாறி வருகிறதுஎனினும்இத்தகைய மாற்றங்கள் சாதிய நிறுவனத்தை மாற்றும் அளவுக்கு இருக்கப் போவதில்லைகீழ்நிலை சாதிகளுக்கிடையில் சாதி சார்ந்த தொழில்கள் நீடிக்கவே செய்கிறதுஏனென்றால் சாதி சார்ந்த தொழில்களை விட்டுவிட்டு மூளை உழைப்புக்குள் நுழையும் சாத்தியங்களை அவர்களுடைய  பொருளாதார சூழல் அவர்களுக்கு  வழங்குவதில்லை.

இதுவரையிலான மார்க்ஸின் அவதானிப்புகளின் அடிப்படையில்கடந்த காலத்தில் உழைப்பு பிரிவினையே சாதியப் பிரச்சனையின் அடிப்படையாக இருந்திருக்கிறது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்இருப்பினும்,  இந்தியாவில் மட்டும் ஏன் அது நடந்தது என்பதை விளக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை.
சாதியமைப்பு என்பது ஒரு வகையான உழைப்புப் பிரிவினையேசாதிய வேறுபாடுகளை தற்காக்கும் சட்டங்கள் இல்லையென்றாலும் சமூக நிலைமைகள் அனைத்தும் சாதியைக் கட்டிக் காக்கும் விதத்திலேயே இருக்கின்றன.

மீண்டும் மீண்டும் மார்க்ஸ் முன்வைத்த அவதானிப்புகளைத் தொடர்ந்துநாம் இந்தியாவின் வர்க்கங்களை ஆய்வு செய்வோமானால்எல்லா கீழ்நிலை சாதிகளும் உழைக்கும் வர்க்கத்தினராய் இருக்கின்றனர்மேலும்இந்தப் பிரிவினர் பெருமளவிலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்அவர்கள் இந்தச் சுரண்டலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்சுரண்டல்வாத சமுதாயம் உருவாக்கிய உழைப்புப் பிரிவினையை அவர்கள் மாற்ற வேண்டும்அதற்கு அவர்கள் வர்க்கப் போராட்டப் பாதையிலேயே செல்ல வேண்டும்அந்தப் பாதையை உணராதுஅதில் செல்லாது போனால்இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர வேறெந்த பாதையும் இல்லைபல்லாயிரம் ஆண்டுகளாகபல நூறு வருடங்களாக சாதியமைப்பில் உழன்று கொண்டிருப்பதுபோல்அது மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்அதிலிருந்து தப்ப வேறெந்த வழியும் கிடையாது.

எனினும்கீழ்நிலை சாதிகளின் அறிவுஜீவிகள் இன்னும் தங்களது கண்களை திறக்கவில்லை.  சுரண்டும் வர்க்கமானது ஒரு தந்திரோபாயமாக எறியும் இடஒதுக்கீடு எனும் பிச்சைக்கும் உண்மையான சுதந்திரத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை அவர்கள் இன்னும் உணரவில்லைகையளவு நிறைந்திருக்கும் மக்கள் கூட்டத்திற்கு விரலளவு உணவு கிடைப்பது போல் இட ஒதுக்கீடு எனும் பெயரில் கிடைக்கும் சலுகைகள் அவர்களை நிறைவடையச் செய்துவிடுகின்றது. அதற்காக அவர்கள் தங்களது கீழ்நிலை சாதிய நிலையை தக்கவைத்துக் கொள்வதே பாதுகாப்பு என்று நினைக்கின்றனர்சுரண்டும் வர்க்கத்தின் அரசாங்கத்திற்குள் ஊடுருவுவதே தங்களது இலக்கு என்று நினைக்கின்றனர்.

இந்தியாவில் பட்டியல் சாதிபட்டியல் பழங்குடிபின் தங்கிய சாதிகளின் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக அடங்கிய ஒரு அரசாங்கம் அமைகிறது என்றே வைத்துக் கொள்வோம்சாதியை ஒழிக்க அந்த அரசாங்கம் என்ன செய்ய முடியும்அதற்கான செயல் திட்டம் என்னவாக இருக்கும்சுரண்டல்வாத சொத்துறவுகளை அது எவ்வாறு அழிக்கும்அசுத்தப் பணிகளை செய்து வாழும் கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை அந்த செயல்திட்டங்கள் மாற்றியமைக்குமா?
மிஞ்சி மிஞ்சிப் போனால், ‘சாதிய வேறுபாடுகளைக் கடைபிடிக்காதீர்கள்!’ என்பன போன்ற மேம்போக்கான சட்டங்களை இயற்றும்அச்சட்டங்கள் எவரைக் கட்டுப்படுத்தும்சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு அது ஒரு பிராமண பெண்ணுக்கும்கம்மாளர் சாதி ஆணுக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடியுமா?  சட்டத்தின் உதவி கொண்டு ஏதாவது இரண்டு நபர்களை ஒன்றிணைக்க முடியுமாபொருளாதார நிலைமைகளை மாற்றாமல் சாதிய-கலப்புத் திருமணங்களுக்கு எப்படி வழிவகுக்க முடியும்?  நிர்வாகத்தின் துணை கொண்டு சமூக உறவுகளின் ஒற்றை அம்சத்தையாவது அதனால் மாற்ற முடியுமாஅப்படி என்றால் கீழ்நிலை சாதியினரை உள்ளடக்கிய அரசாங்கள் அரசாட்சியை கைப்பற்றி என்னதான் செய்யும்?

 அது எதனை அடையும் என்றால்சீர்கெட்டுப் போயிருக்கும் உழைப்பு சுரண்டுலுக்கு அது தனது பங்கை செவ்வனே ஆற்றும். ஆதிக்க சாதி பூர்ஷுவாக்களுக்கு பக்கத்தில் தாழ்த்தப்பட்ட பூர்ஷுவாக்களாக நிற்கும் ஒரு இடத்தை அடையும்.

 கீழ்நிலை சாதிகளின் அரசாங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்தலித் பூர்ஷுவாக்களை உருவாக்குவதே அவர்களுடைய ஒட்டுமொத்த குறிக்கோள்அதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமாகீழ்நிலை சாதிகளின் பூர்ஷுவாக்கள்கீழ்நிலை சாதிகளின் சாதாரண அடித்தட்டு மக்களை சுரண்டி பிழைப்பது என்பதன்றி வேறெதுவுமில்லைகீழ்நிலை சாதிகளின் அரசாங்கங்கள் இந்த நிலையை மிக அற்புதமாகச் சாதிக்கும். 
குறிப்பு:
(18-24, 2004 இல் ஃப்ராண்டியர் இதழில் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்தவர் பி.ஆர்பாபுஜிஇதன் தெலுங்கு பதிப்பு டிசம்பர் 2003 இல் தெலுங்கு புத்தகத்தின் நான்காவது பதிப்பின் பின்னினைப்பாக வெளிவந்ததுஆங்கில பதிப்பு ஆகஸ்டு 2001 இல் வெளிவந்ததால்அதில் இந்த கட்டுரை இடம்பெற முடியவில்லைஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டு செய்யப்பட்ட இந்தி மொழிபெயர்ப்பும் இந்த கட்டுரையில் இடம்பெற முடியவில்லைஇந்த கட்டுரையின் இந்தி மொழிபெயர்ப்பு ஜனவரி 2000 த்தில் ‘சமயந்தார்’ எனும் இதழில் சமீபத்தில் வெளிவந்தது.)

நன்றிகுறளி (குறளி 2013 இதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு கட்டுரை பல மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் (மொழிபெயர்ப்பு மற்றும் அச்சுப்பிழைகள்)  பதிவு செய்யப்பட்டுள்ளது)

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

* உழைப்புசார் உறவுகள் (labour relations) என்பதும் உற்பத்தி உறவுகள் என்பதும் ஒன்றுதான் என்று கைதேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரிடம் உரையாடியபோது தெளிவானது. 

 பொருள் உற்பத்திக்காக நடைபெறும் உழைப்பு நடைமுறையில் பொருளாக நேரடியாக மாறிவிடுவதால்,  லேபர் ரிலேஷன்ஸ் என்பதை உற்பத்தி உறவுகள் என்று சொல்வதில் தவறில்லை என்றார். அதேபோல் ஆசிரியரும் இரண்டு சொற்றொடர்களையும் பயன்படுத்துவதால், மார்க்சியத்தின் அடிப்படையிலிருந்து அவர் விலகவில்லை எனும் புரிதலோடு அவர் விளக்கியது எனக்கு உடன்பாடாக இருந்த காரணத்தால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்.