Showing posts with label கொற்றவை.. Show all posts
Showing posts with label கொற்றவை.. Show all posts

Jan 3, 2011

துரோகங்களின் பட்டியல் - பாகம் -1

பார்ப்பனிய துரோகங்கள்:



  • இந்தியச் சமூகத்தில் (சிந்து சமவெளி நாகரீகம் தொட்டு) பார்ப்பனியம் மனித குலத்திற்கு செய்திருக்கும் துரோகங்கள் எண்ணிலடங்காதவை என்று மீண்டும் மீண்டும் வரலாற்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 
  • வேதம், வர்ணாஸ்ரமம் ஆகியவற்றைத் தோற்றுவித்து மனிதருக்குள் பிறப்பால் பிரிவினைகளை வகுத்து இன்று ஜாதி எனும் புதைச் சேற்றுக்குள் மக்களை மூழ்கடித்த மனுஸ்மிருதி, கூட்டிக்கொடுத்து குலக்குழு மக்கள் தலைவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு அரச ராஜ்ஜியத்தை விரிவு படுத்தும் ராஜ தந்திரத்தை வகுத்துக்கொடுத்த கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், அவர்கள் வழி வந்த பார்பனிய ஆசாரியார்களின் தத்துவங்கள் முதல் இன்றைய பாடப் புத்தகங்கள் வரை பார்பனியம் முன் வைக்கும் தத்துவம், வரலாறு யாவும் கற்றுத்தருவது பிரிவினைகளை, குலத்தைக் கெடுத்து அதிகாரத்தை வளைக்கும் தந்திரங்களை.
  • இயற்கையின் விஞ்ஞான பூர்வ புரிதலோடு தொல்பழங்காலச் சமூகத்தில் நிலவிய உலகாயதம் என்ற பொருள்முதல்வாத தத்துவத்தை அழித்து, பெருங்கருணையால் சக மனிதனை மனிதனாய் அரவணைக்க போதிக்கும் பௌத்த, சமண நெறிகளை பழித்து, திரித்து, ஒழித்துக்கட்டி, இயற்கையை வெல்ல முடியும் என்று உன்மையற்ற கருத்துமுதல்வாதக் கொள்கைகளைப் பல்வேறு தத்துவங்களின் பெயரால் மனித மனங்களில் விஷத்தை ஊற்றியது.
  • இயற்கையைப் போற்றி அதனோடு ஒன்றி வாழ்ந்த மக்களின் சடங்குகளை மூடநம்பிக்கைகளாக கேலி செய்து இயற்கையைக் கட்டுக்குள் கொண்டுவருவது அல்லது அதை வெற்றிக்கொள்வதற்கான சூத்திரம் என்று சொல்லி புரியாத சமஸ்க்ருத மொழிகளில் மந்திரங்களைக் கூறி யாகங்களை வளர்த்து மக்களை இயற்கைக்கு எதிரிகளாய், இயற்கையைக் கண்டு அச்சுறும் அறிவிலிகளாய், இயற்கையை வெல்ல முடியும் என்று பேராசைகாரர்களாய் (ஜோதிடம், பரிகாரம், ராசி கற்கள், எண் கணிதம் போன்றவை) மக்களை முழுக்க முழுக்க மதியற்றவர்களாய் ஆட்டிவைத்துக்கொண்டிருப்பது.
  • தொல்பழங்காலக் கலைகளை, பிந்தைய நாட்டுப்புறக் கலைகளை இழிவு படுத்தி அதிலும் வர்ண பேதங்களைப் புகுத்தி பார்ப்பனியக் (செவ்வியல் என்ற பெயரில்) கலைகளை மொத்த இந்தியாவின் பொது அடையாளமாக முன்னிறுத்துவது.
  • இயற்கையின் இயங்கியல் காரணங்களை நிராகரித்து கடவுள் என்ற ஒரு புனைவைத் தோற்றுவித்து, கடவுளின் நேரடி ஆசீர்வாதம் பெற்றவர்களாய் அவர்களை சித்தரித்துக்கொண்டு வேதம், உபநிடதம், ஸ்மிருதி, புராணம், என அனைத்தையும் தமிழ் இலக்கியம் முதற்கொண்டு அனைத்திலும் புகுத்தியதோடு, எல்லாவற்றையும் பார்ப்பனக் கடவுளின் பெயரால் இயற்றி இல்லாத ஒருவருக்காக அடித்துக்கொள்ளும் நிலையை உருவாக்கியது.
  • கடவுளின் தரகர்களாக இன்று வரை தங்களை முன்னிறுத்தி பொருளாதார நிலையில் காலம் காலமாக ஒரு நிரந்தர உத்தரவாதத்தை அவர்களுக்கு சாதகமாக உருவாக்கி மக்களை பகுத்தறிவற்றவர்களாக கையாள்வது.
  • சமத்துவ மடப் பள்ளிகளாய் இருந்த பௌத்த, சமணக் கோவில்களை அழித்தது.
  • பாவம், புண்ணியம் என்ற கற்பனாவாத கதையாடல்கள் மூலம் அரசர்களை ஒருபுறம் அச்சுறுத்தி அதை கழிக்க யாகங்கள் வளர்த்து அரசர்களை தங்கள் பிடிக்குள் வைத்து இருந்து பல்வேறு மத அரசியல்களை நடத்தியது. (அதன் தொடர்ச்சியாக இன்றுவரை மக்களையும் ஏமாற்றி வருவது.)
  • மத அதிகார நிறுவனங்களின் அடையாளமான கோவில்களை பிரம்மாண்ட வடிவில் (தங்களுக்குள் இருந்த சைவ வைணவ போட்டிகளுக்கும் ஆதரவு சின்னங்களாய்) கட்டவைத்து, அதன் அருகிலேயே நிலங்களைப் தானமாக (பிச்சையாக) பெற்று அக்கிரஹாரம் என்ற பெயரில் அவர்கள் குல நலன்களை நன்கு நிறுவிக்கொண்டது.
  • அப்படித் தானமாகப் பெற்ற நிலங்களை ரத்து செய்து, வைதீக பாப்பனியத்திற்கு சவாலக அமைந்த களப்பிரர்களை தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரியாய் சித்தரித்து அவர்களின் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்று இப்போது வரை வரலாற்றிலும், பாடப்புத்தகங்களிலும் பதிவது.
  • சொல்லப்போனால் களப்பிரர்கள் காலம்தான் தமிழுக்குப் பொற்காலமாக இருக்கிறது, அவர்கள் காலத்தில்தான் பல இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருக்கிறது. புதிய தமிழ் பாக்கள், விருத்தங்கள் அறிமுகமாகின்றன. கவிதை குறித்த புதியக் கோட்பாடுகள் தோன்றுகின்றன. வேங்கட நாட்டை ஆண்ட கள்வர் பாரம்பரியத்தில் தோன்றியவர்களே களப்பிரர்கள் என கூறப்படுகிறது.  தமிழ் எழுத்து பிரம்மியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது இவர்கள் காலத்தில்தான்.
  • தர்மகீர்த்தி போன்ற பல மொழிகளில் நூற்கள் எழுதிய ப்கழ்பூத்த அறிஞர்களில் பலர் தமிழர்கள் என்பதும், இவர்களில் பலர் களப்பிரர் காலத்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
  • சிதறிக்கிடந்த செய்யுட்கள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றதும், சிலப்பதிகாரம் போன்ற பெருங்காப்பியங்களும், பதிணென் கீழ்கணக்கு நூல்களான அறநூல்கள் இயற்றப்பட்டதும் தொகுக்கப்பட்டதும் இந்தக் காலக் கட்டத்தில்தான்.  பள்ளிக்கூடங்கள் பல தொடங்கப்பெற்றுச் சிறுவர்களுக்கு வர்ணமுறை பாராது முறையான எழுத்தறிவு புகட்டப்பெற்றது களப்பிரர்கள் காலத்தில்தான்.
  • இக்காலத்தில் தமிழ்நாட்டில் போர்கள் பற்றிய செய்திகள் மிகவும் குறைந்திருக்கின்றன. (அதனால் தான் பார்ப்பனர்களுக்கு இது இருண்டக் காலம், பிழைப்பு நடக்கவில்லையே). கி.பி. 3 - 6
  • மூவேந்தர்களுக்குள் இருந்த அரசியல் போட்டிகளின் காரணமாக கி.பி. 1311இல் மாலிக்காபூரைத் தமிழ் நாட்டிற்குள் அழைத்து வந்தது சுந்தர பாண்டியன்.  இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் அசோகர் பேரரசு, குப்தர் பேரரசு, ஔரங்கசீப் பேரரசு என்று இந்திய வரலாற்றில் 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த எந்த அரசின் ஆதிக்கத்திலும் தமிழக நிலப்பகுதி ஆட்பட்டிருக்காது.  இத்தகைய வாய்ப்பைத் தமிழ் நாடு பெற்றதற்குக் காரணம் Political Geography என்று சொல்லக்கூடிய நிலவியலே காரணம். இத்தகைய வாய்ப்பைப் பெற்ற தமிழ் நாட்டை இசுலாமியர்கள் தாக்கிச் சீரழித்தனர் என்று கூறுவது.
  • மருது பாண்டிய சகோதரர்களுக்கு பல உதவிகள் செய்த ஹைதர் அலி சுல்தான் என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், இசுலாமியர்களை இந்துக்களுக்கு எதிரிகளாய் நிறுத்தி இந்துத்துவ வெறியை வளர்த்து வருவது.
  • வைதீக அரசியல் செல்லுபடியாகாத நெருக்கடியில், மொழி மூலம் அரசியல் நடத்த தமிழுக்கு தெய்வீகத் தன்மையைப் புகுத்தி சைவத் தமிழ், வைணவத் தமிழ், இசைத் தமிழ், தெய்வீகத் தமிழ் என்று பக்தி இலக்கியம், பக்தி இசை, மேன்மை, தெய்வீகம் என்ற பார்ப்பனியப் புனிதங்களை மொழிமேல் திணித்தது. (ஆரிய மரபை தமிழ் மரபாக்கும் அரசியல்). அதுவரை நற்றமிழ், தண்டமிழ், வண்தமிழ் என்ற அடைமொழிகள்தான் இருந்திருக்கிறது
  • சுதந்திரப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களில் பார்ப்பனிய பங்களிப்பு, அவர்களின் வெற்றிகள், பார்ப்பனியத் தலைவர்களைத் தூக்கிப் பிடித்தல், ஒடுக்கப்பட்ட மக்களின் பங்களிப்பை மறைத்தல், ஒரு தலித்திற்கு உதவி செய்த ஆங்கிலேயரைக் கொன்ற பார்ப்பனிய (இந்துத்துவவாதியான ) வாஞ்சிநாதனை வீரனாக சித்தரித்தல், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இந்த்துத்துவவாதியான சாவர்க்கரால் தூண்டப்பட்டவன் என்பது போன்ற துரோகச்செயல்களை வரலாறாக பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்வது.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்து (மநு காலம் தொட்டு) அவர்களை அடிமைகளாகவே வைத்திருந்தது..பெரும் போராட்டங்கள் நடத்தி தற்போது அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் கூட நுழைவுத்தேர்வு ரத்திற்கு எதிராக உயர் சாதி இந்துக்கள் (பார்பனர்களால் தானே அவர்கள் உயர் சாதி ஆனார்கள்) குரல் எழுப்புவது. 

பட்டியல் இன்னும் இருக்கிறது...தொடரும்...அதன் தொடர்ச்சியாக பெண் இனத்திற்கு இவர்கள் செய்த துரோகங்களின் பட்டியல் வளரும்......

பார்ப்பனியமும், முதலாளித்துவமும் செய்யும் ஒடுக்குமுறைகளை விமர்சிக்காமல், அவ்வரலாற்றைப் பேசாமல், அதிலிருந்து விடுபடும் வழிகளை மட்டும் பேசுவது பாழடைந்த கட்டிடத்தை மேல்வாரியாக ஒட்டு வேலை செய்து காப்பாற்றுவது போன்றதாகும். ஒடுக்குமுறைகளுக்கெதிரான எழுத்துக்களிலும், பெண்ணிய எழுத்துக்களிலும் இவற்றை குறிப்பிடுவது தவிர்க்கவியலாதது..
                                         .........தொடரும்.

Dec 8, 2010

ஊடக முதலாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்,


இக் கடிதத்தை ஓர் கேள்வியுடன் தொடங்கவேண்டியுள்ளது. தொலைக்காட்சி என்ற மாபெரும் ஊடகத்தைக் கொண்டு நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற சுயநினைவோடு, உணர்ந்துதான் செய்கிறீர்களா? உங்கள் வெற்றியின் அளவுகோலை அளக்கும் T.R.P  என்ற ஒரு முறை இருப்பது போல் உங்கள் சேவைகளின் மதிப்பையும் அது சமூகத்தில் விதைக்கும் சிந்தனைகளையும் அதன் மூலம் நடக்கும் சீர்கேடுகளையும் அளக்கும் முறை என்று ஒன்றிருந்தால் உங்கள் துரோகங்களின் எண்ணிக்கையையும் கணக்கிடலாம். குறிப்பாக குழந்தைகளையும், பெண்களையும் நீங்கள் சந்தைப் படுத்துவது சொல்லக் கூசும் அளவுக்கு மிக மிக ஆபாசமாக உள்ளது.

எங்கள் குழந்தைகள் உங்கள் விற்பனைப் பொருள் ஆக்கப்படுவதைக் கண்டு அச்சுறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.  தயவு செய்து குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதியுங்கள்.  உங்கள் காமிராவின் கோரப் பற்கள் புகழுக்கான ஆசையை  அவர்கள் மீது மென்று துப்பி அவர்கள் பண்புகளை, குழந்தமையை, சமத்துவத்தை பிடுங்கிச் செல்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது.   குழந்தைகளின் திறமைகளுக்கான நிகழ்ச்சி என்பதில் சினமாவைப் பிரதி எடுக்கும் நிகழ்ச்சிகளே தலையானதாய் உள்ளது, இப்போக்கு குழந்தைகள் மத்தியில் திறமைப் பற்றிய தவறான புரிதலை விதைக்கிறது.  புகழ் என்றாலே அது திரைத்துறையின் வாயிலாகத் தான் கிடைக்கும் என்று கற்றுத்தருகிறது. அப்புகழுக்காக தங்களை எவ்வகையிலும் பணையம் வைக்க ஐந்திலேயே அவர்களைத் தயார் செய்வது சமுதாய எதிர்காலத்திற்கு பெறும் கேடு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புகழை முன் நிறுத்தும் போட்டி நிகழ்ச்சிகளினால் மற்ற குழந்தைகளுக்கு (பெற்றோர்களுக்கும்)  ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சிந்திக்கும் நேரம் உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.  இசை, நடனம் இவைகளை கற்ற குழந்தைகள் மட்டுமே திறமைக் கொண்டவர்கள் என்ற உங்களது தவறான சித்தரிப்பினால் இன்று ஒவ்வொரு குழந்தையும் கல்விப் படிப்போடு சேர்த்து மற்றப் படிப்புகளைக்  (Extra-curricular activities)  கற்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சிக்கான விளையாட்டுகள், அறிவு விரிவாக்கத்திற்கான அறிவியல் பயிற்ச்சிகளை விட இசையும் நடனமுமே முதன்மை பெறுகின்றன உங்கள் தயவால்.  குழத்தை 5 வயது எட்டியவுடன் பாட்டு, நடன வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள், பின்பு 6 அல்லது 7 வயதில் தொலைக்காட்சிக்கு நேர்ந்து விடப்படுகிறார்கள். 

மூன்று வேளை உணவுக்கு வருடக்கணக்காக உத்தரவாதம் இருப்பவர்களே இது போன்ற துறைகளை தேடிக் கற்கின்றனர். மேலும் இத்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு பெரும்பாலும் பார்ப்பனியக் குழந்தைகளுக்கே அமைகிறது, ஆம் இசையும், நடனமும் அவர்களின் பிடியில்தானே இருக்கிறது. பார்பனியர் வகுத்த வர்ண பேதத்தை பறை சாற்றும் உங்கள் நற்பணிக்கு முதலாளிகளின் ஆதரவு கிட்டுவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. பார்பனியரல்லாத குழந்தைகளும் இசையும் நடனமும் கற்றுக்கொள்வதாக நீங்கள் சொல்ல்லாம், அவர்கள் முதலாளிகளின் பிள்ளைகள் அங்கு பொருளாதாரம் பார்ப்பனியக் கலையை விலை பேசிவிடும்.  ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளின் திறமைகளுக்கான சந்தை உங்களிடத்தில் உண்டா சகோதரர்களே? அப்படியே அவர்களுக்கான நிகழ்சிகளை ஒளிபரப்பினாலும் அவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்திவிடுவீர்கள் அல்லது அவற்றை வைத்து விளம்பரம் தேடுவீர்கள்.( நீங்கள் வெளியிடும் விளம்பரங்களில் அம்மாக்கள், பெண்கள், குழந்தைகள், ஆண்கள் யாரும் கருப்பு நிறமாய் இருந்ததேயில்லை, இருப்பின், வேலைக்காரி, மற்றும் உதிரித்தொழில் செய்வோர், இவர்கள்தான் இங்கு சமுதாயமாக இருக்கிறார்கள் இவர்கள்முந்தான் நீங்கள் உங்கள் கலாச்சாரத்தை விதைக்கிறீர்கள்)

திறமைகளுக்கான மேடை என்றால் ஏன் இவ்வளவு ஆர்பாட்டம், மாறுவேடப் போட்டி போன்ற ஒப்பனைகள்? பாடல்களுக்கேற்ப ஒப்பனைகள் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நீங்கள் தரும் உடைகள் எது போன்றவை. நடிகைகளின் மார்புகளையும், தொப்புளையும் சுரண்டிப் பிழைக்கும் பிழைப்பு போதாதென்று பெண் குழந்தைகளின் மார்புகளையும், தொப்புளையும் குறி வைக்கிறீர்கள்.  பாடலுக்கேற்ற பாவம் என்ற பெயரில் ஆண் சிறுவனைப் பார்த்து பெண் சிறுமி பாடல் வரிகளுக்கேற்ற பார்வைய செலுத்துவது திறமையை வளர்கிறதா பால் உணர்வை வளர்கிறதா என்று பரப்பரப்பை உண்டாக்க நீங்கள் ஒளிபரப்பும் slow motion முன்னோட்டக் காட்சிகளைப்போல குழந்தைகளின் பாவங்களை ஓட்டிப் பாருங்கள். உங்கள் கண் முன் படுக்கை அறை விரிவதை கண்டுணர்வீர்கள்.

ஆணாதிக்கச் சமூகத்தில், ஆணாதிக்க திரைப்படங்களையே எதிர்பார்க்க முடியும். ஆணாதிக்க சிந்தனையோடு எழுதப்பட்ட ஆபாசமான இரட்டை அர்த்தப் பாடலை போட்டிக்காக குழந்தைகள் திரும்ப திரும்ப பாடி மனப்பாடம் செய்யும் பொழுது பெண் பற்றிய எத்தகைய மனப்போக்கை ஆண் குழந்தைகளுக்குள் நீங்கள் வளர்த்துவிடுகிறீர்கள்? “வாடா வாடா பைய்யா என் வாசல் வந்துப் போடா”, “நீ மாசத்துல 3 நாளு எங்க போயி படுப்ப” போன்ற வரிகளின் அர்த்தம் தங்களுக்கும் புரியும் தானே? (இத்தருணத்தில் ஓர் ஐயத்தை கேட்கவேண்டும் இது போன்ற நிகழ்சிகளில் உங்கள் குழந்தைகளோ, உங்கள் குடும்பத்தாரின் குழந்தைகளோ, உங்கள் ஊழியரின் குழந்தைகளோ, நடுவர்களின் குழந்தைகளோ பங்கு பெறுகிறார்களா, அவர்கள் இவ்வரிகளை அதே பாவனையோடு மற்றவரின் நிகழ்சிகளில் பாடுவதுண்டா, ஆடுவதுண்டா?)

குழந்தைகளை இப்பொழுது. 2வயதிலிருந்தே பலாத்காரம் செய்கிறார்கள். யோசித்துப்பாருங்கள்.  ஆணாதிக்க படைப்புகள், ஆணாதிக்க சமூக அமைப்பு இப்பொழுது அதோடு சேர்து உங்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளும்.  விளம்பரம் என்ற பெயரில் முலைகளை பிதுக்கிக் காட்டி சுவரொட்டிகளை தெருவெல்லாம் ஒட்டி, இதழ்களின் அட்டைப்படங்களில் போட்டுப் போட்டு சமூகத்தில் கற்பழிப்புகளின் எண்ணிக்கையை வளர்க்க அன்றாடம் பாடுபடும் உங்கள் பணி அளவிடற்கறியது. இப்பொழுது சிறுமிகளையும் அப்பட்டியலில் சேர்க்க உதவிய உங்கள் நல்லெண்ணங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.  

உங்களிடம் நான் வேண்டுவதெல்லாம், நுகர்வு கலாச்சர அடிமைகளாகவும், பணம் புகழிற்கு அடிமைகளாகவும் எங்கள் குழந்தைகளை உருமாற்றம் செய்யாதீர்கள்.  உண்மையிலேயே திறமைகளுக்கான மேடை அமைத்துத் தருவதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆசை இருப்பின் சினிமாவின் பிரதி எடுக்கும் நிகழ்சியாக அல்லாமல், குழந்தைகள் குழந்தைகளாக இருக்க அனுமதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள். முடிந்தால் குழந்தைகளை ஊடகத்திலிருந்து ஒதுக்கி விடுங்கள் அவர்கள் காண வேண்டிய உலகம் அரியது அதை ஓர் அறைக்குகள் (சினிமாவிற்குள்) அடைக்க நினைக்காதீர்கள்.

இசை, நடனத்திற்கான நிகழ்ச்சி நடத்தித்தான் நீங்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தால், போட்டியல்லாத நிகழ்ச்சியாக நடத்துங்கள். அடிப்படைத் தேர்வுகளை திரை மறைவில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான (பெரியவர்களுக்கும் கூட) சமமான ஓர் மேடையை அமைத்துக்கொடுங்கள்.  நடுவர்கள், ஆசிரியர்களாக செயல்பட்டு திறைமறைவில் அவர்களுக்கான வழிமுறைகளை வழங்கட்டும்.   பரபரப்பான முன்னோட்டங்கள், ஓட்டு வேட்டை, சுவரொட்டி வேட்டைகளை தடுத்து ஓர் ஆரோக்கியமான நிலை உருவாக அது உதவும்.  போட்டிகள் நிலவினால்தான் திறமைகள் வளரும் என்ற முதலாளித்துவ அரசியலை குழந்தைகளிடம் செயல்படுத்தாதீர்கள். பணம், அங்கீகாரம், புகழ் இவையெல்லாம கொண்டவரே வாழ்வதற்கான தகுதி பெற்றவர் என்று நீங்கள் பல்லாயிரம் வருடங்களாக முன்னிறுத்திவருகிறீர்கள். அவ்வரசியல் நீங்கள் மேலும் மேலும் உங்கள் பொருளாதாரத்தை வளர்க்கவும், பண்பற்ற குணமற்ற சமுதாயத்தை வளர்க்கவும் மட்டுமே உதவுகிறது.  இதுவரை  ஆண்களை, குடும்ப உறவுகளை சுயநலமிக்க உங்கள் முதலாளித்துவ அரசியல் ஆட்டிப்படைத்தது, அதன் அடுத்த குறி பெண்கள், குழந்தைகள்.

உங்களை எதிர்த்து நீதித்துறையை அனுகலாம்தான் அதற்கான பொருளாதார சூழலும், அரசியல் பலமும் எங்களைப் போன்ற எளியவர்களிடத்தில் இல்லை. அது பயன் தரப்போவதுமில்லை.  அப்படியே எதிர்க்கப்பட்ட வழக்கிலும் கூட குழந்தைகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பங்கேற்பதை குழந்தை ஊதியம் என்று கருத முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுளது. ஒருவேளை குழந்தைகள் தங்கள் விருப்பத்தோடு உடலை விற்க துணிந்தாலும் சட்டம் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கும் போலிருக்கிறது.

முதலாளிகள் ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் பணம் படைத்தவர்களுக்கே, ஆகவே நீங்களும் அவர்களின் இலக்கான படிநிலைக்குடும்பங்களின் பிள்ளைகளை பயன்படுத்தி சாமர்தியமாக பல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். அதே வேளையில் இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் உண்மை நிகழ்ச்சிகளின் மூலம் கிராமங்களை மூடநம்பிக்கையின் சின்னமாக காண்பிக்கிறீர்கள்.

உன்மையில் குழந்தைகளுக்கான சமூக அறிவை ஏற்படுத்த நீங்களும் உங்கள் விளம்பர நிறுவனங்களும் துடிப்பீர்களானால் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் அரசாங்கப் பள்ளிகளை சீரமைக்கும் முயற்ச்சிகளை மேற்கொள்ள முடியுமா? முடிந்தால் நகரப்  பிள்ளைகளை அச்சீரமைக்கும் பணிகளுக்கு அழைத்து சென்று அவர்களையும் அதில் பங்கு பெற செய்யுங்கள். எங்கள் பிள்ளைகள் ஒடுக்கப்பட்ட பிள்ளைகளின் நிலையையும், பார்ப்பனியம் தன் குல, வர்ண, வர்க்கப் பேதத்தால் செய்த கொடுமைகளையும் கண்டுணரட்டும்.

பாடதிட்டத்தில் கற்றுத்தரப்படும் வரலாற்றுப்பாடங்கள் ஆதிக்க வர்க்கத்திற்கு துதி பாடும் (வடிகட்டப்பட்ட) வரலாறு. உண்மைகளைத் தெரிந்துக்கொள்ள அவர்களுக்கு உதவும் வகையில் களப்பணியாளர்களையும், மறைக்கப்பட்ட வரலாற்றை கற்றுணர்ந்த மேதைகளையும் பயன்படுத்தி வகுப்பறைக்கு அப்பாற்பட்ட கல்வியை போதிக்கும் நிகழ்ச்சிகள் ஏதாவது நடத்த முடியுமா?

தற்போதைய அரசியல் சூழலில் எதிர்காலும் குறித்து முற்றிலும் நம்பிக்கை இழந்து போய் இருக்கும் எங்களின் கடைசி நம்பிக்கை குழந்தைகள் (எதிர்காலத் தூண்கள் !!) அவர்களையும் பெரியவர்களாக்கி பிரிவினைகளையும், முதலாளித்துவ படிநிலைகளையும் மேலும் மேலும் வளர்த்து சமூக சீரழிவிற்கு நீங்கள் துணைபோவதை யோசித்துப் பாருங்களேன்.

நீங்கள் தயாரித்து அனுப்பும் குழந்தைகள் விளம்பரங்களால், ஊடகங்களால் சாரம் உறிஞ்சியெடுக்கப்பட்ட வெற்றுப் பொம்மைகள், நிகழ்வில் நடக்கும் எதையும் சற்றும் கவனத்தில் கொள்ளாத இளம் தலைமுறை, இவர்களுக்கு நெல் எப்படி விளைகிறது என்று தெரியாது, சுதந்திரப்போராட்டம், இழப்புகள், இந்திய ஜாதிகள், வர்க்க வேறுபாடுகள், அரசியல் சூழல்கள் எதுவும் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்ட அப்பாவிகள். இவர்களுக்கு அரசியல் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம், (நாளை அரசியலில் நடக்கும் குறைகளை ஊழல்களை இவர்கள் போன்றோரே வளர்த்து பிரச்சாரத்துக்கும் வருவார்கள்.) அதே கேள்வியோடு இவர்கள் வரலாற்றுத் தூண்கள் என நீங்கள் சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இளம்தலைமுறை என்று நீங்கள் கொண்ட்டாட்டமாய் உங்கள் ஊடகத்தில் காண்பிப்பது யாரை, அவர்களின் மனவளர்ச்சி என்ன என்பதை சோதித்துப் பாருங்கள்.


மூன்று வேளை உணவு இல்லாவிட்டாலும் இல்லம்தோறும் உங்களை நுழைய வாய்ப்பளித்த இவ்வரசியலை நான் புரிந்துகொள்கிறேன், அய்யா நீங்களும் புரிந்துகொள்ளுங்கள். 

இனி இது குறித்து தாங்களிடம் நான் நிறைய விவாதிக்க இருக்கிறது என்பதை நானறிவேன்...நீங்களும்....





Jul 2, 2010

கல்லெறியும் குளம்.



கரையான்கள் தீண்டாத கதவுகளுக்கு பின்னால்
புனிதம் காத்திருந்தது
உதடுகள் தொங்க முத்தம் கேட்டு

காத்திருக்கிறது
புனிதம்
வியர்வை பொங்கும் கரங்களை
பிசைந்தவாறு
முத்தத்தின் வாசனை
முத்த
வாசனை
புனிதத்தின் துர்மணம்
முத்தம்
வருந்தி விலக

புனிதம் அறிவித்தது

உங்களில் எவர் புனிதர் இல்லையோ
அவர்களுக்கே என் உதடுகள்...

மதத் தரகர்
தூபமிசைப்போர்
கடவுளின் காவற்காரர்
துரோகத்தை மந்திரமாய் ஈணுபவர்
கொலையாளி
வரலாற்று விற்பனன்
ஜனநாயகவாதி
கொள்கை பரப்பாளன்
அரசியல்வாதி
கலைக் காப்பாளர்கள்
ஒழுக்கம் செய்து விற்பனைக்கு வைப்போர்
தசைக்கு கீழ் ஆடை அணிவோர்
கைகளில்
அரிதாரம் வழி வழியும் பாவைகள்
மிதக்கிறது மறைக்கப்பட்ட வரலாற்று பக்கஙகளில்
துர்மணம் சூழும் பெயரற்ற கண்ணீர்

எல்லோருக்கும் சாத்தியமாயிற்று
ஒரே வானம்
ஒரே மௌனம்
ஒரே சொல்