Jul 2, 2023

பொருளாதார விஷ ஊசி - எச்சரிக்கை


 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மிக சாமர்த்தியமாக சமூகத்தில் விஷ ஊசி ஏற்றுவார்கள். குறிப்பாக தாராளவாத (academic) அறிவுஜீவிகள்! அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்கள் அவர்கள். அவர்கள் ஏற்றுவது விஷ ஊசி என்று தெரிய நாம் மார்க்சியம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூலதனத்திற்கு அறிமுகம் என்னும் நூலையாவது படித்திருக்க வேண்டும்.

 மூலதன இருப்பையும், சுற்றோட்டத்தையும், அடுத்தவரின் உழைப்பை அபகரித்து இயங்கும் உற்பத்திமுறையை அப்படியே தக்க வைத்துக்கொள்ள முதலாளித்துவமானது வண்ண வண்ணமாக, புதிய புதிய சீர்திருத்தங்களை முன் வைத்து மக்களை தன் வயப்படுத்த முயலும். அதில் சிலர் நேரடியாக முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் என்று தெரியவரும், சிலரது எழுத்துக்கள் முதலாளித்துவ / மூலதன எதிர்ப்பு போலவும், மார்க்ஸை விட இவர் சிறந்த வழிமுறைகளை சொல்கிறார். பொருளாதார நிர்ணயவாதமாக இல்லாமல் ”ஜனநாயக சோஷலிசம்” பேசுகிறார் என்றெல்லாம் முன்வைப்பார்கள். மார்க்ஸைப் படிக்காதது போலவே நடிப்பார்கள். மார்க்ஸ் சொன்ன பிரச்சினைகளை இவர்கள் வேறு கலைச்சொற்கள் மூலம் வியாக்கியானம் செய்து, தீர்வை மூலதனத்திற்கு சாதகமாக வைப்பார்கள்.

கொச்சையான முதலீட்டிய எதிர்ப்பாளர்” அல்ல என்ற சொல்லாடல்களில் உள்ளது விஷம்! (இதுல தமிழ்ல terminology correction வேற)…

 மார்க்ஸ் எதிர்த்தது மூலதனத்தையல்ல… தனியுடைமை உற்பத்தி முறையை அதன் விளைவான சமூக-அரசியல்-பொருளாதார அமைப்பை. இதுவெல்லாம் புரிய கண்டிப்பாக மார்க்சியம் படிக்க வேண்டும்.

 பொதுவாக (98%) முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் பொருளாதாரம் என்பதை தனித்ததொரு entityயாக காண்பார்கள். ஆனால் மார்க்ஸ் பொருளாதாரம் என்பதை எந்த பொருளில் சொல்கிறார் என்பதில் தான் அது சமூக விஞ்ஞானமாக இருக்கிறது.

இத்தகையவர்கள் பிரச்சினைக்குரிய அல்லது அநியாயமாக கட்டி எழுப்பப்பட்ட ஆபத்தான கட்டிடத்தை தகர்ப்பதை விட்டுவிட்டு விரிசல்களுக்கு எப்படி பூச்சு வேலை பார்க்கலாம் என்று Capitalistic economic engineering வேலை பார்ப்பார்கள், அதாவது இலாபம் என்னும் தேவைக்காக உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி இயங்கும் அநியாயமான உற்பத்தி முறையை எதிர்க்காமல் விநியோகத்தை எப்படி நியாயமாக செய்யலாம் என்னும் சாமர்த்தியவாதமது.

 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் உழைப்புச் சுரண்டல் பற்றி பேச மாட்டார்கள், அல்லது அதை சரி செய்ய இதை செய்யலாம், அதை செய்யலாம் என்று நாய்க்கு எலும்புத்துண்டை எப்படி, எந்த விகிதாச்சாரத்தில் போடலாம் என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள். மார்க்ஸை முழுமையாக படிக்காமல் அல்லது படித்தாலும் வர்க்க உணர்வால் வளர்ச்சி, உயர்வு, “ஜனநாயகம்” (உண்மையில் அது போலி ஜனநாயகவாதம்) ஆகிய “இலட்சியவாத” மனம் கொண்டவர்களால் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. யாரும் இங்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை, ஆனால் உழைப்புச் சுரண்டல் மிக்க பொருளாதார அமைப்பை ஏற்பதென்பது உண்மையில் மானுடத்திற்கு செய்யும் துரோகம்.

மூலதனத்திற்கு வரி போடுவது, கூலியை ஏற்றிக் கொடுப்பது, தொழிலாளர் நலத் திட்டங்களை அறிவிப்பதென்று வகை வகையாக ஆலோசனை வழங்குவார்கள்…. ஆனால் இது எதுவுமே தனியுடைமை உற்பத்தி முறையை, அடுத்தவர் உழைப்பில் நடக்கும் செல்வக் குவிப்பையும், அதன் விளைவான படிநிலை சமூக அமைப்பின் வன்முறையையும் (சாதி உள்ளிட்ட அமைப்பு) தடுக்கப் போவதில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையில் சூழலியல் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற பரிந்துரையெல்லாம் நகைச்சுவையானது.. லாபத்துக்காக மனுசங்க ரத்ததையே உறிஞ்ச தயாரா இருக்குற காட்டேறிகிட்ட உறிஞ்சுன ரத்தத்தை அப்படியே ராவா நிலத்துல துப்பாத.. மரம் செத்துப் போய்டும், சுத்திகரிச்சு துப்புன்னு சொல்ல சொல்ற மாதிரி இருக்கு!

மூலதனம் (முதலீட்டிய மண்ணாங்கட்டி) என்பது வெறும் பணம் தொடர்பானது மட்டுமல்ல அது நிலம், வளம், உற்பத்தி சாதனங்கள், உழைப்பளர்களின் உழைப்புச் சக்தி உள்ளிட்ட அனைத்தும் செல்வந்தர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதற்கு ஏற்றவாறு தான் சமூக அமைப்புகளும், அரசு இயந்திரமும், கட்டுப்பாடு அம்சங்களும் தோன்றும். இவை இரண்டையும் பிரிக்கவே இயலாது என்பதைத்தான் மார்க்ஸ் மிக அழகாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார். (லெனினின் அரசும் புரட்சியுமாச்சம் படிக்கனும்). வர்க்கப் பகைமைகளின் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு என்கையில் அந்த அரசிடம் மன்றாடி மன்றாடி, சீர்திருத்தங்களை முன் வைத்து என்ன கிடைக்கும்? எலும்புத் துண்டு! அது போதுமா? அந்த இத்துப் போன எலும்பை தின்ன உடம்புல உயிரும் தெம்பும் இருக்கனும்ல.. அதை ஏன் ஒரு முதலாளி விட்டு வச்சிருக்கான் தெரியுமா? மறுபடியும் அடுத்த நாள் வந்து அவனுக்கு உழைச்சுக்கொட்ட.. சீர்திருத்தவாதிகள் இதைப் பேசுகிறார்களா?

 சீர்திருத்தங்களால் என்ன மிஞ்சும்? ஊறுகாய் போன்ற சமூகநீதி! இந்த காரணங்களால் தான் நாம் முதலாளித்துவ ஜனநாயகம் / சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இயக்கங்களை, தலைவர்களை எதிர்க்கிறோம். அதேவேளை மார்க்சியவாதிகள் ஒண்ணும் எதிர்காலத்தில் வாழ்பவர்கள் அல்ல, இன்றைய தேவைக்கு குறைந்தபட்ச சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்கிற காரணங்களால் அதன் போதாமைகள் மற்றும் ஆபத்துகள் தெரிந்தும் அதை ஆதரிக்கின்றனர். சிலர் அதோடு சமரசம் செய்துகொள்கின்றனர். இந்த புள்ளிகளில்தான் இங்கு கம்யூனிஸ்ட் முகாமகள் பிரிந்து முரண்பட்டு நிற்கின்றனர். இது புரியாம மொதல்ல உலக கம்யூனிஸ்டுகளே ஒன்று கூடுங்கள்னு அறைகூவல் விடுக்கனும்னு அடையாள அரசியல் பேராசிரிய பெருமக்கள் நக்கல் செய்வதுண்டு.

 மூலதனத்துக்கு வரி போட்டா, அதை எப்படி ஏமாத்தனும்னு முதலாளிகளுக்கு தெரியாதா என்ன? ஏற்கனவே இங்க பல வகையா நிறுவன உருவாக்க வழிமுறைகள் இருக்கு… வரி ஏய்ப்பு, வரி விதிவிலக்குன்னு எல்லாமே மூலதனத்துக்கு சாதகமானதுதான்!

ரொம்ப சிம்பிளா கேக்குறேன்.. இன்னா மயிறுக்கு நான் அடுத்தவனுக்கு உழைச்சு கொட்டனும்? எல்லாருக்கும் பொதுவா இருக்க வேண்டிய ”கச்சாப் பொருளையெல்லாம்” மூலதனங்குற பேர்ல 10 பேரு கட்டுப்பாட்டுல வச்சிருப்பாங்க, அவனுங்க முடிவு பண்ணுற அளவுக்கு நான் உழைக்கனும், அவனுங்க போடுற பிச்சைய நான் வாங்கிக்கனும், எப்ப நான் என் புருஷன் கூட படுக்கனும், என் புள்ளை குட்டிங்க கூட நேரம் செலவு பண்ணனுங்குறது…(அதையும் கூட சந்தோஷமா செய்ய போதுமான கூலியோ, ஓய்வு நேரமோ இருக்காது) வரைக்கும் அவனுங்க நிர்ணயிக்குற உழைப்பு நேரம் தான் முடிவு பண்ணும். இது இப்படித்தான இருக்கும்னு வாழ்றது ஒரு பொழைப்பா?

உன்னை யாருமா கூலி வேலைக்கு போகச் சொன்னாங்க.. உனக்கு திறமை இருந்தா நீயும் அவங்கள மாதிரி தொழில் பண்ணி பொழைச்சுக்கோன்னு வருவாங்க.. பெரு மூலதனம் இல்லாம இங்க என்னா மயிற புடுங்க முடியும்னு முடியாதுன்னு தெரிஞ்சுக்க மறுபடியும் மார்க்ஸ் தான் உதவுவாறு!

 சிறு குறு உற்பத்தியாளர்கள் நிலைமை என்ன ஆகிட்டுருக்குன்னு பார்க்கனும்!

எல்லாத்துக்கும் மேல நான் எதுக்கு அடுத்தவங்க உழைப்பை உறிஞ்சு வாழனுங்குறேன்!

 எல்லாத்தையும் பொதுவுல வை! எல்லாரும் சேர்ந்து உழைப்போம்! எல்லாத்தையும் பொதுவா பிரிச்சுப்போம்! இதுதான் மானுட நீதி… உண்மையான சமூக நீதி… மக்களாட்சி..

 மார்க்சியம் படிங்க.. மக்களாட்சி, சமூக நீதி, ஜனநாயகம், மனித உரிமைன்னு மூதலாளித்துவத்துக்கு வெண்சாமரம் வீசிக்கிட்டே, விச ஊசி ஏத்துற உள்ளூர், வெளியூர், சர்வதேச பேராசிரியர்கள் கிட்ட எச்சரிக்கையா இருங்க! அம்புட்டுதேன்!

 ஒரு உதாரணத்துக்கு இந்த கட்டுரை.. நேரம் கிடைக்கும் போது தமிழ்ல மொழிபெயர்க்கிறேன்’ 🙂

 https://newrepublic.com/article/117673/piketty-read-marx-doesnt-make-him-marx?fbclid=IwAR20mbC4Dp_tFEYz_E5ljuSKdEhTZ5ilDdoaadnpL57waVVBVQbv4vy6t7U

 உழைப்புச் சுரண்டலையும், மூலதனத்தையும் ஒழிப்போம்! படிநிலைகளை ஒழிப்போம். உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம்! அதற்காக மார்க்சியத்தை, கம்யூனிஸ்ட் அரசியலை (விமர்சனம் இருந்தாலும் அதை விவாதித்தபடியே) உயர்த்திப் பிடிப்போம் 🙂


மேலே உள்ள பதிவைப் படித்த பின் இந்த கட்டுரையை படித்து தெளிவு பெறலாம் 🙂

https://saavinudhadugal.blogspot.com/2018/11/blog-post.html?fbclid=IwAR0VJdPBjLxVN8gvfePb-2aVgi8lf-Z0vdrAmgpiBUFR5oaF79wm-D1MZ_E
மார்க்ஸின் மேற்சொன்ன அந்த விளக்கத்தை வைத்து நாம் ‘பொருளாதார அமைப்பு’ எனும் பதத்தை கவனிக்க வேண்டும். ’உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்’ என்பதை ‘உண்மை அடித்தளம்’ என்று குறிப்பிட்டு அவர் அதை ‘பொருளாதார அமைப்பின்’ அடித்தளம் என்கிறார்.

 

No comments:

Post a Comment