Showing posts with label இராமாயணம். Show all posts
Showing posts with label இராமாயணம். Show all posts

Jul 13, 2019

இராம காதை – ஒரு விமர்சனப் பார்வை




128: இராம காதை – ஒரு விமர்சனப் பார்வை
கொங்கனி-ஆங்கில நடைமுறை கலைக்களஞ்சிய அகராதி
ஆசிரியர் – பண்டரிநாத் புவநேத்திர ஜனார்த்தன்
சென்னைப் பல்கலைக் கழக, பகுப்பாய்வு வேதியல் துறை ஒய்வு பெற்ற பேராசியர்,தலைவர்.
1999 அச்சிடப்பட்டது

1.  இராமன், விஷ்ணுவின் அவதாரம்:- விஷ்ணுவின் அவதாரங்களில், இராமன், கிருஷ்ணன் ஆகிய இரு அவதாரங்கள் பிரதானப்பட்டுள்ளது. அவதாரம் என்றால் வம்சாவளியாக வாரிசு அல்லது வானிலிருந்து இறங்கி வந்தவர் என்று பொருள்கள் உண்டு. அந்த பின்னணியில், விஷ்ணுவாகப்பட்டவர் வைகுண்டத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தவர். ஆனால் அவர் இறங்கிவந்ததை கண்டவர் எவருமில்லை. வின்வெளி வீர்ர்கள் தங்கள் கண்களாலோ அல்லது சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் வாயிலாகவேனும் யாராவது அவரைக் கண்டதாக ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வைகுண்டம் என்பது வானத்தில் இருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும். தன்னுடைய தேவலோகத்தை விட்டு விஷ்ணு ஏன் இந்த சாதாரண உலகிற்கு வரவேண்டும்? எப்போது அதற்கான தேவை ஏற்பட்டது? இதற்கான விடையை அவரே கீதையில் அத்தியாயம் IV S1-7 இல் கூறுகிறார்:

யதா யதா ஹி தர்மஸ்ய …. = அதாவது எப்போதெல்லாம் தர்மம் வீழ்த்தப்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ, ஓ! அர்ஜுனா அப்போது நான் இந்த பூமியில் பிறப்பெடுப்பேன். இதில் கிருஷ்ண பகவான், “பிறப்பெடுப்பேன்” என்று சொல்வதாவது பொருளுடையது, ஆனால் புராணங்களோ “இறங்கி வந்தார்” என்று குழப்புகின்றன. வான்வெளியிலிருந்து இறங்குதல் அல்லது அவதாரமெடுத்தல் என்பது இறங்கி வருவது என்பது மேலிருந்து கீழே வருவது அல்லது தரையிறக்கப்படுவது என்றும் பொருளாகும். ஆனால், மாயாஜாலக் கதைகளைக் கேட்டு குதூகலமடையும் மக்கள் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கேள்விகள் எழவில்லை. ஆனால் நவீன காலத்தில் புராணக் கட்டுக் கதைகளுக்கு ஆதாரமேதுமில்லை என்னும் புரிதல் உண்டாகிவிட்டது.

என்ன கதைகள் சொன்னாலும், ஒரு அவதாரமென்பது பிறப்பதில்லை, உருவாக்கப்படுவது. தாமரை மொட்டு போன்ற கண்கள், முட்டியைத் தொடுமளவு நீளமான கைகள் (ஆஜானபாகு) கையில் சங்கு, சங்கிரம் (ரேகை) போன்ற ‘சாமுத்ரிகா’ இலட்சனங்கள் இருக்கும் ஒரு சிறுவனை கவனமாக தேர்ந்தெடுத்து ஒரு அசாதாரண மனிதன் போல் நடந்துகொள்ளும் வகையில் ஒரு குருவின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறார். இதற்காக அந்த சிறுவனுக்கு இறுமாப்பு ஊட்டி வளர்க்கப்படுகிறது. இறுதியில் அவர் தன்னை ஒரு மாபெரும் அவதார புருஷனாக நம்பத் தொடங்குகிறார். புதிய இலாமாவை (திபெத்து) தேர்ந்தெடுப்பதை விட இது சற்று கடினமான பணிதான்.

இராமனின் விஷயத்திலோ, ஆயத்தமாக அப்படி ஒரு சிறுவன் கிடைக்கவில்லை. ஆகவே அதர்வ சடங்குகளை நன்கு அறிந்திருக்கும் வேத விற்பண்ணர்களை தேர்ந்தெடுத்து புத்ர காமேஸ்டி (ஆண் குழந்தை வேண்டி செய்யப்படும் யாகம் – மொ.ர்) யாகம் நடத்த வேண்டியிருந்தது. சட்டப்படி இராமனின் தந்தை தசரதன் எனினும், ருஷ்ய சிருங்கனே அவனை பெற்ற தந்தையாக இருக்கக் கூடும். இராமன் அவதாரமாக உருவாக்கப்படுகிறான் என்பது வசிஷ்டர், கோதமர், விஸ்வாமித்ரர் மற்றும் இந்திரன் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். தசரதனுக்குக் கூட தெரியாது. அதனால் தான் இராமனையும், இலட்சுமணனையும் விஸ்வாமித்ரனுடன் காட்டிற்கு அனுப்ப தசரதன் தயங்கிய போது, “இராமன் யார் என்பது எனக்கு தெரியும், உனக்கு தெரியாது” என்று அவர் கர்ஜித்தார். அதிர்ந்த தசரதன் உடனே வசிஷ்டரிடம் ஒப்புதல் வாங்கினான்.

இப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராமனுக்கு தன்னுடைய சபதங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய பயிற்சிகளை விஸ்வாமித்ரர் அளித்தார். உடனே அவன் இலட்சியபூர்வ நாயகனாகிறான். மற்றவர்களை விட இப்போது இச்சிறுவன் வேறு மாதிரி நடக்க வேண்டும். அதற்கு அவனுடைய இறுமாப்பை தூண்டிவிடுவதில், குரு முக்கிய பங்கு வகிப்பார். அதனோடு அவன் சில மாயாஜாலங்களைச் செய்ய வேண்டும், ஆகவே, மிதிலைக்கு செல்லும் வழியில், கல்லாகிப் போன அகலிகையை தொட்டு சாப விமோசனம் கொடுத்து அழகிய பெண்ணாக்குகிறான். சிவனின் (பினாகா) வில்லை முறித்தது மற்றொரு சாகசம். சத்திரியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, ஒரு சத்திரியனையும் உயிரோடு விடாத பரசுராமனை தோற்கடித்ததுதான் இராமனின் பெருஞ்சாகசம். அதற்கடுத்து ககாசுரனை (இந்திரனின் மகன்) வென்றது. இதெல்லாம் இராமனை பெருமைக்குரியவனாக்கியது. இப்படியாக தன்னுடைய சிந்தனை, வீர தீர செயல்கள் மூலம் ஒரு மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்தினால் அதற்குப் பெயர் மேம்படுத்துதலே அன்றி அவதாரமில்லை (இறங்குதல் அல்லது தரையிரக்கம் இல்லை).

பாரத கண்ட்த்தில் ஆரிய இராஜ்ஜியத்தை பரப்பி, நிலைநாட்டுவதும், ஆரியர்களை பாதுகாப்பதும் தான் அவதார புருஷனுக்கான கடமை. அதாவது ஆரிய தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை ஒழித்தல். கூர்மதியுடன் ஒருவர் புராணங்களை ஆய்வு செய்தால், “ஆரியரால்லாதாரின் தர்மத்தை” ஒழித்தால் ஒழிய ஆரிய தர்மத்தைக் காக்க இயலாது என்பது தெளிவாகும். ஆரியரல்லாத (அநாரிய) என்றால், ஆரிய குலத்தைச் சாராதவர்கள் என்று பொருள், அதாவது ஆதிவாசிகள், பழங்குடிகள் என்றாகிறது. வேளாளர்களான ஆரியர்கள் மற்றும் பழங்குடிகளின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்திருந்தது, ஆகவே அவர்களிடையே கடுமையான மோதலும் நிலவியது. யாகம் என்னும் பெயரில் ஆரியர்கள் காடுகளை தீயிட்டு கொளுத்தி அழித்தனர். தங்களுடைய வாழ்விடங்கள் அந்நியர்களால் அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு யார்தான் அமைதியாக இருப்பார்கள்? மூட்டப்பட்ட தீயை அணைக்க தண்ணீர் ஊற்றினால், அது அதர்மாகிவிடுகிறது. ஆரியர்களின் யாகத்தை குலைக்க அவர்கள் யாக குண்டத்தில் இரத்தத்தை ஊற்றினார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. இப்படியாக ஆரியரல்லாத பழங்குடிகளுக்கு தீங்கு இழைக்காமல் ஓர் அவதார புருஷனால் ஆரியர்களுக்கு எந்த நன்மையும் செய்ய இயலவில்லை. “கடவுளானவர் தன்னுடைய படைப்பில் ஒவ்வொரு குழந்தையையும் நேசிக்கிறார்” என்னும் பழமொழி பொய்யாகிறது. ஆனால் ஆரிய புராணங்களோ விஷ்ணு கடவுளர்கள் அல்லது ஆரியர்களிடம் பாகுபாடு பார்க்கிறார் என்கின்றன. சரி, தர்மம் – அதர்மம் என்னும் இந்த மோதலில், எந்த சூழல் இராம அவதாரத்தை உண்டாக்கியது? சில காரணங்கள் பின்வருமாறு:

1.  பழங்குடிகள் பிரதானமாக விந்திய மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அதில் வானரர்கள், இராட்சசர்கள் ஆகிய பழங்குடிகள் பெரும்பான்மையினர். வானரர்களை (காட்டுவாசிகள்) வால்மீகி இராமாயணத்தில் வானரங்கள் (நீள வால் குரங்கு) என்று சித்தரித்தார். தக்‌ஷின கண்டத்திற்கு (தக்காணம்) பயணித்த ஆரியர்கள், பழங்குடிகள் மத்தியில் பெண்களை வேட்டையாடத் தொடங்கினர். வானரர்கள் இதனை எவ்வித எதிர்ப்புமின்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். இராட்சசர்கள் எதிர்த்தனர். ஆகவே ஆரியர்கள் இராட்சசர்கள் குறித்து அவதூறுகளை பரப்பினர் . மறுபுரம், வானரர்களை விஷ்ணுவின் படைப்பு என்று புகழ்ந்து, இராவணனை (சுரா சர்வே ஜயரேன் பூமாஒ வானர ரூபினா சஹாயம் கர்த்தும் மே இராவண நிக்ரஹே – ஸ்ரீ இராமோதந்தம்) எதிர்ப்பதற்கு ஏற்ற கூட்டணியை உருவாக்க திறம்பட வேலை செய்தனர்.

2.  இராட்சசர்களோ ஒழுங்கற்ற வகையில் வரவிக் கிடந்த இனமாகும். தொடக்கத்தில் ஆரியர்கள் அவர்களுக்குள் ஊடுறுவ முடிந்தது. அப்போதுதான் அவர்கள் இனத்தில் மானமும், விவேகமும் நிறைந்த ஒரு இராட்சசன் உதய சூரியன் போல் உதயமானான். அவன் தான் இராவணன். தன் கொடையின் கீழ் அந்த இனத்தை ஒருங்கிணைத்து தனயர்கள், நாகர்கள் மற்றும் இந்திரனை தோற்கடித்தான். இராட்சசர்களிடமிருந்து ஆரியர்கள் அபகரித்த நிலங்களையெல்லாம் மீட்டான். குபேரனிடமிருந்து இலங்கையை மீட்டான். வணிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் தடங்கள் பல இலங்கையில் இருந்தன. ஆரிய விரிவாதிக்கத்திற்கு இடைஞ்சலாக இருந்ததால் இராவணனின் இருப்பு அவர்களுக்கு அதர்மமானது.

3. ததாகி என்பவள் சக்திவாய்ந்த இராட்சசி. அவள் இராவணனின் உறவினள். அகத்திய முனிவர் தன் ஆசிரமத்தை ததாக வனத்தில் அமைத்தார். அப்போதுதான் வில்வித்தை பிரபலமாகி வந்தது. அவர் அதில் வித்தகர். கற்கள் மற்றும் மரங்களின் கிளைகள் கொண்டு சண்டியிட்டு வந்த வானரர்கள் மற்றும் இராட்சசர்களால் நீண்ட தூரம் பாயும் இரும்பாலான ஆரியர்களின் அம்புகளை எதிர்கொள்ள இயலவில்லை. அகத்தியரும் அவரது சீடர்களும் ஆசிரமத்தின் அருகில் வரும் இராட்சசர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் இரவு ததாகை ஆசிரமத்திற்கு திடீர் விஜயம் செய்து, அகத்தியரை கைது செய்தாள். அகத்தியரின் சகோதரன் புலத்சிய பிரம்மனின் கண் முன்னே அகத்தியர் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாது கடுஞ்சினம் கொண்ட பிரம்மன், இராட்சசர்களின் பௌலத்ஸய இனத்தையே அழித்தொழிப்பேன் என்று சபதம் பூண்டான்.

4. தான்யர்கள், நாகர்கள் அடங்கிய பெரும் படையுடன் இராவணன் இருந்தான். அவனது இலங்கை இராஜ்ஜியத்திற்கு போகும் வழிகளில் நிறைய ரிஷிகளின் ஆசிரமங்கள் இருந்தன. அதில் ஒருவர் இராஜ ரிஷி குஸத்வஜ ஜனகர். மிதிலையின் சிரத்வஜ ஜனகரின் அண்ணன். அகலிகைக்கும் இந்திரனுக்கும் பிறந்தவள் வேதவதி. சட்டப்படி அவளுடைய தந்தையான கோதமர் வேதவதியை தன்னுடன் வைத்துக்கொள்வதை அவமானமாகக் கருதினார். எனவே குஸத்வஜர் வேதவதியை தத்தெடுத்துக் கொண்டார். 16 வயதில் வேதவதி பேரழகியாக வளர்ந்து நின்றாள். எனவே பல இராட்சச இளைஞர்கள் அவளை பெண் கேட்டு குஸத்வஜரை அனுகினர். தன்னை விட்டு வேதவதி சென்றுவிட்டால் தனிமையில் துன்புற வேண்டுமே என்ற சுயநலம் காரணமாக தன் மகளை விஷ்ணுவிற்கு மட்டுமே திருமணம் செய்து கொடுப்பேன் என்று அந்த முதியவர் சொல்லி வந்தார். தன்னை வீட்டிலேயே அடைத்துவைக்கவே இந்த திட்டம் என்பது அப்பெண்ணுக்கும் தெரியும். ஆசிரமத்தை சுற்றி வலம் செல்லும் இராவணனை அவள் அடிக்கடி பார்ப்பாள். தன்னுடைய பலத்தால் இராவணன் அப்போது புகழ்மிக்கவனாக இருந்தான். இராவனேஸ்வரன் என்று அவனை எல்லோரும் கொண்டாடினர். அவன் தான் விஷ்ணுவிற்கு பதிலானவன் என்று வேதவதி பலமுறை எண்ணினாள். ஒருநால் அவர்களின் கண்கள் நான்கும் சந்தித்தன. சில நாட்களில் அவர்கள் நெருங்கி பழகத் தொடங்கினர். வேதவதிக்கு இராவணனின் வீரமும், புகழும் பிடித்திருந்தது. எனவே கந்தர்வ முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனே கோரமாஸ்ரம்மும், குஸத்வஜ ஆசிரமமும் கோபத்தாலும், சாபத்தாலும் நிறைந்தது; இராவண குலத்தை அக்குலத்தின் சொந்த கரு கொண்டே அழித்திடுவதாக கோதமர் சபதம் பூண்டார். சில மாதங்களில் குழந்தையை தூக்கிக் கொண்டு சதாநந்த கோதமி மிதிலையில் ஓர் வனத்தில் கிடத்திச் சென்றாள். அக்குழந்தையை சிரத்வஜ ஜனகர் கண்டெடுத்தார். இதுதான் சீதையின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்த இரகசியம். ஆனால் அவள் பூமா தேவியின் மகள் என்று இட்டுகட்டினர். வேதவதியை இராவணன் திருமணம் செய்தது பெரும் அதர்மம், ஏனென்றால், இராட்சச குலம் கீழ் வர்க்கம் (சாதி – மொ.ர்) எனவே இராவணன் தண்டனைக்குரியவன், கொல்லப்பட வேண்டியவன்.

5. திபெத்தின் வம்சாவளி மன்னன் இராவணன். அப்பொது அது திவிஸ்தபா என்று அழைக்கப்பட்டது. அநேகமாக அவன் அண்டை நாடுகள் பலவற்றையும் வென்றிருந்தான். இந்திரனின் அமராவதி மட்டுமே எஞ்சியது. போதிய முன் தயாரிப்புகள் இன்றி, அதிலும், இந்திரன் இத்தகைய தாக்குதலை எதிர்பார்த்து ஏற்கனவே படைகளை தயார் நிலையில் வைத்திருந்தான் என்றரியாது அமராவதி மீது போர் தொடுத்தான். தோல்வியின் விளைவாக இராவணன் பல நாட்கள் சோகத்தில் மூழ்கினான். மேகநாதன் தன் தந்தையின் இன்னலைக் காண முடியாது, மின்னல் வேக நடவடிக்கை எடுத்து, அமராவதி நகரத்தை துவம்சம் செய்தான். இந்திரனை கையும், காலும் கட்டி இழுத்துவந்து இராவணனின் காலில் கிடத்தினான். எல்லை வாயிற்கதவில் கட்டப்பட்டான், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனௌம் இந்திரனை ஏளனம் செய்தனர், கடவுளர்களின் அரசனை நையாண்டி செய்தனர்.  புலஸ்தைய பிரம்மனின் வேண்டுகளுக்குப் பிறகு, அதுவும் தனக்கு இந்திரஜித் (இந்திரனை வென்றவன்) என்று பட்டமளித்தப் பின்னரே இந்திரனை விடுவிக்க மேகநாதன் ஒப்புக்கொண்டான். இதனால் வன்மம் கொண்ட இந்திரன் என்ன விலை கொடுத்தேனும் இராவணனை பழிதீர்க்க கங்கணம் கட்டினான்.

இப்படியாக, இந்திரன், அகத்தியன், விஸ்வாமித்ரன், குஸத்வஜன், கோதமன், வைஸ்ரவணன் இன்னும் சிலரின் கோபங்களுக்கு இராவணன் ஆளானதாலேயே, அவனைக் கொல்வதற்கு இவர்கள் கூட்டணியில் இராமாவதாரம் உருவானது. அதுமட்டுமா, ஒவ்வொரு அவதார புருஷர்களின் உருவாக்கத்திற்குப் பின்னரும் தேவரிஷி நாரதன் (பண்டையக் கால நடமாடும் செய்தித் தாள்) தான் இருக்கிறான் என்பது பெரும்பாலருக்குத் தெரியாது. ஹிரண்யகசிபுவைக் கொண்ற வராஹ யாகத்திற்கு அவனே காரணம். மஹாபலியை ஏமாற்றிய உபேந்திரனின் தோற்றத்திற்குப் பின்னிருப்பவன் அவனே. அதேபோல் இராமனின் விஷயத்தில் நாரதன் செய்தது என்ன? தன்னுடைய சீடனான வால்மீகியிடம் ஒரு கதைக் கருவைக் கொடுத்தான். அவர் தன்னுடைய கவித் திறனால் அதனை ஒரு விரிவான நாடகமாக வடித்தார். இராமன் பிறக்கும் முன்பே இந்த திரைக்கதை உருவாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து இராமாயணம் என்பது அந்த திரைக்கதையின் அரங்கேற்றம் மட்டுமே.

தொடரும்….


Dec 14, 2018

இராமாயணம் – மார்க்சியப் பெண்ணிய மறுகதையாடல்




ரங்கநாயகம்மாவின் இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் என்னும் நூல் இராம இராஜ்ஜியத்தை சாதியவாத, நிலவுடைமை முறையிலான ஆணாதிக்க சமூகம் என்றுரைக்கிறது.

இந்நூலை படித்த பின்னர் அல்லது ஒரு சில வரிகளைப் படித்ததுமே கூட ஒழுக்கவாதிகள் இதை கொளுத்திவிட துடிப்பார்கள். அவர்களால் காகிதங்களை ரிக்க முடியுமே ஒழிய சிந்தனைகளையல்ல…”

என்கிறார் மார்க்சிய எழுத்தாளரான ரங்கநாயகம்மா. இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் என்னும் தன்னுடைய நூல் குறித்துதான் இவ்வாறு கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்துள்ளார். ஆனால் இராமாயணத்திற்கும் கார்ல் மார்க்ஸின் மார்க்சியத்திற்கும் என்ன தொடர்பு? இந்நூலைப் படிக்கும்ஒழுக்கவாதிகள்ஏன் இதை ரிக்குமளவுக்கு சினம் கொள்வார்கள்? ரங்கநாயகம்மா இந்நூலில் அந்தளவுக்கு இராம இராஜ்ஜியத்தை கூறு போட்டிருக்கிறார்.

பொதுவான கருத்தின்படி, இராம இராஜ்ஜியம் என்பது ஒழுக்கத்தின் உச்சம், அதுவே நல்லாட்சிக்கான அளவுகோல். ஆகவே நாம் மீண்டும் அந்த உன்னத காலத்திற்கே செல்ல வேண்டும். காந்தியும் கூட இந்த எண்ணத்தைக் கொண்டிருந்தார்:

“… கடந்த கால இராம இராஜ்ஜியம் என்பது சந்தேகத்திற்கிடமின்றி ஓர் உண்மையான ஜனநாயக ஆட்சி. சராசரி மனிதனுக்குக் கூட தாமதமின்றி, பொருள் செலவின்றி துரிதமாக நீதி கிடைத்துவிடும்.”

ஆனால் ரங்கநாயகம்மாவிற்கோ இராம இராஜ்ஜியமானது நாம் அடைய விரும்பும் மேன்மையான ஒழுக்கத்தை கொண்டிருக்கவில்லை. பணக்கார வர்க்கத்தின் நலன்களுக்காக ஆட்சி புரிந்தகொடுங்கோல்ர்களானதசரதன், இராமன், இராவணன் போன்ற மன்னர்களின் ஆட்சியானது ஏற்றதாழ்வுகள் நிறைந்த ஆபத்தான ஆட்சி என்று எழுதுகிறார் ரங்கநாயகம்மா.
மார்க்ஸைப் பொறுத்தவரை, வர்க்கம் என்பது உற்பத்திச் சாதனங்களை உடைமையாக கொண்டிருக்கும் முதலாளிகள் கூட்டமும், அந்த சொத்துடைமை வர்க்கத்திற்காக உழைத்து உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்பாளர்கள் என்னும் இரண்டு முரண்பட்ட பிரிவினர் மற்றும் அவர்களுக்கிடையிலான பாகுபாடுகளாகும். இதன் அடிப்படையில் ரங்கநாயகம்மாவைப் பொறுத்தவரை இராம இராஜ்ஜியம் என்பது நிலபுலன்கள், மாட மாளிகைகள், தோட்டங்கள், குதிரைகள், மாடுகள், ஆநிரைப் பண்ணைகள், தங்கம், வெள்ளி மற்றும் இதர பொக்கிஷங்களையெல்லாம் அளப்பரியதாகக் கொண்டிருந்த செல்வந்தர் வர்க்கத்தினை ஆதிக்க சமூகமாகக் கொண்டிருந்த சமூகத்தின் இராஜ்ஜியமாகும். நாட்டை ஆண்ட மன்னனுக்கு உகந்த வகையில் சமூகத்தைப் பராமரிக்க உழைப்பது தான் உழைக்கும் வர்க்கத்தின் கடமை. அத்தகைய சமூகத்தில் ஏழ்மை, அடிமைத்தனம், விபச்சாரம், நிலப்பிரபுத்துவம், ஏழை விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டிப் பிழைத்தல் என்னும் வர்க்க அமைப்போடு சாதிய ஒழுங்குமுறையும் நிலவியது. அதோடு பெண்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை. பல்வேறு தடுப்பரண் அமைப்புகளின் வாயிலாக பெண்கள் முற்றிலுமாக வீடிற்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

இராம இராஜ்ஜிய பண்பாடென்பது ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டிய பண்பாடாகும். அதனால் தான் இராமாயணத்தை தங்கள் மதக் கொள்கையாக தழுவிக்கொண்டவர்களுக்கு அதன் மீதான விமரசன நூல் என்பது ரிக்குமளவுக்கு சினமூட்டக்கூடியது.

இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் 1994 இல் முதல் முதலில் பதிப்பிக்கப்பட்டது. 1975, 1976 இல் இரண்டு தொகுதிகள் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்டன. பின்னர் ஆந்திராவில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் பி.ஆர். பாபுஜி, ஆர். வெங்கடேஸ்வர ராவ், ஆரி சீதாராமய்யா மற்றும் சி. பத்மஜா ஆகிய நால்வரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

வால்மீகி இராமாயணத்தின் சமஸ்கிரத மூல காலவரிசைப்படியே இந்நூலும் எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் மற்றும் உத்ர காண்டம் என ஏழு காண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு காண்டமும் கடவுளென மன்னன் இராமனின் வாழ்வை வெவ்வேறு காலகட்டங்களாக விளக்குகின்றன. ‘இராமாயணம்: ஒரு விஷ விருட்சம்நூல் 700 பக்கங்களைக் கொண்ட நூலாகும். 16 நீண்ட கதைகள் மற்றும் ஒவ்வொரு துணைக் கதைக்கும் மற்றொன்றிற்கும் தொடர்புடைய பதினொருஇணைக்கதைகளையும், விமர்சனத்திற்கு ஆதாரமாக மூல சர்க்கத்தை அல்லது யாப்புகளை ஆதாரமாகக் கொண்ட 600 அடிக்குறிப்புகளையும் கொண்டதாகும்.

சொத்துடைமை வர்க்கத்தின் செல்வக் குவிப்பு (உழைக்கும் வர்க்கத்தின் அடிபணிதல் அந்த சொத்துகளில் இருந்து செல்வத்தை தோற்றுவித்தாலும்) பற்றியதே மார்க்சிய சிந்தனை. ஒட்டுமொத்த நூலிலும், விரிவான அடிக்குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள் வழி நடக்கும் உரையாடல்கள் மற்றும் தரவுகளை கவனமாக முன்வைத்து அக்காலத்தில் நிலவிய பண்பாட்டை ஆய்வு செய்கிறார் ரங்கநாயகம்மா. உதாரணமாக, இராமனின் பட்டாபிஷேகம் குறித்து தசரத மன்னன் குழம்பியிருந்த தருவாயில் அவரை சந்திக்க வந்த வசிஷ்ட முனிவர் கேட்கிறார்:

எல்லாம் நலம்தானே? ஏதேனும் புதிய தேசங்களைக் கைப்பற்றினாயா? உன்னுடைய எதிரிகளையெல்லாம் வென்றுவிட்டாயா? […] உன் குத்தகைதாரர்கள் அனைவரும் உனக்கு அடிபணிந்து நடக்கின்றனரா? – பால காண்டம், சர்க்கம் 19, ஸ்லோகம் 45”
இராம இராஜ்ஜியத்தில் (ஒவ்வொரு காலகட்டத்திலும்மொ.ர்) வர்க்க ஒழுங்குமுறையை கண்டிப்பான முறையில் கட்டிக்காக்கும் மத மற்றும் அரசியல் பிணைப்பும் நிலவியது. சாதியக் கலப்பைத் தடுப்பதும், அடிமையுடைமையை ஊக்குவிப்பதும், பெண்களைஅந்தப்புரத்தில்வைத்துக் காக்கும் சட்டங்களை இயற்றுவதும், நாத்திகர்களை துன்புறுத்துவதும், அரச வழிபாடு என்னும் அளவுக்கு மன்னர்களை துதிபாடுதலுமாக அந்த ஒழுங்குமுறை கட்டிக்காக்கப்பட்டது.

மன்னர்களுக்கான கடமை மதங்களால் வரையறுக்கப்பட்டு, வர்க்கப் படிநிலையில் அவர்கள் உச்சத்தில் வைக்கப்பட்டார்கள். இராமனின் விசயத்தில், அவனை கடவுளாக்கி வழிபட்டனர். தசரதனுக்கு இந்த மகத்துவம் கிடைக்கவில்லை. அயோத்தியக் காண்டத்தில் வால்மீகி எழுதுகிறார்:

மன்னன் இல்லாத ஒரு நாட்டில் மேகங்கள் சூழ்வதில்லை. மழை பெய்வதில்லை. பயிர்கள் வளர்வதில்லை. வணிகம் நடைபெறுவதில்லை. பயணங்கள் நடப்பதில்லை. மனைவிகளும், பிள்ளைகளும் கட்டுப்படுவதில்லை. அரச தண்டனையில்லையென்றால் நாத்திகர்கள் கலகம் செய்வார்கள். பிராமணர்கள் சடங்கு சம்பிராதாயங்களை மீறுவார்கள். மன்னன் இல்லையெனில் அராஜகம் (anarchy) பெருகிவிடும்அயோத்திய காண்டம், சர்க்கம் 66, ஸ்லோகம் 47”

இராமன் காட்டிற்கு நாடு கடத்தப்பட்ட போது பரதன் அவர்களை சந்திக்க சித்திரக் கூடம் செல்கிறான். இராஜ்ஜியம் குறித்து சகோதரர்கள் அளவலாவுகின்றனர். மக்கள் நலன் குறித்து இராமன் ஏதும் கேட்கவில்லை. அதைவிடுத்து வணிகர்களின் நலன் குறித்து விசாரிக்கிறான். “ஓர் அரசனானவன் அனைவரையும் காக்க வேண்டும், குறிப்பாக வணிகர்களை.” (அயோத்தியா காண்டம் சர்க்கம் 100, ஸ்லோகம் 47&48) [1]. அதுமட்டுமா,  உழைக்கும் வர்க்கத்திற்கு அதிக ஓய்வு (நாட்கள்) கொடுத்துவிடாதே பரதா, அவர்கள் இன்பத்தில் மூழ்கிவிட்டால் வேலைகள் பாதிக்கப்படும்என்றான் (அயோத்தியா காண்டம், சர்க்கம் 100, ஸ்லோகம் 54) [2].

இவ்வாறாக இராம இராஜ்ஜியம் என்பது நிலவுடைமை முறையில், நிலப்பிரபுக்களால் நிர்வகிக்கப்பட்ட இராஜாங்கமாகும். ஏழை விவசாயிகள் தங்கள் விளைச்சலின் பெரும்பகுதியை மன்னர்களுக்கும், அவர்களின் படைகளுக்கும் கொடுத்தே வாழ வேண்டிய நிலைமை. வர்க்க அமைப்பும், சாதியமைப்பும் பிணைந்த ஒரு சமூகப் படிநிலையானது ஏழைகளை வாட்டியது. மதமானது சாதியக் கலப்பை தடுத்தது, மன்னர்கள் அதை நிலைத்திருக்கச் செய்தனர்.

பிராமணர்களை, பிராமணிய வாழ்க்கை முறையை உயரிய பீடத்தில் வைத்துப் போற்றுவதும் மன்னனின் கடமையாக வகுக்கப்பட்டது. ஒரு நாள் தசரதன் வேட்டைக்குச் சென்றபோது, அஜாக்கிரதையான அவனுடைய அம்பெய்தலால் ஒரு முனிவரின் மகனான கரனனை தாக்கிக் கொன்றான். கொல்லப்பட்ட மகனே அரசனுக்கு எப்படி ஆறுதல் சொல்கிறான் என்று எழுதுகிறார் ரங்கநாயகம்மா: “கவலைப்படாதீர்கள் மன்னா ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் உங்களைச் சாராது, ஏனென்றால் நான் ஒரு சூத்திரப் பெண்ணிற்கும், வைசிய ஆணிற்கும் பிறந்தவன் தான்

சாதியமைப்பானது அன்றாட வாழ்வில் மிகவும் வலிமையுடன் தாக்கம் செலுத்தியது. அது, மேல்நிலையில் உள்ள சாதிகளின் பண்புகளும், மதிப்பீடுகளுமே சிறந்தது என்று கீழ்நிலையில் தள்ளப்பட்ட சாதிகள் நினைக்குமளவுக்கு உட்செறிக்கப்பட்டது. மதத்தைக் கட்டிக்காக்கும் பிராமணர்கள், முனிவர்கள், பூசாரிகள் ஆகியோர் மன்னர்களுடன் கூடிக் குலாவினர். பதிலுக்கு மன்னர்கள் பிராமணர்களுக்கும், வணிகர்களுக்கும் பாதுகாவலர்களாக இருந்தார்கள். போர் மற்றும் இராணுவக் கட்டாய சேவைகளின் மூலமாக சத்ரிய உணர்வைக் கட்டிக்காதார்கள். தாழ்த்தப்பட்ட சூத்திரர்கள் மேல்நிலைக்கு முன்னேற முடியாத வகையில் தடுக்கப்பட்டனர். தலைமுறை தலைமுறைகளாக அவர்கள் சொத்தோ செல்வமோ இல்லாத வர்க்கங்களாக நிலைத்திருந்தனர்.

இராமன் தான தர்மங்களைச் செய்தான் என்பது உண்மையே, இருப்பினும், அதிலும் பிராமணர்களுக்கே முன்னுரிமை (அயோத்திய காண்டம், சர்க்கம் 32, ஸ்லோகம் 45) [1] ஏனென்றால் அது புண்ணியம், அது தெய்வீகப் பலன்களைத் தரக்கூடியது என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது. நிலவுடைமை சமூகங்களும், முதலாளித்துவ சமூகங்களும் தான தர்மத்தை ஒரு புண்ணிய செயலாக கருதுகின்றன. ஒரு சமத்துவமான சமூகத்தில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக யாரும் யாருடைய தயையையும் கொடையையும் எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலை இருக்காது; மாறாக உரிமைகளின் அடிப்படையிலான ஏற்பாடுகளே நிலவும்.

ஆர்வமூட்டும் வகையில் அடுத்துவந்த காலங்களில் இராமாயணக் கதை பெண்கள் பலராலும் மறுகதையாடல் செய்யப்பட்டுள்ளது. சந்த்ரபதி இராமாயணமானது சீதையின் கண்ணோட்டத்தில் அவளுக்கு நிகழ்ந்த அநீதிகளைப் பேசுகிறது. அதில் இராமன் “ஒரு குழப்பவாதி, பலவீனமானவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில், மொல்லா என்னும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் ஒருவர் பிராமணக் கவிகளுக்கு சவால் விடும் வகையில் இராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து செவ்வியல் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார். அதன் மூலம் அந்த புராணக் கதைகளின் மீது இருந்து வந்த ஆதிக்க சாதி ஆண் மைய அதிகாரத்தை தகர்த்தார். அதேபோல் சம்ஹித ஆர்னியின் சீதா இராமாயணம் பட்டுவா சுருள் பட ஓவியர் மொய்னா சித்ரகர் என்பவரால் படக்கதையாக சொல்லப்பட்டது. அதில் சீதை தன்னுடைய பிறப்பு முதல் திருமணம் வரை, கடத்தப்பட்டது முதல் திரும்பி வந்தது வரை, அதன் பின்னர் கைவிடப்பட்டு குழந்தைப் பெற்றது வரையிலான கதை ஓவியங்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

மார்க்சியப் பெண்ணியவாதியான ரங்கநாயகம்மா பிராமணிய ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துவதோடு, இராமாயணமானது அடிமைகளும், விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும், பெண்களும் அடங்கி இருக்கச் செய்ய ஆளும் வர்க்க எஜமானர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டினை கட்டிக்காக்கும் வகையில் அதனை பிரச்சாரம் செய்கிறது என்று கூறுகிறார்.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்க கருத்தியல்களே ஆளும் கருத்தியல்களாக இருக்கின்றன” என்று மார்க்ஸும் எங்கல்ஸும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதினார்கள். “சுதந்திரமானவனும், அடிமையும், உயர்குடியும், சாமானியரும், நிலப்பிரபுவும் அடிமையும், பட்டரை முதலாளியும் தொழிலாளியும்” எதிர் எதிராக இருக்கினறனர்; அவர்கள் வர்க்க உணர்வால் பிரிந்து முரண்பட்டு நிற்கினர்னர். மிகப் பெரிய இந்த சமூக ஏற்றத்தாழ்வு இராமாயணத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இராமாயணத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் மறுகதையாடல் செய்வதானது இங்கு சலசலப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால் அவரது கடுமையான ஆய்வு அத்தகையோருக்குத் தேவையான விடையை அளிக்கவல்லது.

ஆங்கிலத்தில்: லாவண்யா ஷன்போக் அரவிந்த்
தமிழாக்கம்: கொற்றவை