Dec 7, 2022

ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு ...

ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு:

நீ எப்படி அந்த படத்துல  நடிச்ச

இந்த படத்தோட போஸ்டர ஷேர் பண்ற

மாலுக்கு போய் காஸ்ட்லி ஷாப்பிங் பண்றியே

(இவைங்க தான் கவுண்டர்ல பில் பண்ணாய்ங்க)

எப்படி அந்த ”blah blah blah”

மார்க்ஸ் மனசு வருத்தப்படுவாராம்!

மார்க்ஸைப் படிச்சிருந்தா இப்படி பொறணி பேச மாட்டீங்க! கேக்குற எவனாச்சும் கம்யூனிஸ்டான்னா அதுவும் இல்ல! கேக்குறவைங்க என்ன வேலை செய்றானுங்கன்னு பார்த்தா அவனுங்களும் ஒண்ணு அரசு நிறுவனத்துல இருப்பாய்ங்க, முதலாளித்துவ நிறுவனம் அல்லது சுய தொழில் செய்வாங்க, அல்லது NGO, அரசியல் கட்சி ;) 

”அந்த படத்துல  ஹீரோயின அப்டி காட்டுனாங்க.. நீ எப்படி அதை ஷேர் பண்ற”... டேய் மாய்ங்காய்களா.. அந்த நாயகன்  lustfullaa ஒரு பொண்ணை பார்க்குறான்னா. அவன் கண்ணோட்டத்துல அப்படித்தான காட்டுவாங்க! அதுக்கும் மேல படத்தை  பத்தி விமர்சனம் இருந்தா பொதுவெளில எழுது! அடுத்தவங்க படிச்சு தெரிஞ்சுக்கட்டும்!

நான் நடிச்ச படத்துல என் நடிப்பை பத்தி வேணா விமர்சிக்கலாம்! grrrrrr

கூலிக்கு வேலை செய்றவங்க கிட்ட நீ ஏன் அந்த வேலைக்கு போன  இந்த வேலைக்கு போனன்னு கேக்குற உரிமை எந்த பயலுக்கும் இல்ல! (மார்க்சியம் தரும் தெளவுப்போய்!). 

ஏற்கனவே பதில் சொல்லிருக்கேன்.. அரசாங்கத்துல வேலை பார்த்துக்கிட்டே தான் தொழிற்சங்கம் அமைச்சு போராடுறோம்! முதலாளிகிட்ட கூலி வாங்கிட்டே தான் முதலாளித்துவத்துக்கு எதிரா போராடுறோம்!

நான் மட்டும் தனியா ஒரு கிரகத்த கட்டிக்கிட்டு வாழமுடியாது! கம்யூனிஸ்டுங்குறதால எவனும் எனக்கு ஓசில எதும் தரப் போறதும் கிடையாது.. சொல்லப்போனா கம்யூனிஸ்ட்னு இவ்ளோ தீவிரமா பேசுறதால வேலை கிடைக்காம போறதுதான் மிச்சம்! அப்ப கிடைக்குற வேலைய செஞ்சுதாண்டா பொழைக்கனும் என் சிப்ஸு! அதுலையும் சீக்காகிப்படுத்தா ஆஸ்பத்ரி செலவு மட்டும் அம்புட்டு ஆகுது! கடன் வேற கழுத்தை நெறிக்குது! 

 மார்க்சியம் படிச்சிருந்தா கூலி உழைப்புனா என்ன, கூலி உழைப்பாளர்களின் உரிமைனா என்ன, மார்க்சியத்தின் அடைப்படை என்ன, அமைப்புக்குள்ள இருந்துக்கிட்டே போராடுறதுன்னா என்ன … சமூக அமைப்புனா என்ன.. புரட்சினா என்ன.. அதுக்கு முன் நிபந்தனைனா என்னன்னு தெரியும்!

தனிமனித சாகசத்துக்கும் மார்க்சியத்துக்கும் சம்பந்தம் இல்ல ஓய்! இருக்குற சமூக அமைப்புல (உற்பத்தி முறை, உழைப்பு உறவு) இதுல எல்லாம் என்ன பிரச்சினை, அதிகார ஒடுக்குமுறைனா என்ன, சுரண்டல்னா என்னன்னு மக்களுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லி… அநீதிய அவங்களுக்கு புரியவச்சு… மக்கள ஒண்ணு திரட்டி உற்பத்தி முறைய மாத்த களம் இறங்க வைக்குறதுதான் ஒரு கம்யூனிஸ்டோட வேலை! அதை செய்றதுக்கு தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கு…. அந்த சித்தாந்த பரப்புரை செய்றதும் மற்றும் கம்யூனிஸ்ட்களோட ஏன் சேரனும்னு சொல்ற ஒரு சின்ன வேலைய நான் எடுத்துக்கிட்டேன்… அதுவும் எனக்கு அதுல தீர்வு இருக்குன்னு தோணுறதால… நான் அதை உயர்த்திப் பிடிக்குறேன்.  தங்களுடைய வாழ்க்கைய, உயிரை பணையம் வச்சு களத்துல உழைக்குற கம்யூனிஸ்டுங்க பணியளவுக்கு இது இல்லைன்னு நானே சொல்லுவேன்! ஆனா அவங்க செய்ற களப்பணிக்கு பின்னாடி இருக்குற நண்மையை புரிய வச்சு, ஆதரவு திரட்டித் தர முடியுமான்னு பார்க்குறேன்! காவி வேட்டி கட்டிக்கிட்டு ’பஞ்சப் பராரி’ மாதிரி திரியுறவனெல்லாம் உண்மையா சமூகத்துக்கு உழைக்கிறாங்கன்னு நினைக்குறதே மதவாத பார்வை! அதனால தான் அவைங்க காவிய உடுத்திக்கிட்டு ஊரை கொள்ளையடிச்சுட்டு திரியுறானுங்க! மார்க்சியங்குறது அது இல்ல!  It is not self-deprivation! 

லாபத்தை அடிப்படையாகக் கொண்ட  உழைப்புச் சுரண்டல் கூடிய தனியுடமை உற்பத்தி முறை ஒழிக்கப்படனும், பொதுவுடைமை உற்பத்தி முறைய நிறுவனும் அதுதான் எல்லா பிரச்சினைக்கும் தீர்வுன்னு பேசுறதுக்காக … துறவு வாழ்க்கை வாழ சொல்லி மார்க்ஸ் எங்கல்ஸ் சொல்லல…. போய் மார்க்சியம் படிங்க! புள்ள குட்டிங்கள படிக்க வைங்க!

”ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு” என்று கேட்கும் எல்லார் கிட்டையும் எவ்வளவு அறச்சீற்றம்! Political correctness! ப்பா என்ன ஒரு சித்தாந்த தெளிவு! நாளைய விடுதலை இவங்களால தான் சாத்தியப்படப் போகுது! அவ்ளோ தூய ஆத்மாக்கள்! நமக்கு காவி கட்டிப் பார்க்காம ஓய மாட்டாங்க!

என் திமிர் தான் என்னை வாழ வைக்குதுன்னு சொல்லிருக்கேன்ல!

என் உழைப்புல நான் வாழ்றேங்குற திமிரும் அதில் அடக்கம்!

உழைப்புத் தத்துவத்த மதவாத ஒழுக்கக் கோட்பாடா நீங்க வேணா பாருங்க! எனக்கு அந்த அவஸ்தை இல்ல!


No comments:

Post a Comment