Jan 26, 2023

சங்கிகளின் உளறல்களுக்கு பதில் 1

 


1.    கலைஞர் இப்படி பேசியது உண்மையா என்று எனக்கு தெரியாது! உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது தவறு! ஆணாதிக்கப் பேச்சுதான். அரசியலில் எதிரிகளை தாக்குகிறேன் என்று ஆணாதிக்கத் திமிரோடு பேசறதுதான கெத்துன்னு எல்லா ”மைய” கட்சிகளும் நினைக்குறாங்க! முதலில் நான் திமுக ஆளுமில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளவும்!

 

திமுக ஆதரவு என்பது தற்போதைய மதவாத ஃபாசிச பா.ஜ.க. / அதிமுக கூட்டணிக்கு எதிராக தேவைப்படும் சமூக ஜனநாயக ஆதரவு என்னும் அளவில்தான்! இதுதான் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை! கூட்டணிக்கு காரணமும் அதுவே!

 

2.    கலைஞர் மட்டுமில்லை கார்ல் மார்க்ஸே தவறாக பேசினால் தவறு என்று விமர்சிக்கும் #துணிவும் #நேர்மையும் எங்க கிட்ட இருக்கு! உங்க தலைவர் அண்னாமலை தொடங்கி மோடிஜியின் தவறுகளை விமர்சிக்கும் துணிவும் நேர்மையும் உங்க கிட்ட இருக்கா?  


        மேற்சொன்ன துணுக்கை பற்றி விசாரித்த போது அது பொய் செய்தி என்றும் இந்திரா காந்திக்கு அன்று அடிபடவே இல்லை என்றும் தோழர் அருண் தெளிவுபடுத்தியுள்ளார்.


 


Now Sanghis have to provide the proof

nn

       பெரியார், அம்பேத்கர் போதாமைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சில அணுகுமுறைகள் குறித்த விமர்சனப் பேச்செல்லாம் பார்க்குறதில்ல போல! என்னை தற்காக்கும் பேச்சல்ல இது! மார்க்சியம் என்பதே விமர்சனத்தின் மூலம் இயங்குவதுதான்! அதுபற்றி தெரியாமல் வடை சுடக் கூடாது!

 அவ்வளவு அரசியல் நேர்மை உள்ளவங்க நீங்கன்னா முதல்ல உங்க தலைவரை விமர்சனம் பண்ணி எழுதுங்க!

 

3.    காயத்ரி மேடம் சக்தி யாத்திரை போய் நீதி கேக்குற அளவுக்குல்ல இருக்கு உங்க கட்சில பெண்களோட நிலைமை! ஐஸ்வர்யா ஒரு பெண்ணாக அவர் கருத்தை கூறினால் அதற்கு எப்பேற்பட்ட ஆபாச பேச்சுகளை பேசுகிறீர்கள்? அவரது தொழிலை கூத்தாடி, நடிக்குற வேலைய மட்டும் பாரு, எங்களுக்கு ஆலோசனை சொல்லாத என்று பேசுமளவுக்கு உங்கள் ஆதரவாளர்கள் திமிர் பிடித்து இருக்கிறார்கள் என்றால், உங்கள் கட்சி நடிகர் நடிகைகளை ஏன் பிரச்சாரத்திற்கு அழைக்கிறது?  ஸ்மிருதி இரானி நடிகை தானே? அவர் ஏன் பதிவியில் இருக்கிறார் என்று கேட்கலாமா?

 4.    ஒரு குறிப்பிட்ட தொழிலை கேவலமாக பேசுவதென்பது பார்ப்பனிய புத்தி! அந்த வழி வந்தவர்கள் அப்படித்தானே இருப்பீர்கள்!

 5.    அடுத்ததாக, மசூதில பெண்களை உள்ள விடல இதை ஏன் கேக்க மாட்றீங்க? இதுவும அரதப் பழசான கேள்வி! பல முறை பதில் சொல்லியாச்சு இந்துமத வெறியர்களே!

 ஜனநாயக சக்திகளின் முதல் எதிர்ப்பென்பது அந்தந்த நாட்டின் ஆளும் வர்க்க அதிகார மையங்களை நோக்கித்தான்! இந்த நாட்டில் அது இந்து மதம், பார்ப்பனியம் என்று இருக்கிறது! இஸ்லாமிய, கிறித்தவ, யூத நாடுகளில் அந்தந்த மதங்கள் அதிகார்த்தில் இருக்கையில், அந்தந்த மதங்களில் ‘பிறந்ததாக’ இருப்பவர்கள் முதலில் தங்கள் மத அதிகாரத்தை தான் கேள்வி கேட்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்! ஏனென்றால் அந்தந்த நாடுகளில் ஆட்சியில் இருக்கும் மதங்களைத் தவிர மற்றவை ‘சிறுபான்மையினர்’ அவர்கள் மீதான ஒடுக்குமுறையை கேள்வி கேட்பது தான் சமூக நீதி!

 ஆளும் வர்க்க ஒடுக்குமுறையை எதிர்ப்பதே அறம்!  

 அதேவேளை மதம் என்று வரும்போது ஒரு மதத்தினர் இன்னோர் மதத்தை தாக்கிப் பேசுவது மதக் கலவரத்திற்கே வழிவகுக்கும். சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், சமூக நீதி அரசியல் ரீதியாகவும் அதை செய்வது தவறு மட்டுமின்றி… சமத்துவ அரசியல் புரிதலற்ற ஆர்வக்கோளாறு நடுநிலைவாதம்!  கடவுள் மறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக மதம் என்பதே ஒடுக்குமுறை கருவிதான் என்று பேசுவதையும் சேர்த்து படிங்க!

 அந்தந்த மதங்களில் நிலவும் ஒடுக்குமுறையை அந்தந்த மதத்தினரே எதிர்த்து வருவதை படிப்பதில்லையா நீங்கள்? நாட்டு நடப்பு தெரியாதா?

 

சட்டை போடாம வெளிய வருவேன், ஜட்டி போடாம வெளிய வருவேன் என்று வாய் சவடால் விடும் நேரம்…. ஹிஜாப் தொடங்கி கல்வி கற்க தடை என்பது வரை இஸ்லாமியப் பெண்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து தேடிப் படிங்கள்!  கார் ஓட்டக் கூடாது என்று சவுதியில் நிலவிய தடைக்கு எதிராக நடந்த போராட்டங்கள் குறித்து படிக்கவும்!

 

அதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள் குறித்துப் படிக்கவும்.

 

சமூக ஜனநாயகம் என்பது மானுட நேசம்! ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்பதே நீதி! மத வெறி, சாதி வெறி, ஆணாதிக்க வெறி, பண வெறி, அதிகார வெறி உள்ளவர்களுக்கு அவை தம் கட்சியை, அரசியலை இருப்பை வளர்க்கத் தேவைப்படும் “கொள்கைகள்”!

 

உன் வீட்ல குப்பைய வச்சிருக்கியேன்னு கேட்டா! பக்கத்து வீடு கூட தான் நாறுதுன்னு பேச எதுக்கு அறிவு?

கம்யூனிஸ்ட் அமைப்புகள்ல விமர்சனம், சுய விமர்சனம் என்னும் அணுகுமுறை, ஜனநாயகம் எல்லாம் உண்டு! கட்சித் தலைவராக இருந்தாலும் உட்கட்சி கூட்டங்களில் / அல்லது கட்சியில் இல்லை என்றால் தோழர் நீங்கள் இந்த விசயத்தில் இப்படி பேசியது தவறு என்று தோழமையோடு விவாதிக்கும் ஜனநாயக போக்கு உண்டு! சக கம்யூனிஸ்ட் அமைப்பு குறித்து இன்னொரு கம்யுனிஸ்ட் அமைப்பு எழுதும் விமர்சன நூல்களும் உண்டு! மீண்டும் கேட்கிறேன் உங்கள் தலைவரை, அமைப்பை விமர்சிக்கும் துணிவு உங்க கிட்ட இருக்கா? 

விமர்சிக்கும் அளவுக்கு எந்த தவறுமே உங்கள் தரப்பில் இல்லை என்பீர்கள் எனில் இனிமேல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்குமில்லை! 

உங்கள் அரசியல் பிழைப்பிற்காக நீங்கள் உளறுவதை உளறுங்கள், காலமும் மக்களும் தீர்ப்பளிப்பார்கள்! அறமற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! 

 


No comments:

Post a Comment