Showing posts with label samas. Show all posts
Showing posts with label samas. Show all posts

Jul 1, 2020

சமஸ்திருத்த வாதங்கள்.. எச்சரிக்கை!


தமிழ் இந்துவில் அரச வன்முறையின் ஊற்றுக்கண் என்று சமஸ் எழுதியிருக்கும் கட்டுரை ஆகப்பெரிய வன்முறையாக இருக்கிறது. வார்த்தை ஜாலங்களுடன் கூடிய ‘நல்லது சொல்றேன் கேட்டுக்கோ’ வகையிலான ’கருத்து’ சொல்லி ஓர் அவியலை சமைத்திருக்கிறார்.

நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் என்னும் புரிதலே பரவாயில்லை என்னும் அளவுக்கு இருக்கிறது இவரது நல்ல அரசு கெட்ட அரசு வியாக்கியானம்.

ஆயுதப்படை அல்லது காவல் துறை வழியே நாம் காணும் வன்முறைகள் யாவுமே அரசின் வன்முறைதான் என்று சரியாகத் தொடங்கி பின்னர் அதை ஜனநாயக விழுமியங்கள் குறைந்த பிரச்சினையாகக் காண்கிறார் (விழுமியம் விழுமியம்…ஸ்ஸ்ஸ்). “சமத்துவமும், அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவமும், ஜனநாயக விழுமியங்களும் குறைந்த சமூகங்களில் தன்னுடைய அரசாங்கம் வழியே அந்த வன்முறையை அடிக்கடி வெளிப்படுத்துவதாக இருக்கிறது” என்கிறார்! எது? அரசு? சரி அரசு என்றால் என்ன? அதை மட்டும் கேட்டுவிடாதீர்கள்… அரசு என்றால் மக்களைக் காக்க இருக்கும் ஓர் அமைப்பு, அதில் “விழுமியங்கள்” பிரச்சினையால் வன்முறை நிலவுகிறது! அவ்வளவுதான்!

இடதுசாரி புரிதல்களையெல்லாம் முன் வைத்து எஸ்.என்.நாகராஜனிடம் மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்த ஒருவருக்கு அரசு என்றால் என்னவென்று தெரியாதா?

இதற்கு அடுத்தகட்ட பத்தி உச்சபட்ச நகைச்சுவை! “அரசின் எந்தத் துறையைக் காட்டிலும் காவல்துறை அதிகமான வன்முறையை நாட்டு மக்களின் மீது வெளிப்படுத்துவதற்கான முக்கியமான காரணம், ஒரு அரசின் கருத்தியல் சாய்வுகளைக் காவல் துறைதான் மிக அதிகமான அளவில் பிரதிபலிக்கிறது. ஆக, ஒரு கருத்தை எப்படி உள்வாங்குவது என்ற பயிற்சி அரசின் எல்லா அங்கங்களுக்கும், முக்கியமாகக் காவல் துறைக்கு அத்தியாவசியமானதாகிறது”.

என்ன மாதிரியான வார்த்தை ஜாலம் இது? வன்முறை என்பது கருத்தியல் பிரச்சினை, கருத்தை உள்வாங்கிக் கொள்ளும் பிரச்சினை? போலிக் கட்டுரை என்பார்களே, அதற்கு சிறந்த உதாரணம் இக்கட்டுரை! கீ வேர்ட்ஸ்களைப் பயன்படுத்தி மக்களைக் குழப்பி, இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று புரியாமல், அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்கும்… அதான் ஜனநாயகம்… ஜனநாயகம் என்னும் புளி கரைச்சல் இருக்கிறதே என்று நினைக்க வைப்பதோடு இத்தகையோரின் “அறம்” முடிந்துவிடுகிறது!.

அடுத்ததாக அப்படியே கொஞ்சம் காலனியம், ஏகாதிபத்தியம்னு ரெண்டு கருவேப்பிலை, கொத்தமல்லியை தூவியாச்சு “காலனியக் காலகட்டத்தில் ஏகாதிபத்திய அரசின் அடக்குமுறையையும் வன்முறையையும் குழைத்து அடிமை விழுமியங்களால் கட்டப்பட்ட இந்திய அரசாங்க அமைப்பானது சுதந்திரத்துக்குப் பிறகு முற்றிலுமாகக் கலைத்துப்போடப்பட்டு, தாராள மதிப்பீடுகளால் மறுவுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகார வேட்கையோடு ஆட்சியில் அமர்ந்த நம்முடைய அரசியலர்களுக்கு ஏற்கெனவே இருந்த அமைப்பே வசதியானதாக இருந்ததன் விளைவாக அது நடக்காமலேயே போனது. இனி தொடர் சீர்திருத்தங்கள் வழியிலேனும் அது நடக்க வேண்டும்.”

அந்த இறுதி வரியில் இருக்கிறது அவர் சமைக்கும் குழம்பு எத்தகையது என்று! ”சீர்திருத்தம்” அதாவது ஒரு அரசின் கருத்தியல் சாய்வினை சரியாக உள்வாங்கிக் கொள்ளும் “சீர்திருத்தம்”.. நிலவும் அரசின் கருத்தியல் சாய்வு என்ன?

அரசு பற்றிய மார்க்ஸ், எங்க்ல்ஸ், லெனினின் மேற்கோளை எடுத்துப் போட்டிருந்தாலே போதும் மக்களுக்குப் புரிந்துவிடும். இவ்வளவு நீள “ரெசிப்பி” எதற்கு என்று தெரியவில்லை.

வர்க்கப் பகைமைகளின் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு என்பதை மக்களுக்கு உணர்த்துவதே இப்போதைய உடனடி தேவை.

சொத்துடைமை வர்க்கத்தின் நலன் காக்க உருவானதே அரசு. (நிலவுடைமை, முதலாளித்துவ அரசுகள்). அதனால் தான் அடக்குமுறை, வன்முறை இதெல்லாம் அதன் உள்ளார்ந்த பண்புகளாக இருக்கின்றன. எளிய மொழியில் சொல்வதெனில், பணக்காரப் பயபுள்ளைகளோட வளர்ச்சிக்கு உழைச்சுக் கொட்டுற கூட்டத்தை அடக்கி வைக்க உருவானது தான் அரசு. அதன் “அங்கங்கள்” அனைத்தும் அதற்காக உருவானவையே. எனவே ஒரு முதலாளித்துவ ஆட்சியின் ”விழுமியங்கள்” என்பது அடக்குமுறையும் சுரண்டலும் மட்டுமே. அப்படியெனில் பயிற்சி, உளவியல் ஆலோசனைகள், சீரிதிருத்தங்களை யாருக்கு செய்ய வேண்டும்? மீண்டும் மீண்டும் வன்முறை நிறைந்த உற்பத்தி முறையான முதலாளித்துவத்திற்கு ஜல்லி அடிக்கும் வேலையைத் தவிர சமஸ் போன்ற நவ-தாராளவாதிகள் வேறு எதுவும் செய்வதில்லை.

அவருடைய கட்டுரையே அதற்கு சாட்சி!   “தாராள மதிப்பீடுகளால் மறுவுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும்.” மேற்சொன்ன பத்தியில் ஏற்கனவே இருந்த அமைப்பு சரியில்லை என்று சொல்ல முடிபவரால் சீர்திருத்தத்தையே தீர்வாக முன்வைக்க முடிகிறது. முன்மாதிரியான சமூகம் என்று சோசலிச சமூகம், பொதுவுடைமை, மக்கள் அதிகாரம் என்பதெல்லாம் “ஜாலத்திற்காக”க் கூட குறிப்பிட முடியாத அளவுக்கு இவருக்கு ஒவ்வாமை!

அவியலில் அடுத்த கலவை சாதி, வர்க்கம் என்னும் மஞ்சள் பொடி! இந்திய சமூகத்தின் ஆகப் பெரும் கேடு சாதி என்பதிலும், அது ஒவ்வொரு துறையிலும் அதிகாரத்திற்கு எப்படி துணை நிற்கிறது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த சாதியை சீர்திருத்தத்தால் ஒழித்துவிட முடியுமா என்ன? நவதாராளவாதிகளுக்கு வியாக்கியானம் மட்டுமே எத்தனை இன்பத்தை தருகிறது! கற்பனாவாதிகள்!

அடுத்து ஒரு சொல் வருகிறது! ’அரசியல் வர்க்கம்’ இது என்னப்பா அரசியல் வர்க்கம்! பின்நவீனத்துவ ஊறுகாயா? போகிற போக்கில் வர்க்கம் என்னும் சொல்லை “வற்றலாகப் பிழிந்துவிட்டால்” கடமை முடிந்தது!

அரசியல் வர்க்கம் என்று ஒரு வர்க்கம் இருக்கிறதா? என்னமாதிரியான சித்து விளையாட்டு இது? ஏன் தனியுடைமை வர்க்கத்தின் அரசியல் என்று இவரைப் போன்றவர்களால் எழுத இயலவில்லை? சமூக நடவடிக்கைகளில், குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத் தேவைக்கான பொருள் உற்பத்தி நடவடிக்கைகளின் விளைவாக உண்டான பிரிவுகள் வர்க்கம். அது பிரதானமாக இரண்டு வகைப்பட்டது, உழைக்கும் வர்க்கம், உழைக்காமல் மூலதனத்தைக் கொண்டு மக்களை, வளங்களை சுரண்டிப் பிழைக்கும் வர்க்கம். உழைக்காத வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உருவானது அரசு என்னும் போது அரசியல் வர்க்கம் என்றால் என்ன?

கம்யூனிசத்தை ஏற்க வேண்டியதில்லை, ஆனால் வர்க்கம் என்பதை அதன் சரியான பொருளில் விளக்க வேண்டும், அல்லவா?

வர்க்கம் என்னும் சொல்லை பொருளற்ற வகையில் நீர்த்துப் போகச் செய்யும் இது போன்ற அறிவுஜீவித்தனங்களை கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை எனில், மக்கள் எல்லாவற்றையும் நிர்வாகக் கோளாறாக, நல்லவர் கெட்டவர் பிரச்சினையாகவே காண நேரிடும்.

அடுத்து அமெரிக்கா, ஏகாதிபத்தியம், ஜார்ஃப்ளாய்ட் போராட்டப் பாடங்கள் என்று உலா செல்லும் கட்டுரை கடைசியில் மீண்டும் “கருத்தில்” வந்து நிற்கிறது! இவர் வெறும் கருத்தை உண்டே வாழ்பவர் போல! பொருள் தேவையின்றி கருத்தால் மட்டுமே வாழ முடிவதென்பது பெரும் கொடுப்பினை!

“நெகிழ்வான அரசியல் தலைவர்கள் அமைப்பை மேலும் ஜனநாயகமயமாக்குகின்றனர். ஆனால், பலவீனமான தலைவர்கள் காவல் துறைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்குவதன் வாயிலாகத் தங்களைப் பலமானவர்களாகக் காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள்…”


சுரண்டல் வர்க்கத்திற்கான அரசு அமைப்பில் யாரந்த நெகிழ்வான அரசியல் தலைவர்களாக இருக்கக் கூடும்!

சரி அதைக் கூட விடுங்கள், அடுத்ததாக “கருத்து வேறுபாடு என்பது தேச விரோதம் அல்ல. மாறாக, தேசத்தை இப்படியும் பார்க்கலாம் என்பதற்கான இன்னொரு செயல்திட்டம். போராட்டச் செயல்பாடுகள் பயங்கரவாதம் அல்ல. அவைதான் சமூகத்தின் குரலற்றவர்களின் குரலை ஆட்சியாளர்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன. ஒரு கருத்தை எப்படிப் பார்ப்பது? இதைக் கற்பிப்பதுதான் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், மிக முக்கியமாக காவல் துறையினருக்கும் கற்பிக்க வேண்டிய அடிப்படையான சீர்திருத்தம் என்று நினைக்கிறேன்.” என்கிறார்.

நிலவும் அமைப்பின் தன்மை, அதன் ஆபத்து, அது என்ன மாதிரியான அமைப்பாக மாற வேண்டும் என்று சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி இடதுசாரிகள் குரல் எழுப்பி வருகிறார்களே. அத்தகைய குரல்கள் முன்வைக்கும் சோசலிச சமூகமே நமக்கான மாற்று என்று சொல்ல இயலாத இவர்கள் எதைக் காக்க இப்படி கயிறு திரிக்கிறார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

கருத்து கருத்து, கருத்திற்கு மதிப்பு கொடுப்பதே ஜனநாயகம்… கருத்தை மதிக்கக் கற்றுக்கொண்டால் இந்த இந்து இந்திய திருநாட்டில் ஜனநாயகமும், சமத்துவமும் மலர்ந்துவிடும். குறிப்பாக ஏழ்மை, வறுமை, சாதியக் கொடுமைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள், மதச் சிறுபான்மையினர் மீதான பாகுபாடு எல்லாம் ஒழிந்துவிடும்… மக்களே வாருங்கள் கருத்து மாலை உருட்டி ஜபம் செய்வோம்!

“ஒரு குடியரசு நாட்டில் இன்னமும் காவல் துறையானது ஆட்சியாளர்களின் ஏவல் துறையாகவும், மக்களிடமிருந்து இவ்வளவு அந்நியமாகவும் செயல்படுவது தொடர்பில் அவர்கள் வெட்கப்பட வேண்டும். காவல் துறையின் தவறுகளுக்காகவும் சீரமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். சமூகம் ஜனநாயகமாக மாறுவதற்கும் அரசு ஜனநாயகமாக மாறுவதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது...”

காட்டுமிராண்டித்தனமான செல்வக் குவிப்பை காக்க உருவான அரசு ஜனநாயகமாக மாறும் என்று பொய்யானதொரு நம்பிக்கையைக் கொடுக்க ஒரு நெஞ்சுறம் வேண்டும். அரசு தன்னைத்தானே சீர்திருத்திக் கொண்டு காவல்துறையையும் சீர்திருத்தம்… அடடா அதோ அந்த மரத்தில் தான் அந்த ஜனநாயகக் கனி தொங்கிக் கொண்டிருக்கிறது… வாருங்கள் பரித்து உண்போம்! அரசுக்கும் கொஞ்சம் கொடுப்போம். அந்த ஞானக் கனியை உண்டதும் அரசானது மக்கள் ஜனநாயக அரசாக புதுப் பிறவி எடுத்துவிடும்…

“இதையும் மௌனமாகக் கடந்துபோகத் தூண்டும் யத்தனம் அதற்கான உயிரோட்டமான சாட்சியம்” – சமஸ் போன்றவர்கள் இப்படி ஒரு போலியான கட்டுரையை எழுதுவதை விட மௌனமாக கடந்துபோவதே மக்களுக்கும், சமூகத்திற்கும் செய்யும் பேருதவியாக இருக்கும். நன்றி.
 #JusticeforJayarajandBenix #JusticforJayrajandBennicks #JusticeForJayarajandFenix #PoliceBrutality #SathaankulamCase 


Oct 23, 2019

சமஸின் அடி நாக்கிலே நஞ்சும், நுனி நாக்கிலே தேனும்!


இன்றைய இந்து தமிழ் திசையில் அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்என்றொரு கட்டுரையை திருவாளர் #சமஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மயிர் பிளக்கும் வாதங்கள் தேவையில்லைஎன்று சொல்லும் சமஸுக்கு மயிரு மாதிரி கட்டுரை எழுதியிருக்கீங்க என்று தான் தொடங்க வேண்டியுள்ளது…. மன்னிக்கவும்வேறு வழியில்லை! ஏனென்றால் எந்த ஒரு பொருளை பற்றி எழுதுகிறோமோ அது குறித்த ஆழ்ந்த அறிவற்ற ஒருவர் எல்லாம் தெரிந்த மயிருபோல் பேசும் தொனி தான் அந்த கட்டுரையில் உள்ளது.

சமஸுக்கு தமிழ் பற்று வேறு அதிகம் ஆகவே, மயிர் என்பதை அவரும் தவறாக புரிந்து கொள்ள மாட்டார்! தலையிலிருந்து உதிர்ந்த முடிஉயிரற்ற, பயனற்ற முடிக்கு மயிர் என்று பொருள், அல்லவா!

சரி சமஸின் பேராய்வு மிக்க கட்டுரைக்கு வருவோம். பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சங்கரய்யா பேசியதில் தொடங்கி, அவரின் தியாகம், பொதுவுடைமை இயக்கத்தினரின் தியாகம் என்று புகழ்ந்து இறுதியில் சின்னப்புள்ளைங்க கணக்கா சண்டை போட்டுக்காதீங்கப்பா, நியுமராலஜி படி உங்க பேரு சரியில்லைபெயரை மாத்துங்கப்பா என்று நீண்டு நஞ்சைக் கலந்திருக்கிறார். எதன் வழியாக சிரிப்பது என்று தெரியவில்லை!

தயவு செய்து அந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள்…. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! (https://www.hindutamil.in/news/opinion/columns/521597-communist-party-6.html)

இராமச்சந்திர குஹா சொல்லிவிட்டாராம் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை விட சோஷலிஸ்ட் கட்சி என்று வைத்துக்கொள்ளுமாறுஏனென்றால் கம்யூனிஸ்ட்கள் மீது பல்வேறு காரணங்களால் இங்கு ஒவ்வாமை நிலவுகிறது, தவறான புரிதல் நிலவுகிறது!!!! மேலும் கம்யூனிஸ்ட் நாடுகளில் ஜனநாயகம் இல்லையாம்… (ஐயா ஜனநாயகம் என்றால் என்ன, பூர்ஷுவா ஜனநாயகம் என்றால் என்னவென்று விளக்கம் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்)சீன அதிபர் இங்கு வந்தபோது தோழர்என்று குறிப்பிட்டுவிட்டார்களாம்! சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடா இப்படியாக தொடங்கி….

// உலகமயமாக்கல் காலகட்டத்துக்குப் பிந்தைய பொருளாதாரத்தை எப்படி அணுகுவது, மதத்தை எப்படி அணுகுவது, தேசியத்தை எப்படி அணுகுவது, அரசியத்தை எப்படி அணுகுவது இந்த நான்கு விஷயங்களிலுமே இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தினருக்குப் பெரிய தடுமாற்றம் இருக்கிறது. உலகளாவிய வரலாற்று அனுபவங்கள் தரும் சோஷலிஸம்இதற்குத் தீர்வு கொடுக்கலாம். ஏனென்றால், அவரவர் திறனுக்கேற்ற உழைப்பைக் கோரும் கம்யூனிஸம், அவரவர் தேவைக்கேற்ற பலன்களைத் தரச் சொல்கிறது; அவரவர் திறனுக்கேற்ற உழைப்பைக் கோரும் சோஷலிஸமோ அவரவர் உழைப்புக்கு ஏற்ற பலன்களைத் தரச் சொல்கிறது.
அனைத்தையும் பொதுவுடைமையாகக் கருதும் கம்யூனிஸம், தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது; சோஷலிஸமோ பெரும் தொழில் உற்பத்தியை சமூகவுடைமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், தனி நபர்களுக்கான சொத்துரிமையையும் மதிக்கிறது; மக்களுக்கான சமூகக் கடமைகளையும் ஏற்கிறது. மக்களின் மதவுரிமைக்கு வெளியே நிற்கிறது கம்யூனிஸம்; மக்களின் மதவுரிமையை அங்கீகரிக்கிறது சோஷலிஸம்.//

இந்த பத்தியில் தன்னுடைய தாராளவாத, பின் நவீனத்துவ, முதலாளித்துவ மூகமூடியை நமக்கு சிறப்பாக திறந்து காட்டுகிறார்.

கோட்பாட்டு விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்காதீர்கள்சட்டு புட்டுன்னு பேரை மாத்துங்க என்கிறார். நல்ல எண் கணித சோதிடம் பார்ப்பார் போலிருக்கிறது சமஸ்.

இந்தியா என்ற பெயர் இராசியில்லை ஆகவே பாரதம் என்று மாத்திவிடுவோம்…. நமக்கு மோடி பிரச்சினையில்லை பெயர் தான் பிரச்சினை என்று சொல்லாமல் போனாரே!

போதாத குறைக்கு தமிழ் பற்று வேறு, தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் என்று வைத்துவிடுங்கள்ம்ம்ம் சீக்கிரம்! அப்புறம் என்னய்யா பெரிய சர்வதேசியம் பேசுறீங்கநம்ம தமிழ்ல இல்லாததா… “ஆழ வேரூன்றிய தமிழின் ஓருலகவாதம் நல்ல மாற்றுதாரணமாக இருக்க முடியும்.

// அயல்நாடுகளின் சர்வாதிகார வரலாற்றுச் சுமையிலிருந்து நம் நாட்டு பொதுவுடைமை இயக்கத்தினரை இந்தப் பெயர் மாற்றமானது விடுவிப்பதோடு, சமகாலத்தில் இந்திய அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் நான்கு பெரிய சிக்கல்களுக்கும் அது விடை கொடுக்கும்.// பெயரை மாத்துங்கப்பாசீக்கிரம்
ஆக, இங்கு இருக்கும் பொதுவுடைமை இயக்கத்தின் சிக்கல் கட்சிப் பெயரில் தான் உள்ளது. இணையுங்கள் இந்தியத் தன்மை பெறுங்கள் என்கிறார். நடுவுல தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் என்கிறார்…. சீமானே பரவாயில்லை என்று படிக்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. 

ஐயா சமஸ் இந்திய சமூகம், தமிழ் சமூகம், சர்வதேசிய நாடுகள் அனைத்தும் எதிர்கொள்ளும் சிக்கல் சோஷலிசமா, கம்யூனிசமா என்பது அல்ல. (சிப்பு சிப்பா வருதுங்கோ) மார்க்ஸின் மூலதனம் நூலை படிக்காவிட்டாலும் பரவாயில்லைகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையாவது மீண்டும் மீண்டும் படியுங்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் (உலகளவில்) எதிர்கொள்ளும் சிக்கல் என்பது வரலாற்று வளர்ச்சியில் இயங்கியல் ரீதியான விளைவுகளே.. (மன்னியுங்கள்கோட்பாட்டு விளக்கம்).

உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளின் தன்மைகள், வகைமைகளை வரையறுப்பது தொடங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பில் பிரதான செயல்திட்டம் வகுப்பதில் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதாகவெல்லாம் நீளும் ஒரு சித்தாந்தப் போராட்டம் மட்டுமன்று அது நடைமுறையில் நிகழும் மாற்றங்கள், பிரிவினைவாத (என்.ஜி.ஓ மற்றும் உங்களைப் போன்ற தாராளவாத (பட்டை போட்ட, நாமம் போட்ட, கொட்டை போட்ட ) அறிவுஜீவிகள் ஏற்படுத்தும் குழப்பங்கள் என்று ஏகத்துக்கும் சிக்கலின் பட்டியல் நீள்கிறது.

// அனைத்தையும் பொதுவுடைமையாகக் கருதும் கம்யூனிஸம், தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது; சோஷலிஸமோ பெரும் தொழில் உற்பத்தியை சமூகவுடைமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், தனி நபர்களுக்கான சொத்துரிமையையும் மதிக்கிறது; மக்களுக்கான சமூகக் கடமைகளையும் ஏற்கிறது. மக்களின் மதவுரிமைக்கு வெளியே நிற்கிறது கம்யூனிஸம்; மக்களின் மதவுரிமையை அங்கீகரிக்கிறது சோஷலிஸம்.//

ஐயா ராசாஎந்த பள்ளிக் கூடத்துல ஐயா நீங்க கம்யூனிசம் படிச்சீக
சந்தடி சாக்கில் உங்க தனியுடைமை ஆதரவுக்கு ஏன்யா சோஷலிசத்துக்கு புதுச் சாயம் பூசுறீங்க?

ஐயா…. பொதுவுடைமை இயக்கத்தின் இறுதிக் குறிக்கோள் கம்யூனிசமேஇது பொதுவுடைமையாளர்களின் விருப்பம் மட்டுமல்லஉற்பத்தி சக்திகளின் வளர்சிப்போக்கில் இறுதியில் மக்கள் இந்தக் கட்டத்திற்கே செல்வார்கள்ஏனென்றால் அதுவே மேம்பட்ட சமூகமாக முழுவதும் சுதந்திரமான, சமத்துவமான ஒரு சமூகமாக அமையும் என்று தான் மார்க்ஸ் தொடங்கி செங்கொடியின் கீழ் புரட்சிகர ஆட்சியை (சோஷலிசமா, கம்யூனிசமா!) நிறுவிய லெனின், மாவோ, ஸ்டாலின், ஃபிடல், சாவேஸ் என அனைவரும் மனதில் கொண்டு இயங்கியுள்ளனர்.
சோஷலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தை உங்கள் பத்திரிகையின் தலைவர் என். ராம் படித்தாரா? படித்திருந்தால் கண்டிப்பாக அவமானமாக உணர்வார். ஏனென்றால் அவர் நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று நான் நம்புகிறேன்.

ஐயா சமஸ், தனியுடைமையை ஒழித்து, அதாவது உழைப்புச் சுரண்டலை ஒழித்து அதாவது உழைப்புச் சக்தியை விடுவித்து (உற்பத்தி சக்தியை), உற்பத்தி சாதனங்களை தனி நபர்களின் சொத்தாக இருப்பதிலிருந்து விடுவித்து, (இதை மட்டும் ஒப்புக்கவே மாட்டீங்களேஇந்த சமத்துவத்தை தாராளவாத ஜனநாயகசக்திகளால் ஏற்றுக்கொள்ளவே முடியாது)நிலம், வளம் உள்ளிட்ட பூமியின் இயற்கை வளங்களையெல்லாம் தனிநபர் சுரண்டலிலிருந்து விடுவித்து மக்களின் பொதுவுடைமை ஆக்க வேண்டும் என்பதே பொதுவுடைமையாளர்களின் (கம்யூனிஸ்ட் இயக்கங்களின்) இலட்சியம்அதற்காகத் தான் போராடுகிறார்கள். உயிர் தியாகம் செய்கிறார்கள்.

இந்தப் போராட்டப் பாதையில், மக்களை ஒன்று திரட்டுவதில், புரட்சிகர வேலைத் திட்டம் வகுப்பதில், வேலைத் திட்டம் வகுப்பதில், குறிப்பாக இந்திய சமூகத்தில்ம்ம் தமிழ்நாட்டிலும் தான்வர்க்க உணர்வூட்டுவதற்கான வேலைத்திட்டம் வகுப்பதி, இந்திய சமூகம் குறித்த ஆய்வில் சிக்கல்கள், பின்னடைவுகள், தவறுகள் நிலவத்தான் செய்கின்றனஅதிலும் கூட பெரும்பகுதி காரணம் கம்யூனிஸ்ட்கள் வர்க்க அரசியலை, வர்க்க ஆய்வை தெளிவாக முன்வைத்தாலும் உங்களைப் போன்ற அறிவுஜீவிகள்’ (தனிச்சொத்து ஆதரவாளர்களாக இருப்பதால்) அதுவல்ல கம்யூனிசம்இது அயல் நாட்டு சரக்குஉள்நாட்டு பிரச்சினையை சரியா பேசலைமார்க்ஸ் வெளிநாட்டுக்காரரு, வெள்ளையா தாடி வச்சிருந்தாருநம்மாளுக தாடி மயிரு வேற மாதிரி என்று ஏதாவது பேசி, குழப்பி முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதால் இந்திய, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் சற்று கூடுதலான சவாலை எதிர்கொள்கிறார்கள்

அதிலும் வன்முறை வன்முறை, கம்யூனிஸ்டுகளும் சர்வாதிகாரிகள் தானே என்ற உங்களின் பூர்ஷுவா ஜனநாயக வாதம் இருக்கிறதேஐயா உழைப்புச் சுரண்டலை பிரதானமாகக் கொண்ட நிலவுடைமை, முதலாளித்துவ அமைப்பே வன்முறையானது. அது மக்களின் வாழ்வுரிமைகளைப் பரித்துக்கொண்டு நிகழ்த்தும் வன்முறையை பேசுங்கள்ஆயுதப் போராட்டம் மட்டுமே வன்முறையல்லபாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஏன் தேவைப்படுகிறதுஅது சர்வாதிகாரமா அல்லது இதுநாள் வரை நம்மை சுரண்டித் தின்று கொழுத்துத் திரியும் அனகொண்டாக்களை வழிக்குக் கொண்டு வர வேறு வழியின்றி அதை வழிமுறையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளதா என்று போதிய விளக்கங்கள் உள்ளன…. வன்முறையான அமைப்பைத் தகர்த்து ஜனநாயக அமைப்பை நிறுவுவதே கம்யூனிஸ்டுகளின் போராட்டம். அதில் ஆளும் வர்க்க ஓநாய்களை அடக்கவும், அவர்களுக்கு ஏவல் செய்யும் நரிகளை விரட்டவும் சர்வாதிகார ஆட்சி தவிர்க்கவியலாமல் அவசியமாகிறதுஅவ்வளவேமுதலாளிகளும், ஆளும் வர்க்கமும் எந்த எதிர்ப்புமின்றி சுரண்டிச் சேர்த்த தனிச்சொத்துகளை, அதாவது இயற்கை வளங்களை, உற்பத்திச் சாதனங்களை எல்லாம் மக்களாட்சிக்கே கொடுத்துவிட்டால் நாங்கள் ஏனய்யா சர்வாதிகாரம் செலுத்தப் போகிறோம்?

சிபிஎம், சிபிஐ பிளவு, இணைப்பு, ஜோக்கு குறித்து எல்லாம் காலம் காலமாக பேசியாச்சு.. புளித்துப் போன மாவு ஐயா….

பொதுவுடைமை அரசியலுக்கு உண்மையில் யாரேனும் சரியான பங்களிப்பு செய்ய விரும்பினால் இந்திய சமூகம் பற்றிய ஆய்வில் தொடங்கி, முதலாளித்துவ உற்பத்தி முறையை மாற்ற, சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிறுவ, மூலதனத்தின் பிடியில் இருக்கும் உற்பத்திச் சாதனங்களை அபகரிக்க ஏதேனும் உருப்படியான யோசனை சொல்லுங்கள்



சோஷலிசம், கம்யூனிசம்னு புதுசா ஒண்ணை அவுத்து விட்டிருக்கீங்களே ஐயா, மேற்சொன்ன இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டம் நடத்தி (சில வேளைகளில் ஆயுதம் ஏந்தி) உற்பத்திச் சாதனங்களை தொழிலாளர்களின் அதிகாரத்தில் கொண்டு வரும். அதுக்கே கூட சில பல கட்டங்களை தாண்ட வேண்டியிருக்கும். தொழிலாளர்களை உள்ளடக்கிய ஓர் அரசு இயந்திரம் உருவாகும். இது அந்தந்த நாட்டின் (வர்க்கப் பிரிவு, உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகளின் தன்மைக்கு ஏற்ப) தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களையும், அரசியலமைப்பையும், சட்டதிட்டங்களையும், புரட்சிகர நிர்வாகக் கட்டத்தையும் கொண்டிருக்கும். சோஷலிசத்திலும் அரசு இருக்கும். முதலாளித்துவ எச்சங்கள் இருக்கும். அதில் தான் நீங்கள் சொல்லும் தனிச்சொத்தும் சிலரிடம் நீடித்திருக்கும். அதற்காக சோஷலிஸ்ட் அரசு (இயக்கம்) அதை அனுமதிக்கிறது என்று பொருள் இல்லை.

மெல்ல மெல்ல அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படும். கம்யூனிச கட்டத்தில் அரசு உலர்ந்து உதிரும் நிலைமை ஏற்படும். இதுதான் சோஷலிசக் கட்டம், கம்யூனிசக் கட்டத்திற்குமான வேறுபாடு பற்றிய எளிய விளக்கம்.

உங்க சொத்தெல்லாம் புடுங்கிக்குவாங்கப்பாஎன்று மக்களை ஏன் பயமுறுத்துகிறீர்கள். எந்த சொத்தைப் பிடுங்குவார்கள் என்பது தெளிவாக உள்ளதுதயவு செய்து படியுங்கள்

இதை விடுத்துஆ.. ஊன்னா எஸ். என். நாகராஜனை மேற்கோள்காட்டிபேரு சரியில்லை, வாஸ்த்து சரியில்லை, செல்லங்களா வாங்க கை குலுக்கிங்கோங்க ன்னு காமெடி பண்ணாதீங்க பாஸ்நாங்க கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாவோன்னு படிச்சு கம்யூனிஸ்டா இருக்கோம்இயக்கம் நடத்துறோம்அவா, இவா சித்தாந்தமெல்லாம் கம்யூனிசமாகாதுவோய்!

இந்தியக் கம்யூனிஸ்டுகளே ஒன்று சேருங்கள்! சமஸுக்கு மார்க்சிய வகுப்பைத் தொடங்குங்கள்!