Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Sep 15, 2012

மரணிக்காத ஒரு சொல்லைத் தேடி….




சொல்லை விதைப்பதென்பது மரணத்தை அறியச்செய்யாமல் இருப்பதாகும்
மரணத்திடமிருந்து தப்பிக்கவே நான் எழுதுகிறேன்
மரணம் பற்றிய பயத்திலிருந்து என் கவனத்தை திசைதிருப்பவல்லது மரணிக்காத ஒரு சொல்
அச்சொல்லை என் நாவிலிருந்து நான் உச்சரிக்கும் முன்போ அல்லது நடுங்கும் என் விரல்கள் கொண்டு நான் எழுதிவிடும் முன்போ
எவரோ ஒருவர் மரணிக்கிறார்
மரணித்த அவரது உடல் நிச்சயமாக மனித உடலே.
அவரிடமும் ஒரு சொல் இருந்தது
சோற்றுப்பானை கவிழ்த்து வைக்கப்பட்ட இரவன்று அவர் அதை விழுங்கிவிட்டார்
அவர் விழுங்கிய அச்சொல்லின் ஒலி மட்டும் உள்ளது என்னிடம்
இரவு வேளைகளில் சோற்றுப் பானையை உருட்டிச் செல்கிறது அவ்வொலி
கண்விழித்து காணும் வேளையில் வீடெங்கும் பச்சை குத்தப்பட்ட உடல்கள்
இருக்கும் அவ்வொலியை ஒவ்வொரு உடலிலும் திணித்துப் பார்த்தேன் 
உயிர்பெறவில்லை எவ்வுடலும்
உயிற்பிக்கும் ஒரு சொல்லை தேடிக்கொண்டிருக்கிறேன்
சொற்கள் கொல்லும் உடல்களை
சொற்கள் மீட்டுத்தருவதில்லை
தருவதேயில்லை

(இம்மாத புதிய கோடங்கி இதழில் வெளிவந்துள்ளது)

Jan 12, 2011

கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்



குழந்தையின் குரலொன்று கேட்கிறது சில இரவுகளில்
இழப்பின் சாயலைக் கொண்டிருக்கிறது அவ்விரவுகள்
உடுத்தி வருகிறது பிரசவக் கோடுகளை

ஓலத்தின் இசைக் குறிப்பு
தொலைந்து விட்டது
அயர்சியுற்ற கைகளை பார்வைக்கு வைத்திருக்கிறேன்

கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்
தொலைதூரத்தில் புதைந்துபோன கைகளை
மீட்பதற்கில்லை

தும்பிகள் கூட்டமாய் பறந்து போகும் காட்டில்
தொப்புள் கொடியின் வாடை பிடித்து
தப்பித்து செல்கையில்
வனமெங்கும்
அவளது முகம்
அவளது சிரிப்பு
அவளது மழலைச் சொற்கள்

பேய்கள் மூளை நரம்புகளை பங்கிட்டு உண்கிறது
ஆழியின் பெருத்த அலைகள்
முட்டிச் செல்கிறது எலும்புகளை

மரணத்தை பற்றிய அனுபவம் இருக்கவில்ல
பிணங்களின் அறிமுகம் உண்டு