இழப்பின் சாயலைக் கொண்டிருக்கிறது அவ்விரவுகள்
உடுத்தி வருகிறது பிரசவக் கோடுகளை
ஓலத்தின் இசைக் குறிப்பு
தொலைந்து விட்டது
அயர்சியுற்ற கைகளை பார்வைக்கு வைத்திருக்கிறேன்
கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்
தொலைதூரத்தில் புதைந்துபோன கைகளை
மீட்பதற்கில்லை
தும்பிகள் கூட்டமாய் பறந்து போகும் காட்டில்
தொப்புள் கொடியின் வாடை பிடித்து
தப்பித்து செல்கையில்
வனமெங்கும்
அவளது முகம்
அவளது சிரிப்பு
அவளது மழலைச் சொற்கள்
பேய்கள் மூளை நரம்புகளை பங்கிட்டு உண்கிறது
ஆழியின் பெருத்த அலைகள்
முட்டிச் செல்கிறது எலும்புகளை
மரணத்தை பற்றிய அனுபவம் இருக்கவில்ல
பிணங்களின் அறிமுகம் உண்டு
