Showing posts with label அம்பேத்கரும் அவரது தம்மம. Show all posts
Showing posts with label அம்பேத்கரும் அவரது தம்மம. Show all posts

Jun 9, 2021

அம்பேதர் என்ன ஒரு கூட்டத்தின் தனிச் சொத்தா

 அம்பேத்கர் எழுதியதை மேற்கோள்களாக, போஸ்டர்களாக பயன்படுத்திக்கொள்ளக் கூட அவரை தொழுபவருக்கு மட்டுமே உரிமை உண்டு அப்படியிருக்கையில் அவரது சிந்தனைகளை திறனாய்வு செய்வதா! அது மகா பாவம்! அல்ல அல்ல சாதி வெறி! இதுதான் அம்பேத்கரியவாதிகளின் எழுதா விதி.

அம்பேத்கர் எழுதியதில் புரட்சிகரமாக, சாதகமாக உள்ள எழுத்துகள் மட்டுமே இதுவரை எடுத்தாளப்பட்ட நிலையில் அவரது எழுத்துகள் வாயிலாக அவரது மதப் பார்வை மற்றும் பொருளாதாரப் பார்வை எத்தகையது என்பதை ரங்கநாயகம்மா திறனாய்வு செய்தார். வழக்கம் போல் அதை சாதிய அவதூறுகளாலும், வசைகளாலும், மிரட்டல்களாலும் (வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க வேண்டும் என்று அப்போதே ஒருவர் எழுதினார் ). அதனைத் தொடர்ந்து “சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலை நான் தொகுத்தேன், மொழிபெயர்த்தேன். என்னுடைய பதிலுரைகளையும் இணைத்தேன்). ஆனால் அந்நூலை பற்றி அம்பேத்கரியர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை!

ஏனெனில் அதன் தலைப்பில் “அம்பேத்கர்” இல்லை.

அடுத்ததாக, ரங்கநாயகம்மா மறுப்பு நூல் வந்ததாக சொல்லப்பட்டது. வழக்கம் போல் சுயசாதி பற்றிலிருந்தும், அரசியலில் பிழைத்திருக்க வேண்டியும் ரங்கநாயகம்மாவின் சொற்களை திரித்து! அல்லது அவர் இதைத்தான் சொல்ல வருகிறார்! இப்படித்தான் பொருள் கொடுக்கிறார் என்று தங்கள் வசதிக்கேற்ப, தங்கள் “வட்டத்தினரை” ஆசுவாசப்படுத்த முயலும் ஒரு நூல் அது!

இதற்கிடையே அம்பேத்கரை கடவுளாக மாற்றி சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடமே தீர்வுள்ளது என்று அடையாள அரசியல் செய்யும் போக்கிற்கு (இதன் பிரதான நோக்கம் மார்க்சியத்தை ஒழிப்பது, கம்யூனிஸ்டு அரசியலை ஒழிப்பது) - எதிராக அம்பேத்கரது புத்தரும் அவரது தம்மமும் என்னும் நூலை வசுமித்ர எழுதினான். அதை அறிவித்தவுடன் ஒரு கூட்டம் தன் சதி வேலைகளைத் தொடங்கியது. மார்க்சியம் என்றால் என்னவென்றே அறியாத “புலி எதிர்ப்பு போராளி” ஒருவர் களம் இறங்கினார். ரங்கநாயகம்மாவின் அறிவை மட்டமாக பேசியதற்கு எதிர்வினையாக வசுமித்ர ஒரு கேள்வியை வைத்தான்! அதை திரித்து இன்று இந்த நொடிவரை வசுமித்ர அம்பேத்கரை அவதூறாக பேசிவிட்டான் என்று ஒரு கூட்டம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது வசுமித்ர அதற்கு விளக்கமளிக்கிறான்.

அம்பேத்கரின் எழுத்துகளை இப்படி புரிந்து கொள்ளக் கூடாது, அப்படிப் புரிந்துகொள்ளக் கூடாது! இடையிலிருந்து பேசாதீர்கள், முழுவதுமாக படியுங்கள், அந்நூலை அம்பேத்கர் எழுதவே இல்லை, அதை தொகுத்தார்! அது அவருடைய மேற்கோள்! அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதினார்! அவர் எழுதவில்லை! இப்படி வகை வகையாக அம்பேத்கரின் “தவறான” சில வரலாற்று மற்றும் அரசியல் ரீதியான எழுத்துகளுக்கு விளக்கம் கொடுத்தனர்!

இப்போது நாம் விளக்கம் கொடுத்தால் ஒரே ஒரு பதில் தான் வரும் – சாதி வெறி!

யாருக்கு சாதி வெறி என்பதை இனியும் நாங்கள் விளக்க வேண்டியதில்லை!

ஆனால், மேற்சொன்ன சமாளிப்புவாதங்களை நாம் எல்லா மத நூல்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கத் தொடங்கினால் அது எத்தகைய அறிவார்ந்த சூழ்நிலையை இங்கு ஏற்படுத்தும்?

கம்யூனிசத்தைப் பன்றித் தத்துவம் என்றார், மார்க்ஸியம் பற்றி எதிர்மறையாக பேசினார்! தாழ்த்தப்பட்டவர்கள் கம்யூனிசத்தை நாடினால் நாடே அதோகதிதான் என்பார்! ஏன்? ஏனென்றால் அன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பை கண்டுகொள்ளவில்லை! அவர்கள் மேல் இருந்த கோவத்தில் அப்படி பேசினார் என்று மீண்டும் சமாளிப்புவாதம்! அப்படியெனில் மார்க்ஸையும், மார்க்சியத்தையும் ஏன் அவர் மறுக்க வேண்டும்? அது வன்முறைய்ப் பாதை என்று ஏன் முடிவுக்கு வரவேண்டும்? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் உள்ளிட்டோர் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அனைவரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை! ஆனால் மார்க்சியத்தை எதிர்மறையாக சித்தரிக்கையில், குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் அரசியலை மடைமாற்றம் செய்கையில், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை குலைக்க அதை முன்னெடுக்கையில் அதற்கு காரணமாக அமையும் அரசியல் சித்தாந்தத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை உள்ளது.

ஆதாரம் எங்கே ஆதாரம் என்கிறார்களே அம்பேத்கர் மார்க்ஸை விமர்சிக்க எதை ஆதாரமாக கொடுத்துள்ளார்?

எல்லாவற்றுக்கும் மேலாக பொருள்முதல்வாத விஞ்ஞான சித்தாந்தத்தை கருத்துமுதல்வாத (கால் பொருள்முதல்வாத??) சித்தாந்தத்தோடு ஒப்பிட்டு மார்க்சியம் உதவாது பௌத்தமே தீர்வு என்று போதித்து சென்றார். இதை நாம் திறனாய்வு செய்யக் கூடாதா?

அம்பேத்கரது எழுத்துகள் என்ன ஒரு கூட்டத்தின் / சாதியின் தனிச்சொத்தா?

அம்பேத்கர் ஒரு பொருளாதார அறிஞர் என்னும் அடிப்படையிலும் மார்க்சியர்கள் அவரை விமர்சிக்கலாம்! விமர்சிப்போம்!

சாதியத் தலைவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸா புத்தரா என்றோ, மார்க்சியமா பௌத்தமா என்றோ ஆய்வுகள் செய்யவில்லை. சாதி ஒழிப்பிற்கு தீர்வு தம்மிடம் உள்ளது என்றும் சொல்லவில்லை! எனவே நாங்கள் அத்தகைய சாதியத் தலைவர்கள் குறித்து பேசவோ, ஆய்வு செய்யவோ ஒன்றுமே இல்லை! இதுகூட தெரியாத அறிவிலிகள் ஏதோ அறிவுபூர்வமாக கேள்வி எழுப்புவதாக நினைத்துக் கொண்டு “அவரை விமர்சிச்சியா, இவரை விமர்சிச்சியா?” என்று உளறிக்கொண்டிருக்கின்றனர்!

அவர்களது உளறல்களும் வசைகளும் அம்பேத்கருக்கே இழுக்கு சேர்க்கிறது! எங்களது ஆய்வுகள் அல்ல!

வசுமித்ரவின் விளக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்

// ஆண்குறி என்பது ஆபாசமான வார்த்தையல்ல. அது ஆணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ஒரு சொல். அவ்வளவே. ஆண்குறிக்கான வசைச் சொற்கள் என்னவென்று தெரியாதவர்கள் அல்ல நாம். விசயத்திற்கு வருகிறேன்.//

// அம்பேத்கரின் பௌத்தப் புரிதலை முன்வைத்தே அந்தக் கேள்வியை எழுப்பியிருந்தேன். அந்தக் கேள்விக்கான அடிப்படை அவசியமும் இருக்கிறது.

அம்பேத்கரது பௌத்தமானது புத்தரின் ஆண்குறி உள்ளிட்ட அங்க இலட்சணங்களை எப்படிப் பதிவு செய்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாகப் பார்க்கலாம். அதற்கு முன்னதாக சிவனின் ஆண்குறி குறித்து அம்பேத்கரின் வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்.

//

https://www.facebook.com/makalneya/posts/5980320278652594

 

Jun 4, 2021

நான் ஒரு பகவானைப் படைக்கிறேன்.

நான் ஒரு பகவானைப் (இறைத் தூதரை / புனிதாத்மாவை / புரட்சியாளரை) படைக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் (மத நூல்கள்) அடிப்படையில் நானே எழுதுகிறேன் (தொகுக்கிறேன்).

என்ன நோக்கமாக இருக்க முடியும்? - அவர் இப்படியெல்லாம் வாழ்ந்தார்… இந்தந்த கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனவே நான் அவரை என் விடிவெள்ளியாக கருதுகிறேன். அவரின் போதனைகளை விடுதலைத் தத்துவமாக, புரட்சிகர சிந்தனையாக முன் வைக்கிறேன்.என்’ மக்களின் விடுதலைக்கான பாதையாக அதை வழிமொழிகிறேன் என்பது தானே நோக்கமாக இருக்க முடியும்?

நிற்க!

இப்படி நான் தொகுக்கையில் அந்த பகவான் ஏன் துறவறம் எய்தினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது வாய்ப்பில்லை (முற்போக்கானதாக இல்லை) என்று எனக்கு தோன்ற நான் அக்காரணங்களை மாற்றி எழுதி புரட்சிகரமாக மாற்றுகிறேன்!

பின்னர் ஓரிடத்தில் அந்த புனிதாத்மாவின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்த பண்பு நலன்களை எழுதுகிறேன். அப்போது, ” தன் மகன் துறவறம் சென்றால் இராஜ்ஜியத்தை யார் ஆள்வது என்னும் கவலையில் அவரை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்களை அந்தப்புரத்தில் “இறக்கி” அந்த ‘ஆண்’ மகனை மயக்கி ‘சிற்றின்பத்தில்’ ஆழ்துமாறு பணித்தார்” என்று எழுதி… அந்த பெண்களும் மிகுந்த ஈடுபாட்டோட்டு அதனை செய்தனர்…

ஆண்டுக்கணக்கில் இந்த ‘வசிய’ வேட்டை நடந்தது என்று எழுதுகிறேன் (சாரி தொகுக்கிறேன்). எழுதி விட்டு இறுதியில் குலகுருவோ அல்லது யாரோ வந்து கேட்கிறார்கள் “பெண்களை நாடுதல் இயற்கையானது தானே என்கிறார். .அதற்கு அந்த புனிதாத்மா " தாங்கள் பெண்களை நேயத்துடன் அணுக வேண்டும் என்பீர்களாயின் , பண்பான நேயம் பற்றி நானறிவேன்" என்று பதிலடி கொடுத்தார் என்று எழுதி “ஆஹா எப்படிப்பட்ட பண்பாளன்’ இவனல்லவோ ஒழுக்கவாதி! பாருங்கள் இவன் பெண்களை எப்படி மதிக்கிறான் என்றெல்லாம் புகழ்ந்துரைத்து அவரை வரலாற்று நாயகனாக முன்னிறுத்துகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மற்ற மத நூல்களில் உள்ள ஆணாதிக்க நரித்தனங்களை கட்டுடைக்கும் ஒருவர் எனது புனிதாத்மா குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது மேற்சொன்ன வர்ண்ணனைகளைப் படித்து விட்டு அவருக்கு ஒரு கேள்வி எழுகிறது “ஏதேதோ துயரங்களை, அநீதிகளைக் கண்டு பொறுக்க முடியாமல் துறவறம் மேற்கொண்ட அந்த புனிதாத்மா அடிமைப் பெண்களை இப்படி பாலியல் பண்டமாக ஏவியது குறித்து ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை?” சரி அதை “தொகுத்த” எம் தலைவி! ஏன் அதை அந்த கதாப்பாத்திரம் வழியாக போதிக்கவில்லை?

ஆண்டுக்கணக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அமைச்சர் வந்து கேட்கையில் “எனக்கு பண்புடன் நேசிக்கத் தெரியும்” என்கிறாரே? அதற்கும் மேல அந்த பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? இளமை போய்விட்டால் பெண்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதாக வருந்தினார் என்றும் எழுதினால் எப்படி இருக்கும்?

உண்மையில் அந்த புனிதாத்மா சமத்துவவாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணியவாதி / மார்க்சியவாதி எதிர்பார்ப்பார்? குறைந்தபட்சம் அந்நூலை கட்டுடைப்பார்.

ஆணைப் புனிதவானாக காட்டுவதற்காக பெண்களை பாலியல் பண்டமாக்கி நடமாட விட்டு, அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.. ஏனென்றால் என்னுடய ‘நாயகன்’ ஒழுக்கவான். மனதைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் என்று நிறுவும் ஆணாதிக்க மனம் என்று திறனாய்வு செய்யக் கூடாதா?

கண்டிப்பாக முற்போக்கு மனங்கள் இதை வரவேற்கும். ஆஹா என்னவொரு ஆய்வு என்று மெய்சிலிர்க்கும்… அத்தகைய விமர்சனத்தை வைப்பது யார் என்பதைப் பொறுத்து! விமர்சிக்கப்படுபவர் யார் என்பதைப் பொறுத்தும்! 😉

சுயசாதி பற்றுடன் தம் தலைவரை அனுகுபவர்களுக்கு தம் தலைவர் இப்படி தூய்மைவாதப் பார்வையோடு தம் புனிதாத்மாவைப் படைத்திருக்கிறாரே… அதற்குள் இப்படி ஒரு “மதவாத”, “பார்ப்பனியத்திற்கு நிகரான புனிதவாத”, “ஆணாதிக்க” மனம் செயல்பட்டிருக்கிறதா என்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாகத் தான் இருக்கும்… என்ன செய்வது!

கூடுதலாக பெண்கள் அப்படி உலவ விடப்படுவது குறித்த வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்சியம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். தாய்வழிச் சமூகம் உடையத் தொடங்கும் காலம், இனக் குழுக்கள் மெல்ல அழியும் காலம். ஆணாதிக்கம் மேலோங்கும் காலம், அரசு உருவாகும் காலம், பார்ப்பனிய ஒழுக்கவாத, மதவாத குலகுருக்கள் உள் நுழைதல், மன்னருக்கு அவர்கள் “முக்கியமானவர்களாக” மாறுதல், அதிகாரம் செலுத்துதல் என்று எவ்வளவோ விசயங்களை நாம் ஒரு தொன்ம நூலில் / புனிதாத்மாக்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து திறனாய்வு செய்ய முடியும்.

அதற்கு மார்க்சியம் வழிகாட்டும்!

இல்லையெனில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் செய்யப்படும் ஆய்வுகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். சுயசாதி பற்றும், ரசிக மனோபாவமும், பரிதாப உணர்வும் அதை தடுக்குமே ஆனால் அது அறிவு மறுப்புவாதம். மதம் அப்படித்தான் நகர்த்தும். முற்போக்கு சாயம் பூசப்பட்ட மதமானாலும் அது கருத்துமுதல்வாதமே. அதனை முன்மொழியும் ‘தலைவர் / தலைவி’களின் எழுத்துகளில் (தொகுப்புகளில்) உள்ள கோளாறும் அதுவே.

மதத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளார்ந்த கேடு என்ன என்பதை அறியவும் மார்க்சியம் வழிகாட்டும். எல்லா மதங்களும் ஏதோ ஒரு நாட்டில் வன்முறையையும், அழித்தொழிப்பும் மேற்கொள்கிறது என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

இந்த அடிப்படையில் தான் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியான ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு விடுதலை தத்துவம் என்று போதிக்கப்படும் தொகுப்பு எழுத்துகளும் விமர்சிக்கப்படுகின்றன. எழுதியவரும் விமர்சிக்கப்படுகிறார்!

அவரை விமர்சிச்சீங்களா இவரை விமர்சிச்சீங்களாங்குற கேள்விக்கு 5 வருஷமா பதில் சொல்லியாச்சு... போய் அதையாச்சும் படிங்க!