Showing posts with label யாசகம்.. Show all posts
Showing posts with label யாசகம்.. Show all posts

Sep 10, 2010

தானமென் உரு.



சிறுமியின் முத்தமொன்றைப் பெற....
நிலைகொள்ளாது
அழுகிறான்

கடவுள்

நிழலின்றி அலையுமவன் குரலில்
யாசகம் அலைவுற

இரக்கம் கொண்டு
தானமென
க்
கருமுட்டையொன்றைக் காற்றில் வீசினேன்

பிரசவம்

முத்தத்தை சுவைத்த கடவுள்
பொறாமை இறுகப் பற்ற
வானைக் கிழித்தெறிந்தான்

சிறுமியின் முத்தம்.