Showing posts with label மனச் சோர்வு. Show all posts
Showing posts with label மனச் சோர்வு. Show all posts

Jul 13, 2010

சொல்லற்ற...


கண்ணீர்

லிபிகளற்றது
குற்றவுணர்வு அதற்கு அன்னியம்

அஃது

தீயின் பருப்பொருள்
சிசுவின் தொப்புள் உதிரம் தாங்கி
பாவங்கள் கழுவும்

பனிமலை

உச்சியில் கேட்கும் காற்றின் மௌனம்

கண்ணீர்
சிலுவை ஏறும் கணம்
விரியட்டும் சிறகு
திசைகளற்று

காற்றாய் கரைந்து போகையில்
பாதத்தில்
முத்தச் சுவடு
உண்மையின் வாடையை
கைப்பற்ற இயலாது தவிக்கும்

சொற்களினாலான கயிறு


அழைத்துக்கொண்டே இருக்கிறது
அது

தழுவிகிறேன்
கடந்த காலத்தை அறுத்தெறிய

மாறுவது காலம்
மாறாதது சொல்

அயர்ச்சியுறுகிறேன்

நான்