
"பிறையாகிய வெள்ளி இதழைச் சூடுகின்ற சென்னியாள்;
நெற்றியைக் கிழித்து விழித்த இமையாத நெற்றிக் கண்ணை உடையாள்;
பவளம் போன்ற வாயாள்; முத்தொளி விளங்கும் சிறப்பினை உடையாள்;
நஞ்சுண்டு கறுத்த கழுத்தினை உடையாள்;
பாம்பை நாணாகிப் பூட்டி மேருமலையினை வளைத்தவள்;
துணையமைந்த பல்லையுடைய நச்சுப் பாம்பினைக் கச்சாகக் கட்டியிருக்கும் மார்பினாள்;
வளையுடையக் கையிலே சூலம் ஏந்தியவள்;
யானைத் தோலைப் போர்த்தியவள்;
புலித்தோலை மேகலையாக அணிந்தவள்
இடப்புரக்காலிலே சிலம்பும், வலப்புரக்காலிலே வீரக்கழலும் ஒலிக்கும் சீரிய அடிகளையுடையவள்;
எருமைத் தலையும் மனித உடலுமாகத் திரண்ட மகிஷாசுரனைக் கொன்று அவன் தலை மீது நிற்பவள்.................
கொற்றவையின் தோற்றமாக வர்ணிக்கப்படும் இவைகள் சிவபெருமானின் தோற்றமாக எப்பொழுது மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுகிறது,,,,"
- க. பஞ்சாங்கம் / சிலப்பதிகாரம்: சில பயணங்கள் (காவ்யா, சென்னை,2002 ) - சூரிய நடனம் தொகுப்பிலிருந்து.