Jun 20, 2014

ஆவலித்தபடி புரளும் நாக்குகள்



நண்பர்களே, எங்களது கூட்டறிக்கையானது ஒரு ஆணாதிக்கப் பதிவிற்கான எதிர்வினை, அவ்வளவே. பெண்கள் எழுதிய அனைத்தும் ஆகச்சிறந்த படைப்புகள் என்றோ, விமர்சனத்திற்கும், தரவரிசைகளுக்கும் அப்பார்பட்டவை என்றோ எங்களில் எவரும் ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

விமர்சனம் / கருத்துறை என்ற பெயரில் ஜெயமோகன் எழுதியிருப்பது ஒரு பதிவல்ல மாறாக அவர் உமிழ்ந்திருப்பது ஆணாதிக்க எச்சில் என்கிறேன் (என்கிறோம்). தனிப்பட்ட வன்மங்களின் காரணமாக சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் அவ்வெச்சில் பாத்திரத்தில் தங்களது நாவையும் ஆவலித்தபடிப் புரட்டுகின்றனர்.

நகைச்சுவை என்கிற பெயரில் சில ‘ஆண்கள்’ அந்த எச்சில் பாத்திரத்திற்கு முலாம் பூசுகின்றனர்.

எவரிடமும் எங்களை நிரூபித்து நற்சான்றிதழ் பெறவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. சொல்லப்போனால் இந்தத் ‘தூய’ மற்றும் ‘சிறந்த’ ‘இலக்கிய’ஆன்மாக்கள் எங்களதுப் படைப்புகளை அங்கீகரித்தாலோ அல்லது பாராட்டினாலோ சம்பந்தப்பட்ட அந்தப் படைப்பின் மீது எனக்கு சந்தேகமே ஏற்படும்.

இவர்களின் இந்த இகழ்ச்சியும், வன்மமும், கர்வம் நிறைந்த பேச்சுக்களும் எவ்வகையிலும் எங்களை முடக்கப்போவதில்லை.


சிறு குறிப்பு:

ஜெயமோகனின் தளம் வழியாக இங்கு வந்து எங்கள் கூட்டறிக்கையை படித்து கருத்து தெரிவித்திருக்கும் அவரது வாசகர்கள் மற்றும் ஆதராவளர்களுக்கும் இதுவே பதில்.

No comments:

Post a Comment