tag:blogger.com,1999:blog-7366567796439811563.post8021648852754205321..comments2024-03-07T22:01:45.460-08:00Comments on சாவின் உதடுகள்: இணைய அவதூறு புரட்சியிலிருந்து விலகுதலை நோக்கி:கொற்றவைhttp://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7366567796439811563.post-50180673386416595192012-06-23T21:35:48.017-07:002012-06-23T21:35:48.017-07:00நன்றி உங்கள் நிலைப்பாட்டை புரிந்துகொள்கிறேன்.நன்றி உங்கள் நிலைப்பாட்டை புரிந்துகொள்கிறேன்.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-45392864684924879372012-06-23T06:12:01.575-07:002012-06-23T06:12:01.575-07:00\\ஏன் மார்க்சியத்தை, கம்யூனிசத்தை ஒருவர் தனியாக கற...\\ஏன் மார்க்சியத்தை, கம்யூனிசத்தை ஒருவர் தனியாக கற்று, ஆய்ந்து தனக்கான ஒரு சுய அறிவை வளர்த்துக் கொண்டு, இங்கிருக்கும் அமைப்புளின் செயல்பாடுகளில் உடன்படமுடியாமல் அமைப்புக்கு வெளியே இருந்து செயல்படக்கூடாது? உண்மைகளைப் பேசிவிடுவார்....சில வேளைகளில் கம்யூனிஸ்டுகளையே விமர்சித்துவிடுவார் என்பதாலா.....? \\<br /><br />இங்கு இருக்கும் ஒரு அமைப்பின் செயல்பாடுகளில் கூடவா உங்களால் உடன்படமுடியாது. அப்படி என்றால் நீங்கள் மார்க்சியத்தை புரிந்துக்கொண்டதில் தவறு இருக்கிறது தோழர்.ஏன்னெனில் இன்று எல்லோரும் தன்னை மார்க்சியவாதியாகவும்,கம்யுனிஸ்ட்டாகவும் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் நடைமுறை வேலையை வைத்தே நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளை அடையாளம் தெரிந்துக்கொள்ள முடியும்.மார்க்சியம் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது இல்லை, அது வர்க்கமற்ற சமுகத்தை ஏற்படுத்துவதற்காக போராடுவதற்கே அது உருவாக்கப்பட்டது.ரூபகாந்தன்https://www.blogger.com/profile/02420420997093343430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-6980034099692415532012-06-23T05:46:50.958-07:002012-06-23T05:46:50.958-07:00உழைக்கும் மக்களுக்கு எதிராக அறிவுஜீகள் தன்னுடைய சி...உழைக்கும் மக்களுக்கு எதிராக அறிவுஜீகள் தன்னுடைய சிந்தனை, செயல்களை செய்யும் போதுதான் கம்யூனிஸ்ட்டுகள் அவர்களுடன் முரண்படுவது நிகழ்கிறது. மற்றபடி அறிவுஜீவிகளை மீது கம்யுனிஸ்ட்டுகள் எந்த வித பகையும் கிடையாது. அவர்களுடன் துணைக்கொண்டே புரட்சியை சாதிக்கமுடியும் என்ற நிலைபாடுகள் உடையவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அறிவுஜீவிகளுக்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கும் உள்ள வேறுபாடு, கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் தங்கள் சிந்தனை, செயல்,அறிவு,தியாகம் எல்லாவற்றையும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக கொடுப்பார்கள். அப்பொ அறிவுஜீவிகள் என்பவர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்களே சொல்லுங்கள்.ரூபகாந்தன்https://www.blogger.com/profile/02420420997093343430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-85729313483885100642012-06-22T10:05:50.961-07:002012-06-22T10:05:50.961-07:00// இங்கு தான் அறிவுஜீவிகளும் - கம்யூனிஸ்ட்டுகளும் ...// இங்கு தான் அறிவுஜீவிகளும் - கம்யூனிஸ்ட்டுகளும் வேறுபடுகிறார்கள்.// - அப்படியென்றால் கம்யூனிஸ்டுகளுக்கு அறிவு இருக்கக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்களா.....அதாவது கட்சித் தலைமையும், அதிலிருக்கும் மேல்மட்ட உறுப்பினர்களும் எதைச் சொன்னாலும் மண்டையை ஆட்டிக்கொண்டு இருக்க வேண்டும்...பகுத்தறியக்கூடாது....கேள்வி கேட்கக்கூடாது....சந்தேகிக்ககூடாது.....விமர்சிக்ககூடாது.....அப்போ பெரியாரின் பகுத்தறிவு????? பெரியார்.....அம்பேத்கர்....இவர்கள் எல்லாம் அறிவுஜீவி இல்லையோ......வாழ்க உங்கள் ஜனநாயகவாதம்.....நன்றி...கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-4645683091903281072012-06-22T09:48:25.151-07:002012-06-22T09:48:25.151-07:00இங்கிருக்கும் சில கம்யூனிஸ்டு அமைப்புகள் தங்களை எத...இங்கிருக்கும் சில கம்யூனிஸ்டு அமைப்புகள் தங்களை எதிர்த்தவர்களை என்ன செய்தது.... உட்கட்சி முரண்பாடு, உரையாடல், விவாதம் இவை எல்லாம் தோற்ற பின்னர் கட்சியிலிருந்து ஒருவர் வெளியேறிவிட்டால் அவரை கம்யூனிஸ்டு அமைப்பு எப்படி கையாள்கிறது.....?<br /><br />அமைப்புருவாக்கம் பற்றியும், மேல் கீழ் அதிகார பகிர்வு பற்றியும் ரோசா லுக்சம்பர்க் கூறியவை எந்த அடிப்படையில் மறுக்கப்பட்டது....?<br /><br />ஏன் மார்க்சியத்தை, கம்யூனிசத்தை ஒருவர் தனியாக கற்று, ஆய்ந்து தனக்கான ஒரு சுய அறிவை வளர்த்துக் கொண்டு, இங்கிருக்கும் அமைப்புளின் செயல்பாடுகளில் உடன்படமுடியாமல் அமைப்புக்கு வெளியே இருந்து செயல்படக்கூடாது? உண்மைகளைப் பேசிவிடுவார்....சில வேளைகளில் கம்யூனிஸ்டுகளையே விமர்சித்துவிடுவார் என்பதாலா.....? <br /><br />அமைப்பில் சேராத ஒரே காரணத்தால் அறிவுஜீவி என்ற சொல்லை வசைச் சொல்லாக பயன்படுத்துவது சிறுபிள்ளைத்தனமான பார்வையாக இருக்கிறது.....மன்னிக்கவும்.....இப்போது என்னை நோக்கி நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வியை எதைப் பயன்படுத்தி முன்வைக்கிறீர்கள்....<br /><br />அறிவைத் தூக்கிப் பிடிப்பதில்லை என்பதில் நானும் உடன்படுகிறேன்....அதற்காக அறிவுஜீவி என்பதை ஏதோ ஒழுங்கற்றவர்....என்கிற கோணத்தில் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால்....மீண்டும் மன்னிக்கவும்....நாம் உரையாடலை முடித்துக்கொள்ளலாம்......ஏனென்றால் அறிவுக்கும், காரியவாத அறிவுக்கு மார்க்சியம் சொல்லும் விளக்கத்தை ஓரளவுக்கு படித்துப் புரிந்து கொண்டதால்தான் அது குறித்த கட்டுரையையே எழுதுனேன்....நன்றி....கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-17074007773755810552012-06-22T09:38:19.485-07:002012-06-22T09:38:19.485-07:00அறிவுஜீவியாகவோ அல்லது கம்யூனிஸ்டாகவோ இருப்பதற்கு ம...அறிவுஜீவியாகவோ அல்லது கம்யூனிஸ்டாகவோ இருப்பதற்கு முன்னர் உண்மை முகத்தைக் காட்டிப் பேசுவதும், நம்மைப் பற்றியகுறைந்தபட்ச சுய குறிப்புகளை மற்றவர் அறியும் வகையில் வெளியிடுவதும் அவசியமில்லையா.......<br /><br />ஓ.....இதன் பெயர் பிரைவட்டிசமா.....கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-22836904837497810802012-06-22T09:35:51.922-07:002012-06-22T09:35:51.922-07:00நன்றி நந்தன்....கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இவர்கள் ...நன்றி நந்தன்....கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இவர்கள் அறிவுஜீவியா....கம்யூனிஸ்ட்டா........ மார்க்ஸ் எதைப் பயன்படுத்தி கோட்பாடுகளை உருவாக்கினார்.......<br /><br />Marx himself is quoted as saying that "if anything is certain, it is that I myself am not a Marxist"<br /><br />அறிவுஜீவிகள் என்பவர் யார் என்ற மார்க்சியத்தின் விளக்கத்தை நான் மொழிபெயர்த்துள்ளேன்....அதன்படி பொதுக்கள அறிவுஜீவிகளின் கடமை என்ன என்பதை மார்க்சிய வழிகாட்டுதலோடு பின்பற்ற முயற்சி செய்கிறேன்.....நன்றி......கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-48644545033996024452012-06-22T01:35:04.779-07:002012-06-22T01:35:04.779-07:00//வினவு வலைத் தளத்தின் எழுத்துப் போக்கிலும் எனக்கு...//வினவு வலைத் தளத்தின் எழுத்துப் போக்கிலும் எனக்கு உடன்பாடில்லை…(சில வேளைகளில் அவர்களது கோட்பாட்டுப் பார்வையிலும்)…//<br /><br />இதற்கான விடை நடைமுறை வேலை திட்டத்தில் இருக்கிறது. மார்க்சியம் என்பது இந்த உலகத்தை விளக்குவதோடு நிற்காமல் சமுக மாற்றத்திற்காக அமைப்புரீதியாக போராட அழைக்கிறது. இங்கு தான் அறிவுஜீவிகளும் - கம்யூனிஸ்ட்டுகளும் வேறுபடுகிறார்கள்.ரூபகாந்தன்https://www.blogger.com/profile/02420420997093343430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-3866472221041646362012-06-20T21:32:10.202-07:002012-06-20T21:32:10.202-07:00// பிற்போக்குவாதியை கெளரவிக்கும் நீங்கள் ரோசா லக்ச...// பிற்போக்குவாதியை கெளரவிக்கும் நீங்கள் ரோசா லக்சம்பர்க் பற்றி பேசுவதில்,எழுதுவதில் உள்ள முரணை உணர்கிறீர்களா// - இது என்னவிதமான அதிகாரத்தனமான பேச்சு....ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டுதான் நாம் இங்கு செயல்படமுடிகிறதா என்ன.....அதுவும் இந்த குறைந்தபட்ச 2 வருட காலங்களில்.......ரோசா லுக்சம்பர்க்கை எவர் படிக்க வேண்டும் என்று ஏதாவது தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளதா என்ன....<br /><br />உங்கள் பிரச்சனை வேறு ஏதோ என்று எனக்குப் புரிகிறது....<br /><br />உங்கள் உண்மை முகத்தைக் காட்டாமல் இருப்பது இப்படிக் கற்பனைகளைப் பதிவு செய்து, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு மற்றவர் பதிவில் வடிகால் தேடுவதற்குத் தானா....அதற்குப் பதில் அளித்துக் கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லைத் தோழர்........உங்களுடைய எல்லாக் கருத்துக்களும் இங்குப் பகிரப்படும்.....நன்றி.....கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-72159936134025216812012-06-20T21:06:19.648-07:002012-06-20T21:06:19.648-07:00ஒருவேளை அ.மார்க்ஸின் அப்படிப்பட்ட எழுத்துக்களை படி...ஒருவேளை அ.மார்க்ஸின் அப்படிப்பட்ட எழுத்துக்களை படிக்க நேர்ந்தால்...அதில் எனக்கு உடன்பாடில்லாத பட்சத்தில் விமர்சிப்பதில் எனக்கொன்றும் தயக்கமில்லை தோழர். அ.மார்க்ஸ் என்ன....கார்ல் மார்க்ஸையும் தேவைப்பட்டால் விமர்சித்துத்தான் ஆக வேண்டும்.....அப்போதுதான் மார்க்ச்யத்தையும், பென்ணியத்தையும் இன்னும் இதர முற்போக்கு தத்துவங்களையும் வளர்த்தெடுக்க உதவும்....என்னுடைய எழுத்துக்களையேக் கூட நான் நாளை விமர்சனத்திற்கு உள்ளாக்க நேரும் என்பதை நான் அறிவேன்...நன்றி. மேலும் அமைப்புத் துவக்கத்தில் அ. மார்க்ஸை நான் எங்கு கவுரவித்தேன்....தூக்கிப் பிடித்தேன்....பெண்ணியம் தொடர்பாக அவர் அவர் கறுத்துக்களைப் பேசிச் சென்றனர்...எவரையும் நான் பாராட்டவுமில்லை....கவுரவிக்கவுமில்லை.....நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் தெரிந்திருக்கும்.....<br /><br />என்னுடைய இந்தப் பதிவு ஆபாச, அவதூறு எழுத்துக்கள் பற்றியதானது.....உங்கள் கற்பனைகளை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.....கடந்தகால எழுத்துலக அரசியல் குறித்து நான் பெரிதாக அறியவில்லை என்று எழுதியிருக்கிறேனே....அதுவே போதுமானது என்று நினைக்கிறேன்.....கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7366567796439811563.post-72448716368342975282012-06-20T19:19:13.559-07:002012-06-20T19:19:13.559-07:00நீங்கள் லீனாவிற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்...நீங்கள் லீனாவிற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் எழுதியுள்ளீர்கள்.லீனாவின் நூலை தடைச்செய்ய இந்து மக்கள் கட்சி கோரி அதற்காக ஒரு கடிதத்தை தொலைநகல்(fax) மூலம் அனுப்பியிருந்தது.அப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டால் முற்றுகை இடுவோம் என்று இஸ்லாமிய அமைப்பு மிரட்டியதால் விஜய் டிவி அந்நிழச்சி ஒளிபரப்பாகவில்லை.இந்து மக்கள் கட்சி அதற்கு மேல் எதையும் செய்யவில்லை.ஆனால்<br />கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களோ,அதில் பேசியவர்களோ விஜய் டிவியை மிரட்டிய இஸ்லாமிய அமைப்பை ஏன் விமர்சிக்கவில்லை.<br />ஒரு கண்டன அறிக்கைக் கூட விடவில்லை.அது ஏன்.<br />பெண்ணியவாதி என்று கூறிக்கொள்கிறீர்களே அந்த நிகழ்ச்சி இஸ்லாமிய பெண்கள் மீதான உடைக்கட்டுபாடுகள் மீதான விவாதம் என்பதாவது உங்களுக்கு தெரியுமா.மாசெஸ் அமைப்பிற்கு அ.மார்க்ஸை அழைக்கிறீர்கள்.அவர் பிற்போக்கான<br />இஸ்லாமிய அமைப்புகளை விமர்சித்து எதுவும் எழுதுவதில்லை என்பதுடன் குழந்தை திருமண தடைசட்டத்த்லிருந்து மதரீதியான காரணங்களுக்காக<br />முஸ்லீம்களுக்கு விலக்கு வேண்டும் எனக் கோரிய AIMPLB போன்ற அமைப்புகளை ஒரு போதும் விமர்சித்ததில்லை என்பதுதான் உண்மை.இன்னும் சொல்வதென்றால் அவ்வமைப்பினை முற்போக்கு இஸ்லாமிய பெண்களும்,பிறரும் விமர்சித்துள்ளார்கள். பொது சிவில் சட்டம் தேவையில்லை என்றாலும் தனி நபர் சட்டங்களிலும் கூட மாற்றம் கொண்டு வருவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை AIMPLB போன்ற அமைப்புகள்.தமுமுகவின் முக்கிய பொறுப்பாளர் ஜவகருல்லா இதில் செயற்குழு உறுப்பினர்.தமுமுக/மமகவின் ஆதரவாளர்கள் அ.மார்க்ஸ்,விடுதலை ராசேந்திரன்.அ.மார்க்ஸ் என்றைக்காவது பொது சிவில் சட்டம் வேண்டாம்,ஆனால் தனி நபர் மதச்சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்து சிறுபான்மை மதப் பெண்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று எழுதியுள்ளாரா.அருந்ததி ராயின் தாய் மேரி ராய் தன் தந்தையின் சொத்தில் பங்கு கோரி ஏன் நீதிமன்றம் சென்றார் என்பதை அறிவீர்களா. பெண்களுக்கு எதிரான பிற்போக்கு கருத்துக்களை வெளியிடும் சமரசம் போன்ற பத்திரிகைகளில் அ.மார்க்ஸ் எழுதுவார்,தமுமுகவை ஆதரிப்பார்.பெண்களுக்கு உடைக்கட்டுப்பாடு அவசியம் என்று வாதிடும் சத்தியமார்கம் போன்ற இணையதளங்களை நடத்துபவர்களுக்கு தோழராக இருப்பார்.அவர்களின் பிற்போக்கு கருத்துக்களை எதிர்த்து ஒரு வாக்கியம் எதிலும் எழுதமாட்டார்.அவரை நீங்கள் மாசெஸ் துவக்க விழாவிற்கு அழைத்து பெருமைப்படுத்துவீர்கள்.இப்படிப்பட்ட பிற்போக்குவாதியை கெளரவிக்கும் நீங்கள் ரோசா லக்சம்பர்க் பற்றி பேசுவதில்,எழுதுவதில் உள்ள முரணை உணர்கிறீர்களா.பெண்ணியம் என்பதை அனைத்து மத அடிப்படைவாதிகள்,மத அமைப்புகளை விமர்சிப்பது என்றால் அதில் deoband seminray யும்<br />அடங்குமே.அதை விமர்சித்து அ.மார்க்ஸ் உட்பட எந்த பெரியாரியவாதியும் ஏன் எழுதுவதில்லை.<br />இவர்கள் ஏன் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்யும் ஜாகிர் நாயக்களை விமர்சிப்பதில்லை.எந்த அடிப்படையில்<br />இவர்கள் தமுமுக/மமக போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு தருகிறார்கள். நீங்கள் உண்மையான பெண்ணியவாதியாக இருந்தாலும் உங்கள் விமர்சனம்<br />இவர்களை நோக்கியும் இருக்க வேண்டுமே.அதைச் செய்யத் தயாரா. சமரசம் போன்ற பத்திரிகைகளியும்,பிஜே போன்றவர்களின் பேச்சுகளையும்,வெளியீடுகளையும் இணையத்தில்<br />படித்து விட்டு இவற்றை ஏன் பெரியாரியவாதிகள்,<br />அ.மார்க்ஸ் விமர்சிப்பதில்லை என்று சிந்தியுங்கள்.<br /><br />இன்றைய் சூழலில் பெரியாரியம்,மார்க்சியம் பேசிக்கொண்டு பிற்போக்கு மதவாதிகளை ஆதரிப்போரை அடையாளம் கண்டு கொள்ளாவிட்டால் அவர்களை நம்பி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கீறீர்கள் என்பதுதான் கசப்பான உண்மை.tamilhttps://www.blogger.com/profile/04407101395786128069noreply@blogger.com